Tuesday, December 8, 2009

தேவதையின் கை - 3

பாகம் - 1

பாகம் - 2

====================================

ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.

"திருவெறும்பூர்...."

"திருவெறும்பூர்ல எங்க........"

"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."

"250 ....."

(-)

மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........

"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"

"நிஜமாவா ......"

"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."


சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.

(-)

ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.

(-)

குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.

அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.


கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து..... கொஞ்சும் குரலில்....

"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"


நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.

அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,


"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.

நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.

வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்.

"இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."

தொடரும்

Sunday, December 6, 2009

உயர்ந்த மனிதன் - பட விமர்சனம்

எனக்கு தெரிந்து சிவாஜி கணேஷின் படங்களில் கிளாச்சிக் வகையை சேர்ந்தது இந்த படம். எப்புடி தில்லான மோகனம்பாள் படத்தில் ஒரு SETTLE யான நடிப்பை வெளி படுத்தி இருப்பாரோ அதே மாதிரி இந்த படத்திலும், சொல்ல போனால் வாழ்ந்து காட்டி இருப்பார். நான் பெரும்பாலும் சில பழைய படங்களை தான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன், அப்படி பார்க்கும் படங்களில் இதுவும் ஓன்று.







இந்த படத்தை விமர்சனம் செய்வதும் ஓன்று தான், படத்தில் சிவாஜி கணேஷர் நடிப்பை பற்றி சொல்லவதும் ஓன்று தான். அந்த அளவுக்கு படம் முழுக்க சிவாஜி ராஜ்யம் தான். நான் இந்த படத்தை முதன் முறையாக சன் டிவியில் தான் பார்த்தேன். அப்பொழுது எல்லாம் சன் டிவி மட்டும் தான். சேனல் மாற்றும் வேலையும் விளம்பரங்களின் தொல்லையும் இருந்தது இல்லை.




இந்த படத்தில் முழுக்க ஒரு வித BODY LANGUAGE கையாண்டு இருப்பார், அது வேறு எந்த படத்திலும் அவரிடம் காண முடியாத ஓன்று. ஒரு வேளை இயக்குனர்களுக்கு அது தெரியாமல் போய் இருக்கலாம். அல்லது அத்தகைய நடிப்பை DEMAND செய்யும் கதைகளை உருவாக்க தெரியாமல் இருந்திற்பர்கள். சில படங்களில் சிவாஜி கணேசரின் நடிப்பு ரொம்பவே ஓவர் அக்டிங் செய்வது போல் இருக்கும்..... அந்த மாதிரியான படங்களையெல்லாம் ஓர் முறைக்கு மேல் நான் பார்த்தது இல்லை.



பட கதையை பற்றி நான் சொல்ல வேண்டும் என்று இல்லை, தொல்லை கூடுக்கும் தொலைக்காட்சிகளில் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்து இருப்பிங்க. சோ, கதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் படம் பார்த்தபின் எந்த இங்கிலீஷ் படத்திலிருந்து காபி அடிதிற்பர்கள் என்ற யோசனை வருவதை தடுக்க முடியாது. படம் பார்த்த பின் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இப்படி தான் முடிவுக்கு வர முடியும், ஆங்கில கதை வித் தமிழ் சினிமா கிளைமாக்ஸ்.


எனக்கு இந்த படத்தில் பிடித்த கட்சிகள் என்று சொன்னால் படத்தில் வரும் கொடைக்கானல் காட்சிகளும், பிறகு சிவாஜி தனது மனைவிடம் பொய், சொத்து போன்றவற்றை பற்றி பேசும் காட்சிகள் எல்லாம் செமையான கிளாஸ். இப்படி சொல்வதின் முலம் நான் சிவாஜி கணேஷர் மிக சிறந்த நடிகர் என்று சொல்லவில்லை, இந்த படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும் .



இந்த படத்தின் கதை அமசமும் வித்தயசமானது தான், அந்த காலத்தில் வயசான பணக்காரர் என்றால் அந்த கதாபாத்திரம் ஓன்று மிகவும் நல்லவர், இல்லாவிடில் மிகவும் கெட்டவர் என்று தான் வகை படுதிருந்தர்கள். அது அத்தனையும் தண்டி வயசான பணக்கரர்யை முக்கிய பத்திரமாக எடுத்து கொண்டு வெளி வந்த முதல் கதை இதுவாக தான் இருக்கும். மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படமும் இதே மாதிரியான GENRE யில் தான் வந்தது, ஆனால் அதில் கடைசில் தான் சிவாஜி கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கூடுது இருப்பாங்க. மற்றபடி பெருசா DETAILED ACTING இருக்காது.



இன்னொரு முக்கியமாக கூறுபிட்டு சொல்ல வேண்டிய காட்சியும் ஓன்று இருக்கிறது, அது கடைசியில் சிவாஜி கணேஷன் சிவகுமாரை போட்டு அடிக்கும் காட்சி. என்னை கேட்டால் படம் அந்த காட்சியோடு முடிந்து விடுகிறது, ஆனால் டைரக்டர்க்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை தமிழ் சினிமா கிளைமாக்ஸ் வைத்து விட்டார். ரசிகனின் ரசனை அன்று ஆட்சி செய்தது; ஆனால் இன்றோ ரசிகர்களின் உணர்வுகளை துண்டி விட்டு காசு பார்க்கிறார்கள்.



