Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - பொருளாதார குருவிகள் - அத்தியாயம் 2


வரிகளென்று சொன்னாலே அவை எதோ நவீன காலத்தின் அடையாளமாகவே பார்க்க படுகிறது ஆனால் அவை நாடோடிகளாக இருந்து கூட்டமாக வாழ தொடங்கி எப்பொழுது மனிதன் சமூக அமைப்பு என்று உருவாக்கினானோ அப்பொழுதே வரி என்பது பிறந்து விட்டது. வரியின் உருவம் பரிவர்த்தனை ஆகியவை காலத்திற்கு ஏற்றது போல் மாறி கொண்டு இருக்கும்.

மேலும் வரி என்பது சரித்திர நிகழ்வுகளோடு தொடர்புடையது, வரலாற்றின் போக்கை கொண்டு செல்லும் காரணியாக அமைந்துவிடுகிறது. ஆனால் மறைமுகமாக.

புறநானூற்றில் இடைக்குன்றூர் கிழார் எழுதியது 

"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே"

இந்த பாடலில் சேரர், சோழர் மற்றும் ஐந்து குறுநில மன்னர்கள் என ஒன்று சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியன் மீது படையெடுத்து போர் தொடுக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்ந்து எதிர் போர் புரிந்து பாண்டியன் ஒற்றை ஆளாக போரில் வெல்கிறார். இது தான் இந்த பாடலில் கூற படும் செய்தி. 

இந்த போரின் காரணமாக பலர் கூறுவது பாண்டிய நாட்டில் இருந்த செல்வத்தை. ஆனால் செல்வம் இருந்தால் பெருன் படை கொண்டு போர் புரிய அவசியம் இல்லை. 

ஆனால் எப்பொழுது அவசியம் வந்ததென்றால் பாண்டியர்களிடத்தில் பெரும் வணிக வர்த்தகம் நடைபெறும் பெரிய துறைமுகங்களான கொற்கை துறைமுகம், பூம்புகார் துறைமுகம் ஆகியவை இருந்தன. அந்த வணிக வர்த்தகத்தின் மூலம் பாண்டியனுக்கு ஏராளமான வரி கிடைத்தது. அந்த வரியின் மூலம் பாண்டிய நகரம் பெருன் செல்வசெழிப்புடன் இருந்தது. அதுவே சோழர்களை, சேரர்களை கூட்டணி உடன் போர் தொடுக்க செய்தது.

வரி வாய்ப்பு பற்றி தெரியாததால் தான் மாலிக் கபூர் படையெடுத்து  வந்து பலரை கொன்று கொள்ளை அடித்து சென்றான். 

சரி இது பக்கம் இருக்கட்டும்.

போன தொடரில் பெரும் நிறுவனமோ அல்லது தொழிலதிபரோ எப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவார்கள் என முடித்திருந்தேன்.

அது எப்படியென்றதரகர்கள் உதாரணமாக : 

Under Invoicing - அதாவது ஒரு பெரும் தொழிலதிபர் வணிக ஆண்டின் செய்து வந்த வணிகத்தின் மூலம் 200 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதென்றால் அதனை 100 கோடி ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கிறது என அரசுக்கு கணக்கு காட்டி அதற்கான வரியை செலுத்தி விடுகிறார்.

இப்பொழுது கணக்கில் வராத 100 கோடி ரூபாய் என்பது கருப்பு பணமாகி விடுகிறது.

இந்த 100 கோடி ரூபாயை சிறிது தரகு பணத்திற்காக வெள்ளையாக மாறி கொடுக்கும் இடை தரகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொருளாதார குருவிகள்

இந்த 100 கோடியை  அந்த இடை தரகர் 20 நபர்களிடம் சமமாய் பிரித்து கொடுப்பார். அதாவது ஆள் ஒருவருக்கு 5 கோடி என்று.

அல்லது 5 நபர்களுக்கு 20 கோடி என. சூழ்நிலைக்கு ஏற்றது போல் சதவிகிதங்கள் மாறும்.

இந்த இரண்டாம் நிலை இடை தரகர்கள் அவர்களுக்கு கீழ் இருக்கும் நபர்கள் மூலம் கருப்பை வெள்ளையாக மாற்றும் வேலையை செய்வார்.

அவற்றில் சில கோயிலுக்கு நன்கொடை, போலி தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை, இல்லாத கடையில் பண பரிமாற்றங்கள் மற்றும் சில...

அதிலெல்லாம் எப்படி செயல் படும் ?

அடுத்த பதிவில்.

தொடரும்.

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails