Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 6 - மதிப்பு கடத்தல்

 
போன அத்தியாயத்தில் ஒரு செல்வந்தர் சட்ட ரீதியாக தனக்கு வேண்டிய வேலைகளை செய்ய நிறுவனத்திற்குளேயே ஒரு கருப்பு ஆட்டை அமர்த்துவார் என சொல்லிருந்தேன்.

அதற்கு முன்....

கடன்கள் இரண்டு வகை படும் ஒன்று வங்கி மூலமாகவோ அல்லது நிதி நிறுவனம் மூலமாகவோ வாங்குவது. அப்படி நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் அதனை வைத்து வருமான வரியை குறைத்து கொள்வார்கள். ஏனென்றால் ஒரு பெரும் நிறுவனம் என்பது பலருக்கு வாழ்வியல் ஆதாரத்தை தரும் ஒன்று.  இந்திய அரசியல் சட்டம் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக இருக்க இம்மாதிரியான சலுகைகளை தந்திருக்கிறது பெரும் நிறுவனங்களுக்கு. 

இது சட்ட ரீதியிலான கடன்.

அதே நிறுவனமோ அல்லது நிறுவன இயந்திரத்தை இயக்கும் மனிதர் எடுக்கும் தவறான முடிவுகளால் வங்கிகளில் இருந்து கடன் பெரும் தகுதியை இழந்திருக்கும்.

கடன் பெற்றால் தான் நிறுவனம் உயிரோடு இருக்கும் என்கிற நிலை வந்தால், அவர்கள் நாடுவது பெரும் நிதியாளர்களை தான். அதாவது பைனான்சியர்ஸ்.

சினிமா என்பது எல்லோருக்கும் தெரிந்த நுகர்வு பண்டம் என்பதால் பைனான்சியர் என்றால் சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தையாகவே பொதி புத்தியில் நிலைத்துவிட்டது.

ஆனால் சினிமா பைனான்சியர்களை விட அதிகம் லாபம் நடந்துவது இந்த நிறுவன பைனான்சியர்கள் தான்.

அது எப்படி சொல்லுற ?

திரைத்துறையில் யாரும் தங்களது பெயரில் கடன் வாங்குவது இல்லை. அவர்கள் எடுக்கும் படத்தில் பெயரில் தான் கடன் வாங்குவார்கள். அந்த படம் வெளிவந்து லாபம் அடைந்தால் தான் உண்டு இல்லையென்றால் இல்லை. 

படத்தின் மதிப்பு என்பது அதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகியை வைத்தே முடிவு செய் படுவதால், உச்ச நடிகர்கள் இருந்தால் தான் படத்திற்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பு கூட்டலை படத்தை சார்ந்தோர் தான் செய்ய வேண்டும்.

உதாரணமாக இயக்குநர் பாலா சேது படம் வெளியீடுக்கு கஷ்ட பட்டதையும் பரதேசி பட வெளியீட்டுக்கு கஷ்ட பட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். 

இப்படியான நிலை இருப்பதாலேயே பிரபல நடிகர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது.

ஆனால் நிறுவனங்களில் அப்படி இல்லை. நிதி அறிக்கை, லாப கணக்கு, வணிக ஒப்பந்தங்கள் தான் பேசும். அதே போல் நிறுவன குடுமி பைனான்சியர் கையில் கடன் கொடுக்கும் பொழுதே வந்துவிடும்.

இந்த பைனான்சியர்கள் பொறுத்தவரை தனிநபர் நிறுவனம், கூட்டு ஒப்பந்த நிறுவனம் அல்லது சிறிய நிறுவனம் என்றால் பிரச்சனை இல்லை. ( Sole Proprietorship / Partnership Firm / SME )

இதே பெரிய நிறுவனமாக இருக்கும் பொழுது அதில் தங்களது ஆளுமை இருக்க வேண்டுமென தங்களது ஆளை நிர்வாக குழு உறுப்பினராக சேர்ந்துவிடுவார். ( Board Of Directors ).

கடன் தொகை மிக பெரியது என்றால் என்ன செய்வார்கள் ?