சிவாஜி நடிப்பிற்க்காக இரண்டு படம் சிடி வாங்கி வைத்து கொள்ளலாம். அதில்



தில்லான மோகனம்பாள்
உயர்ந்த மனிதன்


பஞ்ச் டயலாக்

வேட்டைக்காரன்

அந்த வேட்டைக்காரன் போன காட்டுல மிருகம் ஏதும் உயிரோட இருக்காது ..... இந்த வேட்டைக்காரன் போன தியேட்டர்ல எவனும் உயிரோட இருக்க மாட்டங்க.......



அசல்

டேய்...... நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அசலை மீட்க வட்டி கட்டி தான் ஆகனும்..... னோது .....டேய் நான் ஆணி புடுங்கிறவன் இல்ல ...ஆணி அடிக்கிறவன்.



எந்திரன்

கண்ணா...... பன்னிங்க தான் சில்ற்றையா செலவு வைக்கும்... சிங்கம் மொத்தமாக தான் செலவு வைக்கும்



தீராத விளையாட்டு பிள்ளை

டேய்.. டேய்.. நீ உங்க ஊர்ல பிளேயர் ன்ன ,நான் எங்க ஊர்ல பிளேயர் டா. நீ போடுற BOWLING க்கு நான் தானடா BATSMAN

Saturday, December 5, 2009

தனிமை

மோசமானதொரு வானிலை

மழை வெயில் இல்ல சமயத்தில்

எட்டி பார்க்கும் பருவ பெண்ணாய்

ஜன்னல் வெளியே என் பார்வைக்கு கிடைக்கும்

பொழுது நான்கு சுவர் சிறையில் நானும் என் தனிமையும்

ஆணும் பெண்ணுமாய் ஊடல் கொண்ட பேதைமை தனிமை

என்னைவிட்டு மழைச் சாரலில் கரைந்து விடாதோ

என்று அழைப்பை எதிர்பார்த்தபடி அலைப்பேசி

போன் கம்பெனி எனக்கு தந்த முகவரியில் என்னை

தேடி தனிமையின் எதிரி யாரவது வர மாட்டர்களா

என்றபடி மழையை பார்த்தேன் என்னை விட்டு உறவுகள்

பல இருக்கும் பூமியை நோக்கி சென்ற மழையை

வெறுத்தேன்.....

மழையே என்னை பார்த்து ஒரு புன்னகை பூக்க

உனக்கு நான் விலை தர வேண்டுமா ?????

தனிமையின் எதிரிகள் பல

இருப்பதை அன்று கண்டேன் ; கண்ட பொழுது

தனிமையின் தோள் கூடுக்கும் தோழனாய் பயம்

தனது சிறகுகளை விரிந்து மனதிற்குள் பறந்த

நேரத்தில் : தைரியத்தின் முதன் உருவமாய்

எனக்கு தெரிந்த அம்மாவின் முகம் கண் முன்னே

நெட்வொர்க் இல்லை என்று சொன்னது மனச்சாட்சி

அறிவு அவ்வாறு சொன்னாலும் மனம் கேட்காமல்

வெளியே சென்று பொதுதொலைபேசி சாத்தியத்தை

இல்லையென்று ஆக்கியது ஊடகம் ஏற்படுத்திய பயம்

உடல் வேறு நலமில்லை.

மனதிற்கு தேவையான பாசம் கிடைக்க என்ன செய்வேன்

தனிமை இருந்தால் ........

பாசம்




நீ இருக்கும் உலகத்தில்

காற்றுக்கும் வேலை இல்லை ....

நீ மட்டும் போதும்

எனக்கு உலகத்தை

புரிந்து கொள்ள .....

நீ நான்

என்று இல்லாத நிலை

வேண்டும் இந்த வேளையில்.

நீ சுவாசித்த காற்று

எனக்கு மட்டும் தான்

சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம்

வந்ததே உன் நாசியில்

இருந்து வந்த காற்றின்

சுவை அறிந்த பின்பு .
(போட்டோவில் இருப்பது எங்க அம்மாவும் அண்ணன் பொண்ணு ரித்தியும்)

Friday, December 4, 2009

டார்கெட் கவிதை

புது கவிதை தோன்றியது

எண்ணங்களில் மங்கிய

கனவு வருவது போல் ....

நேற்றும் இன்றும் வார்த்தைகளில்

செதுக்க வில்லையென்றால்

நாளையும் இதே தவிப்பு....

தேடிய வார்த்தைகள் தொலைந்து

போவதை கண்டேன் எண்ண சிதறல்கள்

என்னை அழைத்த தொலைபேசி

அளித்த தொல்லை ; டார்கெட்

முடிக்க கடைசி நாள் நாளை....

கல்லூரி நாட்கள்






என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் படித்த கல்லுரி ஞாபகமாவே இருக்கு. கல்லுரி என்றால் அது நான் படித்த UG காலேஜ் தான். மற்றவையில் எல்லாம் போட்டி பொறமை என்று அனுபவிக்காமல் படிப்பு படிப்பு என்றே இருந்தேன். UG ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் ஊர் சுற்றி கொண்டு ..... சினிமா, கிசு கிசு பேசி கொண்டு ....... கிளாஸ் கட் அடித்து கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் காலேஜ் ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன நட்புகளை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் ORKUT FACEBOOK எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்புகளே இல்லை......

