Pages

Showing posts with label திரைப்படம்.. Show all posts
Showing posts with label திரைப்படம்.. Show all posts

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 

Monday, April 4, 2011

எட்டெட்டு (My Top 8) - மேவிய விகடன்

கேட்ட இசை - எனக்கு எப்பவும் pop melody வகையற பாடல்களென்றால் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான பாடல்களை தேடி எப்பவும் youtube பில் உலவி கொண்டிருப்பேன். அந்த மாதிரி உலவிக் கொண்டிருக்கும் சில பல நல்ல பாடல்கள் கண்ணில் தட்டு படும். அதையெல்லாம் குறித்து வைத்து கொண்டு திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பேன். அந்த மாதிரி தான் போன வாரம் பாடலை கேட்டேன் : அருமையான இசை அருமையான பாடல் வரிகள் .... ஆரம்ப வரிகள் இப்படி வரும் .."AS WE GO ON , WE WILL REMEMBER ...." ... ஆனால் இந்த என்ன பாடல்ன்னு குறிச்சு வைச்சுக்க மறந்துட்டேன்.... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ...

பார்த்த படம் - பொதுவாய் நான் எல்லாம் வகையான படமும் பார்ப்பேன், அது பிடிக்குமா பிடிக்காதா என்பது வேற விஷயம். சமீப காலமாய் போர் மற்றும் அரசியல் சார்ந்த படங்கள் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி ROMAN HOLIDAYS ன்னு ஒரு ROMANTIC COMEDY படம் பார்த்தேன். கதைன்னு ஒன்னும் பெருசா இல்லாட்டியும் அவ்வளவு அழகு. அதிலும் கதாநாயகி ஸ்கூட்டர் ஓட்ட தெரியாமல் ஓட்டும் காட்சியில் , இளமை மிளிரும். படம் பார்த்து முடித்த உடன் ஏதோ ROME க்கு டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கும். திரைபடத்திற்கு மகுடமாய் கிளைமாக்ஸ் காட்சி... இயல்பான முடிவு. அதிலும் கேமரா கோணம் அந்த இடத்தில செமையா இருக்கும். திரைக்கதை படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கும்.

சென்ற இடம் - வேறு யார் சொல்லிருந்தாலும் இந்த இடத்திற்கு போயிருக்க மாட்டேன், ஆனால் சொன்னது அம்மா என்பதால் வேற வழியில்லாமல் போக வேண்டியதா ஆகிருச்சு. சிங்க பெருமாள் கோவில் - பெருங்களத்தூரில் இருந்து 18 கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த கோவில். ஞாயிறு காலை ஒரு ஏழு மணிக்கு கிளம்பி ஏழே முக்காலுக்கு போய் சேர்ந்தோம். அமைதியா இருக்கிறது. ஒரு சின்ன மலையில் அமைந்து இருக்கிறது. சிங்க பெருமாளுக்கு நெற்றி கண் இருக்கிறது. வேண்டி கொண்டால், நினைத்தது நடக்குமாம். பல்லவர் காலத்து கோவிலாம். காஞ்சியை பார்த்தபடி கோவில் இருக்கிறது
என்று நினைக்கிறேன்
. சாளுக்கியர்கள் கட்டியதாக இருக்கலாம். எல்லாத்தையும் விட அங்க கோவிலில் விற்கப்படும் மிளகு தோசை தான். மிளகாய் பொடியுடன் தருகிறார்கள். ரூபாய் பத்து தான்.

கலந்துக் கொண்ட நிகழ்ச்சி - ரொம்ப கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த உறவினர் ஒருவர் வேளச்சேரியில் FLAT ஓன்று வாங்கி இருந்தார். கிரஹப் பிரவேசத்தின் பொழுது அவருடைய அம்மா அப்பாவை பூஜைக்கு உட்கார வைத்து, அவர் தனிய தள்ளி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தார். சொல்ல முடியாத சந்தோசம் அவருடைய முகத்தில் பார்த்தேன், இத்தனை நாட்களில் நான் அவர் முகத்தில் பார்க்காத ஓன்று.