இந்த நிதியாளர்கள் "சிறப்பான பழகுதல்" முறையால் வங்கியில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆட்களை நட்பு வட்டத்தில் வைத்திருப்பார்கள்.  அவர்கள் வைத்து கடன் பெறவே முடியாத அளவுக்கு நிதி அறிக்கைகளை கொண்ட நிறுவனத்திற்கு கடன் பெற்று தருவார்கள். 

அது எப்படி முடியும் ?

ஒரு நிறுவனத்தின் கடன் தகுதி என்பது அந்த நிறுவனத்தின் கையெழுத்து போகும் அதிகாரத்தில் இருப்போரின் கடன் தகுதியை பொறுத்தே அமையும்.

அப்பொழுது கடன் வாங்க வேண்டுமென்பதற்காக மற்றவர்களை நீக்கிவிட்டு புதிதாய் வங்கியில் இருந்து நல்ல வட்டியில் அதிகமான தொகை கடனாக பெற கூடிய நல்ல நிதி நிலை கொண்ட ஒருவரை நிறுவன இயக்குநராக சேர்ப்பார்கள். 

எல்லாம் சரி அவர்களை வைத்து என்ன மாதிரியான காரியங்களை செய்வார்கள் ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்பு பணம் என்பது வெளிநாட்டிற்கு போய் பல கைகள் மாறி திரும்ப வெள்ளை பணமாக கருப்பு பணத்தை உருவாக்கியவர் கைக்கு வருவது தான்.

எல்லாம் சரி அது எப்படி கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் ?

தங்கம், போதை பொருள் என திரைப்படங்களில் காட்டுவார்கள். அதெல்லாம் இலெமூரியா கால கதைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

உலகம் முழுக்க வணிக வாய்ப்புகள் அதிகமான பின்னர் கண்டுபிடித்தால் மாட்டிகொள்வோம் என்பது போன்ற விஷயங்களில் வரி ஏய்ப்பாளர்கள் நுழைவது இல்லை.

இல்லையென்றால் வேற வழியில் கருப்பு பணத்தை அனுப்புவார்கள் ?

பழங்கால வரி ஏய்ப்பு முறை தான் அது.

இந்தியா நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு காய்கறி பழங்கள் எல்லாம் ஏற்றுமதி ஆகுகிறது.

இதில் அரசு இயந்திரம் சோதனை என வந்தால் என்ன கண்டுபிடிப்பார்கள். 

ஒன்றும் இல்லை. காய்கறிகளில் பழங்களுக்கு நடுவில் எதாவது மறைத்து வைத்து அனுப்ப பட்டு இருக்கிறதா அவை அரசால் ஏற்றுகொள்ள பட்டவையா என்று தான் சோதனை செய்வார்கள். மற்றபடி காய் பழங்கள் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பெரிய விஷயம் இல்லை தான்.

உதாரணமாக -

அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம் இங்கு இருந்து 20 டன் வெங்காயம் வாங்கி இருக்கிறது. அதனை இங்கு இருந்து அனுப்புவார்கள். 

அமெரிக்க நிறுவனத்தில் இந்த பரிவர்த்தனையை பார்த்துகொள்ள ஒருவர் இருப்பார், அவர் நமது நிதியாளர்களால் அமர்த்தபட்ட நபராக இருப்பார். அவரே இந்தியாவில் இருந்து தான் வெங்காயம் வாங்க வேண்டும் என்பதை சொன்னவராக இருப்பார்.

இதில் எப்படி கருப்பு பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது ?

இங்கு 20டன் வெங்காயத்திற்கு பதில் 30டன் வெங்காயமாக அனுப்ப பட்டு இருக்கும். அதாவது 20டன் நிறுவன கணக்கில் வந்துவிடும். மிச்சம் இருக்கும் 10 டன் வெங்காயம் கருப்பு பணத்தின் இன்னொரு உருவம். 

பின்னர் இந்த பத்து டன் வெங்காயம் மட்டும் தனியாக எடுக்க பட்டு மக்களிடத்தில் விற்க படும். இந்திய கருப்பு பணம் அமெரிக்க மக்களின் மூலம் வெள்ளை பணமாக மாற்ற பட்டு இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள - Trade Based Terrorist Financing And Money Laundering - சர்வதேச அறிக்கைகள்

பின்னர் என்ன நடக்கும் ?

இது ஒன்று மட்டும் தான் வழியா வேறு வழி இல்லையா ?

தொடரும்....

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails