Pages

Friday, December 17, 2021

கலவை - 17/12/2021

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எல்லோரும் சமம் என நம்ப படுகிறது.

ஒருவன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் விமான நிலைய மலசல கூடத்தில் சீறுநீர் அல்லது மலம் கழிக்க கட்டணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஆனால் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ மலசல கூடத்தில் கட்டணம் வசூலிக்க படுகிறது. 

விமான நிலையத்தில் கழிவறை பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றால் மற்ற போக்குவரத்து நிலையங்களிலும் இலவசமாக தானே இருக்க வேண்டும். 

அப்படி கட்டணம் வசூலிக்கப்படும் போக்குவரத்து நிலைய கழிவறைகளில் எத்தனை முறை , எந்தெந்த நேரங்களில் அவை சுத்தம் செய்ய படுகிறது என்ற விவரம் கிடைப்பதில்லை. 

கட்டணம் பணமாக தான் வசூலிக்க படுகிறது. அரசு முன்னெடுத்து செல்லும் திட்டமான UPI வழிக்க கட்டணம் செலுத்த வசதி இல்லை.  

கையில் சில்லறை காசு இல்லாதவர்கள் கழிவறை ஒப்பந்ததாரர்களின் வசவு சொற்கள் கேட்க வேண்டி இருக்கு. 

அதுவும் பேருந்து நிலைய கழிவறைகளில் மாற்று திறனாளி ஒருவர் போய் வர வேண்டுமென்றால் தர்ம சங்கடங்களை அனுபவிக்க வேண்டி வரும். 

போருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பெரும்பாலும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே இருக்கும். 

இது இப்படி என்றால்

சில இடங்களில் அரசு அமைத்திருக்கும் இலவச கழிவறைகளில் சிலர் மலம் கழித்துவிட்டு அது ஏதோ பிறர் பார்த்து பரவச பட வேண்டிய ஒன்று என நினைத்து நீர் ஊற்றி கழுவாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

(ஆம் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது)

# # # #

சிவாஜி கணேசன் நடித்த அருணோதயம் படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 

அருமையான படம். 

இதனை மட்டும் கொரிய பட இயக்குநர்கள் பார்த்தால், கொஞ்சம் நகாசு வேலை செய்து அருமையான ஒரு Crime Thriller படம் எடுத்திருப்பார்கள்.

# # # # 

போன வாரம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க திறப்பு எல்லாம் நடந்திருக்கிறது ஆனால் அதனை பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்திருக்கிறேன்.

ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் மார்கழி மாதம் வந்தாலே எல்லோருக்கும் ஸ்ரீரங்க சொர்க்க வாசல் சுற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். பகல் பத்து தரிசனம் இரா பத்து தரிசனம் என திருவிழா போல் இருக்கும் ஸ்ரீரங்கம். 

கல்லூரி காலத்தில் இதில் தன்னார்வலராக பணியாற்றி இருக்கிறேன் என்பதால் வைகுண்ட ஏகாதசி என்றாலே மலரும் நினைவுகள் தான்.

ம்ம்ம்.

# # # #

சிலுக்கு ஸ்மிதா என்றால் யாரென தெரியாத தலைமுறை ஒன்று உருவாகி வளர்ந்திருக்கிறது.

அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

தட் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமண்ட்

# # # #

ஆங்காங்கே பலர் சிலரை உனக்கு இங்க இடமில்ல பாகிஸ்தானுக்கு போ என கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இது எங்கிருந்து பழக்கமாகி இருக்கும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தேன்.

இதனை அவர்களுக்கு கற்று கொடுத்ததே விகடன் மற்றும் ஜெயகாந்தன் தான் என நினைக்கிறேன்.

1960கள் வரைக்குமே அவர்கள் படிக்கும் பத்திரிக்கையாக இருந்த விகடனில் ஜெயகாந்தன் "பாரீஸுக்கு போ" என்ற தொடரை எழுதினார். அதனை படித்து வளர்ந்தவர்கள் தான் இன்று "அந்த சிலரை" பாகிஸ்தானுக்கு போ, அரேபியாவுக்கு போ என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் மொத்த வழக்கையும் ஜெயகாந்தன் & விகடன் மேல் எழுதிடணும்.

# # # # 

No comments:

Related Posts with Thumbnails