Pages

Sunday, September 29, 2024

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 6 - மதிப்பு கடத்தல்

 
போன அத்தியாயத்தில் ஒரு செல்வந்தர் சட்ட ரீதியாக தனக்கு வேண்டிய வேலைகளை செய்ய நிறுவனத்திற்குளேயே ஒரு கருப்பு ஆட்டை அமர்த்துவார் என சொல்லிருந்தேன்.

அதற்கு முன்....

கடன்கள் இரண்டு வகை படும் ஒன்று வங்கி மூலமாகவோ அல்லது நிதி நிறுவனம் மூலமாகவோ வாங்குவது. அப்படி நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் அதனை வைத்து வருமான வரியை குறைத்து கொள்வார்கள். ஏனென்றால் ஒரு பெரும் நிறுவனம் என்பது பலருக்கு வாழ்வியல் ஆதாரத்தை தரும் ஒன்று.  இந்திய அரசியல் சட்டம் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக இருக்க இம்மாதிரியான சலுகைகளை தந்திருக்கிறது பெரும் நிறுவனங்களுக்கு. 

இது சட்ட ரீதியிலான கடன்.

அதே நிறுவனமோ அல்லது நிறுவன இயந்திரத்தை இயக்கும் மனிதர் எடுக்கும் தவறான முடிவுகளால் வங்கிகளில் இருந்து கடன் பெரும் தகுதியை இழந்திருக்கும்.

கடன் பெற்றால் தான் நிறுவனம் உயிரோடு இருக்கும் என்கிற நிலை வந்தால், அவர்கள் நாடுவது பெரும் நிதியாளர்களை தான். அதாவது பைனான்சியர்ஸ்.

சினிமா என்பது எல்லோருக்கும் தெரிந்த நுகர்வு பண்டம் என்பதால் பைனான்சியர் என்றால் சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தையாகவே பொதி புத்தியில் நிலைத்துவிட்டது.

ஆனால் சினிமா பைனான்சியர்களை விட அதிகம் லாபம் நடந்துவது இந்த நிறுவன பைனான்சியர்கள் தான்.

அது எப்படி சொல்லுற ?

திரைத்துறையில் யாரும் தங்களது பெயரில் கடன் வாங்குவது இல்லை. அவர்கள் எடுக்கும் படத்தில் பெயரில் தான் கடன் வாங்குவார்கள். அந்த படம் வெளிவந்து லாபம் அடைந்தால் தான் உண்டு இல்லையென்றால் இல்லை. 

படத்தின் மதிப்பு என்பது அதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகியை வைத்தே முடிவு செய் படுவதால், உச்ச நடிகர்கள் இருந்தால் தான் படத்திற்கு மதிப்பு இல்லையென்றால் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பு கூட்டலை படத்தை சார்ந்தோர் தான் செய்ய வேண்டும்.

உதாரணமாக இயக்குநர் பாலா சேது படம் வெளியீடுக்கு கஷ்ட பட்டதையும் பரதேசி பட வெளியீட்டுக்கு கஷ்ட பட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். 

இப்படியான நிலை இருப்பதாலேயே பிரபல நடிகர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது.

ஆனால் நிறுவனங்களில் அப்படி இல்லை. நிதி அறிக்கை, லாப கணக்கு, வணிக ஒப்பந்தங்கள் தான் பேசும். அதே போல் நிறுவன குடுமி பைனான்சியர் கையில் கடன் கொடுக்கும் பொழுதே வந்துவிடும்.

இந்த பைனான்சியர்கள் பொறுத்தவரை தனிநபர் நிறுவனம், கூட்டு ஒப்பந்த நிறுவனம் அல்லது சிறிய நிறுவனம் என்றால் பிரச்சனை இல்லை. ( Sole Proprietorship / Partnership Firm / SME )

இதே பெரிய நிறுவனமாக இருக்கும் பொழுது அதில் தங்களது ஆளுமை இருக்க வேண்டுமென தங்களது ஆளை நிர்வாக குழு உறுப்பினராக சேர்ந்துவிடுவார். ( Board Of Directors ).

கடன் தொகை மிக பெரியது என்றால் என்ன செய்வார்கள் ?

இந்த நிதியாளர்கள் "சிறப்பான பழகுதல்" முறையால் வங்கியில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆட்களை நட்பு வட்டத்தில் வைத்திருப்பார்கள்.  அவர்கள் வைத்து கடன் பெறவே முடியாத அளவுக்கு நிதி அறிக்கைகளை கொண்ட நிறுவனத்திற்கு கடன் பெற்று தருவார்கள். 

அது எப்படி முடியும் ?

ஒரு நிறுவனத்தின் கடன் தகுதி என்பது அந்த நிறுவனத்தின் கையெழுத்து போகும் அதிகாரத்தில் இருப்போரின் கடன் தகுதியை பொறுத்தே அமையும்.

அப்பொழுது கடன் வாங்க வேண்டுமென்பதற்காக மற்றவர்களை நீக்கிவிட்டு புதிதாய் வங்கியில் இருந்து நல்ல வட்டியில் அதிகமான தொகை கடனாக பெற கூடிய நல்ல நிதி நிலை கொண்ட ஒருவரை நிறுவன இயக்குநராக சேர்ப்பார்கள். 

எல்லாம் சரி அவர்களை வைத்து என்ன மாதிரியான காரியங்களை செய்வார்கள் ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வரி ஏய்ப்பில் முக்கிய பங்கு என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்பு பணம் என்பது வெளிநாட்டிற்கு போய் பல கைகள் மாறி திரும்ப வெள்ளை பணமாக கருப்பு பணத்தை உருவாக்கியவர் கைக்கு வருவது தான்.

எல்லாம் சரி அது எப்படி கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் ?

தங்கம், போதை பொருள் என திரைப்படங்களில் காட்டுவார்கள். அதெல்லாம் இலெமூரியா கால கதைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

உலகம் முழுக்க வணிக வாய்ப்புகள் அதிகமான பின்னர் கண்டுபிடித்தால் மாட்டிகொள்வோம் என்பது போன்ற விஷயங்களில் வரி ஏய்ப்பாளர்கள் நுழைவது இல்லை.

இல்லையென்றால் வேற வழியில் கருப்பு பணத்தை அனுப்புவார்கள் ?

பழங்கால வரி ஏய்ப்பு முறை தான் அது.

இந்தியா நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு காய்கறி பழங்கள் எல்லாம் ஏற்றுமதி ஆகுகிறது.

இதில் அரசு இயந்திரம் சோதனை என வந்தால் என்ன கண்டுபிடிப்பார்கள். 

ஒன்றும் இல்லை. காய்கறிகளில் பழங்களுக்கு நடுவில் எதாவது மறைத்து வைத்து அனுப்ப பட்டு இருக்கிறதா அவை அரசால் ஏற்றுகொள்ள பட்டவையா என்று தான் சோதனை செய்வார்கள். மற்றபடி காய் பழங்கள் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பெரிய விஷயம் இல்லை தான்.

உதாரணமாக -

அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம் இங்கு இருந்து 20 டன் வெங்காயம் வாங்கி இருக்கிறது. அதனை இங்கு இருந்து அனுப்புவார்கள். 

அமெரிக்க நிறுவனத்தில் இந்த பரிவர்த்தனையை பார்த்துகொள்ள ஒருவர் இருப்பார், அவர் நமது நிதியாளர்களால் அமர்த்தபட்ட நபராக இருப்பார். அவரே இந்தியாவில் இருந்து தான் வெங்காயம் வாங்க வேண்டும் என்பதை சொன்னவராக இருப்பார்.

இதில் எப்படி கருப்பு பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது ?

இங்கு 20டன் வெங்காயத்திற்கு பதில் 30டன் வெங்காயமாக அனுப்ப பட்டு இருக்கும். அதாவது 20டன் நிறுவன கணக்கில் வந்துவிடும். மிச்சம் இருக்கும் 10 டன் வெங்காயம் கருப்பு பணத்தின் இன்னொரு உருவம். 

பின்னர் இந்த பத்து டன் வெங்காயம் மட்டும் தனியாக எடுக்க பட்டு மக்களிடத்தில் விற்க படும். இந்திய கருப்பு பணம் அமெரிக்க மக்களின் மூலம் வெள்ளை பணமாக மாற்ற பட்டு இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள - Trade Based Terrorist Financing And Money Laundering - சர்வதேச அறிக்கைகள்

பின்னர் என்ன நடக்கும் ?

இது ஒன்று மட்டும் தான் வழியா வேறு வழி இல்லையா ?

தொடரும்....

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - அத்தியாயம் 5 - செலவு கணக்கு


போன அத்தியாயத்தில் அடையாள திருட்டை பற்றி சொல்லிருந்தேன், பின்னர் வரி ஏய்ப்புக்கு முக்கிய காரணியாக கடன்களும் அது உருவாக்கி தரும் மறைமுக வழிகளும் இருக்கிறதென சொல்லி முடித்திருந்தேன்.

பெரும் நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் பெரும்பாலும் கடன்கள் வாங்குவதேனென பார்த்தோமானால் போலி கணக்கு எழுதுவதற்காக இருக்கும். பல பெருநகர வணிக சந்தைகளை கவனித்து பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு தோன்றுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் பிறகு ஏன் கடன் வாங்குகிறார்கள். இவர்கள் நினைத்தால் ஒரே காசோலை தந்து மொத்த விற்பனை செய்து விடலாமே. 

இதற்கு கடன் வசூலிப்பது எப்படி நடைபெறுகிறதென பார்க்க வேண்டும்.

ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கும் பொழுதும் கடன் தொகை நேரடியாக கடன் பெறுபவரின் வங்கி கணக்கிற்கு போய் விடும்.

பின்னர் மாதாந்திர தவணை முறையில் வங்கி கணக்கில் இருந்து சிறு சிறு தொகையாக எடுக்க படும்.

மாத சம்பளம் வாங்குபவருகளெல்லாம் இப்படியாக நடக்கும். 

பெரும் பணம் படைத்தவர்கள் மாதாந்திர தவணை செலுத்தி கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே சமயம் மாதாமாதம் சிறு தொகைகளாக ரொக்க பணமாக செலுத்துவார்கள். 

அதுவும் கடன் தவணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாக கடன் வாங்கி வியாபாரத்தில் அதனை முதலீடு செய்யும் பொழுது லாபம் என்பது உடனே வராது. அப்படியாக லாபம் வரும் பொழுது தான் மற்ற செலவுகளுக்கு பணம் செலுத்திவிட்டு கடனுக்கு பணம் செலுத்தி அசலை குறைக்க முடியும். 

ஒரு வியாபாரத்தின் தன்மையை ஆராய்ந்தாலே லாபம் எப்பொழுது வருமென கணிக்க முடியும்.

அப்படியாக அந்த காலத்திற்கு சிறு தொகை கடன் கணக்கிற்கு வந்தால் பிரச்சனை இல்லை. சரி எதோ பணம் வந்திருக்கிறது அதனால் அசலை குறைக்க பணம் செலுத்துகிறாரென எடுத்து கொள்ளலாம்.

ஆனால் தொடர்ந்து அப்படியாக வரும் பொழுது சந்தேகம் வர தான் செய்யும்.

ஏன் கடன் வாங்கினார் ? இப்படி சிறு லாபம் வருமென்கிற நிலையில் இருந்தால் கடன் வாங்காமலேயே வியாபாரத்தை நடத்தி இருக்கலாமே ?

இம்மாதிரியான நிலையில் மூன்று வாய்ப்புகள் தான் இருக்க முடியும் வணிக சந்தையில்.

1. உண்மையிலேயே உடனே லாபம் வருகிறது மனசாட்சியுடன் வாடிக்கையாளர் பணம் செலுத்துகிறார். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

2. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எடுக்கும் முயற்சி. இதற்கும் வாய்ப்பு குறைவு. சந்தையில் ஒரு வணிகர் நேரடியாக இதில் ஈடுபடுவது இல்லை. பெயர் கெட்டு விடும் என்பதால்.

3. போலியாக நஷ்ட கணக்கு காட்ட. இதற்கு வாய்ப்புகள் அதிகம். போலி செலவு கணக்கை காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி விடலாம். 

சரி கடைசி குறிப்பை மட்டும் எடுத்து கொண்டு சிலவற்றை பார்ப்போம்.

பல வருடங்களுக்கு முன்பு நான் காஞ்சிபுரம் வணிக சந்தையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தெரிந்த வணிக தணிக்கையாளரை சந்தித்தேன். 

அவர் ஒரு விசித்திரமான கடன் கணக்கை பற்றி சொன்னார்.

ஒரு நபர் கிணறு வெட்ட கடன் வாங்கி இருந்தார். அதனை வைத்து விவசாயம் செய்ய போவதாக கடன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

சில மாதங்கள் போன பிறகு கடன் தவணை கட்டவில்லை ஏனென்று கேட்க நேரில் போய் பார்த்தால் கூட்டமாக வந்த மாடுகள் மண்ணை கிளறி விட்டதால் கிணறு மூடிகொண்டது என சொன்னாராம்.

இந்த வழக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் பிரபல கோயில் ஒன்றில் தயாரிக்க படும் பிரசாதத்தில் அசைவ பொருட்கள் இருந்ததாக செய்திகள் வருகிறது.

அப்பொழுது குறிப்பிட்ட நாட்களில் தான் இந்த பிரச்சனை வருகிறது. அதனால் இதுவரையில் வாங்கிய கோடி கணக்கான சமையல் பொருட்களை குப்பையில் கொட்டி அழித்துவிடுவது என முடிவில் வருவார்கள்.

பிறகு என்ன ஆகும் கணக்கில் இத்தனை கோடி ரூபாய் சமையல் மூல பொருட்கள் வாங்க செலவாகி விட்டது என எழுதுவார்கள்.

சரி அப்படியானால் வியாபாரம் நடந்து லாபம் வந்திருக்குமே அந்த கணக்கு எங்கே என கேட்டால் ...

எங்கே வியாபாரம் நடந்தது, அசைவம் கலந்திருக்கிறது என குப்பை அதனை கொட்டி விட்டோமென சொல்வார்கள்.

இப்பொழுது உண்மையில் அந்த கோடி கணக்கான ரூபாய் வைத்து பொருட்கள் வாங்கினார்களாயென கண்டு பிடிக்க முடியாது.

சரி அந்த தொகை ஒரு கடைக்கு போய் இருக்கும், அங்கே வைத்து கண்டுபிடிக்கலாமென போனால் அந்த கடைகாரர் அந்த மூல பொருட்களை கடன் பெயரில் இன்னாரிடமிருந்து வாங்கினேன், அவருக்கு ரொக்க பணமாக கொடுத்துவிட்டேனென சொல்வார்.

அவர் சொன்ன படியே அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த தொகை எடுக்க பட்டு இருக்கும். இது போல ஆயிர கணக்கில் இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பண பரிவர்த்தனை பாதையை தொடர்ந்து செல்ல முடியாது.

பல ஆயிரம் கருப்பு பணம் உருவாகி இருக்கும். 

இதற்கென எல்லா மத நிறுவனங்களும் இப்படி தான் என சொல்லவில்லை. 

அந்த நிறுவன சட்ட திட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒருவரை அந்த நிறுவனத்திற்குள் அமர்த்துவிடுவார் ஒரு செல்வந்தர்.

கருப்பு பணம் இப்படி அப்படியென பல நாடுகள் சுற்றி பல வணிக நிறுவனங்கள் வழியாக மீண்டும் அந்த செல்வந்தர் கணக்கிற்கு வெள்ளை பணமாக வந்து சேரும்.

கோயிலிருந்து கருப்பு பணம் உருவாகி விட்டது. அது மேற்கொண்டு எப்படி எந்த வழியில் போகும் ?

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - கடன்கள் - அடையாளங்கள் விற்பனைக்கு - அத்தியாயம் 4


பழங்காலத்தில் வணிகம் சார்ந்து சமூக நிலை அமைப்புகள் உருவான பின்பு அதனை ஏற்று கொள்ளாமல் இருந்த மக்களை ஆதிக்க நிலையில் இருந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய சமூக அமைப்பில் இருந்து ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தனர். 

தொழில் செய்யவோ வணிகம் செய்யவோ குடும்பம் நடத்த பொருள் உதவியோ அவர்களுக்கு வழங்க படவில்லை. 

அப்பொழுது சமூக அமைப்பை ஏற்று கொண்ட மக்கள் செய்ய விரும்பாத வேலைகளை செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள். மனித கழிவை அகற்றுவது, பிணம் எரிப்பது, சாக்கடை சுத்தம் செய்வது போன்றவை. அதுதான் மற்ற மக்கள் செய்ய விரும்பாத வேலையாக இருந்தது. (விரிவாக உப்புக்கு சப்பாணி அத்தியாயம் 2ல் வரும்)

அதிலிருந்து பெரிய வருமானம் என்று வராது. ஊர் மக்கள் கொடுக்கும் பணம் சாப்பாட்டை கொண்டு தான் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.

இயல்பாகவே இந்த போன்ற நிலையில் இருப்போர்கள் மீது வரி என எதையும் விதிக்க முடியாது. 

இருந்தும் அவர்களிடம் இருந்து பணம் பார்க்க நினைத்து, அவர்களை அடிமைகளாக மாற்ற நினைத்து வைத்தது தான் பெண்கள் மீதான மார்பு வரி.

கால போக்கில் சமூக அமைப்பை ஏற்று கொள்ளாத மக்களை கீழ்நிலை சாதி என முத்திரை கொடுத்து ஆதிக்க மக்களின் அடிமைகளாக மாற்றினார்கள்.

மார்பு வரி பற்றி பேசும் பொழுது எல்லாம் கேரளா நங்கேலி பற்றி தான் அதிகம் குறிப்பிடுவார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் பாண்டவர்கள் பகடை விளையாட்டில் தோற்று அடிமைகளாக ஆகி இருப்பார்கள். அப்பொழுது திரௌபதியையும் பந்தயமாக வைத்து தோற்று இருப்பார்கள். திரௌபதியை சபைக்கு இழுந்து வந்த உடன் மார் உடல் மறைத்து புடவை கட்டி இருப்பார். மார்பை மறைத்துகொள்ள பெண் அடிமைகள் வரி செலுத்த வேண்டுமென துரியோதனன் சொல்ல, வரி செலுத்த பணம் இல்லாத படியால் துச்சாதனன் இடம் சொல்லி துகிலுரிக்க சொல்வான். 

இப்படியாக ஒரு நாட்டுபுற கதை ஒன்று இருக்கிறது. ஆக சரித்திரத்தில் நாட்டை வளர்க்க மட்டும் இல்லை அடிமைகளை உருவாக்கவும் வரி பயன் பட்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

போன அத்தியாயத்தில் வாடகைக்கு வங்கி கணக்கு பயன்படுத்த படுவதை பற்றி பார்த்தோம். அதுவே ஆரம்ப புள்ளி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலையில்.

சில மாதங்களுக்கு முன்பு மிசோரம் மாநிலத்தில் வாகன கடன்களில் போலியான வாடிக்கையாளர்களை கொண்டு கடன் வழங்கியது பெரும் பிரச்சனையாகி பரபரப்பான செய்தியானது. ஆனால் பொது மக்கள் என்னவோ அதனை சிறு பிரச்சனையென கடந்திருப்பார்கள். ஆனால் கடல்களில் மிதக்கும் பெரிய பனிப்பாறையின் நுனி தான் அவையென பலருக்கு தெரிவதில்லை.

மூன்றாம் அத்தியாயத்தில் சொன்னது போலவே தான் கிடைக்கும் தரகும் பணத்திற்கு ஆசைபட்டு அடையாளங்களை விற்கிறார்கள்.

இப்படியாக போலி அடையாளத்தை வைத்து எந்த கடன் வாங்க முடியும் என கேள்வி வரும்.

முக்கியமாக கடன் மற்றும் கடன் அட்டைகள்.

நமது அரசும் அரசு இயந்திரமும் மத்திய வங்கியோடு இணைந்து இது போன்ற குற்றங்களை தடுக்க பல முயற்சிகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கட்டுக்கடங்காமல் தான் இருக்கிறது.

ஏனென்றால் ?

உலகமயமாக்கலுக்கு முன்பு வரையில் லஞ்சம், கருப்பு பணம் என்பது எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களை சார்ந்தது என்ற நிலை இருந்தது. பொது மக்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

இன்றோ இந்திய நாட்டின் வணிக கதவுகள் திறந்துவிட்ட படியால் வணிக சந்தை பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அந்த மிக சந்தையில் இருந்து பொது மக்களும் பயன் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தகுதிகளை வளர்ந்து கொண்டு சட்டரீதியாக வருமானம் பார்க்கும் மக்கள் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை போலவே தகுதிகளை வளர்த்துகொள்ளாமல் வருமான வாய்ப்புகளை இழந்த நிலையில் இருக்கும் மக்களும் அதிகமாகி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களெல்லாம் தங்களது சட்ட ரீதியிலான அடையாளங்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடையாளங்களை அடகு வைப்பது, சிறிய தொகைக்கு கொடுப்பது என செய்து கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று உணராதளவிற்கு தான் அவர்களது விழிப்புணர்வு இருக்கிறது.

சட்டரீதியான அடையாளங்களை வைத்து வரி ஏய்ப்பு நடக்குமா ? இதில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதில் எப்படி அடையாளங்கள் பயன் படுத்த படுகிறது ?

உதாரணமாக சில கடன்களுக்கு செயல் முறை அதிகமாக கவனிக்க படாமல் இருக்கும். அந்த கவன குறைவால் உருவாகும் ஓட்டைகளை தான் பொருளாதார இடை தரகர்கள் பயன் படுத்துவார்கள்.

அதென்ன ஓட்டைகள் ?

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - வாடகைக்கு வங்கி கணக்குகள் - அத்தியாயம் 3


போன அத்தியாயத்தில் பொருளாதார குருவிகளிடம் கருப்பு பணம் வருகிற வரைக்கும் பார்த்தோம். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முதல் படியாக இந்த குருவிகள் பயன்படுத்துவது பணத்திற்கு ஆசைபடும் ஏழ்மை நிலையில் இருக்கும் வங்கி கணக்குகள். 

இப்பொழுது தினசரி கஷ்ட பட்டு வேலை பார்த்து மாதத்திற்கு 10 ஆயிரம் சம்பாரிக்கும் ஒருவர் தான் இந்த குருவிகளின் குறி. இவர்களுக்கு வெளி உலகம் தெரியாது மேலும் இவர்களது உலகம் ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும். அது போலவே இவர்களது விழிப்புணர்வும் ஒரு எல்லைக்குள்ளாகவே இருக்கும். அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வார்கள் இந்த குருவிகள்.

பொதுவாக வாடகை என்று எல்லாம் வெளிப்படையாக தூண்டில் போட மாட்டார்கள் குருவிகள். தங்களுக்கு வியாபாரத்தின் மூலம் ஒரு தொகை வர வேண்டியது இருக்கிறது ஆனால் வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாமல் இருக்கிறேன், கொஞ்சம் பணம் அனுப்பி பெற வேண்டி இருக்கிறது யாரை கேட்டும் உதவ யாரும் வரவில்லை, அந்த பண பரிவர்த்தனைகள் உன் வங்கி கணக்கில் செய்து கொள்ளட்டுமா, சும்மா எல்லாம் இல்லை அதற்கு தரகு பணமாய் 5000 ரூபாய் தருகிறேன் என்பதாய் இருக்கும் அந்த தூண்டில்.

மாதம் முழுவதும் கஷ்ட பட்டு பார்க்கும் வருவாய் சும்மா இருக்கும் வங்கி கணக்கின் மூலம் பாதி வருமானம் கிடைத்தால் லாபம் தானே என அந்த ஏழ்மை நண்பர் யோசிப்பார். கொஞ்சம் கடன் பிரச்சனையை சமாளித்துவிடலாமென யோசிப்பார்.

பெரியதாக பொருளாதார குற்றங்கள் பற்றி தெரியாததால் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் என் வங்கி கணக்கு என் உரிமை என முடிவெடுப்பார்.

பிறவு என்ன நடக்கும் ?

பொருளாதார குருவிகள் இதே போன்ற பல அப்பாவிகளை பிடிப்பார், அவர்களது வங்கி கணக்குகள் கைவசம் வந்த உடன் வேலையை காட்ட ஆரம்பிப்பார்.

