Pages

Showing posts with label மேவி .....ஐ லவ் யூ. Show all posts
Showing posts with label மேவி .....ஐ லவ் யூ. Show all posts

Thursday, December 24, 2009

மேவி .....ஐ லவ் யூ - 3

ஆபீஸ் பிளாக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக்கும் இடையே இடது பக்கமாய் திரும்பினால் கொஞ்சம் தூரத்தில் லேடீஸ் டாய்லேட் இருக்கிறது. பாஸ்கட் பால் கோர்ட்ல இருந்து அதன் முகப்பை பார்க்க முடியும். பயற்சியில் சேர்ந்த நாள் முதல் எனக்கும் அப்பாஸுக்கும் அதனுள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் இருந்தோம்.

இருந்தாலும் பயம் தடை சொன்னது.

அதற்கு நன்கு ஆலோசித்த பிறகு .....முகுர்த்தம் குறித்தோம்.

வியாழன் மாலை.

முகர்த்த நேரம் கடந்தும் எண்ணம் நிறைவேறவில்லை. ஐந்து மணி, வழக்கமாய் இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. இப்பொழுதும் கூட்டமில்லை தான் அங்கங்கே ஓன்று, இரண்டு பேர் இருந்தார்கள்.

நாங்கள் இருவரும் மெல்ல மெல்ல இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தோம். யாரவது வருவது போல் தென்பட்டால், அந்த பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் பிளாக்கு போவது போல் பவனை காட்டினோம். இன்னும் ஐந்து ஜன்னல்கள் தான் இருந்தது கடக்க.

ஓன்று ....

இரண்டு ....

மூன்று ......

எனக்கு அப்பொழுது ஓர் சந்தேகம் வந்தது.

"டேய் ...இதை இன்னிக்கே பார்தகனுமா ??"

"பேசமா வா ....."

அப்பாஸ் ரொம்ப டென்ஷனாக இருந்தேன், ஏதோ மணமேடையை நோக்கி போகும் மணமகன் போல். கக்குசுல அப்படி என்ன இருக்கு ..... திருச்சில நடக்கும் கண்காட்சிக்கு கூட நான் இப்படி போனது இல்லை. சற்று மெதுவாக தான் போனோம். ஓர் பெண் அந்த வழியாக வரவும் எங்களின் நடை உரைநடையானது. என் பார்வை அவள் மார்ப்பின் மேல் போனது.

ஆதாமுக்கு ஏவாள் ஒரு பெண் என்ற நினைவு வரவே இல்லை. அவனிடத்தில் இருந்த உறுப்பு அவளுக்கு இல்லாதது, ஆதாம் ஓர் பொருட்டாக கருதவில்லை. ஆனால் ஏவாள் வயதிற்கு வந்த பின் அவளின் உடலில் நடந்த பருவ மாற்றங்களால், வளர்ந்த மார்ப்பங்கள் அவனை ஏன்னோ செய்தது. அதை வரை இல்லாத ஓன்று, அது ஏன்ன என்ற கேள்விகளால் குழம்பிய நாளில் இருந்து ஆண்களுக்கு பெண் என்பவள் அதிசயங்களின் , ரகசியங்களின் இருப்பிடமாக தான் இருக்கிறாள். அதற்கு நான் மட்டுமென்ன விதிவிலக்க ???

அப்படி ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது யாரோ எங்களை நோக்கி சத்தம் போடுவது போல் ஆழ்கிணற்றின் உவமைகள் போல என் காதுகளில் கேட்டது. திரும்பி பார்த்தேன். அவள் முகம். அவளின் முகம் தாங்கிய அவளது உடல்.

குளிர் காற்று வீசியது. ஜன்னல் பக்கம் நின்ற என்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தேன். காற்றில் வேகமாய் அவளின் முக பிம்பத்தை கண்களில் ஏந்தி...... பறவை போல் பறந்து...மேடு பள்ளங்களை கடந்து கொண்டு இருக்கும் போது......

"டேய் ....என்னடா ஆச்சு ...வந்ததில இருந்து அப்படியே இருக்க ..."

மேகங்களிடையே பறந்து கொண்டு இருக்கும் நேரத்தில், என்னை தவிர என் வேகத்தில் யார் பறப்பது என்று அறியும் நோக்கத்தில் .......

நினைவு திரும்பி வந்து பார்த்த பொழுது விடுதியில் இருந்தேன். அப்பாஸ் ஏதோ ஓர் காரணத்துக்காக என்னை கையை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தான்.

