Pages

Showing posts with label தாம்பரம். Show all posts
Showing posts with label தாம்பரம். Show all posts

Wednesday, September 11, 2013

**பழந்தண்டலம்** - }கிராம தரிசனம்{



இன்று உடல் நிலை சரியில்லை என்று விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்தேன். மாலையில் செய்வதற்கு எதுவுமில்லாமல் வெறுமையை உணர தொடங்கிய பொழுது தான் ... பார்க்க வேண்டிய கிராமங்களின் வரிசையில் பழந்தண்டலம் இருப்பது நினைவுக்கு வந்தது. 

ஐம்பது வருடங்கள் முன்பு இந்திய கிராமங்கள் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை செய்து கொண்டு இருப்பவர்கள் அதை நேரில் பார்க்க  கண்டிப்பாக இங்கு போக வேண்டும். 

எருமையூரில் இருந்து நடுவீரபட்டு போகும் வழியில் சோமமங்களத்திற்க்கான திருப்பத்துக்கு எதிர் திருப்பத்தில் திரும்பினால் பழந்தண்டலம் போகும் வழி வருகிறது.

போகும் வழியே காட்டிற்குள் புகுந்து போவது போல் இருக்கிறது. அவ்வழியில் முன்பு ஒரு காலத்தில் குளமொன்று இருந்திருக்கும் போல. புஞ்சை நிலம். 

தாம்பரத்துக்கும் எருமையூருக்கும் இடைய ஒரு காலத்தில் இருந்த குளத்தின் தொடர்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன். 

நான் போகும் பொழுது மழை பெய்து முடிந்திருந்த சமயம் என்பதால் குளிர் தன்மை அதிகமாக இருந்தது.

சற்று நேர பயணத்துக்கு பிறவு பழந்தண்டலத்திற்குள் நுழைந்தேன். தெரு முழுக்க ஒரே சேறும்  சகதியுமாய் இருந்தது. தாரை பார்த்து இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. அப்பொழுது எதிரில் பேருந்து. வழுக்கும் தெருவில் எப்படியோ சமாளித்து வழியை விட்டேன். 

கொஞ்ச நேர கஷ்டத்துக்கு பிறகு குண்டும் குழியுமான பாதைக்கு வந்து, பழந்தண்டலத்துக்குள் இருந்தேன். 

இக்கிராமம் பார்க்கையில் மிகவும் பின் தங்கியது போல் தெரிகிறது. சிஎஸ்ஐ தொடக்க பள்ளி ஓன்றை மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டு பெட்டி கடையை தவிர்த்து பெரிய வியாபார ஸ்தாபனம் என்று ஒன்றும் இல்லை. 

என்னை ஆச்சரிய பட வைத்த முக்கியமான விஷயம்... இந்த பகுதியில் டாஸ்மாக் கடை எதுவும் இல்லை.  வருத்த பட வைத்த விஷயம் மருத்துவ வசதியும் இல்லை.  மக்கள் மருத்துவ தேவைக்காக நடுவீரபட்டுக்கோ இல்லை திருமுடிவாக்கதிற்கோ தான் போக வேண்டிருக்குமென்றினைக்கிறேன். 

குறிப்பீட்டு சொல்ல வேண்டிய இக்கிராம சிறப்பென்று பார்த்தால் இங்கு பக்கத்தில் இருக்கும் மலை தான். மலையேற்ற பிரியர்கள் இதற்காக ஆர்வம் கொள்ளலாம்.

இங்கு இருக்கும் மக்களின் பொருளீட்டும் மூலமென்று பார்த்தால் தாம்பரம், குன்றத்தூர், போருர் ஆகியவை தான் என்று தெரிகிறது. 

இப்பகுதியில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் லாபம் பார்க்கும் நிறுவனம் இருக்கிறது. 

முக்கிய வருத்தம்..... பிலாஸ்டிக் அதிகம் இருப்பதால் அங்கங்கே பிலாஸ்டிக் பொருட்கள் விரவி கிடக்கிறது.
 

"TODAY CITIES DOMINATE AND DRAIN VILLAGES : SO THAT THEY ARE CRUMBLING TO RUIN" - MAHATMA GANDHI  

Sunday, January 13, 2013

இலக்கியபீடம்


ரொம்ப டென்ஷனாகி போன வாரத்தில் ஒரு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு தாம்பரம் சண்முகம் தெருவுல சுத்திகிட்டு இருந்தேன். அப்ப இருந்த அரசு நூலகத்துக்குள்ள போய் கலீல் ஜிப்ரானோட மிட்டாய் கதைகள் படிச்சு முடிச்ச நேரம் கரண்ட் அம்ருதாஞ்சன் விளம்பரத்துல வர மாதிரி போயே போச்சு. அந்த நேரம் சுஜாதா நாவல் ல வர மாதிரி விதி எங்கனையோ பக்கத்துல குத்துகால் போட்டு உட்கார்ந்து சிரிச்சு இருக்கும். இல்லாட்டி அந்த விபத்து  நடந்திருக்குமா ???? 