இந்தியாவில் தினசரி வங்கி கணக்கில் ஒரு லட்சம் மேல் பண பரிவர்த்தனை நடந்தால் இந்திய மத்திய வங்கிக்கு பரிவர்த்தனையின் விவரங்கள் வங்கியால் பகிர்ந்துகொள்ள படும். 

வங்கிக்கு தெரியாத நபர் என்றால் நேரில் பார்த்தோ அலைபேசியில் அழைத்தோ விவரங்கள் கேட்டு குறித்து வைத்துகொண்டு அவற்றை மத்திய வங்கி உடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். (இதற்கான அறிக்கை மத்திய வங்கியின் இணையதளத்தில் இருக்கிறது - https://www.rbi.org.in/commonperson/English/Scripts/Notification.aspx?Id=117 )

இதனை தெரிந்துகொண்ட குருவிகள் அந்த அப்பாவிகளின் வங்கி கணக்கில் தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி கொண்டு இருப்பார்கள்.

முக்கியமாக அப்பாவிகளின் வங்கி கணக்குகள் ஒரே வங்கியை அல்லது ஒரே வங்கி கிளையை சேர்ந்த ஒன்றாக இல்லாத மாதிரி பார்த்து கொள்வார்கள்.

ஏனென்றால் ஒரே ஆள் தொடர்ச்சியாக பல்வேறு கணக்குகளில் பணத்தை செலுத்திகொண்டு இருந்தால் ஏன் என்ன என வங்கி அதிகாரிகள் கேட்க வேண்டும்.

அதனால் மாற்றி மாற்றி கருப்பு பணத்தை மொத்தமாய் வங்கி கணக்கில் கொண்டு வந்திருப்பார்கள்.

பிறகு இந்த பணத்தை எல்லாம் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கோ அல்லது மத பிரச்சார நிறுவனத்திற்கோ அனுப்பி வைக்க படும்.

இந்த பரிமாற்றத்திற்கு மூன்று வாரங்களில் இருந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் குருவிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள்.

சொன்ன மாதிரியே அப்பாவிகளிடம் வங்கியில் இருந்து யாராவது கூப்பிட்டு பண பரிவர்த்தனை பற்றி கேட்டால் சொத்து விற்க பணத்தில் உறவினர் கொடுத்தது நியாயபடி எனக்கி வர வேண்டிய பங்கு என சொல்லுங்கள் என சொல்லி விடுவார்கள்.

இது போன்ற காரணங்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல் சொல்லி கொடுக்க படும்.

மேலும் இந்த பண பரிவர்த்தனையை எல்லாம் இந்த பொருளாதார குருவிகள் நேரில் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கென்று ஒரு புள்ளிங்கோ கூட்டம் இருக்கும். பெரும்பாலும் அவர்களும் அப்பாவிகள் தான் எதோ அண்ணன் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்ட போகிறாரென நம்பி மோசம் போய் கொண்டு இருப்பார்கள்.

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவிற்கு தான் பணத்தை செலுத்துவார்கள். நிறைய செய்தால் சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால்.

சரி இந்த தொண்டு நிறுவனமோ அல்லது மத பிரச்சார நிறுவனமோ பணத்தை எடுத்து ஓடிவிட்டால் என்ன செய்வார்கள் ?

அப்படி எல்லாம் நடக்காது, தரவேண்டியது எல்லாம் சரியாக தரபட்டு கொண்டு இருக்கும். தரகு பணம்.

மேலும் இந்த பரிவர்த்தனையை எல்லாம் மறைக்க பொதுமக்களிடமிருந்தும் அதிகமாக நன்கொடை வாங்குவார்கள்.

காரணம்.

திருப்பதியில் மொட்டை அடித்த நபரை கண்டுபிடிக்க முடியுமா ? முடியாது ஏனென்றால் பலர் மொட்டை அடித்து இருப்பார்கள். அது போல பல கோடிகள் நன்கொடையாக  வரும் பொழுது சில லட்சங்கள் கண்டு கொள்ளாமல் விட படும். 

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் கதையாய் கருப்பு பணமும் நன்கொடை என்ற அடையாளத்தில் மறைந்து கொள்ளும்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் பிரச்சார நிறுவனங்களும் இப்படியாக என கேட்டால் இல்லை. நேர்மையாய் இருக்கும் பல இருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதும் உண்மை. 

கருப்பு வெள்ளை ஆட்டத்தில் இது மட்டும் தான் வழியாக எடுத்து கொள்ள படுமா ?

இல்லை இதுவும் ஒரு வழி.

அப்படியென்றால் இன்னொரு வழி ?

 கடன்கள்....

தொடரும்

#வரி #வரிஏய்ப்பு

வரி - வரி ஏய்ப்பு - பொருளாதார குருவிகள் - அத்தியாயம் 2


வரிகளென்று சொன்னாலே அவை எதோ நவீன காலத்தின் அடையாளமாகவே பார்க்க படுகிறது ஆனால் அவை நாடோடிகளாக இருந்து கூட்டமாக வாழ தொடங்கி எப்பொழுது மனிதன் சமூக அமைப்பு என்று உருவாக்கினானோ அப்பொழுதே வரி என்பது பிறந்து விட்டது. வரியின் உருவம் பரிவர்த்தனை ஆகியவை காலத்திற்கு ஏற்றது போல் மாறி கொண்டு இருக்கும்.

மேலும் வரி என்பது சரித்திர நிகழ்வுகளோடு தொடர்புடையது, வரலாற்றின் போக்கை கொண்டு செல்லும் காரணியாக அமைந்துவிடுகிறது. ஆனால் மறைமுகமாக.

புறநானூற்றில் இடைக்குன்றூர் கிழார் எழுதியது 

"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே"

இந்த பாடலில் சேரர், சோழர் மற்றும் ஐந்து குறுநில மன்னர்கள் என ஒன்று சேர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியன் மீது படையெடுத்து போர் தொடுக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்ந்து எதிர் போர் புரிந்து பாண்டியன் ஒற்றை ஆளாக போரில் வெல்கிறார். இது தான் இந்த பாடலில் கூற படும் செய்தி. 

இந்த போரின் காரணமாக பலர் கூறுவது பாண்டிய நாட்டில் இருந்த செல்வத்தை. ஆனால் செல்வம் இருந்தால் பெருன் படை கொண்டு போர் புரிய அவசியம் இல்லை. 

ஆனால் எப்பொழுது அவசியம் வந்ததென்றால் பாண்டியர்களிடத்தில் பெரும் வணிக வர்த்தகம் நடைபெறும் பெரிய துறைமுகங்களான கொற்கை துறைமுகம், பூம்புகார் துறைமுகம் ஆகியவை இருந்தன. அந்த வணிக வர்த்தகத்தின் மூலம் பாண்டியனுக்கு ஏராளமான வரி கிடைத்தது. அந்த வரியின் மூலம் பாண்டிய நகரம் பெருன் செல்வசெழிப்புடன் இருந்தது. அதுவே சோழர்களை, சேரர்களை கூட்டணி உடன் போர் தொடுக்க செய்தது.

வரி வாய்ப்பு பற்றி தெரியாததால் தான் மாலிக் கபூர் படையெடுத்து  வந்து பலரை கொன்று கொள்ளை அடித்து சென்றான். 

சரி இது பக்கம் இருக்கட்டும்.

போன தொடரில் பெரும் நிறுவனமோ அல்லது தொழிலதிபரோ எப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவார்கள் என முடித்திருந்தேன்.

அது எப்படியென்றதரகர்கள் உதாரணமாக : 

Under Invoicing - அதாவது ஒரு பெரும் தொழிலதிபர் வணிக ஆண்டின் செய்து வந்த வணிகத்தின் மூலம் 200 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதென்றால் அதனை 100 கோடி ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கிறது என அரசுக்கு கணக்கு காட்டி அதற்கான வரியை செலுத்தி விடுகிறார்.

இப்பொழுது கணக்கில் வராத 100 கோடி ரூபாய் என்பது கருப்பு பணமாகி விடுகிறது.

இந்த 100 கோடி ரூபாயை சிறிது தரகு பணத்திற்காக வெள்ளையாக மாறி கொடுக்கும் இடை தரகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொருளாதார குருவிகள்

இந்த 100 கோடியை  அந்த இடை தரகர் 20 நபர்களிடம் சமமாய் பிரித்து கொடுப்பார். அதாவது ஆள் ஒருவருக்கு 5 கோடி என்று.

அல்லது 5 நபர்களுக்கு 20 கோடி என. சூழ்நிலைக்கு ஏற்றது போல் சதவிகிதங்கள் மாறும்.

இந்த இரண்டாம் நிலை இடை தரகர்கள் அவர்களுக்கு கீழ் இருக்கும் நபர்கள் மூலம் கருப்பை வெள்ளையாக மாற்றும் வேலையை செய்வார்.

அவற்றில் சில கோயிலுக்கு நன்கொடை, போலி தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை, இல்லாத கடையில் பண பரிமாற்றங்கள் மற்றும் சில...

அதிலெல்லாம் எப்படி செயல் படும் ?

அடுத்த பதிவில்.

தொடரும்.

#வரி #வரிஏய்ப்பு

வரி ஏய்ப்பு - கருப்பு பணம் - அத்தியாயம் 1

இந்த 78வது சுதந்திர தினத்தில் இந்தியாவின் மிக பெரிய பிரச்சனை லஞ்சம் தான் என இந்தியன் தாத்தா தனமாய் பேசி கொண்டு இருந்தால் அவர்களை போல் அறிவார்ந்த கிணற்றுத் தவளை யாரும் இல்லை.

லஞ்சம் ஒரு பிரச்சனையாக இருந்ததென்னவோ உண்மை தான் அது உலகமயமாக்கலுக்கு முன்பும் பிந்தைய சிறு வருடங்களில் தான்.

ஏனென்றால் லஞ்சமாய் கொடுத்து வாங்க படும் பணம் வரி கணக்கில் வராமல் போய் விடும், அப்பொழுது லஞ்சம் யார் வாங்குவார்களென பார்த்தால் அரசு இயந்திரத்தில் இருப்போரும் இயந்திரத்தை இயக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களும் தான்.

உலகமயமாக்கலுக்கு பின்னர் என்ன நடந்ததென்றால் இந்தியாவின் வணிக சந்தையின் கதவுகள் உலக வணிகத்திற்கு திறந்துவிட பட்டன. 

அப்படி திறந்துவிட பட்ட பொழுது வணிகம் வளர்ந்தது. வணிகம் வளர்ந்த பொழுது அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையும் வளர்ந்தது.

லாபமொன்றே குறிக்கோளாக இருக்கும் வணிக இயந்திரம் வரியை தவிர்க்க வழி இருந்தால் அதனை பயன் படுத்திக்கவே செய்யும். 

வணிகத்தின் இயல்பு அது இல்லை, வணிகத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பு. அதனை பயன்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பதும் அந்த வணிக இயந்திரத்தை செலுத்தி கொண்டு இருப்பவர்களின் கையில் இருக்கிறது.

அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வணிக இயந்திரத்தில் அதிகாரத்தில் இருப்பவர் வரி ஏய்ப்பு செய்து விடுகிறார்.

வணிகத்தை அல்லது கிடைக்க பெற்ற லாபத்தை குறைவாக காட்டி குறைவான வரி தொகையை செலுத்தில் விடுகிறார். நடப்பில் இருக்கும் வரி முறையை ஏய்த்து விடுகிறார். வரி ஏய்ப்பு நடந்து விடுகிறது.

கணக்கில் வராத பணம் கருப்பு பணமாக மாறி விடுகிறது.

இந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற மூன்று அடுக்குகளை கொண்ட வழி முறையை கையாள்வார்கள்.

அவை

1. Placement - நிலை அமர்த்தல் 
2. Layering - அடுக்குகளை உருவாகுதல்
3. Integration - ஒருங்கிணைத்தல்

கருப்பை பணத்தை உருவான உடன் அதனை கையில் வைத்திருக்க முடியாது, அப்படி வைத்திருந்தால் அது சட்டத்திற்கு எதிரானது. 

