Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 5 - செலவு கணக்கு


போன அத்தியாயத்தில் அடையாள திருட்டை பற்றி சொல்லிருந்தேன், பின்னர் வரி ஏய்ப்புக்கு முக்கிய காரணியாக கடன்களும் அது உருவாக்கி தரும் மறைமுக வழிகளும் இருக்கிறதென சொல்லி முடித்திருந்தேன்.

பெரும் நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் பெரும்பாலும் கடன்கள் வாங்குவதேனென பார்த்தோமானால் போலி கணக்கு எழுதுவதற்காக இருக்கும். பல பெருநகர வணிக சந்தைகளை கவனித்து பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு தோன்றுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் பிறகு ஏன் கடன் வாங்குகிறார்கள். இவர்கள் நினைத்தால் ஒரே காசோலை தந்து மொத்த விற்பனை செய்து விடலாமே. 

இதற்கு கடன் வசூலிப்பது எப்படி நடைபெறுகிறதென பார்க்க வேண்டும்.

ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் கடன் தொகை நேரடியாக கடன் பெறுபவரின் வங்கி கணக்கிற்கு போய் விடும்.

பின்னர் மாதாந்திர தவணை முறையில் வங்கி கணக்கில் இருந்து சிறு சிறு தொகையாக எடுக்க படும்.

மாத சம்பளம் வாங்குபவருகளெல்லாம் இப்படியாக நடக்கும். 

பெரும் பணம் படைத்தவர்கள் மாதாந்திர தவணை செலுத்தி கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே சமயம் மாதாமாதம் சிறு தொகைகளாக ரொக்க பணமாக செலுத்துவார்கள். 

அதுவும் கடன் தவணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாக கடன் வாங்கி வியாபாரத்தில் அதனை முதலீடு செய்யும் பொழுது லாபம் என்பது உடனே வராது. அப்படியாக லாபம் வரும் பொழுது தான் மற்ற செலவுகளுக்கு பணம் செலுத்திவிட்டு கடனுக்கு பணம் செலுத்தி அசலை குறைக்க முடியும். 

ஒரு வியாபாரத்தின் தன்மையை ஆராய்ந்தாலே லாபம் எப்பொழுது வருமென கணிக்க முடியும்.

அப்படியாக அந்த காலத்திற்கு சிறு தொகை கடன் கணக்கிற்கு வந்தால் பிரச்சனை இல்லை. சரி எதோ பணம் வந்திருக்கிறது அதனால் அசலை குறைக்க பணம் செலுத்துகிறாரென எடுத்து கொள்ளலாம்.

ஆனால் தொடர்ந்து அப்படியாக வரும் பொழுது சந்தேகம் வர தான் செய்யும்.

ஏன் கடன் வாங்கினார் ? இப்படி சிறு லாபம் வருமென்கிற நிலையில் இருந்தால் கடன் வாங்காமலேயே வியாபாரத்தை நடத்தி இருக்கலாமே ?

இம்மாதிரியான நிலையில் மூன்று வாய்ப்புகள் தான் இருக்க முடியும் வணிக சந்தையில்.

1. உண்மையிலேயே உடனே லாபம் வருகிறது மனசாட்சியுடன் வாடிக்கையாளர் பணம் செலுத்துகிறார். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

2. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எடுக்கும் முயற்சி. இதற்கும் வாய்ப்பு குறைவு. சந்தையில் ஒரு வணிகர் நேரடியாக இதில் ஈடுபடுவது இல்லை. பெயர் கெட்டு விடும் என்பதால்.

3. போலியாக நஷ்ட கணக்கு காட்ட. இதற்கு வாய்ப்புகள் அதிகம். போலி செலவு கணக்கை காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி விடலாம். 

சரி கடைசி குறிப்பை மட்டும் எடுத்து கொண்டு சிலவற்றை பார்ப்போம்.

பல வருடங்களுக்கு முன்பு நான் காஞ்சிபுரம் வணிக சந்தையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தெரிந்த வணிக தணிக்கையாளரை சந்தித்தேன். 

அவர் ஒரு விசித்திரமான கடன் கணக்கை பற்றி சொன்னார்.

ஒரு நபர் கிணறு வெட்ட கடன் வாங்கி இருந்தார். அதனை வைத்து விவசாயம் செய்ய போவதாக கடன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

சில மாதங்கள் போன பிறகு கடன் தவணை கட்டவில்லை ஏனென்று கேட்க நேரில் போய் பார்த்தால் கூட்டமாக வந்த மாடுகள் மண்ணை கிளறி விட்டதால் கிணறு மூடிகொண்டது என சொன்னாராம்.

இந்த வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் பிரபல கோயில் ஒன்றில் தயாரிக்க படும் பிரசாதத்தில் அசைவ பொருட்கள் இருந்ததாக செய்திகள் வருகிறது.

அப்பொழுது குறிப்பிட்ட நாட்களில் தான் இந்த பிரச்சனை வருகிறது. அதனால் இதுவரையில் வாங்கிய கோடி கணக்கான சமையல் பொருட்களை குப்பையில் கொட்டி அழித்துவிடுவது என முடிவில் வருவார்கள்.

பிறகு என்ன ஆகும் கணக்கில் இத்தனை கோடி ரூபாய் சமையல் மூல பொருட்கள் வாங்க செலவாகி விட்டது என எழுதுவார்கள்.

சரி அப்படியானால் வியாபாரம் நடந்து லாபம் வந்திருக்குமே அந்த கணக்கு எங்கே என கேட்டால் ...

எங்கே வியாபாரம் நடந்தது, அசைவம் கலந்திருக்கிறது என குப்பை அதனை கொட்டி விட்டோமென சொல்வார்கள்.

இப்பொழுது உண்மையில் அந்த கோடி கணக்கான ரூபாய் வைத்து பொருட்கள் வாங்கினார்களாயென கண்டு பிடிக்க முடியாது.

சரி அந்த தொகை ஒரு கடைக்கு போய் இருக்கும், அங்கே வைத்து கண்டுபிடிக்கலாமென போனால் அந்த கடைகாரர் அந்த மூல பொருட்களை கடன் பெயரில் இன்னாரிடமிருந்து வாங்கினேன், அவருக்கு ரொக்க பணமாக கொடுத்துவிட்டேனென சொல்வார்.

அவர் சொன்ன படியே அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த தொகை எடுக்க பட்டு இருக்கும். இது போல ஆயிர கணக்கில் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பண பரிவர்த்தனை பாதையை தொடர்ந்து செல்ல முடியாது.

பல ஆயிரம் கருப்பு பணம் உருவாகி இருக்கும். 

இதற்கென எல்லா மத நிறுவனங்களும் இப்படி தான் என சொல்லவில்லை. 

அந்த நிறுவன சட்ட திட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒருவரை அந்த நிறுவனத்திற்குள் அமர்த்துவிடுவார் ஒரு செல்வந்தர்.

கருப்பு பணம் இப்படி அப்படியென பல நாடுகள் சுற்றி பல வணிக நிறுவனங்கள் வழியாக மீண்டும் அந்த செல்வந்தர் கணக்கிற்கு வெள்ளை பணமாக வந்து சேரும்.

கோயிலிருந்து கருப்பு பணம் உருவாகி விட்டது. அது மேற்கொண்டு எப்படி எந்த வழியில் போகும் ?

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails