
Sunday, November 15, 2009
Ilaiyaraaja's Superb BGMs
பிகு : இந்த மூன்றையும் ஓன்று சேர கேட்டு பாருங்க. அப்படியே சந்தோசத்தின் உச்சியில் இருப்பிங்க
Saturday, November 14, 2009
குழந்தைகள் தினம் இன்று.....

இன்று நேருவின் பிறந்த நாளாம், அவருக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரின் விருப்ப படி இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிச்சாங்க இந்திய அரசாங்கம். இந்த மேட்டர்யை நாங்க எல்லாம் சின்ன வயசில மீட்டர் போட்டு யோசிப்போம். எல்லாம் கொக்கு மக்காக தான். ஹ்ம்ம்.
குழந்தைகள் தினம் என்று கொண்டாடும் இந்திய அரசு இன்னும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க இன்னும் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியல. ஏதோ ஒன்னு இரண்டு சங்கங்கள் இருந்தாலும் ஒரு உஸ் இல்லை.
என்னை கேட்டால் இதற்க்குன்னு ஒரு அமைச்சரங்கம் (MINISTRY ) பெரிய அளவில் அமைத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினால் நல்ல இருக்கும்.
அதுவும் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் குழந்தைகளுக்கான இடம் இருப்பதில்லை. இன்று சமுகத்தில் குழந்தைகள் தினம் வந்தால் தான் குழந்தைகளை பற்றி பெரிய அளவில் பேசுகிறோம். பிற்பாடு மறந்து விடுகிறோம்.
இன்று எனக்கு தெரிந்து சென்னையில் பல குழந்தைகள் அவர்களின் குழந்தைதனமையை பெற்றோரின் பொருளாதார வேட்டையால் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல வருஷம் கழிந்து பல திறமை கொண்டவர்களை பார்க்க முடியாது. இப்பொழுதே எதாவது செய்தால் தான் நாளைய இந்தியாவை காப்பாற்ற முடியும். இன்று கல்வி நிலையில் பொறுத்த வரைக்கும் ஒரு LONG STANDING PLAN இருப்பதாய் தெரியவில்லை.
பல வீடுகளில் குழந்தைகள் குழந்தைகள் போல் இல்லமால் பெரிய மனுஷங்கள் மாதிரி நடக்குரங்க.
போன தலைமுறையில் கல்வி முறை சரி இல்லாததால் தான் இன்று EMPLOYBILITY ரேட் ரொம்பவே கம்மியா இருக்கு. இன்ன்னும் சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கு.
ஓர் நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால் ; நாளைய இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்க்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
=
=
=
=
=
டிஸ்கி : குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்.
Friday, November 13, 2009
கார்கியும் பரிசல்க்காரனும்
கார்கி : "ஏன் நம்ம பதிவுலகம் மொக்கை பதிவுகளை தண்டி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் ?"
பரிசல்க்காரன் : "இதை எல்லாம் நீயோ நானோ முடிவு செய்யறது இல்லை"
டிஸ்கி : காலையில் இந்த பாட்டு பார்க்கும் பொழுது தோன்றின டயலாக். ஹி ஹி ஹி ஹி. பதிவுலகத்தை அடுத்த காட்டதிற்கு கொண்டு போக விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. ஹி ஹி ஹி ஹி
Wednesday, November 11, 2009
பிடித்தவை : மிகவும் பிடித்தவை
நடிகர்
பிடித்தவர் :அஜித் மிகவும் பிடித்தவர் : ரஜினி
நடிகை
பிடித்தவர் : ஜோதிகா
கவர்ச்சி
பிடித்தவர் : நமீதா
எழுத்தாளர்
இசையமைப்பாளர் :
பிடித்தவர் : இளையராஜா
கொள்கை
ஊர்
திரைப்பட டைரக்டர்
பிடித்தவர் : வெங்கட் பிரபு, ஷங்கர்
நாடக எழுத்தாளர்
பிடித்தவர் : மரீனா
நாடகம்
திரையரங்கம்
பிடித்தது : சத்யம், சென்னை மிகவும்
ரோடு
டி கடை
Monday, November 9, 2009
காற்றில் எனது பதிவுகள்

வலிகள் தரும் வசவுகளை கண்ட மனமாய்
Tuesday, November 3, 2009
ஏஞ்சல் வந்தாளே பத்து வரத்தோடு

Monday, November 2, 2009
கடவுள் ...... கேள்விகளுக்கான எனது பதில்
அதனை நம்புகிறவர்களின் நம்பிக்கையை அது காப்பாற்றாத பொழுது.
நாத்திகம் ஏன் தோற்கிறது ???
மக்களிடம் அது எந்த வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லை. அதனால் தான் அது தோற்கிறது.
ஆன்மீக நூல்கள் அவசியமா???
அதை படிபவர்களுக்கு நிம்மதியையும் ; எழுதுபவர்களுக்கு லாபத்தையும் தருவதால்... அது பாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டுமே.
கடவுள் நம்பிக்கை அவசியமா ???
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கடவுளை நம்புகிறவர்களுக்கு அவசியம் தான். ஆனால் எனக்கு அது அவசியம் இல்லை. ஏனென்றால் எனக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.
ஆன்மீகத்தின் ஆயுள் ????
மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ளும் வரை.
உங்களை பொறுத்த வரையில் கடவுள் யார் ???
கடவுள் யார் என்று எனக்கு தெரியாது. சிறுவயதில் நானும் கோவிலுக்கு போய் இருக்கிறேன்; காரணம் கடவுள் எனது வேண்டுதல்களை கேட்பார் என்று. ஆனால் கேட்டாரா இல்லையோ என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அப்பொழுது எல்லாம் யார் கடவுள் (ஏசுவா, அல்லாஹ்வா, இல்லை சிவனா) என்ற குழப்பம் தான் அதிகம் இருந்தது. பிறகு கொஞ்சம் வளர்ந்த பின் எந்த கடவுளை வழிபட்டால் அதிகம் பலன் உண்டு என்று யோசிக்க ஆரமித்தேன். அதற்கு பல்வேறு ஆட்களும் ஊடங்கள் காரணம். பிறகு வளர வளர கடவுளுக்கான தேவை என்னிடத்தில் குறைந்து கொண்டே வந்தது. இப்பொழுது கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை.
என்னை பொறுத்த வரைக்கும் கடவுள் என்பவர் நன்றாக DEMAND CREATE செய்யப்பட ஓர் விற்பனை பொருள்.
எப்படி கடவுளை நீங்கள் விற்பனை பொருள் என்று சொல்லுரிங்க ????
காசு வராவிட்டால் யாரும் மத ஆலயங்கள் நடத்த மாட்டர்கள். கடவுள் இல்லாமல் யாரும் மத ஆலயங்களை நடத்துவது இல்லை.
மக்கள் காசுக்காக மத ஆலயங்களுக்கு போவது இல்லையே ???
ஆமாம். கட்டாயம். ஆனால் மத ஆலயங்களை இன்றைய உலகில் யாரும் ஓசிக்கு நடத்துவது இல்லை.
நீங்கள் சொல்வது இன்றைய உலகில் தானே. அந்த காலத்தில் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடன் தான் மத ஆலயங்களை கட்டினார்கள் ???
உண்மை தான். காசுக்காக அவர்கள் கோவிலை கட்டவில்லை. ஆனால் எல்லோரும் மரணத்திற்கு பிறகு சொர்கத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோவிலை கட்டினார்கள். மத ஆலயங்கள் ஏற்பட மரண பயமும் ஓர் காரணம். இதற்க்கு சாட்சியாக கடவுளை துதித்து பாடினவர்கள் எல்லோரும் சொர்க்கத்தில் ஓர் இடம் வேண்டும்; இனி பிறவி இல்லாத வரம் வேண்டும் என்றெல்லாம் தான் படி உள்ளார்கள். ஏதோ ஒரு விதத்தில் பலனை எதிர்பார்த்தார்கள் கடவுளிடம் இருந்து.
(கேள்வி- பதில்கள் தொடரும்)
Sunday, November 1, 2009
தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!
மேவி (பெயர் சொன்னால் போதும் தரம் விளங்கி விடும்). என்னை பற்றி சொல்ல பெருசா ஒன்னும் இல்லைங்க.
சிறுவயதில் பாண்டிச்சேரி ல நிறைய பாட்டாசுகளுடன் கொண்டாடியது.மூன்று நாளாகியும்; தொடர்ந்து வெடித்தும் பட்டாசுகள் காலியாகவில்லை.அவ்வளவு இருந்துச்சு.
போன தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தேன்னோ அதே ஊரில் தான் இந்த தீபாவளிக்கும் இருந்தேன்.
ரொம்பவும் சுயநலமாய் போகிவிட்டது.
அதெல்லாம் தெரியாதுங்க. அப்பா, அம்மா தான் வாங்குவாங்க.
வீட்டில் தான் செய்வோம். அது ஒரு பெரிய பட்டியலுங்க.
நேரில் பார்க்க முடியுமானால் நேரில் சென்றே சொல்லி விடுவேன். இல்லாட்டி செல்போன் முலமாக தான்.
அப்பாஸ், யுவன் வீட்டிற்கு மட்டும் சென்று விட்டு வீடு வந்து விடுவேன். தொலைக்காட்சி பெரும்பாலும் பார்க்க மாட்டேன். விளம்பர தொல்லை தாங்க முடியாது, அதனால் எதாவது புத்தகம் படிப்பேன்
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வழிவகை செய்வேன்.
தலை தீபாவளிக்கு அண்ணி வந்து இருந்த பொழுது ; தீபாவளிக்கு மறுநாள் அண்ணி சமையல் தான். சாப்பிட்டு விட்டு "அண்ணி!!! ரசம் சூப்பர்" என்று சொன்னேன்.உடனே " மேவி!! அது சாம்பார்". என்று அவங்க சொன்னாங்க. பிறகு எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், எழுந்து போய் விட்டேன்.
Friday, October 30, 2009
ஊடல் பொழுதுகள்..!!!

குழம்பி கிடக்கிறது மனது
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறான் ரசிகன்
புது படம் என்னும் கேடயம் ஏந்தி
ரசிகனின் மடி சாய்கிறான்
நடிகனை அரவணைத்துக் கொள்கிறான் ரசிகன்
ரசிகன் கிட்ட இருந்தும்
Wednesday, October 28, 2009
கலவை
விளிம்பு நிலை மனிதர்களின் சில நிமிஷ சந்தோசத்திற்காக அவர்களின் பிள்ளைகள் ஏன் வாழ்க்கை முழுவதம் கஷ்ட பட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்து குடுக்க முடியாத விளிம்பு நிலை மனிதர்கள் உடல் உறவு உடன் மட்டும் நிறுத்தி கொண்டால் நல்லது.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நேற்று ஒருத்தர் என்னிடம் "ஏன்தான் கடவுள் எனக்கு இவ்வளவு குழந்தைகளை தந்து கஷ்ட பட வைக்கிறாரோ" என்று வருத்தப்பட்டார். அரசாங்கம் கூடுகின்ற குடும்ப கட்டுபாடு சாதனங்களை உபயோக படுத்தி இருந்தால் ஏன் கடவுள் இவ்வளவு குழந்தைகளை அவருக்கு தர போகிறார்.
இதை பற்றி ஜெயகாந்தன் ஐயா எதாவது சொல்லி இருக்காரா???
நவீனமாய் வாழ்வுக்கு
Tuesday, October 27, 2009
அகதி முகாம்
நீ அங்கு
நான் இங்கு
ஆனால் நிலைமையோ
ஓன்று .....
ராமர் தேசத்தில்
ராமர் ஆட்சி
நடக்கிறது என்று சொன்னார்கள் ....
விபிஷணனாய்
நான் தேடிய அடைக்களம்
தருகிற ராமன்கள்
எல்லாம் ராவணனாய்
இருக்கிறார்கள்.........
ஸ்ரீ படாவில்
நாம் கண்ட மகிழ்ச்சி
இங்கு நான் காண
பாடாய் படுகிறேன்.......
ராவணன தேசத்து
சீதைகள் எல்லாம்
இங்கு இருக்கும்
காவல் தெய்வத்திற்கு
படையலாய் ..........
