Thursday, July 9, 2009
எந்த சேர்க்கையாக இருந்தால் என்ன ?????
கலாச்சாரம் என்பது ஒரு மனிதனை நல் வழி படுத்தி முறையான வாழ்க்கை வாழ வழி செய்கின்றது. கலாச்சாரம் இல்லையென்றால் மனித குலம் என்ன ஆகும் என்று தெரியாது. கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் தான் ஒரு மனிதனை வாழ்வில் உயர செய்கிறது.
ஒரு மனிதன் தன்னை முழுமையாக வாழ்ந்து ; தான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சிறந்த வாழ்க்கை என்று பிறர் பின்பற்ற செய்வது தான் கலாச்சாரம். கலாச்சாரங்கள் இல்லை ஏனென்றால் சரித்திரமே இல்லை ......
ஆனால் கலாச்சாரம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரிவதில்லை. தான் விரும்பும் ஒரு வாழ்க்கை வழி முறையையே சிறந்த கலாச்சாரம் என்று பலரும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு கலாச்சாரம் ஒருவனது உணர்வுகளை அடிமை படுத்துமோ அது வளர்ந்தாக சரித்திரம் இல்லை.
அதற்க்கு முதலில் நாம் செக்ஸ் என்றால் என்ன என்று ஒரு தெளிவு பெற வேண்டும். செக்ஸ் பற்றி நிறைய பேர் நிறைய சொல்லி இருக்காங்க. ஆனால் பொதுவாக நாம் பார்த்தால் செக்ஸ் ; ஒரு ஆண் ; பெண் தனது உடல் மற்றும் மன இச்சைகளை இளைப்பாறி கொள்வதே செக்ஸ்.
இந்த மாதிரியான இச்சைகளுக்கு செக்ஸ் ஒரு முடிவு இல்லை. பல்வேறு வழிகள் இருப்பதை பல ஞானிகள் உலகத்திற்கு எடுத்து கூறி உள்ளார்கள். தியானமும் அதில் ஓன்று.
இந்த மாதிரியான இச்சைகளுக்கு முல காரணம் மனவியல் தான். உடல் தேவைகள் இல்லை. இதை தான் ஞானிகள் சொல்லி இருக்காங்க.
ஒரு ஆண் / பெண் காம இச்சைகளுக்காக எதிர்பாலினர் நாடுவது போல் தான் ஒரு ஆண் ஒரு ஆண் / ஒரு பெண் பெண்ணை நடுவதும் இயற்க்கையே. குற்றம் ஏதும் இருப்பதாய் தோன்ற வில்லை.
நாம் கண்களை முடி கொள்வதால் ஓரின சேர்க்கை இல்லை என்று ஆகிவிடாது. நாம் தினமும் சந்திக்கும் நூறு பேரில் ஒரு பத்து பேராவது ஓரின இச்சை உடையவர்களாக இருப்பார்கள். ஒரு இரண்டு பேராவது ஓரின சேர்க்கையாளர்யாக இருப்பார்கள். நாம் இவர்களை எதிர்ப்பதால் மட்டும் இந்த பழக்கம் அடியோடு போகி விடாது. கண்களுக்கு தெரியாமல் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இப்படி தான் சில பல நூற்றாண்டுகள் முன்னர் சுய-இன்பம் கொள்வது சமுதாய குற்றம் என்ற அளவில் எதிர்த்தார்கள். ஆனால் இன்றைய நிலைமை சுய இன்பம் அப்படி ஒன்றும் தவறு இல்லை இல்லை என்ற பார்வை வந்து இருக்கு. அதே போல் தான் ஓரின சேர்க்கையும்.
இன்னொரு விஷயம் : ஒரு மனிதன் தனது இச்சையை தீர்த்து கொள்ள ஒரு ஊடகதை / வழியை எடுக்க முழு உரிமையும் இருக்கு. அதை தப்பு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தப்பு என்று யாரவது சொன்னால் ; அதற்க்கு மாற்று வழியை தருவதும் அவர்கள் பொறுப்பு.
மனிதனுக்கு இருக்கும் பல விசித்திர இயல்ப்புகளில் இதும் ஒன்றே தவிர வேறு ஒன்றும் இதில் பெரிய விஷயம் இல்லை. இதற்க்கு ஆதரவு ஏன் இல்லை என்று கேட்டால் ; யாரவது ஆதரவு தந்தால் அவர்களை ஓரின சேர்க்கையாளராக அடையாளம் காணப்பட்டு ; உணர்வுகளால் ஆனதை ஆவதினால் தான். குற்ற உணர்ச்சியே பலருக்கு இருப்பதால் தான் இதில் இடுபடுவதில்லையே தவிர கலாச்சார நோக்கம் அல்ல. ஒருவன் குற்ற உணர்ச்சி உடன் ஒரு முடிவு எடுத்து வாழ்ந்தால் அவனுக்கு மட்டும் இல்லை அவனை சார்ந்த பிறருக்கும் அது கொடுமை தான்.