வாங்கிய பொருள் - நான் அதிகம் பொருளென்று எதையும் வாங்க மாட்டேன். வாங்கினால் புத்தகங்கள் அல்லது சினிமா டிவிடிக்கள் தான். உடை கூட அம்மா-அப்பா வாங்கி தந்தால் உண்டு. அப்படி இருந்தும் NILGIRIS கடையில் இருந்து, மல்லிகை பூவின் வாசனை மீதுள்ள பிரேமையால், AHSAN என்ற சென்ட்டை வாங்கினேன். மெல்லிய நறுமணம் நாள் முழுவதும் வீசி கொண்டே இருக்கும். முஸ்லிம் கம்பெனியின் தயாரிப்பு போலிருக்கிறது.


படித்த புத்தகம் - கடந்த ஞாயிறு அன்று சுஜாதாவின் எழுத்துக்கள் மீதுள்ள இச்சை மீண்டும் தலைதூக்கியது. கையில் கிடைத்த அவருடைய நாவலொன்றை படித்தேன். கமிஷனருக்குக் கடிதம். ஒரு பெண் போலீஸை சுற்றி கதை நடக்கிறது. உணர்வு போராட்டங்கள் கதையில் எதுவும் இல்லை வசங்களில் மட்டும் இருக்கிறது. ஒரு வித பரபரப்பு இல்லை : ஆனாலும் படிக்க நல்ல இருந்தது. திண்டும் இன்பம் படித்த பொழுது கிடைத்த ஏதொன்று, இதில் கிடைக்கவில்லை.

பாதித்த சம்பவம் - கடந்த வாரம் கார்த்திகை பாண்டியன் (காபா) சென்னை வந்திருந்தார்.காபா என்னை பார்க்க தாம்பரம் வருவதாய் சொன்னார். அத்திரி அண்ணனும் சேர்ந்து கொள்வதை சொன்னார். சரின்னு அவரை பார்க்க, அவருக்காக நான் வாங்கி வைத்திருந்த "கடவு" மற்றும் "சின்ன சின்ன வாக்கியங்கள்" இரண்டையும் எடுத்து கொண்டு கிளம்பினேன். பக்கத்தில் அத்திரி அண்ணன் உட்கார்ந்து இருக்க, தாம்பரம் வசந்த பவனில் வைத்து அந்த புத்தகங்களை அவருக்கு தந்தேன். அத்தனை வாங்கிய பொழுது அவர் முகத்தில் ஒரு வித பெருமிதம், அன்பு , காதல் அனைத்தும் பார்த்தேன். காபா புத்தகங்களின் காதலரென்று எனக்கு தெரியும், ஆனால் அதை அன்று தான் நேரில் பார்த்து, உணர்ந்தேன்.

சந்தித்த நபர் - வழக்கம் போல், அன்றும் ஒரு appointment இருந்தபடியால், அத்திப்பட்டு புதுநகர் வரை போக வேண்டி இருந்தது. இத்தனைக்கும் அது என்னுடைய கால் இல்லை. ஆபீஸ் ல வெட்டியா உட்கார பிடிக்காததால், இன்னொருவருடன் கிளம்பினேன் அத்திப்பட்டு புதுநகருக்கு. ஏரியாக்குள்ள போவதற்கு ஒரு வசதியும் இல்லை.
கிளையன்ட் தான் வந்து எங்களை அவர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனார்.
அங்கு சுற்றி இருக்கும் மின் நிலையங்களால் அந்த ஏரியாவே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது. மின்சாரம் எப்ப வரும் போகும் என்று தெரியாதாம். இன்டர்நெட் வேலை செய்யதாம். எதாவது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டுமானால் 4 கிலோ மீட்டார் வரைக்கும் போக வேண்டுமாம். இன்னும் நிறைய சொன்னார்.
எங்களுக்கு அந்த குடிருப்பின் நிலைமையும், அந்த ஏரியாவின் நிலைமையை பார்த்த பொழுது, எங்களுக்கு ஏதோ சென்னையில் இருப்பதாய் தோன்றவில்லை. இத்தனைக்கும் சென்னை நகரத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் தான் உள்ளது இந்த ஏரியா.
ஏதோ சென்னையில் இருக்க ஆசைப்பட்டு, ரொம்ப வருஷம்
முன்னாடி
ரொம்ப கஷ்டப்பட்டு transfer வாங்கி
இங்க வந்திருக்கார். எப்படியோ அவருடைய பெண்களையும் படிக்க வைத்திருக்கிறார்.அவங்க பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாங்கலாம். போட்டோ காட்டினர். இப்போ என்ன பிரச்சனை என்றால், அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரே வயது.... இந்த வயசான காலத்தில் ஆத்திர அவசரமென்றால் பக்கத்தில் உதவி என்று யாருமில்லை, சென்னை வந்து போகவும் முடியவில்லை....
சரின்னு அவர் வேற ஏரியாவுக்கு transfer வாங்கிட்டு போகலாம்ன்னு இருந்தாலும் லட்ச லட்சமாய் லஞ்சம் கேட்குறாங்கலாம்.