கதவுயை திற காற்று வரட்டும்
சொன்னார்கள் ;
கதவு இல்லை
கழிவு அறையில்;
காற்று வருகிறது,
அனுபவிக்கிறேன்
ஆண்மையின் அடையாளத்தை
மறைத்தும் மறந்தும் .......
இவர்கள் என்ன
மனனரில் இருந்த
நம்மை
மானம் இல்லாதவர்கள்
என்று
நினைத்து விட்டார்களோ ??
வசதியானவர்கள்
வளர்ந்த நாட்டில்
கணிப்பொறி தட்டி
கொண்டு இருக்க;
நானோ இங்கு
உயிரை வாழவைக்க
எலிக்கறி கூட
அமிர்தம் தான்
இங்கு
சில நேரங்களில்......
நான்காம் தரம்
வாழ்வுக்கு பயந்து
இங்கு
இரண்டாம் தரம்
அரசுடன்
மூன்றாம் தரம்
வாழ்க்கை வாழ்ந்து
கொண்டு இருக்கின்றோம்.........
நண்பா
சில சமயத்தில்
கொடிய நரகத்தை விட
கொடிய இருப்பிடம் மேல் ....
என்னவே நீ
அங்கேயே இருக்கு ;
கொடிய நரகத்தை அனுபவிக்க
விலை தராதே.....
கண்ணீருடன் உன்
நண்பன் ;
தொலைந்து போன
சொர்க்கத்தில் இருக்கும்
உனக்கு ....
Friday, October 23, 2009
நான்கு விஷயங்கள்
Tuesday, October 13, 2009
காமம் - SEXUALLY STARVED -3
எது கால் ; எது கைன்னு கண்டு பிடிக்க முடியாத அளவில் இருந்துச்சு எல்லா படங்களும். ஒரு ஆர்வம் ரொம்ப நேரம் ஒரு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்; அப்படி பார்த்து கொண்டு இருந்ததால் கழுத்து வலி.
நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தேன் ; எனக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் (பெருசு) என்னையும் என் கையில் இருந்த புத்தகத்தையும் மாறி மாறி முறைத்த படி பார்த்து கொண்டு இருந்தார். வழக்கம் போல மனசுக்குள் நம்ம அறிவை பார்த்து பிரமிப்பு அடைஞ்சு பார்க்கிறார்ன்னு ஒரு சின்ன சபலம் தோனுச்சு. சரின்னு இன்னும் கொஞ்சம் சீன் காட்டலாம்ன்னு இன்னும் உன்னிப்பாக படிப்பது போல் நடித்தேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் போய் இருக்கும். அவர் என்னை பார்க்கிறாரா இல்லையான்னு பார்க்கலாம் என்று நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவர் முகத்தில் ஒரு மாதிரியான அருவெறுப்பான பார்வை என்னை நோக்கி.
நான் வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு நிர்வணமான பெண்ணின் படம் சிலை வடிவில். அந்த படத்தை அவர் பார்த்துவிட்டார் போலும். அவருடைய பார்வையை தவிர்க்க புத்தகத்தை வைத்து விட்டு அப்படியே சுற்றி அந்த பக்கம் போய் இன்னொரு புக் பார்த்து கொண்டு இருந்தேன் (ஆன்மீக புத்தகம்). கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பெரியவரை தேடிய பொழுது ; அப்படியே ஷாக் ஆகிட்டேன் காரணம் அவர் கையில் அதே புத்தகம் ; அதே படம் , இன்னும் உற்று பார்த்து கொண்டு இருந்தார். அதை நான் பக்கத்தில் இருந்த பொழுதே வந்து பார்த்து இருக்கலாமே...... பிறகு எனக்குள் பல கேள்விகள் எனக்கு நானே கேட்டு கொண்டு இருந்தேன் இருப்பிடம் வரும் வரை.
================================
புதிய ரகசியத்தை தெரிந்து கொள்ளவா ??????
தொடரும் .......
Thursday, October 8, 2009
காமம் - SEXUALLY STARVED -2
// பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.//
இது அனைவருகும் பொருந்தாது மேவீ.."