Tuesday, December 1, 2009

தேவதையின் கை - 2

பாகம் - 1

================================================

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.


(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.

டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.

இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.

ரயில் கிளம்பியது.


(-)



எதிர் மேல் பெர்த்தில் அவள்.

தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.


(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???

அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????



என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.

"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.
திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."


அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.

நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.

காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது

"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.

ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.

டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

தொடரும்....

Sunday, November 29, 2009

புத்திசாலி கூட்டாளிகள் - THE LEAGUE OF GENTLEMEN



உலக திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக அறிமுக காட்சியில் சாக்கடையில் இருந்து கதையின் ஓர் நாயகன் வருவது போல் அமைத்திருந்தது இந்த படத்தில் தான் இருக்கும். (எனக்கு தெரிந்த வரைக்கும்). BANK ROBBERY படங்களில் இது ஒரு குறுப்பிட வேண்டிய படம். ஒரு கிளாச்சிக்.




ராணுவத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்ற பட்ட சிலரை ஒருவன் ஒருங்கிணைத்து ராணுவ ரீதியில் திட்டங்களை திட்டி ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை.( வர போகும் எதாவது புது தமிழ் படத்தை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை)




கூட்டாளிகள் அனைவரும் ஒவ்வொரு விதங்களில் திறமை மிக்கவர்கள். அந்த திறமைகளை கொண்டு ஓர் ராணுவ முகாமிலிருந்து ஆயுதங்களை கொள்ளை அடிபதையும், அந்த ஆயுதங்களை கொண்டு வங்கியை கொள்ளை அடிப்பதையும் என்ற இரு முக்கிய சம்பவங்களையும் அதற்கு ஏத்த துணை சம்பவங்களை கொண்டு விறுவிறுப்பான திரைப்படமான இது ஒரு பிரிட்டிஷ் நாட்டு திரைப்படம். ஒரு நாவலை தழுவி எடுக்க பட்டது. அதை எழுதியவரும் இதில் நடித்துள்ளார்.



எனக்கு நன்றாக நினைவுயிருக்கிறது நான் சிறு வயதில் இந்த படத்தை பார்க்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தது. அந்த காலத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடந்தால் ஹாலிவுட் மற்றும் பல நாட்டு திரைப்பட துறையினர் இதே போல கதைஅம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து உள்ளனர். தமிழிலும் பல வந்துள்ளது.
தமிழ் சினிமா போல இல்லாமல் அப்ப அப்ப போலீஸ் கதையில் எட்டி பார்த்து டென்ஷன் ஏற்படுத்தும். ஆனால் தமிழ் படத்தில் கொள்ளை அடிப்பது ஹீரோவாக இருந்தால் போலீஸ் கட்டாயமான முறையில் முட்டாளாக தான் இருப்பார்கள். இந்த படத்தில் அப்படி இல்லாமல் இருபது கொஞ்சம் நிம்மதி தான் என்றாலும் கடைசி காட்சியில் பரிதாபம் ஏற்படுவது டைரக்டர் யின் வெற்றி. படத்தில் டைரக்டர் டச் என்பது கதாபாத்திரங்களின் அறிமுகதில்லையே அவர்களின் நிலையையும் சொல்லி விடுவதில் தெரிகிறது.
ஓன்று மட்டும் நிச்சயம்.... ஞாயிறு மாலையில் பொழுது போக்க ஏற்ற படம்.




Saturday, November 28, 2009

யோகி - பட விமர்சனம்


"இந்த வெள்ளிகிழமை வந்த புது படங்களை பார்த்ததில் இருந்து இப்படி தான் உடம்புல இருக்கிற அத்தனை ஓட்டை ல இருந்தும் இப்படி தான் புகைய வருது..... இதுக்கு பேசாம மேவி எழுதின கவிதையை படிச்சிட்டு உயிரை விட்டு இருக்கலாம்..... எனக்கு வேணும் வேணும்..... தெருண் கோகி , சைரன் இவங்களை பார்த்த பிறகும் நான் போயிருக்க கூடாது... என்ன செய்ய விதி வலியது....."


"நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து பார்த்தேன்..... பட கதையை ஜீரணம் பண்ண முடியல..... இலக்கிய இனிமா தான் வேலைக்கு ஆகும் போல் இருக்கு... இவங்க உலக தரத்துக்கு போறதுக்குள் நம்ம நிலை தகர டப்பா ஆகிரும். ஐயா சாமிகளா ...... பர்மா பஜார் ல நிறைய சாமான் கிடைக்குது. ஏன் சிடி மட்டும் வாங்குறிங்க???"

டிஸ்கி - மேல் படங்களில் உள்ளவர்களும் யோகிகள் தான். மேலும் யோகி படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. நான் இன்னும் அதை பார்க்கவில்லை. அப்படி இருந்தும் விமர்சனம் வேண்டுவோர் கேபிள்ஜி பதிவிற்கு செல்லவும்.