"யார அவ ?"

"யாரு ....."

இந்த நேரத்தில் படித்து கொண்டு இருந்த ராஜேஷ் திரும்பி பார்த்தான்.


ராஜேஷ்.

நான் எப்படி இந்த கல்லூரிக்குள் தள்ளப்பட்டேன்னோ அதே மாதிரி அப்பாசும். ஊடக துறை சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும் நிராசையானது.



எங்களுக்கு வகுப்புகளில் நடத்தபட்ட பாடங்கள் ஏதும் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. ரச சாதத்திற்கு தேங்காய் சட்னி எவ்வளவு பொருத்தமாய் இருக்குமோ அந்த அளவுக்கு நாங்கள் பொருந்தி போய் இருந்தோம். ராஜேஷ் கிளாஸ்ல எங்கள் இருவரிடையே அமர்பவன். அப்பாவி அதனால் எங்களுக்கு அவன் மேல் பிரியம். படிப்பாளி. வகுப்புகளில் தரும் assignment களை முடிக்க அவனுடைய தேவை எங்களுக்குள் இருந்தது. அதனால் அவனை எங்களோடு வைத்து இருந்தோம்.



"அவ நம்ம கிளாஸ் தான்டா...." என்றான் அப்பாஸ்.

காதலின் புனிதம் நிர்வாணத்தில் ஆரமிக்கிறது என்று படித்துள்ளேன். அதனால் தான் அவள் மேல் எனக்கு காதல் வந்ததோ ....... அவளுக்குள் என் மேல் காதல் வர அவளும் என்னை அதே நிலையில் பார்க்க வேண்டுமா ??? என்கிற மாதிரி எல்லாம் கொக்கு மக்காக யோசிக்க ஆரமித்தேன் அவளை வகுப்பகளில் கவனிக்க ஆரமித்த பிறகு, தூக்கம் கூட வருவதில்லை.



பிறகு வந்த நாட்களில் அவள் மேல் ஒரு பிரேமை கலந்த ஆளுமை வந்தது. வசந்தக்காலத்தில் பூக்கும் மலர்களை போல வகுப்பறையில் என்னுள் சந்தோஷங்கள் பூத்து கொண்டே இருந்தது அவளை பார்க்கும் நேரங்களில் எல்லாம். ரோமியோ ஜூலியட்யாய், அம்பிகாபதி அமராவதியாய் கற்பனைகளில் நான். ஸ்கூல்ல அவள் வேற குரூப், நான் வேற குரூப் அதனால் போதிய அறிமுகமில்லை எனக்கு காதலை வளர்க்க.......


தொடரும் ......

Wednesday, December 23, 2009

மேவி .....ஐ லவ் யூ - 2

ST ANNE 'S GROUND யை தாண்டி போனால் LAWRENCE HALL பக்கம் இருக்கிறது பெண்கள் விடுதி. அவர்கள் சொன்னது சின்ன வேலை தான். விடுதி ஜன்னல் பக்கமாய் போய் ஹாரிதாவின் ஹால் டிக்கெட்யை எடுத்து வர வேண்டும். அது அவள் டேபிளில் தான் இருக்குமாம்.

ஜன்னல் அருகே போன்னேன்.



மறுநாள்.

கணக்கு பரீச்சையில் சரியாக எழுத முடியவில்லை. எல்லாம் மறந்தது போல் : எவ்வளவு நினைவு படுத்தி பார்த்தும் ஞாபகம் வரவில்லை. கண்களை மூடினால் அதே காட்சி தான்.

ஒரு மணி நேரம் முன்னாடியே answer - sheet யை தந்து விட்டு வெளியே வந்தேன்.


= = = = = = = = = =



மே 1999

"இல்ல நான் hotel management தான் படிப்பேன் ......."

"டேய் சொன்ன கேள்ளுடா....." என்றார் அப்பா.

"அது எல்லாம் முடியாது .....என் வாழ்க்கை,நான் தான் முடிவு எடுப்பேன் ......" என்று நான் சொல்லி முடித்த மறுகணம் பெரிய அண்ணன் வேகமாய் வந்து பலமாய் ஒரு அரை விட்டார்.



= = = = = = = = = =


ஜூன் 1999

காரில் பயணித்து கொண்டு இருக்கிறேன். காருடைய நிழல் நீளமாக இருந்து காரின் உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தது. சென்னை நோக்கிய பயணம். இரண்டு கார்கள்.