இந்த மாதிரி ஒவ்வொரு காலுக்கும் போயிட்டு வரும் பொழுது சில சமயம், இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, கனத்த மனதுடன் வர வேண்டியதாக இருக்கிறது. அந்த காலுக்கு போயிட்டு வந்த சில நாட்காளில் அவர் என்னை பார்க்க ஆபீஸ்க்கு வந்தார். பார்க்கவே பாவமாய் இருந்தது. என்னிடம் பேசிவிட்டு அவர் கிளம்பும் போது மதியம் 12 மணி ஆகிருந்தது. கிளம்பி போறேன்ன்னு சொன்னாரு. நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரின்னு பைக் ல அவரை சென்ட்ரல் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விட்டு வந்தேன். அவர் ஸ்டேஷன் நோக்கி தளர்ந்த நடையுடன் செல்லும் போது, ஏன்னோ என்னுடைய அப்பா நினைவுகளில் வந்து போனார்.

Saturday, August 14, 2010

THE GREAT ESCAPE (1963) - திரைபார்வை

"போர் கால கைதிகளை சித்திரவதை செய்யவோ, கொலை செய்யவோ கூடாது" - LAW OF WAR

= = = = =


1944 , GERMANY
50 போர் கைதிகளை கொண்ட அந்த லாரி பெர்லின் நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஓர் வெட்டவெளிக்கு வந்து நின்றது. என்ன ஏதுன்னு தெரியாமல் முழித்த கைதிகளிடம், ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் "இன்னும் போக வேண்டய தூரம் ஜாஸ்தியா இருக்கு, அதனால கொஞ்சம் கீழ இறங்கி இளைப்பாறிட்டு வாங்க". எந்த ஊர் சிறைல போட போறாங்களோன்னு யோசித்துக் கொண்டே, சோகத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டே இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு rapid gun கள் அவர்களை நோக்கி குறி வைத்தன. பத்து நிமிடங்கள் கழித்து 50 சடலங்களை விட்டுவிட்டு லாரிகளும், இராணுவத்தினரும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.

"This picture is dedicated to the fifty."

= = = = =

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், ஆனால் எங்கே கதையை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து யாருக்கும் தராமல் இருந்தார். அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.

= = = = =
இந்த படம் எல்லா விதத்திலும் ஸ்பெஷல் தான். உண்மையை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமென்று சிறை கூடங்களுக்கான செட்களை, Stalag Luft III யில் கைதிகளாக இருந்தவர்களை கொண்டே வடிவமைத்தார்கள். அதே போல் தான் பிற வெளி புற காட்சிகளின் பொழுதும்.
= = = = =

தப்பித்து போகும் கைதிகளை பிடிபதற்கு நிறைய செலவு ஆகுவதால், அவர்கள் தப்பித்து போக முடியாதளவுக்கு ஒரு சிறை வடிவமைத்து : அதில் பிரச்சனை குறிய அணைத்து கைதிகளையும் போடுகிறது ஜெர்மன் ராணுவம். கைதிகள் அனைவரும் சிறு சிறு முயற்சிகள் எடுத்து தோற்று போகிறார்கள்.


சிறைக்கு மிக பக்கத்தில் காடு, இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறை அறையிலிருந்து அந்த காடு வரைக்கும் ஒரு சுரங்கபாதை ஒன்றை வெட்ட வேண்டும். ஆனால் அத்தனை சிறப்பாக ஒருங்கிணைக்க ஒரு தலைவர் இல்லை. இந்த மாதிரி சுரங்கபதை அமைப்பதில் வல்லவரான ஒருவரை அங்கிருக்கும் எல்லோரும் எதிர் நோக்கி இருக்கிறார்கள் : BIG X .

அவரும் வருகிறார். ஆனால் அவரை சிறையிலடைக்கும் முன், மீண்டுமொருமுறை அவர் தப்பிக்க முயற்சி செய்தால், சுட படுவர் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் அவருக்கோ இப்படி சிறையில் சும்மா இருப்பதை விட, போரில் நாட்டுகாக போராட ஆசை.

