Pages

Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Saturday, March 12, 2022

மாறன் - திரை விமர்சனம்


மாறன் 

பயில்வான் ரங்கநாதனின் வாழ்க்கையை வரலாற்றை மொக்கையாக படம் எடுத்திருந்தாலும், அது மாறன் படத்தை விட நன்றாக இருந்திருக்கும்.

கோலியுட் - கோடம்பாக்கம் - தமிழ் திரையுலகிற்கு மொக்கை படங்களை தள்ளி விட நிறைய குப்பை தொட்டிகள் கிடைத்திருக்கிறது. போல சந்தோஷம். 

மேலாக எடுத்தால் ரசம், நடுவாகில் எடுத்தால் சாம்பார், அடியோடு எடுத்தால் குழம்பு என சமையல் தெரியாதோரின் சமையலை கிண்டல் செய்வார்கள். 

அது போல என்னது என தெரியாமல் எதோ ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை திரையரங்கில் வரவில்லை.

ஒடீடீயில் வந்ததினால் நன்றாக இருக்கும் காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை ஓட்டி விடலாம். அப்படி பார்த்தால் ஆரம்பத்தில் வரும் படத்தின் பெயரையும் முடிவில் வரும் சுபம் அல்லது வணக்கம் (மயக்க நிலையில் இருந்ததால் சரியாக தெரியவில்லை)  மட்டும் தான் பார்க்கலாம். நியாயபடி அதற்கு மட்டும் தான் விமர்சனம் எழுத வேண்டி இருக்கும்.

ஒன்றை மணி நேரம் தேர் திருவிழா போல் நகர்ந்து விட்டு அய்யோ நாம் ஓட்டி கொண்டு இருப்பது தேர் இல்லை திருச்சி - சென்னை ரூட் பஸ் என ஞாபகம் வந்திருக்க வேண்டும் இயக்குனருக்கு.

குறிப்பு (இயக்குனருக்கு) - 

முப்பது / இருபது வருடங்களுக்கு முன்பு ஜீனியர் விகடனின் வந்த கழுகார் இரவு ரவுண்ட் அப், துப்பறியும் செய்தி கட்டுரைகளை ஆகியவைகளை படித்தாலே நல்ல பத்திரிக்கை உலகம் சார்ந்த சிறப்பான த்ரில்லர் படத்தை எடுத்திருக்கலாம்.

Saturday, October 2, 2021

பொன்னியின் செல்வன் II எம்.ஜி.ஆர். II மணிரத்தினம்

பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர போகிறது, எல்லோரும் கொண்டாடிய நாவலை எப்படி திரையில் வர போகிறதென்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் கல்கி அவர்கள் சட்டென தொடரை முடித்து பின்னாளில் இக்கதையை மேற்கொண்டு எழுத வருகிறவர்களுக்கு பல்வேறு குறிப்புகளை தந்திருப்பார்.

நாவல் மணிமேகலையின் மரணத்தோடு நிறுத்தபட்டு இருக்கும். 

குறிப்பு -  29 அக்டோபர் 1950ல் தொடங்கி 16 மே மாதம் 1954ல் நாவல் தொடர் முடிந்திருக்கிறது. நாவல் முடிந்த ஏழாவது மாதத்தில் 5டிசம்பர் 1954 கல்கி அவர்கள் மரணம் அடைந்தார். 

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய சம்பவமாக இருப்பது வீரபாண்டியனின் கொலை தான். வீரபாண்டியன் தப்பித்திருந்தால்  சரித்திரம் வேறு மாதிரி மாறி இருக்கும். 

மதுரையின் மீதான சோழர்களின் படையெடுப்பை வேறொரு கோணத்தில் பேசுவது தான் அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியனின் மனைவி.  

வரலாற்றின் படி வீரபாண்டியனின் மகனான சுந்தரபாண்டியன் தான் சோழர்கள் கைப்பற்றிய மதுரையை மீட்டார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். பல முயற்சி எடுத்தார், ஒரு தரம் படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் வரையில் போய் நின்று இருக்கிறது.