பெரிய அண்ணன் காரில் நான் இருந்தேன். கூடவே அண்ணி. சின்ன அண்ணன் அந்த காரை ஒட்டி கொண்டு இருந்தார்.


கதவை யாரோ தட்டுறாங்க. ......

வந்தது பக்கத்து ரூம் எம்பிஏ பசங்க. ஏதோ எகனாமிக்ஸ்ல
ஏதோ சந்தேகமாம். (என்ன கொடுமை சார் இது).ம்ம்ம் மணி 7 :30 ஆகிருச்சு. போய் சாப்பிடனும். வழக்கமாய் இந்திரா காந்தி சிலை பக்கத்தில இருக்கிற அரிய பவன்ல தான் சாப்பிடுவேன். கணபதி மெஸ் முடினத்தில் இருந்து இங்கே தான், அதுவும் பக்கத்து ரூம் பசங்க தான் சொன்னங்கன்னு போய் சாப்பிட ஆரமிச்சேன். வர வர அங்கேயும் டிப்பன் நல்ல இல்லை. அதனால் சேகர் மஹால் பக்கம் கோவை மெஸ்ன்னு ஏதோ புதுசாய் வந்து இருக்காம். இன்னைக்கு அங்க தான் ஜாகை. போயிட்டு வந்து கதையை தொடருகிறேன்.


மணி 8 : 20 .

ரூம்க்கு இப்ப தான் வந்தேன். கோவை மெஸ் பரவல. ஆன முத நாளே ரொம்ப கேள்வி கேட்டுட்டாங்க.

"வொர்க் பண்ணுரிங்க சார் ..?"

"ஆமாங்க....."

"என்ன சம்பளம் வரும் நமக்கு ??"

சொன்னேன்.

"அவ்வளவு காசுக்கு ஆபீஸ்ல என்ன பண்ணுவிங்க சார் ......."

நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். வழக்கமாய் ஆக மாட்டேன் ஆனால் பசி நேரத்தில் இப்படி அவன் கேட்டதால் ....

"ஆபீஸ் போன உடனே பேண்ட்யை கழுட்டி, பின்னாடி எண்ணையை தடவிக்கிட்டு ....குனிஞ்சு நிக்கணும்...... "

"என்ன சார் ...இப்புடி சொல்லுரிங்க ...."

"யோவ் ...முதல டிப்பன் வைச்சுட்டு, எது வேணாலும் கேள்ளு சொல்லுறேன். மனுஷன் நாள் புல்லா வேலை பார்த்துட்டு பசியோடு வந்தா, நிக்க வைச்சு கேள்விய கேக்குறிங்க ....."



ஜன்னல் திறந்து விட்டேன் ...நம்ம கற்பனை குதுரை ஓட வசதியா இருக்கும்ல. கதைக்குள் போறதுக்கு முன்னாடி நம்ம ஹீரோவை பற்றி எனக்கு மட்டும் தெரிஞ்ச உண்மையை சொல்லியாகனும். ஹீரோ பிறந்த பொழுது என்னசுன்ன ....

"என்னங்க ...பாருங்க உங்க பையன் பிறந்த உடனே உச்சா போறேன்.... அவனை டாக்டர் க்கு தான் படிக்க வைக்கனும்" என்றாள் நம்ம ஹீரோட அம்மா. உடனே அதற்கு கவுன்ட்டர் தந்தார் ஹீரோட அப்பா ....

"இல்லடி...நல்ல பரு உச்சா ஓட ஆய் போறான்....அதனால் அவனை ENGINEER யாக ஆகுவேன்..."


சரி கதைக்குள் போகலாமா ???


இது வரைக்கும் யாருமே 95 % க்கு குறைந்தது இல்லை .....அதனால் REC யா IIT யா என்ற கேள்வி தான் எழும், எதொன்றில் அட்மிஷன் கிடைத்து விடும்; அதனால் எல்லோரும் ரிசல்ட் வரும் முன்னரே கூடி ஓர் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஓன்று சேர்ந்து விடுவார்கள். இந்த வருடம் எனக்காக ஓன்று சேர்ந்தனர்; கொண்டாட்டம் இல்லை. 78 % தான்.

புழுவை போல் பார்க்க பட்டேன். ஆனால் நான் அடிக்கடி கண்களை முடி ......கொடைக்கானல் குளிரில் LADIES ஹோச்டேல் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்.

குடும்ப கெளரவம். என் கனவு கனவாகவே போய்விட்டது.