அன்று இரவே, ரகசிய கூட்டத்தில் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க படுகிறது. அப்படி எடுக்க பட்ட முடிவின் படி, மூன்று சுரங்கபாதை வெட்ட படுகிறது. சிறை அதிகரிகள் ஒன்றை கண்டுபிடித்தால் கூட மற்ற இரண்டில் தப்பிக்க முடியுமே என்ற முன் யோசனையில் தான். அப்படி அவர்கள் வெட்டும் பொழுது, ஒரு பிரச்சனை வருகிறது. குழியில் இருந்து வரும் மண்ணை என்ன செய்வது என்று ???

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு சுரங்கபாதை சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க படுகிறது. அதனால் மீதி இருக்கும் இரண்டு சுரங்கத்தில் ஒன்றில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தி அவர்கள் சுரங்கபாதையை வெட்டி அந்த பக்கம் வெளியேறும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது, திட்டமிட்ட படி அந்த பாதை காட்டின் உள்ள போய் முடியாமல் ....முள்வேலி தடுப்புக்கு பக்கத்திலும் : காட்டுக்கு 20 அடி முன் தள்ளியும் போய் முடிகிறது. சிறை காவலாளிகள் பார்வை.... வானத்தில் குண்டு போடும் விமானங்கள் .... ரொம்ப இக்கட்டான நிலை ...தப்பிதர்களா ???
= = = = =
iamkarki @mayvee இரவின் நிறம் பார்த்த பிறகு ஒரே உலகப்படமா பார்க்கறிங்க.. குட் குட்.
= = = = =
"30 அடி நேர் கீழ தோண்டிட்டு...பின்ன காட்டை நோக்கி தோண்டுங்க. அப்ப தான் வெளில இருக்கிற ஆளுங்களுக்கு சத்தம் கேட்காது"
" கேப்டன் ...."
"புரிது ...நீ என்ன கேட்க போறன்னு ...இந்த வாட்டி அவங்க முகத்துல கரிய புசனும் ..இருபது முப்பது பேர் இல்ல ..ஒரு 250 பேர்"
= = = = =
சுரங்கபாதை வெட்டும் சத்தம் அதிகாரிகளுக்கு தெரிய கூடாதென்று அவர்கள் எழுப்பும் பிற சத்தங்களும், கிளைமாக்ஸ்யில் தப்பித்து போனவர்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்று பரபரப்பு தனிமையில் அமர்ந்து பார்த்தால் நம்மையும் தொற்றிகொள்ளும்.

பிறகு அந்த அமெரிக்கா கைதி பந்தை சுவரில் அடித்து காவலாளிகளின் நடையை கணக்கிடும் முறை நல்ல தானிருக்கு. ஆனால் அது வேற ஏதோ நாவலில் வருகிறது என்று கேள்விபட்டேன்.
= = = = =
எனக்கு பொதுவாக போர் சமந்தப்பட்ட படங்கலேன்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர் ன்னாலே நிறைய உண்மை சம்பவங்கள் சொல்லபடாம இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி Dying Soldier (பெயர் சரியாய் ஞாபகமில்லை) படிச்சேன் ....அப்படியே உருகி போயிட்டேன். அதுவும் இதே மாதிரி போரில் இருந்து தப்பித்து வரும் இரண்டு வீரர்களை பற்றியது. அவர்களின் நாடு தோற்று போயிருக்கும்...அந்த வலி வேதனை எல்லாம் வார்த்தைகளில் ரொம்ப இயல்பபாக சொல்லிருப்பாங்க.
= = = = =
நான் மேல சொன்னது கதையாக இருந்தாலும், கதையுள்ளே பல சம்பவங்களிருக்கு. அதெல்லாம் சொன்னால் கதையுடைய சுவாரசியம் போய்விடும். முக்கியமா சொல்லனும்ன்ன அந்த சுரங்கம் வெட்டும் கதாபாத்திரத்தை சொல்லலாம். இருட்டு, தனிமை குழி போன்றவற்றுக்கு தனக்குள் இருக்கும் பயத்தை மறைத்து வேலை செய்யும் அவன் ...கடைசியில் தப்பிக்கென்று குறித்த நாள் முன் அவன் தப்பிபதற்கு சொல்லும் காரணம், கதையில் திருப்பம் இல்லையென்றாலும் நல்ல சுவாரசியம்.

