Pages

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, November 13, 2021

Special Ops 1.5: The Himmat Story


Special Ops முதல் சீசன் பார்த்த எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் ஹிம்மத் சிங் தான்.

உலகளவில் இந்திய ரா படையினரால் மேற்கொள்ள படும் பல்வேறு நிகழ்வுகளில் மூளையாக இந்தியாவில் உட்கார்ந்து செயல்ப்பட்டு கொண்டு இருப்பார்.

பார்க்கும் எல்லோரையும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருக்கும் அந்த கதாபாத்திரம். 

அதில் அவரது இளம் பருவத்தை பற்றி அதிகம் காட்டிருக்க மாட்டார்கள்.

Special Ops 1.5 - நான்கு எபிசோட்களை கொண்ட சீசன்.

இதில் ஹிம்மத் சிங்கின் இளம் பருவத்தை பற்றி பேசுகிறது. 

அதுவும் கதை சொல்வது அவராக இல்லாமல் மூன்றாம் நபரது பார்வை மூலமாக திரைகதை அமைத்திருப்பது காட்சிகளை பரபரப்புடன் நகர்த்துகின்றன. 

முக்கியமாக ஹிம்மத் சிங் வாழ்க்கையை பற்றி யாருமே எதிர் பார்க்காத ஒரு ரகசியத்தை இந்த சீசனில் சொல்லி இருக்கிறார்கள். 

சீசன் எத்தனை சுவாரசியமானது என்று கேட்டால்..... முதல் அத்தியாயத்தை பார்ப்போம் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிப்போம் என தான் ஆரம்பித்தேன், ஆனால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஹிம்மத் சிங் பற்றி ஒருவர் கதை சொல்லும் போக்கில் போவதால் நாமும் கதை கேட்கும் சிறுவர்களாக மாறிவிடுகிறோம். மொத்தமாக பார்த்து முடித்து விட்டேன். 

முக்கியமாக பாராட்ட பட வேண்டியது திரைகதை மற்றும் படத்தொகுப்பும். 

முதல் சீசனை நீரஜ் பாண்டே சிவம் நாயர் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இந்த கிடைக்கிறது.

பாண்டே தனித்து இயக்கி இருக்கிறார். 

நாளை ஞாயிறு தவற விடாமல் பாருங்கள். உங்களுக்காக பிரச்சனைகளெல்லாம் திங்கட்கிழமையில் காத்து கொண்டு இருக்கின்றன. 

ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மளையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் வசன உதவி கிடைக்கிறது. இலவசமாக பார்க்க உதவிய முகேஷ் அம்பானி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி.

Tuesday, June 22, 2021

மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE


நேற்று பிரபல யூ ட்யூப் காணொளியாளர் மதன் கௌரி  தனது செய்தி செயலி பற்றி தனது காணொளியில் அறிமுக படுத்தி இருந்தார். உரலி - https://youtu.be/CkIOuAGF3Hc 

 அவரது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருபவன் என்பதால் ஒரு ஆவலில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி பார்த்துவிட்டேன். 

செயலியின் பெயர் KOKRU.தமிழில் எழுதினால் கொக்ரு என்று இருக்கலாம்.

செயலியின் முதல் ஏமாற்றம் எனது கைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய முடியாதது. கூகிள் கணக்கையோ அல்லது ஃபேஸ்புக் கணக்கையோ வைத்து தான் பதிவு செய்ய முடிகிறது. இதனை பற்றி அந்த செயலியில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் போய் பார்த்தால் நமது தகவல்களை பற்றிய குறிப்பில் "இது உங்கள் சொத்து..." என எழுதி விட்டு நம்மை படிக்க வைப்பது போலுள்ளது. 

நமது மொழி & விருப்பம் சார்ந்து செய்திகளை நமக்கு காட்ட படுகிறது. அந்த செய்திகள் எல்லாம் தொடர்ச்சியாக செல்லாமல், ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்புவது போல் உள்ளது. 