உலகில் பல்வேறு கலாச்சாரங்கள் இருந்து உள்ளது ; பல இருக்கும் இடம் தெரியாமல் போயும் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவொரு மாதிரி. பல நாடுகளின் சரித்திரத்தில் ஓரின சேர்க்கை தான் மேலோங்கி இருந்துள்ளது. ஆண் பெண் கூடுவது எல்லாம் வம்சம் வளர்பதற்க்காக தான் என்ற நிலையும் இருந்துள்ளது. ஆதனால் இது ஒன்றும் புதியது இல்லை.
இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் இதற்க்கான சட்டங்களை வகுப்பது தான் ஒரே வழி. ஓரின சேர்க்கை திருமணங்களை சட்ட ரிதியாக அங்கீகரித்து ; அவர்கள் குழந்தை தத்து எடுக்க வழி வகை செய்ய வேண்டும்.
ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டுமானால் ஒரு ஆண் ஒரு பெண் தேவை படலாம். ஆனால் ஒரு குழந்தை வளர்க்க அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரு அப்பாக்கள் அல்லது இரு அம்மாக்கள் இருக்கும் நிலையில் கூட ஒரு குழந்தையை நன்றாக வளர்க்க முடியும். எல்லாம் மனவியல் தான் காரணம். இதற்க்கு நடைமுறையில் நிறைய உதரணங்கள் இருக்கு.
ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சொன்னேன இல்லையா என்று எனக்கு தெரியல. அனா மொத்ததில் ஓரின சேர்க்கை என்பது குற்றமும் இல்லை நியாயமும் இல்லை. ஒரு ஆண் ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொண்டால் சமுதாய புரட்சி என்கிறார்கள் ஆனால் ஏன் ஒரு ஆண் / பெண் முழுமையான தன இனத்தை சேர்ந்தவார்களை திருமணம் செய்ய தடை சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை.
டிஸ்கி : தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஆணும் ஆணும் உறவு கொள்வதை நினைத்தாலே ஓர் மாதிரியாக தான் இருக்கு.... என்னையும் யோசிக்க வைசுடிங்களே (முதலவன் கிளைமாக்ஸ் அர்ஜுன் மாதிரி படிக்கவும்)
Wednesday, July 8, 2009
கலவை
பிறகும் அவர்கள் உறுதியாக இருந்தால் ..... விட்டுவிட வேண்டியது தான்.
இல்லாட்டி இன்னொரு விஷயம் செய்யலாம் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து ; குழந்தைகளை தத்து எடுக்க வழி வகை செய்யலாம்.
==================================================================
இந்த பதிவுலகம் பதிவுலகம் ன்னு சொல்லுறன்களே.....
அந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருக்கு ???
யாருகாவது தெரியுமா ?????
================================================================
"புத்தங்களை படிப்பதை விட உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களையும் ; இயற்க்கையும் வாசித்து பாருங்கள் : புத்தங்கள் கற்று தருபதை விட சிறப்பான வற்றை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்" என்று கூறி உள்ளார் William Wordsworth.
இதையே தான் தமிழ்யிலில் " உன்னது அறிவு உன் வாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்தே மதிப்பீடு செய்ய படும்" என்று சொல்லுவார்கள்.
=================================================================
சமீபத்தில் தாம்பரத்தில் ஒரு சிறுவனை பார்த்தேன். ஏதோ CHINA light ஒற்றை விற்று கொண்டு இருந்தான். நான் சும்மா அவன் கிட்ட பேசி பார்த்தேன். கொஞ்ச நேர பேச்சில் என்னை அசத்தி விட்டான் அவன். செம மார்க்கெட்டிங் mind. TOP MANAGEMENT ரொம்ப நேரம் யோசித்து எடுக்கும் STRATEGY அவன் அனாசியமாக சொல்லுறான்.
நான் அங்கு அறிவு கொள்முதல் செய்து கொண்டேன்.
=================================================================
அந்த காலத்தில் ராஜாக்கள் போர் வீயுங்களை மிருகத்தின் குணங்களை வைத்தே வகுப்பார்கள். அதே போல் திருடர்கள் பெரும்பாலும் பாம்பு வீயுகத்தை தான் பயன்படுத்துவார்கள். அப்பொழுது தான் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் கையாள முடியும் என்ற காரணத்தினால் தான்.
இந்த முறையை பின்பற்றியதால் தான் பேரசர் சிவாஜி பல கோட்டை பிடிக்க முடிந்ததாம்.
=================================================================
www.worldebookfair.com என்ற இணையதளத்தில் லட்ச கணக்கான புத்தங்களை இலவசமாக படிக்கலாம் ; டவுன்லோட் கூட செய்து கொள்ளலாம்.
=================================================================
கந்தசாமி டைட்டில் பாட்டு கேட்டேன். பிடிக்கவில்லை. ஆனால் மற்ற பாடல்கள் அருமை.
================================================================
இன்றைய கல்வி முறை வலியவனை மேலும் வலியவனாக தான் ஆக்குகிறது. முதல் ரேங்க் வாங்கும் பையனை விட கடைசி ரேங்க் வாங்கும் பையன் தான் ரொம்ப கஷ்ட பட்டு படித்து இருப்பான். ஆனால் அவனுக்கு எந்த பாராட்டும் இல்லை.
பிறகு இதே மாதிரியான முறை தொடர்ந்தால் ..... நாடு எப்படி வளம் பெறும்.
==================================================================
சொல்லுவதற்க்கே வெட்கமாய் ; அவமானமாய் இருக்கு.......
வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
இது என்னை எங்கே கொண்டு போய் விடுமோ......
பயமாய் உள்ளது.
=================================================================
Monday, July 6, 2009
ஐ ....... பொருளாதார வளர்ச்சி வந்துருச்சு !!!!!!!
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்
உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்
க கஸ்ம தபத நிதநி
மமமமகஸ மமமம தம ததததநி நிதநிநிநிநி
ஸ்ஸ்ஸ் நிதநி தநித மதம
நிஸ்நி தஸ்நி தநித மஸக
உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி"
இந்த பாடல வந்து ஒரு இருபது வருஷம் ஆகிருக்கும். இப்பொழுது கேட்டால் கூட பொருத்தமாக இருக்கும். இந்த இருபது வருஷங்களில் நாடு என்ன வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று கேட்டால் ......
மக்கள் தொகைக்கு முன்னால் ஒன்றும் இல்லை ....
ஒரு வளர்ச்சி என்பது செம சீர்யாக இருக்க வேண்டுமே தவிர ஓன்று இரண்டு இடங்களில் வளர்வது வளர்ச்சி அல்ல ; அது வீக்கம்.
என்ன ஒரு வேறுபாடு உண்டு என்றால் அது சாராய கடையாக தான் இருக்கும். இப்ப அரசகமே அந்த வேலையை பார்க்குது. இன்னும் கொஞ்ச வருஷம் போனால் கவர்மென்ட்யே மாமா வேலை பார்க்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும். பிரான்ஸ் பக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டில் விபசாரத்துக்கு பில் எல்லாம் உண்டாம். நாம நாடு தான் உலகமயம் ஆகிருச்சே ; கூடிய விரைவில் இதை எல்லாம் எதிர் பார்க்கலாம்.
ஏற்கனவே மும்பை போன்ற பெரும் நகரங்களில் பெரும் அதரவு உடன் விபச்சாரம் அமோக விளைச்சல் ஆகிக்கொண்டு இருக்கிறது. என்ன இப்பொழுது எல்லாம் CORPORATE PENALIZING என்ன சொல்ல படும் வேலை நிமித்த விபச்சாரம் பெருகி வருகிறது. இதனால் அரசாங்கத்தின் மாமா வேலையின் பளு ஒரு வேலை குறையலாம்.
வேற என்ன வளர்ச்சி இருக்கிறது ????
பொருளாதார வளர்ச்சி வந்து இருக்கு ; வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறது என்று கூட எனக்கு தோன்றுச்சு. அனா எத்தனை பேரோட பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் உயர்ந்து இருக்கு ????
இங்கிலீஷ் ல சொல்வது போல் “RICH GET RICHER; POOR GET POORER” போல தான் இருக்கு இன்றைய நிலைமையும்.
இன்னும் கொஞ்சம் இதில் சேர்ந்து கொள்ளலாம் "குடிக்காரன் குடித்து கொண்டே இருக்கிறான்" ; "கஷ்ட படுகிறவன் கஷ்ட பட்டு கொண்டே இருக்கிறான்" ........
