Pages

Showing posts with label ஸ்ரீரெங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரெங்கம். Show all posts

Thursday, February 28, 2013

சுஜாதா - இந்திய தேசிய அறிவியல் தினம்


இன்று இந்திய தேசிய அறிவியல் தினம். இந்த நாளில் ஒரு தலைமுறைக்கே ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் மொழி போல் இருந்த அறிவியலை அண்ணாச்சி கடை வாழை பழம் போல் எளிதாக்கி தந்த என் ஆசான் சுஜாதா அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

சிறு வயது முதலே சுஜாதாவை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், அவர் மீதான ஆர்வம் என்னவோ கொலையுதிர் காலம் நாவலை தழுவி DD தமிழில் சீரியலாக வந்த பொழுது தான். ஆச்சரியங்கள் பலவற்றை தந்தது. 

2003 என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கது தேவதைகள் தொடர் விகடனில் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பொழுது, ஆயிர கிலோ கணக்கில் இன்பங்களையும், சுவாரசியத்தையும் பழசாறாக்கி குடித்தது போல் உணர்தேன். அவரை சந்தித்து அவரது கைக்கு முத்தங்களை தரலாமென்று இருந்தேன். பிறவு நான் ஸ்ரீ ரங்கதுக்கு செல்வது அதிகமாகின. எனக்கு பிடித்த இடங்களில் முதன்மை பெற்றது ஸ்ரீரெங்கம்.  

அவரது கற்றது பெற்றதும் .... படித்திருக்கிறேன் ..தொடர்ச்சியாக இல்லை. 

ஒரு நாள் தொலைக்காட்சியில் சுஜாதா இறந்து விட்டாரென்று செய்தி.... யார் யாரோ அவரது உயர்வுகளை பற்றி பேசினார்கள். தமிழ் பதிவுலகம் எனக்கு அறிமுகமாகிருந்த புதிது. தமிழ் இணைய தளங்களிலும் அவரது உயர்வுகளே வார்த்தை வடிவில் சோக சாயலுடன்.  ஏக்கம், ஏமாற்றம் ...என்ன உணர்வென்று தெரியவில்லை, ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. ஆனால் ரொம்ப சோகமெல்லாமில்லை. 

பிறவு தான் அவரது எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன் ..... இப்பொழுது எனக்கு சொல்ல தோன்றுகிறது   "சுஜாதா ..THE GREAT ..என்ன மனுஷனய்யா நீர்"

Related Posts with Thumbnails