சென்னை வந்து சேர்ந்தோம் ...... என்னவோ சாபத்தில் பிடியில் இருக்கும் ஓர் வாகனத்திலிருந்து இறங்கியது போல் ஓர் உணர்வு. நான் சேர போகும் கல்லூரி முன்பு இருந்தோம்...

நான் முதல் முறை கல்லூரிக்குள் அட்மிஷன்க்காக சென்ற சமயம். அது வரைக்கும் நகர பெண்களை பற்றி கேள்விப்பட்டு தான் இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை. அப்பொழுது தான் சென்னைக்கு முதன் முறையாக வந்தேன், உண்மையில் பெண்களில் அத்தனை விதமான அழகு உள்ளது என்று அன்று தான் அறிந்தேன். அப்பாஸ், யுவனோடு கல்லூரியிலும் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் போனது . தேவதைகளுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது சனியன்களை பற்றி என்ன கவலை. LIFE ல FIGURE வந்த உடனே நண்பனை CUT பண்ணி விடுவது தானே தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கம்.

எதிரில் இருக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தோம்.

SRENT ENGINEERING COLLEGE ..... கல்லூரியின் பெயர் சொன்னது பளபள எழுத்துக்கள். பணக்கார கல்லூரி, பணம் படைத்தவர்களுக்கான கல்லூரி.

குடும்பத்தை பொறுத்த வரைக்கும் , குடும்ப கௌரவத்தை மேம் மேலும் தொடர செய்யும் இடம்.

கனவுகளை பொசுக்கிய இடம் எனக்கு. சிந்தனைகள் பல எண்ண காற்றலையில் .....மனதிற்குள் குழப்பம்.


பெரிய அண்ணனுடைய குரல் : கேட்ட உடனே நினைவுகள் திரும்பின.

அண்ணன் இருக்கும் இடம் நோக்கி சென்ற பொழுதில் தான் கவனித்தேன் ...... அட்மிஷனுக்கு வந்திருந்த பெண்கள் அழகாய், தேவதைகளாய். போட்டிக்கு அப்பாஸ் இல்லை, இல்லாவிட்டால் பெண்களுடன் என்னை பேச விடாமல் அவனே எல்லோரையும் கவர்ந்து இருப்பான். அவன் இங்கு சேர்தது ஓர் வகையில் சந்தோஷமே. பிகர்கள் இருக்கும் இடத்தில நட்புக்கள் எல்லாம் அந்நிய நாட்டு சதிகளே.எப்புடியும் படிப்பு முடிவதற்குள் இரண்டு மூன்று பிகர்களை கரெக்ட் பண்ணிவிட முடியும் என்ற நம்பிக்கை, அப்பாஸ் என்னுடன் வந்தால் இதெல்லாம் முடியாது.

"டேய் ....அப்பா உன்னை கூப்பிட்டார் ..."

"என்ன ..அப்பா?"

"அமான் அங்கிள் போன் பண்ணினார்டா .....அப்பாஸையும் இங்க தான் சேர்க்க போறாராம் .....சந்தோசம் தானே ?"

நான் சும்மா ஒப்புக்கு சிரித்தேன்.

= = = = = = = = = = = =
செப்டம்பர் 1999

"பேண்ட்யை கழட்டுரா ......"

வகுப்புகள் ஆரமித்து சில நாள் சென்று இருக்கும். விடுதி வாழ்க்கை எனக்கு ஒன்றும் புதுதில்லை என்பது சிக்கிரம் ஒத்து போனது. இரவு நேரங்களில் சாப்பிட்ட பின் சூடாக பால் குடிப்பது எனக்கு பழக்கம். அப்படி கூடிய வெளிய சென்று விட்டு உள்ளே வரும் பொழுது தான் சீனியர்களிடம் மாட்டி கொண்டேன்.

ரொம்பவும் ஸ்ட்ரெஸ் பண்ணினாங்க. ரொம்பவே பொறுமை காத்தேன். ஓர் கட்டத்தில் முடியவில்லை.

பிரின்சிபால் ரூம்.

பிரின்சிபால். டீன். வார்டன். சப்-இன்ஸ்பெக்டர்.

அதற்குள் தகவல் கிடைத்து. பெண்களும் விடுதியிலிருந்து வந்து இருந்தனர். என்னையும், அப்பாஸையும் சுற்றி ஏதோ அரசியல் நடந்து கொண்டு இருந்தது. காலேஜ்க்கு புதியவர்கள் என்பதால் எங்கள் பேச்சு எடுபட்டது.

