Pages

Sunday, May 15, 2022

கலவை - ஜெயில் இயக்குனர் வசந்தபாலன்

வசந்தபாலன் இயக்கத்தில் வந்த ஜெயில் படத்தை பார்த்தேன், ஏதோ கண்ணகி நகரில் இருப்போர் எல்லோரும் திருட்டு தொழிலில்தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மையிலேயே படத்தில் காட்டி இருப்பது போல் மக்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் ஒரு 2% தான்.

நிஜத்தில் கிடைத்த வேலையை, தொழிலை செய்து கொண்டு தங்களது அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்திட வேண்டும் என்று உழைப்பவர்களை கொண்ட பகுதி தான் கண்ணகி நகர்.

முன்பு இரண்டு படங்களில் வசந்த பாலனுக்கு இருந்த பிரச்சினை தான் இந்த படத்திலும் அவருக்கு இருக்கிறது. படத்தை ஆரம்பிக்க தெரிந்தவருக்கு அதை எப்படி முடிப்பது என்று புரியாமல் குழப்பிக் கொண்டு முடித்திருக்கிறார்.

- - -

சுஜாதாவின் சிவந்த கைகள் நாவலை படித்தேன். தொடங்கியதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. பாதாம் அல்வாவினால் எழுத்தபட்டது ஒரு எழுது நடை. 

ஏற்கனவே இரண்டு ஒரு முறை வாசித்திருக்கிறேன் என்ற ஞாபகமே வரவில்லை. 

வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே இந்த நாவலை திரைப்படமாக எழுத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டே இருந்தேன். 

ஆனால் 1980களில் நடக்கும் கதையை இக்காலத்துக்கு ஏற்றது போல மாற்ற வேண்டும். அதுவே ஒரு சவாலான ஒன்றாகும்.

- - -

இப்பொழுது முகில் எழுதிய உணவு சரித்திரம் பாகம் - 1 வாசித்து கொண்டு இருக்கிறேன். அக்காலத்தில் அல்வாக்களை மருத்துவ ரீதியாகவும் பயன் படுத்த பட்டது என அதில் படித்ததில் இருந்து ...

ஒரு வேளை அமைதிப்படை அம்மாவாசை Anesthesiologistஆக அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்திருப்பார் போல.

- - -

பாரா எழுதிய பொலிக பொலிக வாசித்த பிறவு முதன் முறையாக திருபெரும்புதூர் சென்று வந்தேன். 

நகரமயமாக்கல் நகரங்களின் பக்கத்தில் இருந்து இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல கொஞ்சம் சோம்பலாக புதுமைகளுக்கு வணக்கம் சொல்லி கொண்டு இருக்கிறது.
இந்திய ஆன்மீகத்தில் திருபெரும்புதூருக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. இங்கு பிறந்த இராமானுஜர் திருப்பதிக்கு போகாமல் இருந்திருந்தால் இன்னுமும் சிவனா காளியா என சண்டை நடந்து கொண்டு இருந்திருக்கும்.

ஆன்மீக பக்தியை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு பார்த்தோமானால் அழகு அழகாய் சிற்பங்கள். ஒவியர் சில்பி இதனை எல்லாம் வரைந்து வைத்திருக்காரா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன்.

பக்தி, சிற்பங்கள் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டால் முக்கிய குறை - முன்பு போல தையிலையில் சுட சுட அதிரசம் வைத்து விற்பது இல்லை.

திருபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் சிப்காட் வழியாக சேத்துப்பட்டு தாண்டி மலைப்பட்டுக்கு வந்தால் அமைதியான சூழலில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. மாலை நேரத்தில் அமைதியாக நேரத்தை கழிக்க ஏற்ற இடம்.

- - -

2ஜி வழக்கில் ஆ.ராசா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்லிவிட பிறகும்  BSNL நிறுவனத்தின் தேக்க நிலைக்கு ராசா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் காரணம் என இந்த காணொளியில் ( https://youtu.be/Wlgk8XXHWuA ) சொல்லி இருக்கிறார்கள்.

இது தவிர்த்து இவர்களது Think School வலையகத்தில் பல பொருளாதார வழக்காய்வுகள் (Case Studies) பற்றி பல காணொளிகள். ஆர்வம் இருப்போர் கண்டடையலாம். 

- - -

No comments:

Related Posts with Thumbnails