இந்தப்படம் உங்களது சிடி / டிவிடி collections யில் இல்லாவிட்டாலும், இந்த உண்மை சம்பவத்தின் புத்தக வடிவை நீங்கள் கட்டாயம் வசித்ததாக வேண்டும்.

Monday, August 9, 2010

THE SEVENTH SEAL (1957) - காலதேவனோடு சதுரங்கம் - திரைபார்வை

உங்களது ஆன்மீக நம்பிக்கை மீது என்றாவது சந்தேகம் வந்து இறைவன்யிருக்கிறனா இல்லையா என்ற அளவில் புலம்பி இருக்கீங்களா ???



இந்த படத்தை நானொரு இரண்டு முறை பார்த்திருப்பேன். முதல் முறை பார்த்த பொழுது எனக்கொன்றும் அவ்வளவாக புரியவில்லை. பிறகு அந்த காலத்தில் இருந்த ஜாதி, மத அமைப்புகளை பற்றி கொஞ்சம் கேள்விப்பட்ட பின்பு இரண்டாம் முறை பார்த்தேன். முக்கியமா இந்த படத்தின் கதை கிறிஸ்துவ மத நம்பிக்கைகளின் பின்னணியில் வருவதால் என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை : படத்திலிருக்கும் சில விஷயங்களை. ஒரு வேளை அத்தனையெல்லாம் பைபிள் படித்த நண்பர்கிட்ட இருந்து தெரிந்து கொள்ள வேண்டிருக்கும் போலிருக்கு.

பிறகு படத்தை பார்க்கும் முன்பு அந்த காலத்தில் நடந்த புனித போர்களை பற்றியும் : அந்த கால மூடநம்பிக்கைகளை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் ...இன்னும் படத்தை பலமாக ரசிக்கலாம்.

படம் ஆரம்பமே .....அப்படிப்பட்ட புனித போரில் இருந்து திரும்புகிற இரண்டு புனித போர் வீரர்கள் கடற்கரையில் படுதிருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது ....... (சுவீடன் நாட்டு படம் என்பதால் பெயரெல்லாம் வாசிபதற்கே கஷ்டமாயிருக்கு. அதனால் கதாபாத்திரத்தை வைத்து கதையை சொல்கிறேன்....)

களைத்த நண்பனை பார்த்துக் கொண்டே தனது ஊரை பிளேக் (PLAGUE ) நோய் தாக்கி விட்டதை எண்ணி சோகமாய் இருக்கும் கதாநாயகனின் உயிரை எடுக்க காலதேவன் அவன் முன் தோன்றுகிறான். தன்னுடைய மரணத்தை ஒத்தி போட நினைக்கும் நாயகன் காலதேவனை சதுரங்கம் அட கூப்பிடுகிறான்.

அவனை பார்த்து மரண தேவன் "நான் சதுரங்கத்தில் வல்லவன் என்று தெரியுமா" ...

உடனே அதற்க்கு நாயகன் ....."தெரியும் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன்" என்று சொல்லுகிறேன்.
"அப்படி இருந்து என்னை விளையாட கூபிடுகிறாயே"
"என்னகென்னு சில தந்திரங்கள் வைத்திருக்கிறேன்"
" என்னிடமேவா"
"கதை வேண்டாம் ...நீ ஜெயித்தால் என் உயிரை கொண்டு போ"....

அவனை பார்த்து மர்மமாய் காலதேவன் சிரிக்கிறான். விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
"கருப்பு உங்களுக்கு"

"அதுவும் நான் தான். பிரச்சனை இல்லை"
= = =
இது தான் படத்துல வர முத சீன். சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் சின்ன பசங்க இந்த சீன்யை பார்க்குற போது. பிறகு என்னாகும்ன்ன ..... அடுத்த சீன் ல ஹீரோ தோழனோட கிளம்பி போயிட்டு இருப்பான். .....


அப்படி போயிட்டு இருக்கும் போது நம்ம ஹீரோயோட மனநிலைமையை வசனங்கள் முலமா நமக்கு சொல்லுறாங்க. அதாவது நம்ம ஹீரோ புனித போரினால் ரொம்ப குழப்பத்துல இருக்கிறாரு. அதாவது கடவுள்ன்ன யார் ? அவனோட தேவை தான் என்ன ?? இந்த மாதிரி ரொம்ப கேள்விகள் அவனுக்குள்ளே அவன் கேட்டுகிட்டு வருகிறான் (....பதிவில் ஆரம்பத்துல சொன்ன மாதிரி புனித போர் பற்றியும், அந்த கிறிஸ்துவ நம்பிக்கைகள் பற்றியும் கொஞ்சமாச்சு தெரிந்திருந்தால் தான் நமக்கு ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் ...இல்லாட்டியும் ரசிக்கலாம்.)