முன்பு எல்லாம் டைப் ரைட்டர் தட்டி கொண்டு இருந்தார்கள் இப்ப கம்ப்யூட்டர் தட்டி கொண்டு இருக்கிறார்கள். வேலை பளு எல்லாம் ஒன்றே. அதிகார துஷ்பிரயோகம் எதுவும் குறையவில்லை ; எல்லாம் வளர்ந்து காடாய் இருக்கிறது.
வளர்ச்சி என்பது ஒருவனை சந்தோஷப்படுத்தி ; அவன் வாழ்க்கையை செம்மை படுத்த வேண்டுமே தவிர மேம் மேலும் தொல்லை தர கூடாது. இருபது வருடங்களுக்கு முன்னால் வாழ்வில் இருந்த அமைதி இப்பொழுது இருக்கிறதா????
சிலருக்கு நிறைய காசு வருகிறது ; சிலர் தங்கள் கருத்தை வெளிப்படுத்த முடிகிறது ; சிலரால் நினைத்த வாழ்க்கை தரம் வழ முடிகிறது ; சிலர் நினைத்த படிப்பு படிக்க முடிகிறது என்பதால் நாடு வளர்ச்சி அடைந்து விட்டது என்று எடுத்து கொள்ள முடியுமா ?????
எல்லாம் சிலருக்கு தான் நடக்கிறது பலருக்கு ஒன்றுமே நடப்பது இல்லை ....
திறமை இருந்தால் வாழ்வு என்றார்கள் ; சிலருக்கு திறமை இல்லாமல் வாழ்வு கிடைக்கிறது ; பலருக்கு திறமை இருந்தும் ஒரு சின்ன சன்மானம் கூட கிடைப்பது இல்லை.
வளர்கிறோம் என்று பொருளாதாரம் சிலருக்கு நல்லதும் பலருக்கு எதுவுமே செய்யாமல் ; தன்னை தானே ஏமாற்றி கொண்டு வளர்வது எல்லாம் ஒரு பொருளாதார வளர்ச்சியா ???
இந்த சிலரின் முன்னேற்றத்தை வைத்து தான் நாமது அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கத்திடமும் பணக்காரர்களிடமும் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறது. பலரின் வாழ்க்கை தரத்தை மறைத்த படி. அதை வைத்து ஏதோ ஓன்று இரண்டு நல்ல திட்டம் கொண்டு வந்தால் ; அந்த காசில் கூட திருடி விடுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்களுக்கு மக்களின் வாக்கு. கொடுமையா இருக்கு.....
இந்த மாதிரி நிலைமையை பாரதி மீண்டும் உயிர் வந்து பார்த்தால் ஆயிரம் மடங்கு அதிர்ச்சி வந்து மீண்டும் சந்தோசம் அடையாமல் இறந்து போய் இருப்பான்.
எதிர்க்காலத்தில் நாமும் இதே மாதிரி பாடலை தான் அப்பொழுது இருக்கும் இளைய தலைமுறை கிட்ட பாடி கொண்டு இருப்போம் இதே மாதிரியான பொருளாதார வீக்கம் தொடர்ந்து கொண்டு இருந்தால் ......
Sunday, July 5, 2009
வாத்தி யார் ????
இன்னொரு விஷயமும் இருக்கு ; நான் ஸ்கூல் டைம் ல செய்த விஷமம். ரிப்போர்ட் கார்டு திருடுவது ; பிரின்சிபால்யே நாம கைவசம் தான் இருப்பார். இருந்தாலும் எனக்கும் பிடித்த வாத்தியார் ஒருத்தர் இருக்காரு.
அவர் ராஜ்குமார் சார்.வழக்கமாய் எல்லோரும் அப்பா அல்லது அம்மா கையெழுத்தை தான் திருட்டு தனமாய் ரிப்போர்ட் கார்டுயில் போடுவாங்க. எனக்கு என்னோட அப்பா அம்மா இரண்டு பேரின் கையெழுத்தும் எனக்கு போட வராது. ஆதனால ரொம்ப கஷ்ட படாமல் என் கையெழுத்தையையே போட்டு கூடுதுவிடுவேன். என் கையெழுத்து அப்பவே ரொம்ப ஸ்டைல் ல இருக்கும் ; ரொம்ப வித்தயாசம் தெரியாது. எல்லா வாத்தியாரும் நம்பி விடுவார்கள். இதை முதலில் கண்டுபிடித்து ராஜ்குமார் சார் தான். அதனாலே எனக்கும் அவரை பிடிக்கும்.
நானெல்லாம் சந்தேகம் கேட்க கூட staff ரூம் பக்கம் போக மாட்டேன். பிறகு எப்படி படித்தாய் என்று நீங்க கேட்கலாம். எல்லாம் guide மற்றும் பல புத்தங்களை பார்த்து படித்து கொள்வேன்.
இத்தனை இருந்தாலும் பிரச்சனை பண்ணாத பையன் என்பதால் என்னை எல்லோரும் விட்டு வைத்து இருந்தார்கள்.
பிறகு பத்ரி சார். எனக்கு brand management எடுத்தவர். இவர் சொல்லும் case study செமையா இருக்கும். எங்கே இருந்து எடுப்பார் என்று தெரியாது ; எல்லா brand பற்றியும் ஒரு ஆராய்ச்சியே நடத்துவார். ஒரு fantasy உலகத்தில் நாம் இருப்போம் இவர் வகுப்பு எடுத்தால்.
தனிப்பட்ட முறையில் தமிழ் கற்றுகொள்ள நான் போனது எனது தமிழ் ஆசான் நீலகண்டன் ஐயா கிட்ட தான். அவருக்கு மொத்தம் ஏழு மொழிகள் தெரியும் ; அதனால் நிறைய விஷயம் சொல்லுவார். இவர் கிட்ட போய் தமிழ் கற்று கொண்டேனோ இல்லையோ அவர் எனக்கு நல்ல நண்பராக ஆகிவிட்டார். இப்போ அவர் செமையா மொக்கை போடுகிறார். என் காத்து பலமாகவே அடித்துவிட்டது போலும். என்ன தீக்கு தான் தானுடன் சேரும் எதையும் தீயாக மாற்றும் சக்தி இருக்கிறது ....
ஹி ஹி ஹி ஹி
இன்னொரு வாத்தியார் இருக்கிறார். பெயர் வேண்டாம். ரொம்ப நல்லவர். காலேஜ் சேர்ந்த புதுசில் படம் பார்க்க காசு இல்லையென்று இவர் கிட்ட அழுது ஒரு நாடகம் நடத்தி காசு வாங்கினேன். பிறகு இரண்டு மூன்று முறை அதே போல் செய்தேன். கொஞ்ச நாள் கழித்து அதே போல் நாடகம் நடத்திய பொழுது அவர் பீலிங்க்ஸ் ஆகாமல் .... சிரித்து கொண்டே இருந்தார். அப்பொழுதே தெரிந்து விட்டது யாரோ எட்டப்பன் வேலையை காட்டி இருக்கிறான் என்று. நாம தான் "எதற்கும் அஞ்ச மாட்டான் இந்த அலெக்சாண்டர் ஆச்சே.....ஒரு வித தைரியத்தோடு தொடர்ந்து அவர் கிட்ட பேசினேன்...........
பிறகு தான் anti climax..... காலேஜ் முடிக்கிற வரைக்கும் இவர் கிட்ட இருந்த நிறைய கடன் வங்கிருக்கிறேன். அனா திரும்பி தந்தது இல்லை.
ஒரு சமயம் எனக்கு என் சங்கீத அறிவு குறித்து வெட்கமாய் இருந்தது. சரி யார் யாரோ சங்கீதத்தை வளர்த்து இருக்காங்க ; நாமால் முடிந்த அளவுக்கு நாமும் சங்கீதத்தை வளர்ப்போம் ன்னு முடிவு செய்து ; violin கற்று கொள்ளலாம் என்று திர்மானம் ஆச்சு. அவர் புண்ணிய காரியத்தை செய்து புண்ணியம் கட்டி கொண்டவர் வைத்தியநாதன் சார் .....
இரண்டு மாசம் நானும் முயற்சித்து பார்த்தேன்..... வயோலின் ல இருந்து இசை வரவே இல்லை ; வெறும் சத்தம் தான் வந்தது அதுவும் மரம் அறுக்கிற சத்தம். ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு கிளாஸ் க்கு போய் பார்த்தால் வேறு ஒரு வாத்தியார். பழைய வாத்தியார் தொழிலை விட்டுவிட்டு ஊர் பக்கம் போய் செட்டில் ஆகிவிட்டார் என்று சொன்னார்கள். போகும் போது ரொம்ப மன வேதனை உடன் போனதாக சொன்னார்கள் (அதற்க்கு காரணம் என் வாசிப்பா என்று எனக்கு தெரியல).
இன்னும் நிறைய சொல்லலாம் .;
நான் பல்பு கூடுத ; வாங்கின வாத்தியார்களை பற்றி ,
என்ன செய்ய இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது ....