அதனால் அதனை வெள்ளையாக மாற்றுவார்கள். அப்படி மாற்றிவிடுதலில் முதல் நிலை தான் நிலை அமர்த்தல்.

அப்படி நிலை அமர்த்திய உடன் பல்வேறு அடுக்குகளை உருவாக்கி அந்த கருப்பு பணம் வந்த மூலத்தை அழித்துவிடுவது தான் இரண்டாம் நிலை அடுக்குகளை உருவாக்குதல்.

அப்படி பல்வேறு அடுக்குகளை உருவாக்கி பல்வேறு பண பரிவர்த்தனைகள் செய்து பணத்தின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாமல் செய்து விட்டு, அதனை எல்லா அடுக்குகளிலும் இருந்தும் ஒரு வணிக இயந்திரத்திடம் கொண்டு வருவது தான் கடைசி நிலை தான் ஒருங்கிணைத்தல்.

வணிக அறிமுகம் இல்லாதோருக்கு இதுவரையில் புரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் எல்லோருக்கும் தெரிந்த துறையை கொண்டு உதாரணம் சொல்கிறேன். உடனே அப்படியா செய்தி அந்த துறையில் இப்படி தான் நடக்கிறதா என முடிவுக்கு வர வேண்டாம். வெறும் உதாரணம் தான்.

உதாரணமாக ...

சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அவர் நடித்தால் படம் வெற்றி பெற்று விடுமென்கிற நிலையில் வெள்ளையாகவும் கருப்பாகவும் இவ்வளவு சம்பளம் வேண்டுமென தயாரிப்பாளரிடம் கேட்கிறார் என வைத்து கொள்வோம் .

இவ்வளவு தொகை தருகிறேன் மீதிக்கு ஒரு பகுதிக்கான விநியோக உரிமையை தந்துவிடுகிறேனென தயாரிப்பாளர் சொல்கிறார். இதெல்லாம் வெள்ளை சம்பள பகுதியில் வந்துவிடும் ஏனென்றால் இதெல்லாம் சட்ட ரீதியிலான ஒப்பந்தத்தில் எழுதப்படும்.

படம் எடுத்து முடிக்கபட்டது. வெளி வந்துவிட்டது.

இப்பொழுது நடிகரிடம் பல படங்களின் மூலம் கிடைக்க பெற்ற கருப்பு பணத்தை தான் விநியோக உரிமை எடுத்த பகுதி திரையரங்குகள் மூலம் வெள்ளை பணமாக மாற்றுவார். அங்கு ரசிகர்கள் கொண்டு பெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வார். படம் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது என காட்சி படுத்துவார்.

என்ன தான் பெரிய படமாக இருந்தால் இன்றைய காலகட்டத்தில் நிலவும் விலைவாசியில் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது ஒரு மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது ஏனென்றால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதும் ஒரு காரணம்.

பிற்பாடு காலியான திரையரங்குகளில் இருபது பேர் மட்டுமே வந்தாலும் படம் ஓடி கொண்டு இருக்கும் அல்லது ஓட்டி கொண்டு இருப்பார்கள்.

ஒரு திரைப்படத்தை ஒரு காட்சிக்கு திரையிட்டால் ஆகும் செலவிற்கு பக்கத்தில் கூட இருபது பேர் மூலம் கிடைக்கும் வணிக லாபம் வராது.

இருந்தும் படத்தை ஓட்டுவார்கள்.

போலியாக இந்த பட காட்சிக்கு இத்தனை வந்தார்கள் அதில் வந்த பணம் இத்தனை என விநியோக உரிமை எடுத்த நடிகர் சொல்வார். திரையரங்கு உரிமையாளருக்கும் ஒரு பங்கு போய்விடும் அதனால் அவரும் அமைதியாக இருப்பார்.

திரையரங்கு வசூல் குறித்து இன்னும் வெளிப்படை தன்மையோடு இல்லாததற்கு இதுவுமொரு காரணம் . ஏனென்றால் ரொக்க பணத்தில் கையாள படும் வணிகத்தில் எதுவும் சாத்தியமே.

தின்பண்டங்கள் விற்ற பணம் என கணக்கு சொல்வார்கள், உண்மையில் தின்பண்ட்ம் அவ்வளவு விற்றதா என கணக்காளர் கண்டுபிடிப்பது கஷ்டமே.

தின்பண்டம் தயாரிக்க தேவையான பொருட்கள், தயாரிக்க தர படும் கூலி, அரங்கிற்கு கொண்டு செல்ல படும் கூலி, விற்பனை பிரதிநிதிகளின் கூலி எல்லாம் ரொக்க பணத்தில் நடைபெறுவதால் வணிகத்தின் தொகை அளவுகளை கண்டுபிடிப்பது கஷ்டம்.

இப்படி தான் நடக்கிறதா திரையுலகில் என்றால் எல்லோரும் அப்படி இல்லை பிழைக்க தெரியாதவர்கள் என பெயர் எடுத்த பல நடிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படியானல் எல்லா நடிகர்களும் இப்படி தான் செய்வார்களா என கேட்டால் இல்லை. கோயில் கட்டுவார்கள், தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொண்டு செய்வார்கள்...

அவற்றின் வணிக தன்மைகளில் எல்லாவற்றிலும் வரி ஏய்ப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது.

வணிக நிறுவனங்களின் வரி ஏய்ப்பு எப்படி நடக்கும், தொண்டு நிறுவனங்கள் என்ன செய்யும்... முடிந்தால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

தொடரும்...

#வரி #வரிஏய்ப்பு

செபி - பஸ்பர நிதி - ஆட்டம் ஆரம்பம்


செபி நேற்று ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்திய பஸ்பர நிதி நிறுவனங்களை அந்த அறிக்கை ஆட்டி வைக்க போகிறதா இல்லையா என போக போக தான் தெரியும்.

அப்படி என்ன அந்த அறிக்கையில் சொல்லிருக்கிறது ?

பஸ்பர நிதியில் முதலீடு செய்வோரை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

நேரடி முதலீட்டாளர்கள் - இவர்களுக்கு பஸ்பர நிதி பற்றி எல்லாம் தெரியும். அ முதல் ஃ வரையில் அதன் செய்ல்பாடுகளை தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் நேரடியாக பஸ்பர நிதி நிறுவனத்திற்கோ இணையதளத்திற்கோ போய் முதலீடு செய்வார்கள் அல்லது பஸ்பர நிதி நிறுவன பிரதிநிதிகள் மூலம் முதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இந்த வகை முதலீடு திட்டங்களில் எந்தவித தரகு செலவுகளும் இருக்காது. 