DARK BACK GROUND - எனக்கு பிடிக்காத ஒன்று. இதனை மாற்றி கொள்ள வாய்ப்பில்லை. மற்ற செயலிகளின் தேவை பட்டால் பின்னணி நிறத்தை மாற்றி கொள்ள முடியும்.

DailyHunt என்கிற செய்தி செயலி போன்றே உள்ளது,

இந்த செயலி நான் கவர்ந்த விஷயம் புகழ்பெற்ற Reuters நிறுவனத்தின் செய்திகளை பார்க்க முடிகிறது. இந்நிறுவனம் செய்தி உலகின் தாத்தா மாதிரி. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். 

இந்த செயலியின் வருமானம் என்பது  எந்த இணையதளத்தின் (தினதந்தி, தினமலர், இந்து தமிழ் திசை .....) செய்தியை படிக்க படுகிறதோ, அந்நிறுவனங்களில் இருக்கு தரகு பணம் இந்த செயலி நிறுவனத்திற்கு கிடைக்கும். 

பயன் படுத்த ரொம்ப எளிதாக இருக்கிறது. செயலியை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக விளம்பரங்கள் வர வாய்புள்ளது.

இவர்களது நிபந்தனைகளை படிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"The right to access – You have the right to request Our Company for copies of your personal data. We may charge you a small fee for this service."

நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் எந்த பணமும் கொடுக்காமல் எடுத்து கொள்வார்களாம், ஆனால் அதனை திரும்ப கேட்டால் பணம் கட்ட வேண்டுமாம். நல்ல நியாயம். 

இது போல பலது உள்ளன. எல்லாவற்றையும் படியுங்கள். 

மற்ற செயலிகள் உள்ளது போலவே இதிலும் உள்ளது. மேலும் இந்த செயலி நமது கைபேசிக்கு என்ன செய்யும் என்பதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். கடைசி திரைச்சொட்டில் காணுக.

மேலும் இந்த செயலியை பயன் படுத்துவதின் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறதே என புரட்சி சிந்தனை வேண்டாம். ஃபேஸ்புக் மற்றும் கூகிளை பயன் கொண்டு இருந்தாலே உங்க தகவல்கள் எதுவும் பாதுகாப்பாக இல்லை என கொள்க.

குறிப்பு - என் தகவல்களை வைத்து அப்படி என்ன செய்து விடுவார்களென்று தெரியவில்லை. ஏய் கம்பெனிகாரா என் டிடெயில்ஸ் எல்லாம் கால் காசுக்கு கூட வராது. நம்பி ஏமாந்து போயிறாதே.


Sunday, June 13, 2021

கலவை – 13/06/2021

தகவல் பரிமாற்றத்துக்கு பல விஞ்ஞான வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் ஒரு காலத்தில் அதற்கென இருந்த ஒன்றை பற்றி பலரும் இன்றளவில் மறந்துவிட்டனர்.

அது இன்லேண்ட் லேட்டர்.
இன்று நாம் தொலைபேசி / கைபேசி, ஈமெயில் ஆகியவற்றில் பல விஷயங்களை பரிமாறி கொண்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டரில் நலம் விசாரித்தலுக்கு ஈடாகாது. இடம் குறைவாக இருந்தாலும் சுருக்கி எழுத்தின் அளவை குறைத்து , எழுத எழுத எதோ ஒன்றை மறந்துவிட்டோமே, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோமா என பதைபதைப்புடன் எழுதிய ஒரு தலைமுறை இப்பொழுது அதனை தங்களது ஞாபக அடக்கில் எங்கு இருக்கிறது என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கல்யாணம் ஆகி வேறு ஊருக்கோ வேறு மாநிலத்திற்கோ வந்து விட்ட பெண்கள் எல்லோரும் தங்களது அம்மாவிற்கு எழுதிய கடிதங்களில் “மணி பதினொன்னு ஆகிருச்சு... அடுப்பு ல இப்ப தான் சாம்பார் வைச்சுட்டு வந்தேன், கொஞ்சம் இருமா யாரோ கூப்பிடுறாங்க ....” என எழுதிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து ...” பக்கத்து வீட்டு அக்கா தான் கூப்பிட்டாங்க கொஞ்சம் தயிர் வேணுமுன்னு கேட்டாங்க.... “ என தினசரி வாழ்வை கடிதங்களில் பதிவு செய்தவர்கள் பல. 