Wednesday, July 1, 2009
பதிவின் விதி

எழுந்த பின் மனிதனானேன் ....
கனவுலகம் ராஜா நிஜ உலக சாமானியன் நான்
புரியாத குழப்பதில் விடிந்தது காலை எனக்கு
கால் வலியுடன் .....
மானம் கெட்ட மன வலி தோற்று விடும்
போல் இருந்தது வசவுகளுக்கான தேடல்கள் மார்க்கெட்டிங் உத்தியோகம் ;
வஞ்சகம் உலகமடா இது ........
முதல் தோல்வி ; உடல் கழிவுகளை கழிப்பதில்
மாசில்லா மசாலா உணவுகளால் .....
சுடு ஏறி கொண்டு இருந்தது
வெளியில் சூரியனில் இங்கே என் வயற்றில் .....
சிலோன் இளநீர் ; வயற்றுக்கு நல்லது
அதில் இறந்த என் மக்களின் ரத்த வாடை .....
வெளிய வந்தேன் வெளியேற்றாமல் ; போனேன் டி கடைக்கு
பெண்கள் இருந்ததால் மணிஷ் காப்பி கடைக்கு லாபம் ஐந்து ரூபாய்.
இருப்பிடம் வந்ததா என் அருகில் அல்லது
நான் சென்றேனா என்ன தெரிந்து கொள்ள
விடாமல் நினைவுகள் ;
தீயும் சுட்டு நாவினாலும் சுட்டு ; வடுகள்
உள்ளத்திலும் புறத்திலும் .
நான் நிலை படுத்திய நிலை கண்ணாடியை
நிலை கொண்டு பார்த்தேன் ; இறந்து கொண்டுயிருந்த இளமை
சாதிக்க துடிக்கும் அறிவும் வெறுமை கொண்ட மனமும்
இருதலைக் கொள்ளி எறும்பாய் என் நிலை
வெளியில் கஷ்ட ஜீவனம் என் விதி
யார் எழுதியதோ தெரியவில்லை ; நன்றாக இல்லை
ஆனால் நான் எழுதும் பதிவுகளின் விதி நன்றாகவே இருக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
எழுதுகிறேன் நரசிம் பதிவை படித்த பின் ......
Sunday, June 28, 2009
ரிதி / மதுவன்தி
முழு பொர்ணமி முகத்தில்களங்கம் இல்லாத
முழு நிலவு
பால் சாதமாய்....
வெண்ணை உண்ட
கண்ணன் எப்படி இருப்பானோ
சந்தேகத்தில் நான்
உன் புகைப்படத்தை பார்க்கிறேன் ......
அட என்ன அழகு
அழகின் அழகே .....
கவிதை எழுத நினைத்த
என் மனது
உன் முகத்தை ரசித்த படியே
கவிதைக்கான வார்த்தைகள் வர மறுக்கிறது .....
சமாளித்து எழுதினாலும்
அது உன் பெயராகவே இருக்கிறது ......
Monday, June 22, 2009
சிறு வயதினிலே
கார்த்திக் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து நாட்கள் பல ஆகிவிட்டது. நான் எழுத போவது எனது சிறுமை கால நினைவுகளை.....
நினைக்க நினைக்க தேனாய் ; கள் கொண்ட படி என் மனம் அந்த கணேஷ புரம் நாட்களை நினைவலைக்குள் கொண்டு வந்து ; ஒரு தேனீ பல நாட்கள் சேர்த்து வைத்த தேனை ஒரு நாள் கொஞ்சமாக சுவை பார்க்கும். அதே மாதிரி தான் நானும்.
நான் வாழ்ந்த கடந்த காலத்தை நிகழ்க்காலத்துக்கு கொண்டு வந்து சுவை பார்க்க ஒரு வாய்ப்பு.
கார்த்திக் நன்றி.
அந்த கால சுவடுகளின் சுவை ; அனுபவித்த எனக்கு மட்டுமே தெரியும்.
காலமும் வாழ்க்கையும் என்னை எங்கே ; எந்த களத்திற்கு கொண்டு செல்லும் என்று தெரியாமல் ; தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் சுற்றி கொண்டு இருந்த விடுமுறை நாட்கள்.
அப்பொழுது எனக்கு என் அண்ணன் தான் ......
எனக்கு எல்லாமாய் இருந்தான்.
அவனுடன் எரட்டை அடித்து கொண்டே இருப்பேன்.
எஜமானன் உடன் செல்லும் நாயாய் ; அவனுடன் சுற்றி கொண்டு இருப்பேன்.