தரகு வழி முதலீட்டாளர்கள் - இவர்கள் ஒரு வங்கியின் மூலமாகவோ அல்லது முதலீட்டு சேவை நிறுவனம் மூலமாகவோ பஸ்பர நிதி திட்டத்தில்  மூதலீடு செய்பவர்களாக இருப்பார்கள்.

இதுவரையில் முதலீடு நிறுவனங்கள் வெளியிடும் அரை ஆண்டு பஸ்பர நிதி திட்ட அறிக்கையில் தரகு வழி முதலீடுகளுக்கு மட்டுமே ஆன லாப  கணக்குகள் கொண்டு இருக்கும்.

இனிமேல் அதில் நேரடி முதலீடுகளுக்குமான லாப கணக்குகள் கொண்டு இருக்க வேண்டுமென செபி சொல்லி இருக்கிறது.

ஏன் இப்படி ?

முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் வங்கி, முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் வரும் பஸ்பர நிதி முதலீடுகளே அதிகம்.

மேல் சொன்ன பட்டியலும் ரொம்ப நீளம். சென்னையில் எந்த ஒரு குறிபிட்ட பகுதியை எடுத்து கொண்டாலும் வங்கி மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகள் நூறுக்கு குறையாமல் இருப்பார்கள். ஒவ்வொரு பிரதிநிதியிடமும் பஸ்பர நிதிகளின் மாதாந்திர மற்றும் அரை ஆண்டு திட்ட அறிக்கை இருக்கும்.

இப்படி சென்னையின் ஒரு பகுதியின் எண்ணிக்கை இதுவென்றால் மொத்த இந்தியாவிலும் எண்ணிக்கை எப்படி இருக்குமென யோசித்து கொள்ளுங்கள்.

ஆகவே தரகு வழி முதலீட்டாளர்களுக்கு விஷயத்தை கொண்டு சேர்க்க தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஏனென்றால் அந்த வழியில் தான் லாபம் அதிகம் கிடைக்கிறது பஸ்பர நிதி நிறுவனங்களுக்கு.

எல்லாம் சரி அதென்ன பஸ்பர நிதி அறிக்கை ?

இதனை ஆங்கிலத்தில் Fact Sheet என்றும் தமிழில் தகவல் அறிக்கை என்றும் சொல்லலாம். அதில் ஒரு நிறுவனத்திலிருக்கும் பற்பல திட்டங்கள் பற்றிய விவரங்கள், எந்தெந்த நிறுவங்களில் முதலீடு செய்ய பட்டு இருக்கிறது, நிதி திட்ட மேலாளர் (Fund Manager) பற்றிய விவரங்கள், திட்டத்தின் லாப கணக்கு ஆகியவை அடங்கி இருக்கும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கவர பிரதிநிதிகளுக்கு வசதியாக இருக்கும்.

சரி நேரடி திட்டங்களுக்கு ?

நேரடி திட்டங்களில் முதலீடு செய்வோர்களுக்கு சந்தை பற்றியும் லாபங்கள் பற்றியும் துல்லியமாக கணிக்க முடிந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே திட்ட அறிக்கையை எல்லாம் தகவலுக்கு தான் வைத்திருப்பார்கள். அதனை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள்.

தரகு நிறுவனங்கள் தங்களுக்கு எது அதிகம் தரகு பணம் கொடுக்குமோ அந்த திட்டங்களை மட்டும் தான் பரிந்துரை செய்வார்கள்.

பஸ்பர நிதி தகவல் அறிக்கை உடன் ஒரு பிரதிநிதியை பார்த்தால் அவரிடம் பேசி கொடுத்து பார்த்தால் தெரியும் சில திட்டங்களை பற்றி மட்டுமே அதிக படுத்தி உயர்வாக சொல்வார்கள். அவை போல வேற எந்த திட்டமுமில்லையென சொல்வார்.

காரணமென்னவென்றால் அவரது நிறுவனத்திற்கு அந்த திட்டமோ அதிக தரகு பணம் தருபவையாக இருக்கும் அதனால் அதனை விற்றால் தான் அவருக்கு விற்பனை புள்ளிகள் (Sale Points) கிடைக்கும் சொல்ல பட்டு இருக்கும்.

சரி இரண்டு வித திட்டங்களின் லாப கணக்கும் ஒன்றாக வெளியிட்டால் என்ன மாதிரியான பிரச்சனை வரும் ?

பொதுவாக வியாபாரத்தில் லாபம் எல்லாம் எல்லாவித செலவுகளுக்கும் கட்டணம் செலுத்திய பின்னர் மிச்சம் வருவது தான்.

செலவுகள் இல்லையென்றால் லாபம் அதிகமாக இருக்குமென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதனால் நேரடி திட்டத்தின் லாபங்களை பல ஆண்டு காலம் முதலீட்டு நிறுவனம் மூலம் முதலீடு செய்பவர் பார்த்தால் அடடேய் அதுல இவ்வளவு கிடைக்குதா அப்ப இவன் மூலமா என்னதுக்கு பண்ணிகிட்டு என முடிவெடுத்து நேரடியாக முதலீடு செய்ய போய் விடுவார்.

இதே போக்கு அதிகமாகி மக்கள் எல்லோரும் நேரடியாக முதலீடு செய்ய போய் விட்டால் முதலீடு நிறுவனங்களுக்கு லாபம் குறையும்.

அப்படி குறைந்தால் அவர்களது லாபம் குறையும். செலவு கணக்கு அதிகமாகும்.

இதன் மூலம் லாபம் கிடைக்க கூடியது பஸ்பர நிதி நிறுவனங்கள் தான்.

அவர்களுக்கு செலவுகள் குறைந்து லாபம் அதிகமாகும்.

செய்தி உரலி -   https://www.business-standard.com/markets/news/sebi-plans-half-yearly-disclosures-for-direct-plan-mutual-fund-schemes-124092701140_1.html
Related Posts with Thumbnails