ஆனால் இதையெல்லாம் விட ......பழகிய பெண்ணுடைய முகத்தில் தான் என் முழு கவனமும் இருந்தது.

அவளை நான் ஏற்கனவே ஓர் முறை ஸ்கூல்ல பார்த்து இருக்கிறேன். கணக்கு பரீச்சைக்கு முந்திய இரவில்..... ஆனால் இந்த வாட்டி அவள் உடைகளோடு இருந்தாள்.


தொடரும்

Tuesday, December 22, 2009

மேவி .....ஐ லவ் யூ

பெருங்களத்தூர் முதல் ரயில்வே கேட் வழியாக வந்து செந்தில்முருகன் கம்ப்யூட்டர் சென்டருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுக்கும் நடுவே போகும் படிகள் வழியாக வந்தால் என் அறைக்கு வரலாம். ரயில்வே ஸ்டேஷன்யில் இருந்து ஐந்து நிமிடங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதலாய் மூன்று நிமிடங்களாகும். என் அறைக்கு வருபவர்கள் சொல்லும் ஒரே குறை வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதது தான். இதற்காக எதிரில் இருக்கும் பிரதர்ஸ் பேக்கரி முன்பு நிறுத்துவிட்டு வருவார்கள். மாவு மில் முன்பு நிறுத்த, மில்லின் ஓனர் அனுமதிக்க மாட்டார்.

என் அறைக்கு வரும் வழி தான் கொஞ்சம் எப்ப-சப்பையாக இருக்குமே தவிர, அறை வசதியாக தான் இருக்கும். ஆனால் அதை நான் வைத்திருக்கும் லச்சணம் தான் பல் இளிக்கும். பொது குப்பை தொட்டி கூட என் அறையை விட கொஞ்சம் சுத்தமாக தான் இருக்கும். புத்தகங்கள் திறந்த படி இருக்கும், சுவரில் கலோசொபு தனமான போஸ்டர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். தனியாக தங்கும் வாலிபர்களின் அறை எப்புடி இருக்கும் என்று நான் ஒன்னும் புதிதாய் கிளாஸ் எடுக்க வேண்டியது இல்லை.

சரி, இனிமேல் தான் கதைக்குள் போக போகிறோம், இடைவேளை இல்லை. ரிலாக்ஸ்செஷன் வேண்டுவோர் பிரதர்ஸ் பேக்கரியில் எதாவது சாப்பிட்டு விட்டு வாங்க.(எனக்கு அங்கு அக்கௌன்ட் இல்லை).............................
சனிக்கிழமை.

மாலை நேரம்.

வழக்கம் போல் நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். பொதுவாய் சனிக்கிழமை மாலை நேரங்கள் ஞாயிறு மாலை நேரத்தை விடவும் சுவாரசியம் அதிகமாக தான் இருக்கும். ஏன்னு என்று சொல்ல காரணங்கள் இல்லை தான், ஆனாலும் ஏதோ ஓன்று கிடைத்து விடும், அன்றைய மாலை பொழுதை நான் சுவாரசியமாக தான் அனுபவித்தேன் என்று நம்புவதற்கு.

அன்றும் அப்படி தான். சுவாரசிய பொழுதுகளை எதிர்நோக்கி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன், என்ன பார்த்தேன் என்று ஞாபகமில்லை, ஆனால் செல்போன் தோழிகள் அழைத்தால் பாட வேண்டிய அந்த பாட்டை பாடியது. பர்சனல் மொபைல் தான். ஆபிஷியல் மொபிலேயின் இயக்கத்தை நிறுத்தி வைத்து இருந்தேன்.

"டேய். என்னடா பண்ணிட்டு இருக்க ??"

கொஞ்ச நேர யோசனைக்கு பின் பூஜா தான் பேசுகிறாள் என்பதை டிஸ்பிளேவை பார்த்து தெரிந்து கொண்டேன்.

"ஒன்னும்ல்லா.... சும்மா தான் இருக்கேன்."

"ஏன்...புக்ஸ் படிக்கல ??"

"போர் அடிக்குது..."

"ம்ம்ம்"

"வேலை எதுவும் இல்லை...."

"ஓ..... அப்படின்னா, நான் ஒரு வேலை தரேன்...செய்."

"எனது ?"

"வந்து உன் ரூம் கதவ திற ..... நான் வெளியே நான் இருக்கேன்...."