சில ஆண்டுகள் தான் எனக்கும் அவனுக்கும் இடையில் ; பிறப்பில்.
எல்லா வேலைகளும் எங்களுக்குள் பங்கு.
எனக்கு நினைவு இருப்பது கணேஷ் ஸ்டோர்ஸ் ல திருட்டு தனமாய் பிஸ்கட் எடுத்து ஓடி போய் திருச்சி-தஞ்சாவூர் ரயில்வே லைன் பக்கம் போய் சாப்பிட்டது. கணேஷ் ஸ்டோர்ஸ் ல இரண்டு முறை தான். பிறகு அந்த பிஸ்கட் எங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.
வெளிக்கிழமை.
எல்லை அம்மன் கோவிலில் சக்கரை பொங்கல் தருவார்கள்.
எல்லா சிறுவர்களுக்கும் ஒரு முறை தான் தருவார்கள். அதை உரிமை பொங்கல் என்று அழைப்போம்.
பிறகு திருட்டு தனமாய் வாங்குவதை திருட்டு பொங்கல் என்று அழைப்போம்.
அந்த கோவில் ஐயர் ரொம்ப உஷார் பேர்வழி. அவ்வளவு கூட்டத்திலும் எல்லா சிறுவர்களின் முகத்தையும் அடையாளம் கண்டு கொண்ட பிறகு தான் பொங்கலை தருவார். எங்க கோஷ்டி அவருக்கு தெரியாதவாறு இரண்டு கைகளையும் நீட்டி பொங்கலை வாங்குவோம். இடது கை வலது கை என்ற பேதம் எல்லாம் சக்கரை பொங்கலுக்கு அப்பொழுது இல்லை.
சாப்பிட்ட பிறகு என்ன ....
வெளிக்கிழமை ஒளியும் ஒலியும் தானே ஸ்பெஷல்.
அப்ப எல்லாம் ஒளியும் ஒலியும் தில் என்ன என்ன பாடல்கள் வருகிறது என்று தினத்தந்தியில் வரும் என்று நினைக்கிறேன். தினத்தந்தி ஏஜென்ட் கணேஷ புரத்தில் இல்லை. அதனால் பலரும் ஹிந்து இல்லையென்றால் தினமலர் தான் வாங்குவார்கள்.
அதனால் சிலர் வீட்டில் மட்டும் தான் தினத்தந்தி. அந்த பசங்க தான் அன்றைக்கு ஹீரோ. ஏழு பத்துக்கு எல்லாம் கோவில பொங்கல் கிடைத்து விடும். அனா யாரு நிறைய பொங்கல் சாப்பிடங்க என்று ஒரு ரேஸ் நடக்கும். நானும் என் அண்ணனும் சில முறை தான் அந்த ரேஸ்யில் கலந்து கொண்டுள்ளோம். அதுவும் தனியாக கோவிலுக்கு வரும் போது தான். அம்மா உடன் வந்தால் ஒரு முறை தான் பொங்கல் சாப்பிட்ட முடியும்.
அந்த ரேஸ் மிஞ்சி போனால் ஒரு பத்து நிமிடம் தான் நீடிக்கும். பிறகு ஏழரை மணி வரைக்கும் ஒளியும் ஒலியும் பாடல்கள் பற்றி தான் ஒரே பேச்சாய் இருக்கும்.
ஒரு பத்து த்ரில்லர் நாவல் படித்த மாதிரி இருக்கும் அந்த நிமிடங்கள்.
ஏழரை மணி அடித்த உடன் ......
எங்க கோஷ்டி எல்லோரும் சேர்ந்து கோவில் பக்கத்தில் கூடிருந்த ஒரு ஆங்கிலோ இந்தியர்களில் வீட்டில் தான் பார்போம். அவங்க செம தமாஷாய் பேசுவாங்க. எதாவது நல்ல பாட்டு வந்துச்சுன்னா யாரையாவது டான்ஸ் அட சொல்லுவாங்க. அப்படி அவங்க கூப்பிடும் போதெல்லாம் நான் ரொம்ப பயபடுவேன். எங்கே என்னை ஆட சொல்லிடுவன்களோ என்று.
ஆறாவது பாட்டு வரும் போது எல்லோரும் அவங்க அவங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிப்பாங்க. ஏழாவது பாட்டு முழுமையாக போட வேண்டும் என்று. நிறைய சமயம் எட்டாவது பாட்டு போடவே மாட்டாங்க.
