Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - கடன்கள் - அடையாளங்கள் விற்பனைக்கு - அத்தியாயம் 4


பழங்காலத்தில் வணிகம் சார்ந்து சமூக நிலை அமைப்புகள் உருவான பின்பு அதனை ஏற்று கொள்ளாமல் இருந்த மக்களை ஆதிக்க நிலையில் இருந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய சமூக அமைப்பில் இருந்து ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தனர். 

தொழில் செய்யவோ வணிகம் செய்யவோ குடும்பம் நடத்த பொருள் உதவியோ அவர்களுக்கு வழங்க படவில்லை. 

அப்பொழுது சமூக அமைப்பை ஏற்று கொண்ட மக்கள் செய்ய விரும்பாத வேலைகளை செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள். மனித கழிவை அகற்றுவது, பிணம் எரிப்பது, சாக்கடை சுத்தம் செய்வது போன்றவை. அதுதான் மற்ற மக்கள் செய்ய விரும்பாத வேலையாக இருந்தது. (விரிவாக உப்புக்கு சப்பாணி அத்தியாயம் 2ல் வரும்)

அதிலிருந்து பெரிய வருமானம் என்று வராது. ஊர் மக்கள் கொடுக்கும் பணம் சாப்பாட்டை கொண்டு தான் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.

இயல்பாகவே இந்த போன்ற நிலையில் இருப்போர்கள் மீது வரி என எதையும் விதிக்க முடியாது. 

இருந்தும் அவர்களிடம் இருந்து பணம் பார்க்க நினைத்து, அவர்களை அடிமைகளாக மாற்ற நினைத்து வைத்தது தான் பெண்கள் மீதான மார்பு வரி.

கால போக்கில் சமூக அமைப்பை ஏற்று கொள்ளாத மக்களை கீழ்நிலை சாதி என முத்திரை கொடுத்து ஆதிக்க மக்களின் அடிமைகளாக மாற்றினார்கள்.

மார்பு வரி பற்றி பேசும் பொழுது எல்லாம் கேரளா நங்கேலி பற்றி தான் அதிகம் குறிப்பிடுவார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் பாண்டவர்கள் பகடை விளையாட்டில் தோற்று அடிமைகளாக ஆகி இருப்பார்கள். அப்பொழுது திரௌபதியையும் பந்தயமாக வைத்து தோற்று இருப்பார்கள். திரௌபதியை சபைக்கு இழுந்து வந்த உடன் மார் உடல் மறைத்து புடவை கட்டி இருப்பார். மார்பை மறைத்துகொள்ள பெண் அடிமைகள் வரி செலுத்த வேண்டுமென துரியோதனன் சொல்ல, வரி செலுத்த பணம் இல்லாத படியால் துச்சாதனன் இடம் சொல்லி துகிலுரிக்க சொல்வான். 

இப்படியாக ஒரு நாட்டுபுற கதை ஒன்று இருக்கிறது. ஆக சரித்திரத்தில் நாட்டை வளர்க்க மட்டும் இல்லை அடிமைகளை உருவாக்கவும் வரி பயன் பட்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

போன அத்தியாயத்தில் வாடகைக்கு வங்கி கணக்கு பயன்படுத்த படுவதை பற்றி பார்த்தோம். அதுவே ஆரம்ப புள்ளி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலையில்.

சில மாதங்களுக்கு முன்பு மிசோரம் மாநிலத்தில் வாகன கடன்களில் போலியான வாடிக்கையாளர்களை கொண்டு கடன் வழங்கியது பெரும் பிரச்சனையாகி பரபரப்பான செய்தியானது. ஆனால் பொது மக்கள் என்னவோ அதனை சிறு பிரச்சனையென கடந்திருப்பார்கள். ஆனால் கடல்களில் மிதக்கும் பெரிய பனிப்பாறையின் நுனி தான் அவையென பலருக்கு தெரிவதில்லை.

மூன்றாம் அத்தியாயத்தில் சொன்னது போலவே தான் கிடைக்கும் தரகும் பணத்திற்கு ஆசைபட்டு அடையாளங்களை விற்கிறார்கள்.

இப்படியாக போலி அடையாளத்தை வைத்து எந்த கடன் வாங்க முடியும் என கேள்வி வரும்.

முக்கியமாக கடன் மற்றும் கடன் அட்டைகள்.

நமது அரசும் அரசு இயந்திரமும் மத்திய வங்கியோடு இணைந்து இது போன்ற குற்றங்களை தடுக்க பல முயற்சிகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கட்டுக்கடங்காமல் தான் இருக்கிறது.

ஏனென்றால் ?

உலகமயமாக்கலுக்கு முன்பு வரையில் லஞ்சம், கருப்பு பணம் என்பது எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை சார்ந்தது என்ற நிலை இருந்தது. பொது மக்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

இன்றோ இந்திய நாட்டின் வணிக கதவுகள் திறந்துவிட்ட படியால் வணிக சந்தை பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அந்த மிக சந்தையில் இருந்து பொது மக்களும் பயன் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தகுதிகளை வளர்ந்து கொண்டு சட்டரீதியாக வருமானம் பார்க்கும் மக்கள் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை போலவே தகுதிகளை வளர்த்துகொள்ளாமல் வருமான வாய்ப்புகளை இழந்த நிலையில் இருக்கும் மக்களும் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களெல்லாம் தங்களது சட்ட ரீதியிலான அடையாளங்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடையாளங்களை அடகு வைப்பது, சிறிய தொகைக்கு கொடுப்பது என செய்து கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று உணராதளவிற்கு தான் அவர்களது விழிப்புணர்வு இருக்கிறது.

சட்டரீதியான அடையாளங்களை வைத்து வரி ஏய்ப்பு நடக்குமா ? இதில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதில் எப்படி அடையாளங்கள் பயன் படுத்த படுகிறது ?

உதாரணமாக சில கடன்களுக்கு செயல் முறை அதிகமாக கவனிக்க படாமல் இருக்கும். அந்த கவன குறைவால் உருவாகும் ஓட்டைகளை தான் பொருளாதார இடை தரகர்கள் பயன் படுத்துவார்கள்.

அதென்ன ஓட்டைகள் ?

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

No comments:

Related Posts with Thumbnails