முயற்சி தோல்வியடைந்தாலும் அவருக்கு இந்த பாண்டிய - சோழ வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்த படியால், பொன்னியின் செல்வன் பேசிய வரலாற்றில் அடுத்த கட்டமான  பாண்டியர் மதுரையை மீட்டத்தை அடிப்படையாக கொண்டு அகிலனால் எழுத பட்ட கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் படத்தை எடுத்தார்.

சோகமென்னவென்றால் அப்படத்தின் தரமான் பிரதி தற்பொழுது காண கிடைப்பதில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி கொண்டு போய் எப்படி முடிப்பார்கள் ?

எப்படியும் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் மரணத்தோடு முடியும். அப்பொழுது தான் விறுவிறுப்பாக அடுத்த இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு களத்தை உண்டாக்க முடியும். இதே போன்ற யுத்தியை தான் பாகுபலியிலும் கையாண்டார்கள்.

பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு பாண்டியர்களின் எழுச்சியை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

பணம், திறன் எல்லாம் இருந்தாலுமே கல்கியின் வார்த்தைகளுக்கு உயிர் தருவது கடினமான காரியம். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பே ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும் பொழுது வாசிக்கும் நபரை அந்த கதையின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் வல்லமை கல்கியின் எழுத்துக்களுக்குண்டு. அவை தற்போதைய திரைகதை ஆசிரியர்களுக்கு இருக்கிறதா ???

தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.

Thursday, May 9, 2013

)கலவை( }}{{ +2 மார்க் :: டைம் பாஸ் விகடன் ::காணாமல் போன ஏரி :: மகாபாரத ஆயுதம் }}{{

2006 ல் பிரபு தேவா இயக்கி வெளி வந்த "பௌர்ணமி" என்ற தெலுகு படத்தை பார்த்தேன். மயக்கிவசபடுத்திதுரித படுத்துதல் என்ற உறவு கோட்பாட்டை நன்றாக பயன் படுத்தி திரைக்கதை எழுதி உள்ளனர். 
முன்பே இந்த படத்தின் பாடல்கள் கேட்டிருக்கிறேன்ஆனால் படம் பார்க்க தோணினதில்லை. கொஞ்ச நாளாய் "முவ்வல நவ்வகல" என்ற இந்த பட பாடலை திரும்ப திரும்ப கேட்டுபடம் பார்க்க ஆர்வம் வந்து பார்த்து கொண்டிருக்கிறேன். 
படத்தினுடைய சிறப்புகளென்று பார்த்தோமானால் பாடலிசை தவிர வேறொன்றும் எனக்கு தட்டுபடவில்லை பார்த்த வரைக்கும். சார்மி மற்றும் த்ரிஷா இருந்தும் கவர்ச்சிக்கு பஞ்சம்.

என்னுடைய பார்த்தேயாக வேண்டும் என்ற பட வரிசையில் இல்லாவிட்டாலும்வாரயிறுதி பொழுது போகாதமைக்காக பார்க்க ஆரம்பித்தேன்....என்னுடைய இந்த வாரயிறுதி பொழுதுபோக்குக்கு இதை விட சிறந்த படம் இல்லை என்றே தோன்றுகிறது.


பாரத நாட்டியத்தை மைய புள்ளியாக கொண்டுள்ளது இந்த படம்.
= = = = =
இந்த வார டைம் பாஸில் "எங்களைக் காப்பாத்து ஏழுகொண்டலவாடா !" என்ற பெயரில் வந்திருக்கும் கட்டுரையை அவசியம் படியுங்கள். அந்தகால தெலுகு சினிமா ஹீரோக்களை செமையா கிண்டல் அடித்து இருக்கிறார்கள். இரண்டு மூன்று இடங்களில் படிக்கும் பொழுது சிரித்துவிட்டேன்.
கட்டுரையை படிக்கும் பொழுது என்னுடைய பதின்ம காலங்களில் ரம்யா கிருஷ்ணனின் கவர்ச்சி நடனத்தை பார்பதற்காக சில பல வயதான இளம் நாயகர்களின் ஆட்டத்தை சகித்து கொண்டது எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது கட்டுரையை படிக்கும் பொழுது. 