Friday, November 27, 2009

நான் கடவுள்

என் உலகத்தில்
நானே கடவுள் ......
இங்கு எனக்கு
வாசனை வீசும் மலர்கள்
தான் முள்ளாக
இருக்கிறது......
நான் கடவுள்
வெளி உலகத்தில்
இளமையின் இயலாமைகளோடு
சராசரி மனிதனாய்
வேதனைகளின் களியாட்டத்தில்
சிக்கி தவிக்கும்
பாவப்பட்ட ஜென்மமாய்
இருக்கும் நானே
என் உலகத்தில்
கடவுள் ........


என் உலகத்தில்
நான் கருணை
மிக்கவன் .....
நம்பிக்கையும் தாராமல்
மோட்சமும் தாராமல்
ஏமாற்றும் பூஉலக
கடவுள் இல்லை
நான்.....

என் உலகில்
கடவுள் இல்லை என்று
சொல்ல்வோரும் உண்டு
சொல்லாதவோரும் உண்டு
ஆனால் எல்லாருக்கும்
கருணை உண்டு
என் உலகில் .....

ஏனென்றால்
நான் உண்மையானவன்
நானே கடவுள் ......

வெளி உலகில்
எல்லாவற்றுக்கும் நானே
காரணமானவன் ....
துடக்கமும் முடிவும்
நானே என்று சொல்லி கொண்டு
அவனால் செய்த பாவங்களுக்கு
மக்களை நரகத்திற்கு
அனுப்பும்
கடவுள் போல்
நான் இல்லை .......

என் உலகில்
பயம் இல்லை
சோகம் இல்லை
சந்தோசமே சந்தோசமாய்
வாழ்கிறது ......
எல்லோரும் நண்பர்களாய்
இருப்பார்கள்.....
எனக்காக அவர்கள்
ஏதும் அற்பனிப்பது
இல்லை .....

இருதாலும் அவர்களை
நான் சந்தோசமாக
வைத்துள்ளேன்......

நான் உன்னை மறப்பதும் இல்லை
கைவுடுவதும் இல்லை
என்று கூறும்
கடவுள் இல்லை
நான்.....

இந்த வரிகளை
என் உலக மக்கள்
படிப்பதும் இல்லை
எழுதுவதும் இல்லை ......
ஏனென்றால் அவர்களோடு
தான் நான் இருக்கிறேன்.......

=========================================

போதுமடா உனக்கு
இந்த கடவுள் பதவி....
நீ செய்தது என்ன ???
செய்யாதது என்ன ????
நச்சு பாம்புகளின்
விஷம் தடவிய
எழுத்தாணி கொண்டு
நரக வேதனை வாழ்க்கை
எம் மக்களுக்கு ......

உன் சந்தனம் குளியலுக்கு
நாங்கள் வேர்வையில் குளிக்கிறோம்
வாழும் போது இல்லாத சொர்க்கம்
இறந்த பின் அளிக்கும் பித்தன் தானடா நீ
நீ உறங்க நாங்கள் தூக்கம் இழக்கிறோம்
உண்மையில் மக்கள் ஆகிய
நாங்கள் தான் கடவுள் ......

நீ பாட வேண்டும்
"பித்தம் எல்லாம் எனக்கு மக்கள் மயமே ".....
==========================================

மதியிழந்த முடனே
என் கடவுளே !!!!
யார் தந்தார்கள்
உனக்கு உரிமை
என் விதியை எழுதிட.....
எழுதிய விதி
வீதியில் சேறுக்கு சமமாய் ;


அவமனபடுத்தினால் நரகம்
உன் சட்டம் ;
நீ வா என்னோடு ......

ஏனென்றால் அதில் நீ தான் முதல்வன்
விதி என்ற பெயரில்
செய்து கொண்டு இருப்பதால் ;
போதும் உன் விதியின் விளையாட்டு ;
யார் தந்தார்கள் உரிமை உனக்கு
விதி என்ற பெயரில்
என்னை அவமான படுத்த ???
நஞ்சு தேய்ந்த மறுபக்கத்தில் இருந்து
என்னை நான் காப்பற்றி
என்னக்கு நானே எழுதி கொள்கிறேன்
என் விதியை.......
===========================================


டிஸ்கி - ரொம்ப நாள் முன்னாடி எழுதின கவிதை ... அதனால் எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கும்

செய்திகள் வாசிப்பது மேவி

" 200 நகரங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு "

லண்டன் போன்ற நகரங்களில் பல வருஷம் முன்னாடியே இதை சத்தியம் ஆக்கி காட்டி இருக்காங்க. ஆன நாம இந்தியாவில் தான் இது இன்னும் திட்ட அளவில் இருக்கிறது. பிறகு இந்த திட்டமானது பல இடற்பாடுகளை உண்டாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இன்னும் அரசு சப்பளை செய்யும் LPG GAS யில் பல பிரச்சனை இருக்கிறது. அதை சரி செய்யாமல் இவர்கள் எப்புடி அடுத்த நிலைக்கு போவர்கள் என்று ஆச்சிரியமா இருக்கு.


