Pages

Showing posts with label வணிக தொடர். Show all posts
Showing posts with label வணிக தொடர். Show all posts

Monday, June 3, 2024

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் - சைதாபேட்டை


சென்னையில் படிக்க தொடங்கிய நாள் முதல் பல கிராமங்களின் தொகுப்பான இந்த மாநகரின் வரலாற்றை தேடி தேடி வாசித்து வருகிறேன்.

அப்படியான தேடலில் கிடைத்தவை பல... மக்கள் பூங்கா (People's Park) போன்றவை அடங்கும். அதனை பற்றி 2013ஆம் ஆண்டு ஒரு சிறு கட்டுரை கூட எழுதிருந்தேன். (https://mayvee.blogspot.com/2013/02/1859.html?m=0)

இன்று மற்றொரு விஷயம் பற்றி கேள்வி பட்டேன். 

சைதாபேட்டை திருவிழாக்கள். 

காரணீஸ்வரர் கோவில் மற்றும் அதனை சார்ந்த பண்டிகை திருவிழாக்கள் பற்றி முன்பே கேள்வி பட்டு இருக்கிறேன். 

ஆனால் இன்று 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் பற்றி அலுவலகத்தில் ஒருவர் சொல்ல ஆச்சரியமடைந்தேன்.

ஆனால் சில கல்வெட்டுகள் படி இக்கோயில் 1000 வருட பழமையானது என சொல்கிறார்கள்.

ஆயிர வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் சமய சண்டைகள் வலுப்பெற்று இருந்தன. அதன்படி எங்கெல்லாம் சைவ சமய கோயில்கள் (சிவன் கோயில்கள்) கட்டபட்டனவோ அதன் அருகிலேயே வைணவ கோயில்கள்(பெருமாள் கோயில்கள்) கட்டபட்டன. 

உதாரணமாக ஸ்ரீரங்கம் - திருவானைக்கா.

நூற்று வருடங்கள் முன்பு இராமானுஜர் விஜய விலாஸ் சபை ஒன்று கட்ட பட்டு இருக்கிறது. மேலும் கோயிலை சுற்றி பல ஆழ்வார்களின் பெயரில் சபைகள் கோயில்கள் இருக்கிறது. அதனை பற்றிய வரலாறு எல்லாம் தெரியவில்லை.

திருவிழாக்கள், கோயில்கள் எல்லாம் வைத்து பார்த்தால் பழங்காலத்தில் சைதாபேட்டை முக்கிய கலாச்சார மையமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அடையாறு ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது, அதனால் வணிக மையமாகவும் ராஜாக்கள் காலத்தில் இருந்திருக்க வேண்டும். 

மைலாப்பூர் என்னும் பண்டைய கடல் சார் வணிக மையம் இருந்தபடியால் சிறு மையமாக சைதாபேட்டை இருந்திருக்க வேண்டும்.

சைதாபேட்டை 1980களில் முக்கிய அரசியல் களமாக இருந்ததென கேள்விபட்டு இருக்கிறேன், ஆனால் கோயில்கள் பற்றி இப்பொழுது கேள்வி படுகிறேன். 

இந்தகோயிலை கட்டியவர்கள் பலிஜா செட்டி சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் தான்.

வணிகர்கள் ஒன்றுமில்லாத இடத்தில் கோயில் கட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

சைதாபேட்டை வரலாறு தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிரவும்.

/ / /

பழங்காலத்தில் கோயில்கள் வணிக மையமாக இருந்திருக்குமா ?

உப்புக்கு சப்பாணி - பதிவு விரைவில்

Saturday, April 22, 2023

கொற்கை : மதுரை : சமணர் கழுவேற்றம் : பாண்டிய நாடு - அத்தியாயம் 4


"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு...." என்கிற இப்பாடலை சிவ வழிபாட்டு முறையை கொண்ட குடும்பத்தில் பிறந்த எல்லோரும் கேட்டு இருப்பார்கள். சிறுவயதில் என் அப்பா எனக்கு திருநீறு அணியும் பொழுது பாடுவார். (ஆம் அதனை திருநீறு அணிதல் என்று தான் கூற வேண்டும்)

நெற்றி முழுவதும் திருநீறு அணிவதை உத்தூளனம் என்று சொல்ல படுகிறது. இந்த உத்தூளனம் முறை இந்தியாவின் மற்ற இடங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்ற படுகிறது. இதற்கும் பழங்கால வணிகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இதற்கு நாம் 10ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஷாம்பெயின் சந்தையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதனை படிக்கும் முன் பிரான்ஸ்  நாடு ஒரு காலத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததை ஞாபக படுத்திகொள்ள வேண்டும். 

(சரி அதென்ன ஷாம்பெயின் சந்தை.... பின்னர் பார்க்கலாம்)

12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டின் கால குறிப்பின் படி இச்சந்தையில் அதிகம் விற்ற பொருட்களில் ஒன்றாக இருந்தவை ஜவுளி, மசாலா மற்றும் தோல் பொருட்கள். இவற்றில் தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து அதிகம் ஏற்றுமதியானவை எதுவென்று பார்த்தால் அவை ஜவுளி, மசாலா, கரும்பு சக்கரை மற்றும் உப்பு.

தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக இருந்தது கொற்கை துறைமுகம் தான். இந்த கொற்கை துறைமுகம் பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைமை நகரமாக இருந்தது. இங்கு தான் பாண்டிய நாடு முடி இளவரசன் தங்கி வணிக தொடர்புகளை கவனித்து கொள்ளவார். வேறு யாரையும் நம்பி அப்பொறுப்பை பாண்டி நாட்டு ராஜ்ஜியம் வழங்கியது இல்லை. 

பழங்கால ரோமானிய கடல் வணிக வரைபடத்தில் கொற்கை துறைமுகமும் பாண்டிய நாட்டு பெயர்கள் தான் முக்கியமாக அடையாளம் காட்ட படுகிறது. சேர நாட்டு பெயர் அடைப்புக்குறிக்குள் தான் இருக்கிறது. 

பாண்டி நாட்டிற்கு அதிக வணிகத்தையும் அதன் மூலம் வரி பணத்தையும் தந்து கொண்டு இருந்தது.

(பார்க்க படம் இணைத்திருக்கிறேன்)

இப்பொழுது 7ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.

பாண்டியர்களளவிற்கு சோழர்கள் பெரிய ராஜ்ஜியகாரர்களாக இல்லை. பாண்டிய நாட்டை சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய கூன் பாண்டியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.  

அப்பொழுது நம் தொடரில் வர போகிறவர்கள் வேறு யார் சமணத்தை பின்பற்றியவர்கள் என பார்த்தால் ஹொய்சள ஆட்சியாளர்கள் தான். 

சமணத்தை ஆதரித்து கொண்டு இருந்த கூன் பாண்டியன் ராஜ்ஜியத்தின் கீழ் தான் உலக கடல் வணிகத்தின் மையமான கொற்கை துறைமுகம் இருந்தது. 

இவ்வேளையில் தான் சோழ நாட்டில் பிறந்த  திருஞானசம்பந்தர் தீராநோய் உடன் போராடி கொண்டு இருந்த கூன் பாண்டியனை சந்திக்கிறார். சமண சமயத்தவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அரசனது நோயை சம்பந்தர் குணமாக்கிவிட்டால் சமணர்கள் அவர்களது உயிரை மாய்த்துகொள்ள வேண்டும் என முடிவாகிறது. 

அதன்படி சைவ அமைப்பின் மருத்துவமுறையில் உடல்நிலையில் முன்னேற்றமடைகிறது.  அப்பொழுது ஒவ்வொரு முறையும் சமபந்தர் சிறப்பு சிவ பூஜை செய்கிறார்கள்.

கூன் பாண்டியனது உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்ட பின் திருநீற்று பதிகம் பாடி பூஜையில் வைக்கபட்ட திருநீற்றை கின் பாண்டியனது உடல் முழுக்க அணிவிக்கிறார்.(இது மட்டுமே குறிப்பில் கிடைக்கிறது. பூஜை, சைவ மருத்துவம் எல்லாம் செவிவழி செய்தி)

இடையில் சமணர்கள் திருஞானசம்பந்தர் சோழ நாட்டு உளவாளி, அவரை நம்ப வேண்டுமென சொல்கிறார்கள். 

சமணர் கழுவேற்றம். ஒரு சமணரும் மிச்சமில்லாமல் எல்லோரும் கழுவேற்ற பட்டனர்.

9ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து பாண்டியர்கள் வெளியேற்ற பட்டனர்.

10ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் தஞ்சாவூரை தலைமையிலான ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். ஆதி சோழர்களது தலைநகரம் திருச்சிராப்பள்ளி தான். ஆனால் அதனை தவிர்த்து தஞ்சாவூரில் தலைமை இடத்தை ஏன் சோழர்கள் அமைக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி சமண பள்ளிகளுக்கு அக்காலத்தில் புகழ்பெற்றது.

21ஆம் நுற்றாண்டிற்கு வருவோம். 

பிரதான் மந்திரி காத்திஷக்தி மாஸ்டர் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மப்பேடில்  தளவாடங்கள் பூங்கா  ஒன்றை ரிலையன்ஸ்   நிறுவனம் தொடங்க போகிறதாம். இதன் மூலம் வான்வழி, தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள போகிறதாம். புதிதாக அமைக்கபட போகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த பூங்கா. 

இந்த இடத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவிலில் தான் அந்த புகழ்பெற்ற வைணவ விவாதம் நடந்ததாக கூறபடுகிறது. 

8ஆம் நுற்றாண்டில் இன்றைய ஆந்திர பிரதேசத்தில் நடத்த ஒரு வணிக செயல்பாடு  முக்கியமான இந்துமத கோவில் உருவாக காரணமாக இருக்குமோ.

அதென்ன செயல்பாடு , அதென்ன கோவில் ?

தொடரும்...

#indianbusinessseries
#cholargal 
#RelianceIndustries 
#hinduism 
#Seasilkroute
#rajarajacholan 
#PonniyinSelvan2 
#PS2
#KORKAI
#Pandiyan
Related Posts with Thumbnails