கோடை கால விடுமுறையில் உறவினர்களின் வீட்டில் இரவு எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்று பயத்தோடு நம்பி கொண்டு கவர்ச்சி டான்ஸ் பார்பதற்காக சத்தமில்லாமல் டிவியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது... இந்த வயதான இளம் ஹீரோக்கள் கவர்ச்சி நாயகியோடு டான்ஸ் ஆடுவதை பார்த்து வாழ்க்கையே வெறுத்து போகும். இருந்தாலும் ஹீரோ இருக்கும் பக்கத்தை மட்டும் மறைத்து கொண்டு நாயகியை மட்டும் பார்த்து இன்பம் அடைவேன். 
நொடி நேர பொழுது நாயகன் இடம் மாறி எரிச்சலை தானமாக தருவர். இந்த ரோதனை இல்லாமல் யாரவது முழித்து விட்டார்களா என்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும். 

இணையம் இல்லாத காலம் அது. அழகிய கனா காலம். 


கட்டாயம் படியுங்கள் அந்த கட்டுரையை. 
= = = = =
ஏரியை காணோமடி பாப்பா !

நாற்பது ஆண்டு கால நல்லவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் காணாமல் போன மற்றும் பரப்பளவு குறைந்த ஏரிகளின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். இப்படி நல்லவர்கள் வாழும் இந்த பூமியில் மராட்டிய மாநிலத்தில் பிழைக்கத்தெரியாத ஒரு பஞ்சாயத்து தலைவரின் சாதனை இது. தொடர்ந்து மேலே படியுங்கள்.


பாலைவனச்சோலை என்பார்களே அப்படி இருக்கிறது மராட்டிய மாநில அஹமது நகர் மாவட்டம் ஹைவாரே பஜார் கிராமம்.சுற்றுப்பட்டு கிராமங்கள் எல்லாம் கடும் வறட்சியில் காய்ந்து கிடக்கஇங்கு மட்டும் பச்சை பசேல் செழுமை.நீர் நிரம்பிய குளங்கள்.தண்ணீர் பாய்ந்தோடும் வாய்க்கால்கள்.செழிப்பான வயலகள் என பார்க்கப் பார்க்க பரவசமாகிறது. இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் அத்தனை பேரின் கரங்களும் கிராமத்தலைவர் பொப்பட் பவாரை நோக்கி பெருமிதத்துடன் நீளுகின்றன.
அவர்கள் சொன்னது, எங்களின் கிராமமும் 1990 வரை வானம் பார்த்த பூமிதான். மழைக்காலத்தில் மட்டும் விவசாயம் செய்வோம்.மற்ற பருவங்களில் எல்லாம் வறட்சி வறுமைதான். 200 அடிக்கும் கீழே வறண்டு கிடக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து எப்படி விவசாயம் பார்ப்பதுஇதனால் ஊரை விட்டுவிட்டு பஞ்சம் பிழைப்பதற்காக வெளியூர் போனவர்கள் அதிகம்.
அப்போதுதான் மழைக்காலத்துக்கு முன்பாக ஆங்காங்கே சினச் சின்ன குளம் வெட்டினால் தண்ணீர் சேமிப்பாவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயருமேஎன்கிற யோசனை வந்தது. மக்களிடம் சொனேன். மகிழ்ச்சியோடு முன்வந்தனர். 
இதையடுத்து ஊரின் எட்டு திக்குகளிலும் 52 மண் அணைகள் 32 கல் அணைகள் உருவாக்கப்பட்டன. மழைக்காலம் வந்தது.நீர்நிலைகள் நிரம்பின.கூடவே நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.கோடைக்காலம் தொடங்கியது. எட்டுபட்டி கிராமத்திலும் கொடிய வறட்சி. ஆனால் எங்கள் கிராமத்தில் மட்டும் ஆச்சரியமாக நீர்நிலைகள் நிரம்பி நின்றன.இதனால் நாங்கள் மூன்று போகமும் விவசாயம் செய்கிறோம்.1995 களில் இங்கு 80 முதல் 125 அடி தோண்டினால்தான் கிணற்றில் தண்ணீர் வரும். தற்போது 15 முதல் 40 அடி ஆழத்திலேயே தண்ணீர் பொங்கிப் பீறிடுகிறது.சக கிராமங்களில் இன்றைக்கும் 200 அடிக்கு கீழே தான் தண்ணீர் கிடைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். 