"பஸ்களில் விளம்பரத்துக்கு தடை ஆண்டுக்கு ரூ.10 கோடி இழப்பு"

என்ன கொடுமை சார் இது. நேற்று வரையில் உயர் கட்டணங்கள் வசூலிக்கும் A / C பஸ்களில் மட்டுமே விளம்பரங்கள் பார்க்கும் படி இருக்கிறது. மற்ற சாதாரண பஸ்களில் விளம்பரம் மாட்டப்பட்டு இருந்தாலும் அது பெரும்பாலும் பார்க்கும் படி இருப்பதில்லை. குறைவான பராமரிப்பு அதனால் அழுக்கு படிந்து TARGET AUDIENCE போய் சேரவில்லை. இதை மோப்பம் பிடித்த கம்பெனிகள் கணக்கு போட்டு பார்த்ததில் அவர்களின் EXPECTED RETURN ON INVESTMENT குறைவாக இருந்ததால் விழித்து கொண்டனர். இந்த விளம்பரங்கள் தரும் வருமானத்தை நம்பி தானே அரசு போஸ்டர், பேனர்களை தடை செய்தது. ஐயோ பாவம் அரசு.
"மக்களை கேட்டு பாருங்கள். விமர்சனம் எழுதியவர்களின் முகத்தில் தான் கரி - கமல்"


இவர் ஏதோ சமுக சேவை செய்து அதை சிலர் கிண்டலடித்தது போல் பேசுறார். சந்தைக்கு விற்பனைக்கு வந்த பொருளை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேச தான் செய்வார்கள். இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா ?????
"மும்பையில் சீன பொருட்கள் கண்காட்சி"


ஆமா உள் ஊர் பொருட்களை நன்றாக முன்னேற்றிட்டாங்க இப்ப சீனா நாட்டு பொருட்களுக்கு போய்ட்டாங்க. சும்மா சொல்ல கூடாது நம்ம நாட்டு ஆரசாங்கம் நன்றாகவே நாம் நாட்டு சந்தைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நம்ம நாட்டு வணிகர்கள் கூட தான் தர கட்டுபாடு என்று ஓன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு வழியில் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

Thursday, November 26, 2009

கலவை

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அனந்த விகடன் விளம்பரம் ஒன்றை பார்த்தேன் அதுல ஒரு குரங்கு வந்து "படிக்காட்டி கடிச்சுருவேன்" ன்னு சொல்லி மிரட்டுது. ஐயோ பவம் விகடன் நிலைமை இப்படி ஆகிருச்சு. ஒரு குரங்கை விட்டு வாசகர்களை மிரட்டி வாங்க வைக்கிறார்கள்.
----------
இனிமேல் யாரும் தமிழக முதல்வரை தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம். அவர் நிறையவே தமிழ் மக்களுக்காக செய்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எல்லோரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தானே, அவர்களும் தமிழ் மக்கள் தானே.
----------
இப்பொழுதெல்லாம் BINGO CHIPS விளம்பரம் ஓன்று வருகிறது. மிகவும் ரசித்து பார்க்கிறேன். வசனம் இல்லாமல் அந்த பெண் காட்டும் முக பவனை அருமையாய் இருக்கிறது.
----------
தற்சமயம் வரும் படங்களை பார்த்தால் அமெரிக்காவில் ஏதோ ஒரு கலாச்சார மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருப்பதை உணர முடிகிறது. LETTERS TO JULIET ன்னு ஒரு படம் அடுத்த வருடம் வர போகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் எழுத பட்ட காதல் கடிதம் ஒருத்தி கைக்கு கிடைக்கிறது. அந்த கடிதத்தின் கதையை அறிய போகும் பொழுது அவள் காதலனை சந்திக்கிறாள். படம் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சேரனுடைய பட சிடி அங்கேயும் போயிருச்சா ????
----------
இனிமேல் சென்னையில் கலாச்சார சின்னங்கள் என்று ஓன்று கூட இல்லாமல் போக போகுது. இருக்கிற ஓன்று இரண்டு கட்டடங்களை இடித்து புதுசு புதுசா ஏதோ கட்டுரங்க. இப்படியே போனால் கோவில்கள் மட்டுமே வரும்காலத்தில் சென்னையின் சின்னங்களாய் இருக்கும்.
----------
மெகா மகா சீரியல்யான கோலங்கள் இந்த வாரத்தோடு முடிய போகிறதாம். கேட்கவே சந்தோஷமா இருக்குல. திருசெல்வதுக்கு ரொம்ப பெரிய மனசு இவ்வளவு சிக்கிரம் முடிசுட்டாறு. எனக்கு என்னமோ அவர் பைத்தியக்காரன் அவர்களின் பதிவை ரொம்ப படிப்பார் போல் இருக்கு, அபி பேசும் வசனங்கள் அப்படி தான் இருக்கு.
----------

கொட்டாவி விட்டு கொண்டே வாழ்த்தலாம் வாங்க


நிஜப்பெயர்: மேவி

புனைப்பெயர்: மொக்க ராசா (வழங்கியவர் - "இலக்கிய பிரியாணி" தாபா)


வயது:
எதிரில் வரும் பெண்ணை பொருது

தொழில்: கொட்டாவி விடுவது

உபதொழில்: இலக்கியம் பேசுவது (பல தடவை காயபட்ட பொழுதிலும்)
நண்பர்கள்: டி, காப்பி வாங்கி தருபவர்கள்

எதிரிகள்: சாப்பிட்டதற்கு காசு கேட்பவர்கள்
பிடித்தது: குமுதம் நடுப்பக்கம்


பிடிக்காதது: குங்குமம் கடைசி பக்கம்
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது

நீண்டகால சாதனை: உருபடாமல் இருபது
நீண்டநாள் ஆசை: அனுஜன்யாவை தனது கவிதையை படிக்க வைக்க வீண்டும் என்பது .