அப்படி போற வழில ...ஒரு தேவாலயம் வருது. சரின்னு உள்ள போறாங்க. ஹீரோயுடைய சிஷ்ய புள்ள அங்க இருக்கிற ஒரு ஓவியரோட பேச உட்கர்ந்துவிடுகிறாரு. நம்ம ஹீரோ ஏகப்பட்ட மன உளைச்சல் ஓட பவ மன்னிப்பு கேட்க போறாரு. ...
உணர்ச்சிகள் மேலிட..... கடவுளை பற்றி அவன் கொண்ட எண்ணத்தையும் , கடவுளை பற்றிய எண்ணத்தால் வரும் பின்விளைவுகளை பற்றியும் சொல்லிகிட்டே போறாரு... அப்படி சொல்லும் பொழுது சமுதாயத்தில் மக்கள் மதத்தினாலும், மத போதகரினாலும் கொண்ட பயங்கள் அர்த்தமற்றது என்றும் சொல்லுறான். அப்படி சொல்லிக்கொண்டே போகும் போது, காலதேவன் தனோடு சதுரங்கம் விளையாட வந்ததையும், அவன் போட்ட சவாலையும் சொல்கிறான், அப்படி என்ன சவால்ன்னு பாதிரி கேட்க ..... ஹீரோவும் அவன் போட்ட சவாலையும், அதில் அவன் வெற்றி பெற அவன் வைத்திருக்கும் விளையாட்டு முறையையும் சொல்லி விடுகிறான். சொன்னபிறகு தான் இத்தனை நேரம் கேட்டு கொண்டிருந்தது பாதிரி அல்ல காலதேவன் தான் தெரிந்த பிறகு அதிர்ந்து போகிறான் ...விளையாட்டில் வெற்றி பெற்றனா ???
தேவாலயத்தை விட்டு வரும் பொழுது, பிளேக் நோயால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை பார்க்கிறான். அந்த நோய் ஊரில் பரவாமல் இருக்க வேண்டி அவளை உயிருடன் எரிக்க மத போதகர்கள் அதற்க்கான சடங்குகளை செய்து கொண்டிருக்கிறார்கள். கதாநாயகன் தனது கேள்விகளுக்கான பதில் அவளிடத்தில் கிடைக்கும் என்று நம்புகிறான் தனது இயலாமையை நொந்துகொண்டே. ஆனால் பதில் வேறு விதமாய் கிடைக்கிறது அவனுக்கு.

இதற்க்கிடைய ஒரு நடிகனுடைய உயிரை எடுக்க போகும் காலதேவனுகும் அந்த நடிகனுக்கும் நடக்கும் உரையாடல்..... படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழியில் அவனது நண்பனால் காப்பாற்ற பட்ட ஒரு கூத்தாடியை சந்திக்கிறான்.கூத்தாடி குடும்பமும் ஹீரோவும் அவனுடைய சகாவும் நட்பு பாராட்டி கொள்ளுறாங்க.
அப்படிருக்கும் ஒரு சமயத்தில் கதாநாயகனை பார்த்து காலதேவன் ....."நீ அவர்களுடன் இன்று இரவு இருக்க போகிறாய்யா.. அவர்களுடன் எனக்கொரு கணக்கிருக்கு" என்று கூறி வழக்கமான மர்ம புன்னகையை மீண்டுமொருமுறை பிரசவிக்கிறான்.





= = = = =


இந்த படத்தை பார்க்க பல முக்கியமான காரணங்களிருக்கு. அதில் முதல் காரணமாக வசனங்களை சொல்லலாம். வசனங்களெல்லாம் சுவீடன் நாட்டு மொழியில் இருந்தபடியால் நான் சப்-டைட்டில்யை வைத்தே என்ன பேசுகிறார்கள்ன்னு புரிந்து கொண்டேன்.

ஒரு கட்டத்தில் பாதிரி என்று நினைத்துக் கொண்டு காலதேவனிடமே பாவமன்னிப்பு கேட்டு கொண்டிருப்பான் ஹீரோ ..அப்பொரு வசனம் வரும் பாருங்க ....

