Pages

Showing posts with label நுகர்வு அரசியல். Show all posts
Showing posts with label நுகர்வு அரசியல். Show all posts

Sunday, June 11, 2017

பிளாஸ்டிக் அரிசி [Plastic Rice] - மறைந்திருக்கும் அரசியல்

கைல ஒட்டாட்டி அது பிளாஸ்டிக் அரிசி, கீழ போட்டு அது பவுன்ஸாச்சுன்ன அது பிளாஸ்டிக் அரிசின்னு ஆளாளுச்சு ஆராய்ச்சி பண்ணி வாட்ஸ் அப் அனுப்புறாங்க. இது காலங்காலமா அரிசி கல்ல கலந்து கலப்படம் செய்றவங்களை அசிங்க படுதுது.

முக்கியமா இதைய நான் வீட்டுல ஆராய்ச்சி பண்ணி பார்த்தா என்ன நடக்குமுன்னு யோசிச்சு பாத்தேன்...

அம்மா : கொழும்பு ஜாஸ்தி ஆகிருச்சி...

மனைவி : கஷ்டபட்டு செஞ்சு தாரேன் பாரு ... அதைய போய் கீழ போட்டு விளையாட தான் செய்வ.

ஆக மொத்தம் அம்மாவோ மனைவியோ இரண்டு பேரும் இப்புடிக்கா சொல்லிட்டு பொக்குன்னு என் முக்குல குத்த போறாங்க. ஸோ எதுக்கு இந்த விளையாட்டுங்குறேன்.

இதுல அரசியல் மறைஞ்சு இருக்கு.

இப்ப தான் branded packed rice எல்லாம் ஜாஸ்தியா விக்க ஆரம்பிச்சு இருக்காங்க . நம்ம மக்கள் காலங்காலமா அரிசி வாங்கிட்டு இருக்குற அண்ணாச்சி கடையிலிருந்தோ இல்லாட்டி அரிசி மண்டி இருந்தோ மடைய மாத்தி இந்த corporate branded packed rice வாங்க வைக்குற முயற்சியா இருக்குமுன்னு நான் நினைக்குறேன்.

இப்ப கொஞ்ச காலமா சில அரிசி மண்டிஸ் எல்லாம் online market நுழைஞ்சு கல்லா கட்டிட்டு இருக்காங்க. அந்த மண்டி எல்லாம் சிலது நூறு வருஷம் பழமை வாய்ந்தது. அதைய ஒடுக்க கூட இந்த புரளிய திட்டமிட்டு கிளப்பி விட்டு இருக்கலாம்.

இந்த புரளி வட இந்தியா பரவி இருக்குற மாதிரி தெரியல. முக்கியமா ஆந்திர தெலுங்கானா பரவி இருக்கு. இப்ப கொஞ்சமா தமிழ் நாட்டுலையும்.

இது எங்க கொண்டு போய் விடுமுன்ன பல இடங்கள் அரிசி வியாபாரமுங்குறது B2C ( Business to Consumers)யா இருக்குறது அதாவது நேரடி விற்பனையா இருக்குறது கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி B2B (Business to Business)யா மாத்துற முயற்சியா கூட இருக்கலாம். அதாவது பெரும் கார்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் கிட்ட இருந்து நேரடி கொள்முதல் செய்ற மாதிரி ஆகிடும். இது அப்புடிக்கா போய் Corporate Farmingக்கு கொண்டு விட்டுரும்.

இந்த புரளி நேரடியா தாக்குறது அரிசி மொத்த வியாபாரிகள் மேலையும் அரிசி மண்டிஸ் மேலையும் தான். நம்பகத்தன்மைய குறைக்குறது.

இது ஒண்ணும் புதுசு இல்ல ..... ஏற்கனவே இப்புடி தான் நடந்துகிட்டு இருக்கு.

முக்கியமா பிளாஸ்டிக் அரிசி பண்ணி நார்மல் அரிசியோடு கலந்து விக்குறது அவ்வளவு லாபமானது இல்லன்னு பிளாஸ்டிக் துறைய சேர்ந்தவங்க ஃபேஸ்புக் சொல்லுறாங்க.


Monday, April 14, 2014

* கலவை - மனத்தோன்றியவை *

துரித உணவிற்காக கடல் பிராணிகளை கொல்லும் போக்கு இந்தியாவிலும் தொடங்கி இருப்பதாய் சொல்கிறார்கள், என்னவென்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரிந்து இந்திய மீன் வள துறை வெகு காலமாய் மீன் பண்ணை முறையை பிரபல படுத்தி வருகிறார்கள்.

தற்பொழுதிய சூழ்நிலை பற்றி தெரியவில்லை, ஆனால் 1990 இறுதி வரைக்கும் இதை தொழில் சார் நபர்களிடம் பரிந்துரை செய்து வந்துள்ளனர்

அமெரிக்காவில் துரித உணவுக்காக அதிக அளவில் கடல் பிராணிகள் கொல்ல படுவதை எதிர்த்து இருபது வருடங்களுக்கு முன்னால் சட்டம் கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்
- - - - -

குழந்தைக்கு லங்கோட் கட்டுறதுக்கு கூட பயிற்ச்சி வேணும் போல. இன்று மதியம் கிருஷ்ணாவுக்கு லங்கோட் கட்டுற பாக்கியம் எனக்கு கிடைத்தது. எப்படி கட்டுவது என்று தெரியாமல் துணியை இரண்டாக கிழித்து முன்னாலும் பின்னாலும் மறைத்து அரைஞான் கயிற்றில் முட்டு கொடுத்து வெற்றி கரமாக கட்டினேன். ... அதிலும் பின்பக்கம் கட்ட அவன் கால்களை தூக்குவதற்குள் பயம் உச்சம் தட்டி விட்டது. ஒரு வழியாக கட்டி முடித்து ஜென் நிலையை அடைகையில் கட்டிலை நனைத்து விட்டார் கிருஷ்ணர். பிறகு தான் புரிந்தது லங்கோட் என்பது மறைப்புக்கு இல்லை தடுப்புக்கு என்று
- - - - -

வழக்கம் போல் இந்த வருடமும் பொறியல் கல்லூரிகளின் லேகிய வியாபாரத்தில் பலியாக போகும் மாணவர்களை நினைத்து பாவமாக தான் இருக்கிறது

இதற்கு சாவி கொடுப்பது போலொவ்வொரு பண்ணையும் மன்னிச்சூ பள்ளியும் எங்கள் பள்ளியில் ஏழு பேர் நூத்துக்கு நூறு வாங்கி இருக்காங்க என்று அப்பள்ளியில் 500 பேர் பரீட்சை எழுதி இருக்கிறார்கள் என்ற விஷயத்தை மறைத்து விட்டு விளம்பரம் செய்வார்கள். இந்த வருடமும் செய்வார்கள்

ஆனால் இந்தியாவில் இந்த கால களத்தை பெரும் வியாபாரமாக பார்க்கிறார்கள். எது சிறந்த கல்லூரி என்று பட்டியல் போட்டு ஊடக துறையினர் பெரும் லாபம் பார்ப்பார்கள்.எதோ இந்த படிப்பை படித்து விட்டால் வாழ்க்கை கஷ்டமில்லாத ஒன்றாக மாறி விடும் என்று படம் போடுவார்கள். ஆனால் உண்மையில் எல்லோருக்கும் நன்றாக படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் வாழ்க்கை என்பது கஷ்டங்களிறைந்தொன்றாக தான் இருக்கும்.

இந்த கால கவலைகள் என்பது 1990 வரைக்கும் ஆசைகளாக இருந்தது, அதன் பிறவு  தேவைகளாக மாறிவிட்டது.

இந்த நடுதர குடும்பங்களில் கனவாக இருப்பதை வைத்து அரசு வெளி நாட்டிற்கு சென்று எங்களிடம் அறிவு வளம் இவ்வளவிருக்கிறது எங்களிடம் வந்து எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று கெஞ்ச வேண்டியது.

