Pages

Saturday, October 2, 2021

பொன்னியின் செல்வன் II எம்.ஜி.ஆர். II மணிரத்தினம்

பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர போகிறது, எல்லோரும் கொண்டாடிய நாவலை எப்படி திரையில் வர போகிறதென்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் கல்கி அவர்கள் சட்டென தொடரை முடித்து பின்னாளில் இக்கதையை மேற்கொண்டு எழுத வருகிறவர்களுக்கு பல்வேறு குறிப்புகளை தந்திருப்பார்.

நாவல் மணிமேகலையின் மரணத்தோடு நிறுத்தபட்டு இருக்கும். 

குறிப்பு -  29 அக்டோபர் 1950ல் தொடங்கி 16 மே மாதம் 1954ல் நாவல் தொடர் முடிந்திருக்கிறது. நாவல் முடிந்த ஏழாவது மாதத்தில் 5டிசம்பர் 1954 கல்கி அவர்கள் மரணம் அடைந்தார். 

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய சம்பவமாக இருப்பது வீரபாண்டியனின் கொலை தான். வீரபாண்டியன் தப்பித்திருந்தால்  சரித்திரம் வேறு மாதிரி மாறி இருக்கும். 

மதுரையின் மீதான சோழர்களின் படையெடுப்பை வேறொரு கோணத்தில் பேசுவது தான் அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியனின் மனைவி.  

வரலாற்றின் படி வீரபாண்டியனின் மகனான சுந்தரபாண்டியன் தான் சோழர்கள் கைப்பற்றிய மதுரையை மீட்டார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். பல முயற்சி எடுத்தார், ஒரு தரம் படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் வரையில் போய் நின்று இருக்கிறது.

முயற்சி தோல்வியடைந்தாலும் அவருக்கு இந்த பாண்டிய - சோழ வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்த படியால், பொன்னியின் செல்வன் பேசிய வரலாற்றில் அடுத்த கட்டமான  பாண்டியர் மதுரையை மீட்டத்தை அடிப்படையாக கொண்டு அகிலனால் எழுத பட்ட கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் படத்தை எடுத்தார்.

சோகமென்னவென்றால் அப்படத்தின் தரமான் பிரதி தற்பொழுது காண கிடைப்பதில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி கொண்டு போய் எப்படி முடிப்பார்கள் ?

எப்படியும் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் மரணத்தோடு முடியும். அப்பொழுது தான் விறுவிறுப்பாக அடுத்த இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு களத்தை உண்டாக்க முடியும். இதே போன்ற யுத்தியை தான் பாகுபலியிலும் கையாண்டார்கள்.

பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு பாண்டியர்களின் எழுச்சியை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

பணம், திறன் எல்லாம் இருந்தாலுமே கல்கியின் வார்த்தைகளுக்கு உயிர் தருவது கடினமான காரியம். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பே ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும் பொழுது வாசிக்கும் நபரை அந்த கதையின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் வல்லமை கல்கியின் எழுத்துக்களுக்குண்டு. அவை தற்போதைய திரைகதை ஆசிரியர்களுக்கு இருக்கிறதா ???

தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.

No comments:

Related Posts with Thumbnails