இன்னும் சில வீடுகளில் அந்த கடிதங்களை பாதுகாப்பாய் வைத்திருப்பார்கள், அந்த நாளைய வாழ்க்கையை அந்த கடிதம் படிக்கும் பொழுதெல்லாம் மீண்டும் வாழ்ந்து விட்டு வருவார்கள்...

 அந்த கொஞ்ச நிமிடங்களுக்கு கல்யாணமாகி புதிதாய் வேறு ஊருக்கு வந்த பெண்ணாய் மாறி இருப்பார்கள். என்றோ இறந்துவிட்ட தங்களது  அம்மாவை உயிருடன் அழைத்து வந்து பேசி கொண்டு இருப்பார்கள். 

அவர்களே இப்பொழுது பேர குழந்தைகள் பார்த்துவிட்ட பாட்டிகளாக இருந்தாலும், ஒவ்வொரு கடிதத்தை படிக்கும் பொழுது தங்களது அம்மா உடன் பேசுவதாக உணர்வார்கள்.

அந்த உணர்வை இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களால் தர முடியாது.

தபால்காரரை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்த பரவச நிமிடங்களும் மனிதர்களுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே. 

= = =

தொகுப்பு வார்த்தையாளர் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் ClubHouse என்கிற செயலிக்கு சொல்லகம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார். அவ்வாறு செய்வது ஒருவனை உபயோகிக்கும் பொருளுக்கு அவனது வசதிக்கேற்ப அவனது மொழியிலேயே பெயர் வைத்து பயன்படுத்தி கொள்வது உலக நடப்பில் இருப்பது தானே. 

இதனை அவர் தனது வடிவ பனுவல் பக்கத்தில் எழுதிய பிறகு ஏன் அதனை அத்தனை சண்டை என புரியவில்லை. 

மேலும் இதனை முன் வைத்து அவர் ஒரு வார்த்தைகளின் அச்சு பிரதி ஒன்றை எழுதிட வேண்டும். 

ஆயிரம் இருந்தாலும் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் அவர்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது.

= = =

The Family Man என்கிற இணைய தொடரின் Season 2 நேற்று காற்றுசொல் (Airtel – நன்றி இராஜ தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள்) நிறுவனத்தின் உதவியால் பார்த்தேன்.

பரபரப்பான களத்தில் கதை நகர்கிறது. கதையின் சிறப்பு செல்லம் சார் தான். 
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசிவிட்டதால், இதில் சம்பவங்களை மைய படுத்திய காட்சிகள் நகர்கிறது. 

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீகாந்த்  திவாரி எந்த பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை சொல்லி எதிர் பார்ப்பை அதிக படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சமந்தாவின் குடும்பத்தை தரைகுறைவாக பேச சிலருக்கு யார் உரிமை கொடுத்தது என்று தெரியவில்லை. சமந்தா என்று இல்லை அதில் நடித்த நடிகர்களின் குடும்பத்தை தரைகுறைவாக பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் அப்படி தரைகுறைவாக விமர்சனம் செய்வது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” நான் விமர்சனம் செய்கிற பெயரில் இன்னொரு குடும்பத்து பெண்களை அசிங்கமாக பேசி / எழுதி இருக்கிறேன் “ என சொல்லி அவரது அம்மா , மனைவியிடம் அதனை காட்டுவார்களா ? 

= = =

The Heritage Of Kashmir என்ற ஆவண படத்தை பார்த்தேன். காஷ்மீரில் இருக்கும் பழங்கால கோயில் பற்றியது அது. கோயிலின் சிறப்புகளை மட்டும் சொல்லாமல் அதனை சார்ந்த வரலாற்றையும் சேர்த்து சொன்னது தான் முக்கிய அம்சம். 

