Pages

Sunday, September 29, 2024

செபி - பஸ்பர நிதி - ஆட்டம் ஆரம்பம்


செபி நேற்று ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்திய பஸ்பர நிதி நிறுவனங்களை அந்த அறிக்கை ஆட்டி வைக்க போகிறதா இல்லையா என போக போக தான் தெரியும்.

அப்படி என்ன அந்த அறிக்கையில் சொல்லிருக்கிறது ?

பஸ்பர நிதியில் முதலீடு செய்வோரை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

நேரடி முதலீட்டாளர்கள் - இவர்களுக்கு பஸ்பர நிதி பற்றி எல்லாம் தெரியும். அ முதல் ஃ வரையில் அதன் செய்ல்பாடுகளை தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் நேரடியாக பஸ்பர நிதி நிறுவனத்திற்கோ இணையதளத்திற்கோ போய் முதலீடு செய்வார்கள் அல்லது பஸ்பர நிதி நிறுவன பிரதிநிதிகள் மூலம் முதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இந்த வகை முதலீடு திட்டங்களில் எந்தவித தரகு செலவுகளும் இருக்காது. 

தரகு வழி முதலீட்டாளர்கள் - இவர்கள் ஒரு வங்கியின் மூலமாகவோ அல்லது முதலீட்டு சேவை நிறுவனம் மூலமாகவோ பஸ்பர நிதி திட்டத்தில்  மூதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இதுவரையில் முதலீடு நிறுவனங்கள் வெளியிடும் அரை ஆண்டு பஸ்பர நிதி திட்ட அறிக்கையில் தரகு வழி முதலீடுகளுக்கு மட்டுமே ஆன லாப  கணக்குகள் கொண்டு இருக்கும்.

இனிமேல் அதில் நேரடி முதலீடுகளுக்குமான லாப கணக்குகள் கொண்டு இருக்க வேண்டுமென செபி சொல்லி இருக்கிறது.

ஏன் இப்படி ?

முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் வங்கி, முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் வரும் பஸ்பர நிதி முதலீடுகளே அதிகம்.

மேல் சொன்ன பட்டியலும் ரொம்ப நீளம். சென்னையில் எந்த ஒரு குறிபிட்ட பகுதியை எடுத்து கொண்டாலும் வங்கி மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகள் நூறுக்கு குறையாமல் இருப்பார்கள். ஒவ்வொரு பிரதிநிதியிடமும் பஸ்பர நிதிகளின் மாதாந்திர மற்றும் அரை ஆண்டு திட்ட அறிக்கை இருக்கும்.

இப்படி சென்னையின் ஒரு பகுதியின் எண்ணிக்கை இதுவென்றால் மொத்த இந்தியாவிலும் எண்ணிக்கை எப்படி இருக்குமென யோசித்து கொள்ளுங்கள்.

ஆகவே தரகு வழி முதலீட்டாளர்களுக்கு விஷயத்தை கொண்டு சேர்க்க தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏனென்றால் அந்த வழியில் தான் லாபம் அதிகம் கிடைக்கிறது பஸ்பர நிதி நிறுவனங்களுக்கு.

எல்லாம் சரி அதென்ன பஸ்பர நிதி அறிக்கை ?

இதனை ஆங்கிலத்தில் Fact Sheet என்றும் தமிழில் தகவல் அறிக்கை என்றும் சொல்லலாம். அதில் ஒரு நிறுவனத்திலிருக்கும் பற்பல திட்டங்கள் பற்றிய விவரங்கள், எந்தெந்த நிறுவங்களில் முதலீடு செய்ய பட்டு இருக்கிறது, நிதி திட்ட மேலாளர் (Fund Manager) பற்றிய விவரங்கள், திட்டத்தின் லாப கணக்கு ஆகியவை அடங்கி இருக்கும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கவர பிரதிநிதிகளுக்கு வசதியாக இருக்கும்.

சரி நேரடி திட்டங்களுக்கு ?

நேரடி திட்டங்களில் முதலீடு செய்வோர்களுக்கு சந்தை பற்றியும் லாபங்கள் பற்றியும் துல்லியமாக கணிக்க முடிந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே திட்ட அறிக்கையை எல்லாம் தகவலுக்கு தான் வைத்திருப்பார்கள். அதனை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள்.

தரகு நிறுவனங்கள் தங்களுக்கு எது அதிகம் தரகு பணம் கொடுக்குமோ அந்த திட்டங்களை மட்டும் தான் பரிந்துரை செய்வார்கள்.

பஸ்பர நிதி தகவல் அறிக்கை உடன் ஒரு பிரதிநிதியை பார்த்தால் அவரிடம் பேசி கொடுத்து பார்த்தால் தெரியும் சில திட்டங்களை பற்றி மட்டுமே அதிக படுத்தி உயர்வாக சொல்வார்கள். அவை போல வேற எந்த திட்டமுமில்லையென சொல்வார்.

காரணமென்னவென்றால் அவரது நிறுவனத்திற்கு அந்த திட்டமோ அதிக தரகு பணம் தருபவையாக இருக்கும் அதனால் அதனை விற்றால் தான் அவருக்கு விற்பனை புள்ளிகள் (Sale Points) கிடைக்கும் சொல்ல பட்டு இருக்கும்.

சரி இரண்டு வித திட்டங்களின் லாப கணக்கும் ஒன்றாக வெளியிட்டால் என்ன மாதிரியான பிரச்சனை வரும் ?

பொதுவாக வியாபாரத்தில் லாபம் எல்லாம் எல்லாவித செலவுகளுக்கும் கட்டணம் செலுத்திய பின்னர் மிச்சம் வருவது தான்.

செலவுகள் இல்லையென்றால் லாபம் அதிகமாக இருக்குமென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதனால் நேரடி திட்டத்தின் லாபங்களை பல ஆண்டு காலம் முதலீட்டு நிறுவனம் மூலம் முதலீடு செய்பவர் பார்த்தால் அடடேய் அதுல இவ்வளவு கிடைக்குதா அப்ப இவன் மூலமா என்னதுக்கு பண்ணிகிட்டு என முடிவெடுத்து நேரடியாக முதலீடு செய்ய போய் விடுவார்.

இதே போக்கு அதிகமாகி மக்கள் எல்லோரும் நேரடியாக முதலீடு செய்ய போய் விட்டால் முதலீடு நிறுவனங்களுக்கு லாபம் குறையும்.

அப்படி குறைந்தால் அவர்களது லாபம் குறையும். செலவு கணக்கு அதிகமாகும்.

இதன் மூலம் லாபம் கிடைக்க கூடியது பஸ்பர நிதி நிறுவனங்கள் தான்.

அவர்களுக்கு செலவுகள் குறைந்து லாபம் அதிகமாகும்.

செய்தி உரலி -   https://www.business-standard.com/markets/news/sebi-plans-half-yearly-disclosures-for-direct-plan-mutual-fund-schemes-124092701140_1.html

No comments:

Related Posts with Thumbnails