வேளாண்மையை பொருத்தவரை ரசாயன உர விலைதான் எங்களை கதிகலங்க வைத்தது.இதனால் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம்.இயற்கை உரம் தயாரிக்க மாட்டுச்சாணம் வேண்டுமே. இதனால் வீட்டுக்கு இரண்டு கரவைப்பசுக்களை வாங்கி வளர்ப்பது என்று முடிவாயிற்று.ன் இது எங்களை பசுமைப்புரட்சி மட்டுமின்றி பால் உற்பத்தியை பெருக்கி வேளாண்மைபுரட்சியிலும் தலை தூக்கவைத்தது. 1995 களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 லிட்டர் வரைமட்டுமே இங்கு பால் கிடைத்தது.இது இப்போது 4000 லிட்டருக்கு மேல் உயர்ந்து விட்டது. எந்த ஒரு விஷயத்திலும் தேவைகள் இருந்தால் மட்டுமே அங்கு தேடுதல் உருவாகும் என்பார்கள்.எங்களிடம் தேவைகள் இருந்தன.ஒன்றிணைந்து தேடினோம் கிடைத்த விஷயங்களை நடைமுறைப்படுத்தி இப்போது சாதித்துள்ளோம் என்கிற பொப்பட் பவாரின் பெருமிதத குரலில் அசாத்திய பணிவு ! பசுமையின் கனிவு !


இவருக்கு நாம் எல்லோரும் ஒரு பெரிய " ஓ போடுவோம்.
= = = = =
மகாபாரதத்தில் கிருஷ்ணன் / கண்ணன் பயன்படுத்தியதாக சொல்லப்படும் சக்கர ஆயுதத்தை பற்றிய குறிப்பு இந்த ஆவண படத்தில் வருகிறது. இதை கையால் சுழற்றி பயன்படுத்த வேண்டுமாம். 

மகாபாரதத்தில் கண்ணன் அந்த சக்கர ஆயுதத்தை வைத்து பலரின் தலையை வெட்டுவதாக வருகிறது. அப்படி என்றால் அந்த சக்கரம் எத்தனை வேகமாக சுழற்றி இருக்க வேண்டும் என்று நினைத்து பார்த்து ஆச்சரிய படுகிறேன். 


காவியமோ / இதிகாசமோ / புராணமோ எதுவோ இருந்தாலும் அந்த கால சமூதாய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் எழுதிருக்க முடியும். அப்படி பட்ட பட்சத்தில் அந்த அளவுக்கு வேகமாக சுழற்ற கூடிய திறன் அக்கால மனிதர்களுக்கு இருந்திருக்குமா ??? தெரியவில்லை. 
= = = = =
+2 மார்க் என்பது ஒரு அளவுகோல் இல்லைஅது கல்லூரி போவதற்கு ஒரு தகுதியே. அதை வைத்து தான் வாழ்க்கை தீர்மானிக்க படும் என்று சொல்லுபவர்களை கண்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

நான் +வில் பெயிலான பொழுது தான்நான் வெளி உலகம் தெரியாமல் அப்பாவியாகபலவீனம் உள்ளவனாய் இருந்துள்ளேன் தெரிந்தது.

+2 வில் தோல்வி அடைந்தால் பணமே பார்க்க்க முடியாது என்று பூச்சாண்டி காட்டுபவர்கள் நிறைய பேர் உண்டு..... தன்னம்பிக்கைதேடுதல்மன உறுதிஅறிவு கொள்முதல் ஆகியவை இருந்தால் +வில் பெயிலானாலும் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய அளவில் வரலாம்.

பள்ளிகூட கல்வி என்பது மிக பெரிய வரம்வாழ்க்கை மேன்பாட்டுக்கு உதவ கூடியதுவிக்ரமன் படத்தில் வருவது போல் ஒரே ரிசல்ட் வந்த நாளிலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற கதை எல்லாம் கல்வி வியாபாரிகள் உருவாக்கிய மாயை.

வெற்றி என்பது கடின உழைப்பினால் மட்டுமே வர கூடியது. அதனால் மாணவர்கள் அதிக மார்க் எடுத்தால் கல்வியில் அடுத்த நிலைக்கு போக முயற்சி செய்யுங்கள்.... தோல்வி அடைந்தால் அடுத்து வரும் பரீட்சையில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.