ஆமாங்க. அனைவருக்கும் பொருந்தாது தான். படித்து பிறகு பெரிய அளவுக்கு வந்த பிறகு சிலருக்கு மனது ஒரு நிலைக்கு வந்து விடும் ; அதற்க்கு புத்தங்களில் படித்தவை கூட காரணமாய் இருக்கும். ஆனால் இந்தியாவில் பலர் மனது ஒரு நிலையில் இல்லாமல் தானே இருக்கிறார்கள்.
===========================
உடல் உறவில் ஆண்கள் சிக்கிரம் உச்ச நிலையை அடைந்து விடுகிறார்கள் ; ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைய இன்னும் கொஞ்ச நேரம் எடுக்கும். இதை நான் படித்த சில காப்பியங்களில் நல்ல சொல்லி இருக்காங்க. அதை விட "வேதம் புதிது" படத்தில் ஒரு பாடல வரி
MARKETING ல DEMAND CREATION ன்னு ஒரு CONCEPT இருக்கு. அதாவது ஒரு மனிதனுக்குள் ஒரு குறுபிட்ட பொருளின் தேவையை உற்பத்தி பண்ணுவது தான் DEMAND CREATION.
நுட்பங்கள் பல இருந்தாலும் இன்றைய சுழ்நிலையில் ஒரு மனிதனுக்குள் பொருளின் தேவையை உற்பத்தி செய்ய அவனுடைய காம இச்சைகளுக்கு ஏற்றவாறு ஒரு விளம்பரம் தேவை படுகிறது ; அந்த மாதிரியான விளம்பரம் இருந்தால் தான் அவன் அந்த குறுப்பிட்ட பொருளை நினைவில் வைத்து கொள்வான். ஏனென்றால் அது தான் அவனது கவனத்தை பெருமளவு கவர்கிறது.
இதில் யார் மேல் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. விளம்பரத்தால் மக்கள் கெடுகிறார்கள் என்று சொல்வதா ??? இல்லை மக்களின் மனநிலைமை அப்படி இருப்பதினால் தான் இப்படி பட்ட விளம்பரங்கள் எல்லாம் வருகிறதா ????
இந்த மாதிரியான பெரியவர்களுக்கான விளம்பரங்களை வீட்டில் இருக்கும் சிறுவர்களும் பார்க்கிறார்கள். இதை தெரிந்தே தான் விளம்பரங்கள் தயாரிக்க படுகிறது. அமெரிக்காவில் சில சிறுவர்களுக்கான சாக்லேட்களின் விளம்பரங்களில் பால் உணர்ச்சியை துண்டுவது போல் இருக்கும்.... அந்த மாதிரியான விளம்பரங்கள் கூடிய விரைவில் இந்தியாவிலும் வந்தாலும் வரலாம்.
=============================================
சில நாட்கள் முன்னர் டிவியில் கந்தசாமி பட பாடல ஓன்று வந்தது. அதில் ஸ்ரேயாவின் மார்புகளில் ஏதோ ராஜா ராஜா சோழன் காலத்து புதையல் இருபது போல் அவ்வளவு CLOSE யாக காட்டினார்கள். இந்த மாதிரி காட்சிகள் கொண்ட படத்தை தான் குழந்தைகள் படம் என்று கூறி படத்தை PROMOTE செய்கிறார்கள்.
இந்த மாதிரியான காட்சிகள் முலம் இவர்கள் கூறுவது தான் என்னா????
ஸ்ரேயாவின் மார்பு எப்படி இருக்கும் என்று குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதா????
தொடரும் .......
Monday, October 5, 2009
காமம் - SEXUALLY STARVED -1
நான் சின்ன பையன் என்னால் ஒரு முழுமையான பதிலை தர முடியுமா என்பது சந்தேகம் தான் அதனால் எனக்கு தெரிந்த வரைக்கும் காமம் என்பது உணர்வு + உடல் இரண்டும் சேர்ந்து உறவு கொள்வது. பொதுவாக காமம் என்பது உணர்வின் வெளிபாடு தான் ஆனால் இன்றைய காலத்தில் காமம் என்பது உணர்வின் வெளிபாடாக இல்லாமல் வெறும் இச்சைகளின் வெளிபாடாக தான் இருக்கிறது.
