Pages

Showing posts with label மதராஸ். Show all posts
Showing posts with label மதராஸ். Show all posts

Friday, February 22, 2013

சென்னை / மதறாஸ் -1859 வருடம் ::: பீப்பில்ஸ் பார்க்

1859 ம் வருடம் அன்றைய மதறாஸில்  பிரிட்டிஷ் அரசு  சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் 166 ஏக்கர் விஸ்தீரணமும், 5 மைல் நீளமும் கொண்ட பீபில்ஸ் பார்க்கை  உருவாக்கி உள்ளனர். இதில் ஜெய்பூர் தோட்டம், சர்க்கஸ், எந்திர விளையாட்டுகள், குளங்கள், மிருக காட்சி நிலையங்கள், தந்தி செயல் முறைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், நகைச்சுவை / சரித்திர / சமூக  நாடகங்கள், ஐரோப்பா சண்டை காட்சிகள், ஒளி / ஒலி / ஓவிய / கலை கண்காட்சிகள் என்று பல நிகழ்சிகளை நிகழ்த்தி உள்ளனர்.

இதில் முக்கிய ஈர்ப்பு விசை என்று பார்த்தால் சென்ட்ரல் ஸ்டேஷனில் போடப்படும் விளக்குகள் தானாம். 

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்த மக்குளே சொந்தங்களால் உருவான  இந்த பீப்பில்ஸ் பார்க் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 

காலபோக்கில் கலை இழந்து, அல்லது வேண்டும் என்றே இழக்க வைக்க பட்டுள்ளது. பிறவு வேகமாக வந்த நகரவியல் கலாச்சாரத்தால் இன்றைய ரிப்பன் பில்டிங்  லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. பின்புலத்தில் அரசியல் இருந்துள்ளது. 

இப்பொழுதிய  சென்னையையும் அப்பொழுதிய மதறாஸையும் ஒப்பீட்டு பார்த்தால், பெரிய ஏக்கமும் பெருமூச்சுமே வருகிறது. 

இந்த பார்க் அழிந்து போனதில் ரயில் துறை வளர்ச்சிக்கும் , வருடத்திற்கு எட்டு அன்னா ஒப்பந்ததிற்கும் பெரும் பங்கும் இருக்கிறது.  

இந்த பார்க்கின் மூலம் 1770 களிலேயே ஆரம்பிக்க பட்டுள்ளது. பொழுதுபோக்க வந்த மக்களின் தேவைக்காக சிற்சில வியாபாரிகளை பார்க்கினுள்ளே விட்டது தான் அதன் அழிவின் மைய புள்ளியாகவிட்டது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். 

இதன் மீதான சிறப்பு கவனங்களை 1859 ல் ஸார் சார்லஸ் ற்றெவில்யன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. 

பீப்பில்ஸ் பார்க்கின் அழிவின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அவை எல்லாம் சென்னை என்றே மாபெரும் நகரத்தின் வளர்ச்சியின் ஓர் பங்காய் இருப்பதால் சொல்ல முடியவில்லை. 

இது குறித்து சென்னை சரித்திர ஆய்வு நூல்களில் தகவல்கள் கிடைக்கிறது நுண்ணிய தேடல் இருந்தால் மட்டுமே. வருத்தங்கள் இருக்கிறது.... சென்னை 350ம் கொண்டாடங்களில் இந்த பார்க்கை பற்றிய தகவல் இன்றைய மக்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இந்த பார்க்கை அறிந்த / பற்றி கேட்ட தலைமுறைகள் இப்பொழுது இல்லை நம்மிடம். இதை பற்றி ஒருவரிடம் கேட்ட பொழுது ஈஸ்ட் இந்திய கம்பெனியின் ஆவணங்களை பாதுகாக்கும் காப்பகம் ஒன்றில் தேடினால் தகவல் கிடைக்குமென்று சொன்னார். 

உங்களுக்கு இந்த பார்க்கை பற்றிய எதாவது விஷய ஞானம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

பின் சேர்கை : -

இது குறித்து நண்பர் கல்வெட்டு  / பலூன் மாமா அவர்கள் தந்த உரலிகள்  






சுட்டியிலுள்ள மின் புத்தகங்கள் யாவும் இலவசம். கட்டணங்கள் எதுவும் இல்லை. 
Related Posts with Thumbnails