Pages

Sunday, April 19, 2020

ANJAAN - SPECIAL CRIMES UNIT # PARANORMAL INVESTIGATION

 ஆவிகள் பேய்கள் கதைகளென்றாலே மிகவும் பிடித்தொன்று. அதிலும் அந்த பின்னணி இசை அகோரமான பேய் முகம், திடுதிடுப்பு படபடப்பு மனதிற்குள் எழும் பயம் என எல்லாம் பிடித்தவைகளொன்று. 

வழக்கமாக பேய் கதைகள் என்றால் பேய் பழிக்கு பழி வாங்கும், அதிலிருந்து தப்பித்து வரும் நாயக குழு என்று தான் இருக்கும். 

ஆனால் ஏ.சி.பி. விக்ராந்த் போய் மாட்டிகொள்பவரல்ல. அப்படி மாட்டி கொண்டவர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி. பேய்களின் பின்னணி கதையறிந்து பிரச்சனைகளை தீர்ப்பவர்.

இவருக்கு பேய் 👻களின் மேல் நம்பிக்கையோ பயமோ இல்லை. உலகத்தில் பேய்களே இல்லை என்று சொல்பவர். ஆனால் தனக்கு கொடுக்கபடும் கொலை வழக்குகளை முடிக்க வேண்டுமென உறுதியாக இருப்பவர். 

முதலில் ஒரு வழக்கை விசாரணை செய்ய போய் அதுவும் வெற்றிகரமாக முடிய தொடர்ந்து அதே போல் வழக்குகளாய் இவருக்கு கொடுக்கப்படும்.

இவருக்கு துணையாய் இரு பெண் காவல் அதிகாரிகள் (ஒருவர் இறந்து போக மற்றொருவர்) நியமிக்கப்பட்டாலும் பல வழக்குகளில் இவர் மட்டுமே களமாடுவார். 

பல்ப் ஃபிக்ஷன் நாவல்களின் பெரும் ரசிகனென்பதால் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. 

இந்திய தரத்தில் பேய் துப்பறியும் கதைகளை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததிலேயே... பெரிய ஆச்சரியம் தான்.

முக்கியமாக ஏ.சி.பி. விக்ராந்த்க்கு தனிப்பட்ட கதை என ஒன்றுமில்லை. அங்கிங்கு ஒன்று இரண்டு வசனங்கள் மட்டுமே வரும் அவரை பற்றி. 

நகரம், காடு, கிராமம் என்று பல கதைகள் வரும். ஒவ்வொன்றும் ஒரு கதை.

No comments:

Related Posts with Thumbnails