அவந்திவர்மன் ஆட்சி, 840கிலோ தங்கதால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை என பல விஷயங்களை பேசுகிறது.

= = =

மார்வெலின் லோகி இணைய தொடரின் முதல் பாகம் கடந்த ஒன்பதாம் தேதி வெளிவந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஒரு இடத்தில் லோகி டெஸெராக்ட்டை திருடி கொண்டு மறையும் இடத்தில் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது.
அப்படி மறைந்து தப்பித்து போன இடத்தில் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பிடம் சிக்கி கொள்கிறார்...

அங்கு தானோஸ் எதற்காக சண்டை போட்டாரோ அந்த இன்பினிட்டி ஜெம்ஸை Paper Weightஆக டைம் வேரியன்ஸ் அதாரிட்டில் பயன்படுத்துகிறார்கள். 
அவர்கள் லோகியிடம் சொல்லும் வேலையில் பரபரப்பு தொடங்குகிறது....

முதல் அத்தியாயம் முடிகிறது.

= = =

சமூக இணையதளங்களின் மீதான வலுவான சட்டங்கள் வர போகிறது. 
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு பற்றி கவலை படுகிறார்கள். 

கூகிளில் ஒன்றை பற்றி தேடிவிட்டு ஃபேஸ்புக்கிற்கு வந்தால் அந்த பொருளின் விளம்பரம் தான் நம்மை வரவேற்கும்.

மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க தெரியல பாரேன் இவங்களுக்கு. 

= = =

Sunday, April 19, 2020

ANJAAN - SPECIAL CRIMES UNIT # PARANORMAL INVESTIGATION

 ஆவிகள் பேய்கள் கதைகளென்றாலே மிகவும் பிடித்தொன்று. அதிலும் அந்த பின்னணி இசை அகோரமான பேய் முகம், திடுதிடுப்பு படபடப்பு மனதிற்குள் எழும் பயம் என எல்லாம் பிடித்தவைகளொன்று. 

வழக்கமாக பேய் கதைகள் என்றால் பேய் பழிக்கு பழி வாங்கும், அதிலிருந்து தப்பித்து வரும் நாயக குழு என்று தான் இருக்கும். 

ஆனால் ஏ.சி.பி. விக்ராந்த் போய் மாட்டிகொள்பவரல்ல. அப்படி மாட்டி கொண்டவர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி. பேய்களின் பின்னணி கதையறிந்து பிரச்சனைகளை தீர்ப்பவர்.

இவருக்கு பேய் 👻களின் மேல் நம்பிக்கையோ பயமோ இல்லை. உலகத்தில் பேய்களே இல்லை என்று சொல்பவர். ஆனால் தனக்கு கொடுக்கபடும் கொலை வழக்குகளை முடிக்க வேண்டுமென உறுதியாக இருப்பவர். 

முதலில் ஒரு வழக்கை விசாரணை செய்ய போய் அதுவும் வெற்றிகரமாக முடிய தொடர்ந்து அதே போல் வழக்குகளாய் இவருக்கு கொடுக்கப்படும்.

இவருக்கு துணையாய் இரு பெண் காவல் அதிகாரிகள் (ஒருவர் இறந்து போக மற்றொருவர்) நியமிக்கப்பட்டாலும் பல வழக்குகளில் இவர் மட்டுமே களமாடுவார். 

பல்ப் ஃபிக்ஷன் நாவல்களின் பெரும் ரசிகனென்பதால் மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. 

இந்திய தரத்தில் பேய் துப்பறியும் கதைகளை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததிலேயே... பெரிய ஆச்சரியம் தான்.

முக்கியமாக ஏ.சி.பி. விக்ராந்த்க்கு தனிப்பட்ட கதை என ஒன்றுமில்லை. அங்கிங்கு ஒன்று இரண்டு வசனங்கள் மட்டுமே வரும் அவரை பற்றி. 

நகரம், காடு, கிராமம் என்று பல கதைகள் வரும். ஒவ்வொன்றும் ஒரு கதை.
Related Posts with Thumbnails