+2 மார்க் வரும் இந்த நேரத்தில் அதிக மார்க்கின் மகத்துவத்தை பற்றி பேசுபவர்களை கண்டால் கோவம் தான் வருகிறது. அந்த மாதிரியான பேச்சுக்கள் பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

பள்ளி முடித்த பின் கல்லூரி என்ற சமூக கௌரவமே / மனப்பான்மையே மதிப்பெண்  மகத்துவ பேச்சுக்கு காரணம். அதற்கு தோல்வி அடைந்தால் அடுத்தது என்ன என்று தெரியாதது கூட காரணமாக இருக்கலாம்.

நிறைய சொல்ல தோணுதுஆனால் அதை எப்படி வார்த்தைகளால் சொல்லுவது என்று தெரியவில்லை. 


கடைசியாக ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.

நான் CBSE ல் +பரீட்சை எழுதிகணக்கில் 06/100 எடுத்து பெயிலானேன். பிறவு ஒரு டுடோரியலில் சேர்ந்து STATE BOARD ல் +பரீட்சை எழுதி பாஸ் பண்ணினேன் நல்ல மதிப்பெண்களுடன். பிறகு UG & PG படித்தது எல்லாம் தனி கதை.

 அப்பொழுதெல்லாம் நினைத்தே பார்த்தது இல்லை நான் முதலீடு ஆலோசகர் ஆவேன் என்று. இப்பொழுது இந்த துறையில் பெரிய ஆளாக வரவில்லை என்றாலும்.... அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். இன்னும் ஓன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நினைத்த இலக்கை அடைந்து விடுவேன்.

சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. சொல்ல நினைத்தது பரீட்சையில் தோல்விக்காக  .... கலங்கி விடாதீர்கள் / உடைந்து போவாதீர்கள் அது தான் உண்மையான தோல்வி. விடாது முயற்சி செய்யுங்கள். முடியாதது என்று எதுவும் இல்லை 
= = = = =
என் நண்பன் அப்பாஸோடு பேசினேன். பேசினப்ப 

"
மச்சான் ....நம்ம ஏன்டா கணக்குல பெயிலானோம் ??"

"
மச்சான் எல்லா பரீட்சை முன்னாடியும் பிட்டு படம் பார்த்தோம்ல"

"
ஆமா"

"
கணக்கு பரீட்சை அப்ப ....பிட்டு படம் பார்க்காம போய் பரீட்சை எழுதினோம்ல ...அதான் பெயில் ஆகிட்டோம்"
= = = = =
டைம் பாஸ் விகடனில் கவர்ச்சி படங்கள் போடுவது குறைந்து விட்டதே என்று கவலை படுகிற நண்பர்களுக்கு ஒரு தகவல். 

"
டாப் 10 சினிமா" என்றொரு வார சினிமா பத்திரிக்கைபெரிய சைஸ் வள வள பேப்பரில் நேர்த்தியான கவர்ச்சி படங்களை கொண்டு வருகிறது. நான் 2011 கடைசியில் இருந்து 2012 மத்தி வரைக்கும் வாங்கி கொண்டு இருந்தேன். அத்தனையும் அருமையான நடிகைகள் படங்கள் கொண்டவை. 
பிறகு ஒரு நல்ல ஞாயித்து கிழமை அன்று அம்மா அதனை பார்த்து கோவப்பட்டு ....."எதில் அடி வாங்குற விளக்குமாறா இல்லை பெல்ட்டா" என்று சாய்ஸில் கேட்டதால் .... பிறவு மரியாதை (பயம் என்றும் சொல்லலாம்) காரணமாக வாங்குவதை நிறுத்தி விட்டேன்.
இந்த பத்திரிகையில் விஷய அடக்கம் என்று பார்த்தால் ரொம்ப குறைவு தான். ஆனால் பல கனவுகளை தரக்கூடிய அளவுக்கு வண்ண வண்ண கவர்ச்சி படங்களுண்டு. 

சினிகூத்து பத்திரிக்கையை விட கவர்ச்சி படங்களை போடுவதில் இந்த டாப் 10 சினிமா சிறப்பாக இருக்கும். இதுவும் வெள்ளிகிழமை தான் வெளிவருகிறது என்று நினைக்கிறேன். 
Related Posts with Thumbnails