Pages

Tuesday, October 5, 2021

இராஜராஜ சோழன் II பொன்னியின் செல்வன் II மதுராந்தகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அல்லது சோழர்களுக்கும் எனக்குமே ஒரு மறைமுகமான பந்தமொன்று இருக்கிறது. 

சுந்தர சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் என்று அழைக்க பட்ட  மதுராந்தகன் தனது ஆட்சி காலத்தில் செகற்பட்டு மாவட்டத்தில் (பழைய செகற்பட்டு மாவட்டம் - அதில் காஞ்சிபுரம் ஒரு பகுதியாக இருந்தது)     விவசாயம் செழிக்க மாபெரும் ஏரி ஒன்றினை உருவாக்கினார். பின்னர் அவரது பெயரிலேயே அந்த ஊரும் ஏரியும் அழைக்கபட்டு வருகிறது. இப்பொழுது செங்கற்பட்டு மாவட்டத்திலேயே இருக்கும் பெரிய ஏரி மதுராந்தக ஏரி. 

அப்பொழுது ஏரி உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்த சோழர்களுக்கு கருங்குழியில் இருந்து உணவிற்கான அரிசி போய் இருக்கலாம். 

கருங்குழி சோழர்காலத்தில் பெரும் ஊராக இருந்து வந்துள்ளதாம். இதனை மா.கேசவன் எழுதிய "வரலாறுமிக்க கருங்குழி நூலில் காணலாம்.

கருங்குழியில் இரண்டு போர்கள் நடந்திருக்கிறது. குறிப்பு இல்லாத மாலிக் கபூர் தலைமையில் நடந்த மொகலாய படையெடுப்பு மற்றும் வந்தவாசி போரில் கருங்குழி கோட்டையை ஹைதர் அலியும் ஆங்கிலேயர்கள் மாறி மாறி கைபற்றி இருக்கிறார்கள். இதனை பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவண ஏட்டில் இருக்கிறது. 

சரி இதில் நான் எப்படி வருகிறேன்...?

என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் தான் கருங்குழி. என் தாத்தா அங்கு தான் அலுவலக வேலை, விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். ஒரு வேளை இராஜராஜ சோழருக்கு எங்க குடும்பத்து முன்னோர்கள் சோறு கூட போட்டு இருக்கலாம். 

மதுராந்தகம் வட்டம் கருங்குழி கிராமம் தான் என் பூர்வீகம்.

இப்பொழுது தலைப்புக்கு இந்த விசைபலகை நடனம் பொருந்தி வருகிறதா ???

No comments:

Related Posts with Thumbnails