சமீபத்திய ஆசை: கார்க்கியை கவிதை எழுத வைக்க வேண்டும் என்பது

இப்படிக்கு

பிறந்த நாள் பதிவுகளுக்கு காபி பேஸ்ட் பின்னோட்டம் போடுவோர் சங்கம்

Wednesday, November 25, 2009

கண்டேன் இன்பத்தை

நினைவுகளில் அவளுடனான உறவில்

இன்பம் முன்னாள் காதலியின் இந்நாள்

கணவனுக்கு ; நான் அவனில்லை என்ற

விளக்கத்தோடு அறிவு விளங்கினாலும்

பிறழ்வு நிலையில் காமம்.....




முன்னாள் காதலியான பிறகும்

பசுமையாய் காதலி என்ற போர்வையில்

நினைவுகளில் வலம் வந்து கொண்டுயிருந்த

நேரத்தில் காமம் மேலோங்க

நினைவுகளில் கற்பழித்தேன்

திநகரில் இருந்து தாம்பரம் வரும்

ரயிலில் அனாவசிய நினைவுகளுடன்

இறங்கையில் முகமறியா பெண்ணின்

முன்-பின் அறிமுகம்

வளம் சேர்த்தது எனது காமத்திற்கு

குறையாய் நிறைந்த காமம்

நெறியுடன் அவள் மேல் மட்டும்

நிறைந்தது காமம் மேலும்.....




மேகங்கள் இடையில் சூரியன்

ஒளிந்து கொண்டு இரவு என்னும்

தோழியுடன் அழைப்பின் விளையாட்டில்

மாலை வந்த நேரமது ....


நிறை குடமாய் நடந்து

காமத்தை அடக்க முயன்று

வெகுதுரம் நடந்து களைப்பு வந்த

வேளையிலும் காமம் அடங்காமல்

அறை வந்து சேர்ந்தேன்....



அமர்ந்த பிறகு குமுதம் நடுப்பக்கம்

என் இயலாமையை துண்டி விட

என்னுள் இருக்கும் நல்லவன்

இறந்த நேரமிது....



கழிவறை பொழுதின்

நேரத்தில் கண்டேன் சுயமாய்

இன்பம் அவளோடு நினைவுகளில் ...



குளித்து முடித்த வேளையில்

இறந்த நல்லவன் மீண்டு

வந்தான் பழைய நினைவுகள் அன்று...

நிலவு என்றொரு பெண்


முத்தாய் வந்து

இரவில் கடந்து

என்னில் கலந்து .....

சுகத்தின் மிச்ச சொச்சங்களை தந்துவிட்டு

ஓசை படாமல் சென்றுவிட்டாயே

உன் சுகத்திற்கு மறுநாள் இரவு வரை

காத்திருக்க வேண்டுமா

சொல்லு நிலவே
துன்பமாய் சூரியன் வர


சுகத்தில் மட்டும் இல்லை

வேதனையிலும் வேர்வை...

நாற்றங்கள் சுயமாய் என் வேர்வையில்

ஆறுதலாய் துணை வேர்வை நாற்றங்கள்

இல்ல பொழுதில் போஸ்டர் நாயகிகள்

உன் நினைவை துண்ட

வளர்பிறை இன்பங்களின் தேய்பிறையாய்

ஆடி மாசம்
=
=
டிஸ்கி : தொடர்கதை செவ்வாய்கிழமை போஸ்ட் செய்கிறேன். கதையை பற்றி தனிப்பட்ட முறையில் விசாரித்த அன்பர்களுக்கு நன்றி

Sunday, November 22, 2009

தேவதையின் கை

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.
(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.
(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.
(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)
அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.
(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.


"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.

"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"

"அப்படியா??"
"ஆமா"

"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"

"எப்புடி தெரிஞ்ச்சு"

"ரொம்ப சீரியஸ் ஆ"

"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"

"டைம் ஆகிருச்சு"

"அதனால என்ன"

"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"இல்லை வேண்டாமே"

(-)

ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"

"ஓ அப்படியா"

"ஆமா அப்படி தான்"

"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.

அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....
தொடரும்.......

Thursday, November 19, 2009

காதல் முத்தி போயிருச்சு

அன்று தீபாவளி. வெடிச் சத்தம் கேட்டு எழுந்த பொழுது தான் ஞாபகம் வந்தது. என்ன தான் ஊருக்கு இரண்டு நாள் முன்னரே வந்து இருந்தாலும் அவளை பற்றி வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்தால் தீபாவளி கொண்டாடங்கள் பற்றிய சிந்தனை பெரிய அளவில் மனசுல இல்லை என்பது உண்மை.