கரண்ட் இல்லையேன்னு வெளிச்சம் இருந்த பத்திரிக்கைகள் பிரிவுக்கு வந்தப்ப ஒரு பத்திரிக்கை அனாதையா இருந்துச்சு .... சரின்னு அதுக்கு ஆதரவு தருவோமேன்னு பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன். இலக்கியபீடம் ...அது எனக்கு பலிபீடமாகிருச்சு. 

எடுத்த உடனே கண்ணுல பட்டது சென்னிமலை தண்டபாணி எழுதின  "உனக்கான சில கஜல்கள்" கவிதை. கஜல்ன்ன உடனே எனக்கு அடிபட்ட மாதிரி திறந்த வாய மூடாம பாடுறது தான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு கஜோல் தான் இல்லாம போயிச்சு அட்லீஸ்ட் கஜலாச்சு இருக்கட்டுமேன்னு படிச்சேன். எடுத்த உடனே "காயா ...பழமா ... தெரியவில்லை .... இது /(ஒன்னு கீழ் ஒன்னு)/ காதல் தானா புரியவில்லை ...." ஆரம்பிச்சாரு. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னுட்டு வேற பக்கம் திருப்பினேன். 

வாழ்க்கைல எத்தனை வாட்டி திருப்பம் வந்தாலும் அது திரும்பி திரும்பி திருப்பி திருப்பி வந்துகிட்டும் போயிகிட்டும் தான் இருக்கும். (நான் எழுதுறதுல கருத்து எதுவும் இல்லைன்னு நிறைய புகார் வருது ..ஸோ மீ தி கருத்து டெல்லிங்)  

சண்டேசுவரர் (சன்டே ல சுவர் பக்கம் நின்னுகிட்டு இருந்த சாமி போல) ன்னு மு.நளினி & இரா.கலைக்கோவன் ன்னுனவங்க பழைமையான சிற்ப்பங்கள் பத்தி எழுதிருந்தாங்க போல ...பல கொட்டாவிகளுக்கு நடுவுல படிக்க முடியல சரியா. 

வேறொரு பக்கத்துல "மறக்க முடியுமா ?"ன்னு ஒரு கட்டுரை ...ஏதோ  ஞாபக மறதி அதிகமான என்னை அவமதிக்குற மாதிரி இருந்தால அதைய லூஸ்ல விட்டுட்டேன். சரின்னு ஏகபட்ட மன போராட்டங்களோடு ( அப்புடி என்ன மன போராட்டம்ன்னு யூ பிப்பிள் ஆஸ்கிங்கா... வெளில போன பிறவு என்ன சாப்பிடுறதுன்னு தான்.. பானி பூரி தான் என்னோட சாய்ஸா இருந்துச்சு ...ஆனா தாகி பூரி சாப்பிடணும்ன்னு ஒரு சின்ன சபலம்)  வேற பக்கத்தை திருப்பினேன். 

அந்த பக்கத்துல "கலைமாமணி விக்கிரமனின் இரட்டை வரலாற்றுப் புதினங்கள் - ஓர் இன்னுரை"ன்னுட்டு     பேராசிரியர் இரா.சோதிவாணன் எழுதி இருந்தாரு. எடுத்த உடனே ஜிலேபி சுத்த ஆரம்பிச்சாரு. பானி பூரி ஞாபகம் வந்து போச்சு. அதைய படிச்சுட்டு வேற பக்கத்துக்கு போனேன்.   

இந்த பத்திரிக்கையோட மெயின் அட்ராக்ஷன் அது தான்னு புரிஞ்சது. லா.ச.ரா. துணைவியாரின் நினைவுக்குறிப்பு. படிக்க வேண்டியது. இதே மாதிரி இன்னொரு அட்ராக்ஷன்னு எனக்கு பட்டது ஜனகன் எழுதின / எழுதிகிட்டு இருக்குற குறும்படங்களும் டெலி பிலிம்களும்". எனக்கு பிடிச்சு இருந்துச்சு. 

இத்தோட வெப்பன் சப்ளையர் யாருன்னு பார்த்த விக்கிரமன் / ராஜேந்திரகுமார்ன்னு போட்டிருந்துச்சு. 

இதற்குள் கரண்ட் வந்துறவே "திருமுருகாற்றுப்படை" இருக்கான்னு உள்ளர தேடி போயிட்டேன். 
Related Posts with Thumbnails