இதை பற்றி வாத்தியார் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் 1952 வருச  இன்ஜினீயரிங் வேட்டையை பற்றி அருமையாய் எழுதிருப்பார். கிடைத்தால் படித்து பாருங்கள்.
- - - - -

சுதந்திரத்துக்கு முன்பான தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி பேசுவதில் எனக்கு தெரிந்து முக்கிய இடத்தை பிடிக்கிறது மனோகர் தேவதாஸ் எழுதிய எனது மதுரை  நினைவுகள் என்ற அபுனைவு புத்தகம்.அதிலும் அந்தகால சினிமா ரசனை பற்றியும் பேசுகிறது.  
- - - - -

துறை சார்ந்து கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்ளலாம் என்று தமிழில் முதலீடு பற்றிய பத்திரிக்கைகள் என்ன என்ன வருகிறது என்று கடைக்கு போய் நோட்டம் விட்டத்தில் ஏமாற்றமே கிடைத்தது

ஆங்கிலத்தில் முதலீடு பற்றிய நல்ல பத்திரிக்கைகள் என்றால் குறைந்தது 50 வோவாவில் இருந்து  100 வோவாவிற்கு தான் கிடைக்கிறது. அது  கைகாசில் அடங்காது என்று தான் தமிழில் படிக்கலாம் என்று தேட ஆரம்பித்தேன். ஆனால் சொல்லி கொள்ளும் படி எதுவும் கிடைக்கவில்லை. எல்லா கடைகளிலும் கிடைக்கும் அந்த பிரபல பத்திரிக்கை பங்கு சந்தையில் அதை வாங்கு, இதை வாங்கு என்று சொல்வதில் தான் ஆர்வம் காட்டுகிறது. அதன் வாசகர்களை அதையும் தாண்டி உலக அரசியல், இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பு என்று பேசுவதில்லை.

கடைக்கும் போய் நோட்டம் விட்டத்தில் அரசியல் பத்திக்கைகள் தான் அதிகம் விற்பதாய் தெரிகிறது. மக்களுக்கு வெட்டி பேச்சு பேசுவதில் தான் ஆர்வம் அதிகம் என்று தெரிகிறது. மந்தையோடு மந்தையாக இருக்கும் ஆடுகள். மந்தையில் இருந்து விலகாத ஆடுகள். இந்த மந்தை உணர்வை தான் அதிகம் வியாபாரம் ஆக்கி பார்க்கிறது ஊடகங்கள்.

எல்லோரும் அரசியல் பேசுவதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால் இப்புடி வெட்டியாக அரசியல் பேசி என்ன பண்ண போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இவர்கள் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்து கொண்டு பார்த்தால் நாட்டில் நான்கு ஐந்து புரட்சிகள் வெடித்து இருக்க வேண்டுமே. ஆனால் இன்னும் பசுமை புரட்சி குறித்தான புரித்தலே இன்னும் பலருக்கு சரியாக இல்லை.   
- - - - - 

ராகவ்வின் நடிப்பிற்காக இந்த குறும்படத்தை ஒரு தரம் பார்க்கலாம், கதையை இன்னும் கொஞ்சம் விரிவாக கையாண்டு இருந்தால் குறும்படம் சிறப்பாக வந்திருக்கும்

ஒரு த்ரில்லர் சினிமாவிற்கான கதை கரு இதனுள் புதைந்து இருப்பதாய் உணர்கிறேன்

இயக்குனரின் அடுத்த குறும்படம் நன்றாக பட்டி பார்த்து டிங்கரிங் தட்டி எடுக்க பட்டால், நல்ல புகழ் அடையும்

குழுவிற்கு வாழ்த்துகள்
- - - - -

நானும் டுடூவும் இப்ப தான் pillow fight விளையாடி முடிச்சோம். பரபரப்பான விளையாட்டுல நான் நாலு பாயிண்ட்ஸும், டுடூ ஒரு பாயிண்ட்டும் எடுத்திருந்தோம்

சரின்னு அவளை ஜெய்க்க வைக்குறதுக்காக சில பல ராஜதந்திரம் கையாண்டு அவள ஜெய்க்க வைச்சுட்டேன்

என்ன ஒன்னு ஏசி ரூம் தான் போர்க்களம் மாதிரி ஆகிருச்சு. அம்மா வந்து பாத்தப்ப இரண்டு பேரும் நைஸா எஸ்கேப் ஆகிட்டோம்

# வாழ்வினிது 


Related Posts with Thumbnails