சென்னையிலிருந்து கிளம்பும் போதே மனதிற்குள் முடிவு எடுத்து விட்டு தான் ரயில் ஏறினேன். என்ன தான் A / C பெட்டில் பயணம் செய்த பொழுதிலும் ; என்னால் அந்தே இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மனதிற்குள்ளே ஓர் விவாத மேடையில் பலமான விவாதம் நடந்து கொண்டே இருந்தது. அந்த மேடையில் "யாரிடம் இந்த விஷயத்தை சொல்வது-அம்மா அல்லது அப்பா" , "சொன்ன பின் எந்த மாதிரியான விளைவு ஏற்படும்" போன்ற தலைப்புகளில் எனக்கு நானே கருது சொல்லியும் எதிர் கருது சொல்லியும் அந்த இரவை ஓட்டினேன். நிஜத்தில் அம்மா எதிர்ப்பு சொன்னால் என்ன செய்வது என்று நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.... அதே சமயம் அவளையும் என் மனதிலிருந்து வெளியேற்றவும் முடியாது. உயிரில் கலந்து விட்டாள் அவள்.

அவள் அழகான இம்சை. அவளை முதலில் பார்த்து வருடங்கள் பல ஆகிய பொழுதிலும் அவள் முகம் நேற்று பார்த்தது போல் பசுமையாய் மனதில் ராஜா ரவி வெர்மா ஓவியமாய் பதிந்து உள்ளது. இரவுகளில் அவள் வருவாள் தினம்தோறும். நித்தமும் அவள் தான் மனதில். அவள் நினைவ்வுகளை தான் சுவாசித்தேன்.

வீட்டிற்குள் நுழைந்த பொழுது அம்மா கேட்டாங்க "என்னாச்சுடா??? இப்படி இருக்கா".

அப்பொழுதே சொல்லிருக்கலாம் ஆனால் உடல் சோர்வு காரணமாய் அம்மாவை எதிர் கொள்ள இயலவில்லை. பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அம்மா அப்பா, இரண்டு பேரும் வேலையாய் இருந்ததினால் தனியாக பேச முடியவில்லை. அந்த நேரங்களில் என்னுள் இருந்த அந்த அவஸ்தையை மிகவும் ரசித்தேன்.

அடுத்த வெடி சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தேன். அம்மா பூஜை வேலையில் இருந்தார்கள். அப்பா நண்பர்களுக்கு செல்போன் முலமாக வாழ்த்துக்களை சொல்லி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் எனது செல்போனில் அழைப்பு வர, அதை எடுத்து பேசும் நிலையில் நான் இல்லாதால், அதன் இயக்கத்தை நிறுத்தினேன்.

காலை பூஜை முடிந்த நேரம். பேசலாம் என்று அம்மா அருகே சென்றேன். சமையல் வேளை. அதனால் சமயலறையில் இருந்தார்கள்.

"அம்மா"

" என்டா"

"கொஞ்சம் பேசணும்"

"இப்ப தான் நேரம் கிடைச்சுதா"

"போ. அப்பா கிட்ட போய் சொல்லு"

நான் மொக்கை போட தான் வந்து இருப்பேன் என்று நினைத்து விட்டார்கள். என் மொக்கையை தவிர்க்க அம்மா கையாளும் உத்தி இது. அம்மாவுக்கு தெரியும் எனக்கு அப்பா கிட்ட கொஞ்ச பயம் உண்டு என்று. சரின்னு அப்பா கிட்ட சென்ற பொழுது வாசலில் பக்கத்து வீட்டு மகாலிங்க மாமாவிடம் பேசி கொண்டு இருந்தார்.

வந்து டிவி முன் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது தான் கவனித்தேன். அம்மா என் அருகே நின்ன்று கொண்டு இருப்பதை. பேசலாம் என்று நினைத்த பொழுது ..... அம்மாவுக்கு பிடித்த நடிகையின் பேட்டி டிவியில் ஒளிபரப்பானது. நேரம் காலம் தெரியாமல் ........ வந்த கோவத்தில் மாறன் சகோதரர்களை மனதிற்குள் சபித்தேன்.

=
காலை சிற்றுண்டி முடிந்த நேரம். அப்பா வெளியே போய் இருந்தார். அம்மாவும் நானும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தோம். அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் கேள்வி கேட்க அப்பா இல்லை என்பதினால் வந்தது. அம்மாவிற்கு என் மேல் தனிபட்ட பிரியம் உண்டு. மொத்த குடும்பத்தில் நான் அதிகம் படித்தவன் என்பதினாலும், நல்ல குணமுடையவன் என்பதினாலும்.

வசதியான குடும்பம்...... அவளை மணம் முடித்து வைக்க சிரமம் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பம் முதலே இருந்தது.

காலை முதலே எனக்கு செல்போன் அழைப்பு ஏதும் வராததாலும், அப்பாஸும் யுவனும் இன்னும் வீடிற்கு வரவில்லையே என்று கேட்க ; பேச்சு ஆரம்பமானது.

சிறிது நேரம் போன பின்

"அம்மா"

என்னா என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாங்க.

எனக்குள் ஆயிரம் பிரளயம்.

"நா ....நா ... நான் ஒரு பெண்ணை கா...."

"ம்ம்ம் சொல்லு"

இது தான் அம்மாவிடம் எனக்கு பிடித்தது. மிகுதியான உக்கம் தருவார்கள்.

"நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்" என்று மனபாடம் செய்தது போல் சொல்லி விட்டேன்.

எனக்கு ஆச்சிரியம். அம்மா சிரித்த படி " யார அது??"

சற்றும் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தைரியம் வந்து ....

"அசின் ம்மா"

"????"

"நடிகை அசின் ம்மா" என்று அழுத்தி சொன்னேன்.

ரொம்ப முத்தி போயிருச்சு என்பது போல் அம்மா என்னை பார்த்தாங்க.

Wednesday, November 18, 2009

முன்னுரைக்கு ஓர் பொருளுரை




காலை நேரத்தில் ஓர்
கவிதை எண்ணத்தில் தோன்றி விடவே
பதிவுச் செய்ய கணினி முன் அமர்ந்த பொழுது
இரவு எழுதிய முன்னுரைக்கு
பொருளுரை எழுத
எழுந்து நடந்தேன் அவளை நோக்கி ....
முடிவுரையை வெறுத்தபடி
முன்தின இரவு
ஊடலால் நேற்றைய இரவு
இருட்டின் மௌனங்கள் கலைந்தது

Sunday, November 15, 2009

இரவின் இருட்டில்







எனக்கும் அவளுக்கும் இடைவேளை

கட்டிலில் அவள் அந்த பக்க்கம்

நான் இந்த பக்கம்

எங்களுக்கு நடுவே ஊடல்....

இரவின் மௌனம் பழகியது

அவளின் மௌனம்

நான் அறியாதது.......

இரவின் மௌனம் ; மனதில்

அமைதி இல்லை,

பேசுவதற்க்கான வார்த்தைகளை

தேடியபடி கண்கள்

இரவின் இருட்டில் விடை தெரியாமல்

விடை என்னுள் வைத்து கொண்டே ......

Ilaiyaraaja's Superb BGMs










பிகு : இந்த மூன்றையும் ஓன்று சேர கேட்டு பாருங்க. அப்படியே சந்தோசத்தின் உச்சியில் இருப்பிங்க

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் இன்று.....


இன்று நேருவின் பிறந்த நாளாம், அவருக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரின் விருப்ப படி இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிச்சாங்க இந்திய அரசாங்கம். இந்த மேட்டர்யை நாங்க எல்லாம் சின்ன வயசில மீட்டர் போட்டு யோசிப்போம். எல்லாம் கொக்கு மக்காக தான். ஹ்ம்ம்.



குழந்தைகள் தினம் என்று கொண்டாடும் இந்திய அரசு இன்னும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க இன்னும் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியல. ஏதோ ஒன்னு இரண்டு சங்கங்கள் இருந்தாலும் ஒரு உஸ் இல்லை.



என்னை கேட்டால் இதற்க்குன்னு ஒரு அமைச்சரங்கம் (MINISTRY ) பெரிய அளவில் அமைத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினால் நல்ல இருக்கும்.



அதுவும் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் குழந்தைகளுக்கான இடம் இருப்பதில்லை. இன்று சமுகத்தில் குழந்தைகள் தினம் வந்தால் தான் குழந்தைகளை பற்றி பெரிய அளவில் பேசுகிறோம். பிற்பாடு மறந்து விடுகிறோம்.



இன்று எனக்கு தெரிந்து சென்னையில் பல குழந்தைகள் அவர்களின் குழந்தைதனமையை பெற்றோரின் பொருளாதார வேட்டையால் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல வருஷம் கழிந்து பல திறமை கொண்டவர்களை பார்க்க முடியாது. இப்பொழுதே எதாவது செய்தால் தான் நாளைய இந்தியாவை காப்பாற்ற முடியும். இன்று கல்வி நிலையில் பொறுத்த வரைக்கும் ஒரு LONG STANDING PLAN இருப்பதாய் தெரியவில்லை.
பல வீடுகளில் குழந்தைகள் குழந்தைகள் போல் இல்லமால் பெரிய மனுஷங்கள் மாதிரி நடக்குரங்க.



போன தலைமுறையில் கல்வி முறை சரி இல்லாததால் தான் இன்று EMPLOYBILITY ரேட் ரொம்பவே கம்மியா இருக்கு. இன்ன்னும் சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கு.



ஓர் நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால் ; நாளைய இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்க்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
=
=
=
=
=
டிஸ்கி : குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்.

Friday, November 13, 2009

கார்கியும் பரிசல்க்காரனும்





கார்கி : "ஏன் நம்ம பதிவுலகம் மொக்கை பதிவுகளை தண்டி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் ?"

பரிசல்க்காரன் : "இதை எல்லாம் நீயோ நானோ முடிவு செய்யறது இல்லை"




டிஸ்கி : காலையில் இந்த பாட்டு பார்க்கும் பொழுது தோன்றின டயலாக். ஹி ஹி ஹி ஹி. பதிவுலகத்தை அடுத்த காட்டதிற்கு கொண்டு போக விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. ஹி ஹி ஹி ஹி