மனிதர்களின் மனசை போல் தான் என் அறையும், வெளியே இருந்து பார்க்க நல்ல தான் இருக்கும். உள்ளே செம குப்பையாய் இருக்கும். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியாது. இது அந்த நேரத்தில் மண்டைல பல்பு எரிஞ்சுது.

சரின்னு கண்ணதாசன் மாதிரி "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..." மனசில் பாடிகிட்டே கதவை திறந்தேன்.

அவள்.

கண்களில் எதிர்பார்த்த மாதிரி தான் அறை இருக்கிறது என்பது போல் ஒரு ஏளன பார்வை. சுவரில் இருக்கும் படங்களை பார்த்து கொண்டே வந்த அவள் ஒரு படத்தை பார்த்த உடனே,அவள் முகம் அஷ்ட கோணலாய் போனது. போன மாதம் ஒட்டின GANG BANG படம். என்ன சொல்லுறதுன்னு தெரியல ஆன மொத்தத்தில் என் மானம் டைடானிக் ஏறி கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் விருந்தோம்பல் தான் தமிழரின் SUN BATH என்று ......சாரி பண்பாடு என்று நினைவு வருவே நூட்லஸ் வைத்து தந்தேன். திருவள்ளுவர் பாடாத ஐட்டம் ஒன்றை அவளுக்கு தந்து விட்டேன் என்ற பெருமை.

(சே...கதை ரொம்ப மொக்கைய போயிட்டு இருக்குல ...PATTERN CHANGE )

ஜன்னல் வழியே வந்த காற்று நங்கள் இருவரும் அருகே ஏதோ ஒரு அவஸ்தையுடன் அமர்ந்து இருந்ததை கண்டு பிடித்தது. எதுவென்று தெரியவில்லை பேச்சு காதல், கல்யாணம், காமம் என்று திசை திரும்பிய பொழுது தான் நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்குள் பற்று இருப்பதை.

தனிமை தந்த சுகந்திரம்.....

மனதிற்கு தான் சமுக கட்டுப்பாடுகளெல்லாம். உணர்வுகளுக்கு அது இல்லை.

ஆனால் மனதும், உணர்வும் ஒரே இடத்தில் இணைந்து இருந்ததால் பிரச்சனை.

என்ன செய்வது என்று தெரியவில்லை.

பயம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தனிமை ஒரு உளியை போல் காம உணர்வினை மேம்மேலும் செதுக்கி கொண்டு இருந்தது.

எதற்கு அவள் வர வேண்டும்.

அவளை நான் தடுக்கவில்லை. ஆனாலும் அவள் போகாமல்...... இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அறிவு ஆணுறை வாங்கி விடலாமா என்று யோசிக்க ஆரமித்தது.

முத்தமிட அவள் உதடுகள் நோக்கி தவிப்புடன் என் உதடுகள் ......

ஆர்வம் வந்த பொழுது முன்னேறினேன். பயம் வந்த நேரத்தில் பின் வாங்கினேன்.
கட்டுபடுத்த முடியாத ஒரு நிலையில் கையை அவள் அருகே கொண்டு போனேன். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு என் பக்கம் முதுகை காட்டிய படி சொன்னாள்.....

"நான் உண்......."

"ம்ம்ம்...எனது.." என்றேன் அவஸ்தையில்

"மேவி..ஐ லவ் யூ .....உன்னை கல்யணம் பண்ணிக்க ஆசை படுறேன்......"

பிறகு ஆணுறை வாங்க வேண்டிதாக போச்சு. ஒரு பெண் மனசுக்குள் வந்தால் எவ்வளவு வெளிச்சமாக, அவள் காட்டும் பரிசுத்த அன்பினால் தூய்மையாகும் மனம் போலானது என் அறையும், மனசும்.

சிரித்தபடி பெருங்களத்தூர் தெருக்களில் சுற்றினோம். பிறகு கோவிலுக்கு சென்றோம்.

தாம்பரம் போக எண்ணமில்லை. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும்
..........
(ஒ..சின்ன தப்பு நடந்து போயிருச்சு ......இது கதையோட கடைசி பாகம்...... முதல் பாகம் இதோ கிழ இருக்கு)

மார்ச்,1999

XXX BOARDING SCHOOL

கொடைக்கானல்

"இப்ப LADIES HOSTEL க்கு போகாட்டி ....ஹால் டிக்கெட் உனக்கு கிடைக்காது ...."

நாளை +2 BOARD EXAM . கணக்கு முதல் எக்ஸாம்.

எனக்கு பயம இருந்துச்சு .......
தொடரும் .....
Related Posts with Thumbnails