ஆனால் எங்கள் ஆர்வம் எல்லாம் ரஜினி பாட்டு எப்பொழுது வரும் என்று தான் இருக்கும். அதிலும் "சூப்பர் ஸ்டார் யார்ன்னு கேட்ட" என்ற பாடல் போட்டுவிட்டால் எல்லோருக்கும் குஷி தான்.
வெளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் எங்கள் ஆர்வம் எல்லாம் கேபிள் டிவி தான். ஏழு நாட்கள் ஏழு படங்கள் போடுவாங்க. நைட் ஒன்பது பிறகு மறு நாள் மதியம் போடுவாங்க. ஹிந்தி, இங்கிலீஷ்,தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் ன்னு பல மொழி படங்கள்.
அந்த படங்கள் லிஸ்ட் வந்து திங்கள்க்கிழமை நைட் கேபிள் டிவி வாயிலாக சொல்லுவாங்க. எலேச்டின் நியூஸ் அளவுக்கு கேட்போம். அதிலும் அன்று நாள் பொழுது எல்லாம் கேபிள் டிவி ஓனர் பன்னீர் செல்வம் தேடிகிட்டு இருப்போம். படங்களின் லிஸ்ட் கேட்க. பிறகு அவரை பார்த்தால் கூட்டமாக சென்று அவரோட பைக் வழிமறித்து ; விருப்பமான படங்களை சொல்லுவோம்.
அதற்க்கு அவர் சிரித்துவிட்டால்.....
நாங்கள் சொன்ன படங்கள் ஓகே ஆகிவிட்டது என்று அர்த்தம்...
அதற்கே நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்து இருப்போம்.
இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். நிறைய இருக்கு.....
அதன் சந்தொஷகள் எல்லாம் அனுபிச்ச மட்டுமே தெரியும்........
==================================================================
இதற்க்கு நான் "சிறு வயதினிலே" என்று பெயர் வைக்க ஒரு காரணம் உண்டு. இதே பெயரில் திரு.மரீனா அவர்கள் எழுதின புத்தகம் ஓன்று இருக்கு. வாங்கி படிச்சு பாருங்க...
அவர் சின்ன வயதில் பண்ணின குசும்பு எழுதிருக்கார். படிக்க படிக்க சிரிப்பு தான் வரும்.....
கடைசி பகுதிகளில் நாம்மை அழ வைத்து விடுவார்.
விலை கம்மி தான்
Friday, June 19, 2009
கள்ள காதல்
உனக்கு தெரிய வேண்டாம்
ஏனென்றால் உன்னை நான் காதலிக்கிறேன்
வேறு ஆணுடன் நான்
உனக்கு தெரிய வேண்டாம் .....
நீ என்னை காதலிக்கிறாய்
என்று எனக்கு தெரியும்
அதனால் தான் உனக்கு தெரிய
வேண்டாம் என்று கடவுளிடம் தெரிவித்து
கொள்ளகிறேன் ; தெரிந்தால் நீ
இறந்து விடுவாய் உணர்வுகளால் ;
இச்சைக்கும் பச்சை கொடி காட்டி விட்டது
என் உணர்வுகள் ; சரசத்தின் போது
உடலை வேறு ஆணுக்கு ; உள்ளம் உன்னை
காதலித்து கொண்டே ......
காதலின் உறவின் நம்பிக்கைக்காக
தெரிய வேண்டாம் உனக்கு ;
செய்ய கூடாது என்று
மனம் சொன்னாலும் ; செய்வினை
செய்கிறது உடல் சுகம்
கண்ட உள்ளம். ....
நீ சுவாசித்த காற்று
என்னை அடையும் முன்
நான் பல நரக சொர்க்கத்தில்
இருந்துவிடுவேனே....
உனக்கான உள்ளம் ; உடல்
உள்ளம் பேச்சை கேட்க
மறுக்கிறது ; மாறுகிறது உடலின்
வேட்கை ; வெட்பம் தணிந்த பின்
உறவின் உடல் வலிகள் தணிந்த
வேர்வையாய் ; என்னை கொலை
செய்யும் உணர்வுகள் ......
செய்ய மாட்டேன் செய்ய மாட்டேன்
என்றாலும் ; செய்து விடு செய்து விடு
என்று சொல்கிறது உள்ளம்
நீ என் அருகில் இல்லாத நேரம்களில்.....
ஒரே துறை ; வெவேறு நாடுகள் ;
ஒரு உயிர் ; இரு உடல்
ஆனால் என் உடல் வேறு உடலுடன்
நீ அருகில் இல்லை ......
செய்ய மாட்டேன் ; உன்னை கண்ட பின்