இச்சைகள். ஒரு ஆண் அல்லது பெண் காமம் பற்றிய விழிப்புணர்வு பெறுவது 12 - 15 வயதில் தான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ; "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION".அந்த மாதிரி ஒருவன் அல்லது ஒருத்திக்கு "அந்த விஷயம்" பற்றி எந்த மாதிரி அறிமுகம் கிடைக்கிறோதோ அது தான் வாழ்நாள் முழுவதும் காமம் பற்றியே அவனது/ அவளது பார்வையாக இருக்கும். பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.
அந்த வயதில் அவனுக்கு காமம் பற்றிய அறிமுகம் கிடைப்பது எல்லாம் ஒரு மூன்றாம் தர ஊடகம் முலமாக தான். அந்த ஊடகமும் வியாபார நோக்கத்திற்க்காக வன் புணர்வை மையமாக கொண்டு தான் எழுத பட்டு இருக்கும். அதில் எழுத பட்டு இருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவை தான். இந்த விஷயங்களை படிக்கும் அவனும் "சரி இது தான் மேட்டர் போல் இருக்கு" என்று எண்ணி கொண்டு அந்த எண்ணத்தோடு வளர்வான். அவனோடு சேர்ந்து அவன் மனதில் இருக்கும் எண்ணங்களும் மிருக தனமாய் வளரும்.
அப்படி வளரும் பொழுது சாத்தியம் இல்லாத சில உடல் உறவு முறைகளை பற்றியே யோசித்து ; ஒரு வெறி தனமான மிருகமாய் மாற்றி விடும். பல ஆண்கள் முதல் இரவின் பொழுது அசுரத்தனமாய் இயங்க இது தான் காரணம்.
அந்த காலத்தில் கிராமங்களில் . ஒரு நம்பிக்கை உண்டு ; முதல் இரவு முடிந்து மறுநாள் காலையில் மணப்பெண்ணுக்கு இரவு கொண்ட உடல் உறவால் இடுப்பு வலி வந்தால் தான் மணமகன் முழுமையான ஆண் என்று நம்பினார்களாம். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டில் முதல் இரவு முடிந்து கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் வந்த பெண்ணை ஏதோ குற்றவாளியை போல் வீட்டு பெண்கள் விசாரித்த கதையும் உண்டு. காரணம் என்வென்றால் நன்றாக புரிந்து கொண்ட பின் அந்த விஷயத்தை வைத்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.
மூன்றாம் தர ஊடங்களில் இருந்து கதைகளை படித்து வளரும் ஒருவன் படுக்கையில் தன்னை ஒரு சகலகலா வல்லவனாய் நினைத்து கொண்டு வளர்கிறான். அப்படி வளரும் பொழுது பொதுவாக ஒரு எண்ணமும் அவன் மனதிற்குள் வந்து விடும் ; படுக்கையில் அவனது மனைவியோ காதலியோ அந்த நேரத்தில் அவனுக்கு அடிமை. உறவு கொள்ளும் நேரத்தில் பெரும்பாலும் ஆண்களின் ஆளுமையே இருக்கும். சரி தமது மனைவிமார்களும் நம்மை அனுபவித்து கொள்ளட்டுமே என்று "அந்த நேரத்தில்" எந்த ஆணும் நினைப்பது இல்லை.
இதே மாதிரியான எண்ணங்களோடு ஒருவன் வளரும் போது அவன் மனதிற்குள் இருக்கும் சில மெல்லிய உணர்வுகள் அடிப்பட்டு போகும்.
இந்த மாதிரியான மெல்லிய உணர்வுகள் பற்றிய விவாதங்கள் வரும் போது எல்லாம் சிலர் xx yy chromosomes களின் வேலை தான் காதல் என்பார்கள்.
சரி அப்படியே வைத்து கொள்வோம். ஒரு ஆண் பெண் இடையே தோன்றுவது காதல் இல்லை எல்லாம் xx yy chromosomes வேலை தான். இவர் கூற்று படி காதல் என்ற உணர்வே பொய் :
காதல் பொய் . அன்பு பொய் .... ரைட்டு ஓகே.
காதலர்களிடம் தோன்றுவது xx yy chromosomes என்றால் அப்ப
தாய் - மகள்
அப்பா - மகன்
மாமியார் - மருமகன்
அண்ணன் - தம்பி - சகோதரி
போன்ற உறவுகளிடையே தோன்றுவதும் xx yy chromosomes வேலை தானா????
(தொடரும்......)
(நண்பர்கள் கேட்டதற்காக தலைப்பை மாற்றி விட்டேன்)
Friday, October 2, 2009
சென்னை பதிவாளர்களின் சந்திப்பு
================================================================
எனக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அங்கே யார் யார் என்ன பேசினார்கள் என்பதை மறந்து விட்டேன். ஆனால் இந்த தடவை யாரும் எனக்கு டி வாங்கி தரவில்லை என்பது மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு.
=================================================================
"பதிவுலக அஜித்குமார்" கேபிள் சங்கர் அவர்களை சந்தித்தேன். குறைவாக தான் பேச முடிந்தது. உண்மையிலே அவர் யூத் தானுங்க.
===============================================================
அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினேன்.
===============================================================
கார்கி வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார். காரணம் மழை என்று சொன்னார். அதே மாதிரி வால்பையன் அருண் அவர்களும் வரவில்லை. கார்கி அவர் வந்தாலும் வருவர் என்று அவர் பதிவில் கூறி இருந்ததே காரணம்.
===============================================================
நிறைய அறிவாளிகள் இருந்தார்கள் அதனால் அது எனக்கான இடம் இல்லை என்று தெரிந்து அமைதியாக இருந்தேன். எல்லோரும் பெரிய பெரிய விஷயமாக பேசினார்கள். கொஞ்சம் மேர்சு ஆகிட்டேன்.
================================================================
பலருக்கு என்னை தெரிந்து இருக்கு ஆனா எனக்கு தான் யாரையும் தெரியவில்லை.
===============================================================
எனக்கு புதிதாய் மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள்.
===============================================================
நான் என் அறிமுக பேச்சின் பொழுது எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பது இல்லை என்று கூறினேன். அதற்க்கு முரளிகண்ணன் பிரபலம் அடைய திரட்டிகள் முக்கியம் என்று கூறினார். ஆனால் திரட்டியில் சேர்க்கும் அளவுக்கு நான் எழுதுகிறேனா என்று எனக்கு ரொம்ப நாளாய் சந்தேகம். பிரபு தான் எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பதாய் சொன்னான்.
==============================================================
இலங்கை தமிழர் ஒருவர் வந்து இருந்தார். எனக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினேன் ஆனால் முடியவில்லை.
==============================================================
தண்டோராவின் முகம் தெரியாமல் ; நான் அவரை தேடி கொண்டு இருந்தேன். வால்பையன் கிட்ட ஒரு தடவை பேசும் பொழுது அவரிடம் பேசி இருக்கிறேன். பிறகு கேபிள்ஜியின் பதிவு பார்த்து தான் அவரை தெரிந்து கொண்டேன்.
=============================================================
வெங்கிராஜா அவர்கள் பல இங்கிலீஷ் திரட்டிகளை பரிந்துரை செய்தார். நான் கொஞ்சம் மெர்ஸு ஆகிட்டேன். பெரிய ஆட்டக்காராய் இருபார் போல.
==============================================================
மழை எனக்கு ஒன்னும் பெரிய விஷயமாய் தெரியவில்லை.
==============================================================
நர்சிம் ரொம்ப நாளாய் கீற்று காற்று வாங்குவதாய் யாரிடமோ சொன்னார். சரி ஏதோ பதிவுலக அரசியல் போல் இருக்கு என்று நான் அங்கு காது கூடுக்கவில்லை.
=============================================================
காவேரி கணேஷ் பேசும் பொழுது பேச்சில் கொஞ்சம் butter சேர்த்து பேசியதாய் எனக்கு தோன்றியது. ஒரு வேளை அவர் கலந்து கொல்ளும் முதல் சந்திப்பாய் இருக்கலாம் அதனால் தான் இப்படி பேசி இருப்பார் என்று பின்னர் ஒரு எண்ணம் வந்தது.
=============================================================
வழக்கம் போல் அன்றும் நான் தியானத்தில் இருந்தால் யாரிடமும் சரியாக பேசவில்லை. டோண்டு அவர்கள் நான் கிளம்பும் போது வந்தார்.
=============================================================