"நம்முடைய இயலாமை, பயம் எல்லாத்தையும் சேர்த்து அதற்க்கு கடவுள் என்று உருவம் தந்து வழிபட்டு கொண்டிருக்கிறோம்.."

=
"நாம் ரொம்ப கவலை படுறோம்'
"இந்த மாதிரி சமயத்துல தான் இரண்டு பேரா இருக்குறது ரொம்ப உதவியா இருக்கு"
=
"எனக்கு என்னோட கூட்டாளியினால் மனசு வெறுத்து போயிருக்கு"
"யாரு ..உன்னோட சிஷ்யனை சொல்லுறீயா?"
"இல்ல ..நான் என்னை சொன்னேன்"

=
காலதேவன் "அடுத்த முறை நாம் பார்க்கும் பொழுது.... உன்னது வாழ்விலும் உன் நண்பர்கள் வாழ்விலும் அது எனக்கான நேரமாய் இருக்கும்"
"அப்ப நான் உங்களோட ரகசியங்கள் தெரிந்துகொள்ளலாம் ?"
"என்னிடத்தில் ரகசியங்கலோன்றும் இல்லை"
"அப்ப உங்களுக்கு ஒன்றும் தெரியாது.."
"இல்லை. நான் ஒரு தெரிந்த ஒன்றுமில்லாதவன்"

=
நடிகன் காலதேவனிடம் " வெட்கம் ....அவமானம்..... நடிகர்களுக்கு சலுகைகள் இல்லையா..."
"உனக்கு இல்லை"
"குறுக்கு வழி கூடவா"
=
"அவங்க சொல்லுறாங்க உனக்குள்ள சாத்தான் இருக்காமே"
"அதை நீங ஏன் கேட்குற"
"சொந்த விஷயத்துக்காக. நான் அவனை பார்க்கணும்"
"ஏன்"
"கடவுளை பத்தி கேட்க தான். கட்டாயம் அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்'
"நீ எப்ப்வேன்ன அவனை பார்க்கலாம்"
"எப்புடி?"
"நான் சொல்லுற மாதிரி செய். என்னோட கண்ணை பாரு"
"என்ன பார்க்கிற"
"பயம்..அத தவுர ஒன்னுமில்லா"
"ஒன்னுமில்லையா ....யாருமில்லையா"
"இல்ல. யாருமில்ல"
"அவன் எனக்குள்ள இருக்கிறான். இப்ப கூட உணர்கிறேன்..... என்னை எரிக்க போகும் நெருப்பு கூட என்னை ஒன்னும் செய்யாது..அவன் என்னுள் இருப்பதினால்...."
"சாத்தான் அப்படி சொன்னனா"
"இல்ல ..ஆனா தெரியும் ...."

"அதான் எப்படி"
"தெரியும் தெரியும்... நீ கூட அவனை பார்க்கணும். பாதிரிகளால் பார்க்க முடியுது, வீரர்களால்.... அதனால் தான் அவர்கள் என்னை தொடவில்லை...."

இந்த மாதிரி அங்கங்கே பளிச் பளிச் வசனங்கள்.... பல வசனங்கள் கதாநாயகனுடைய தேடலை சார்ந்தே இருக்கிறது. குறிப்பா பல வசனங்கள் அந்த கால கட்டமைப்பை கேள்வி கேட்கிறது. இன்றளவும் அந்த காலத்தில் நடந்த பல கொடூரங்களை வாடிகன் அமைப்பினர் ஏற்று கொள்ளவே இல்லை. மனிதர்களை கொடுமை படுத்தியதெல்லாம் புனிதம் புனிதம் என்றே சொல்லி கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பு கொண்டு வருகிறார்கள்.
= = = = =
எனக்கென்னமோ அந்த பிளேக் நோயால் தாக்கப்பட்ட பெண்ணுடைய கதாபத்திரத்தை சரித்திர பெண் புரட்சியாளர் ஜோன் அப் அர்க் வைத்து சித்தரிக்க பட்டு இருப்பதாய் தோன்றுகிறது எனக்கு. அவங்களும் இதே மாதிரி தான் எரிக்க பட்டாங்க.
= = =

இந்த படமொரு ஒரு கிளாச்சிக் படம். பல விஷயத்துக்காக இந்த படத்தை கட்டாயம் பார்க்கணும். நான் முதலில் இந்த படத்தை காலதேவன் கேரக்டர்காகவே பார்த்தேன். அது கேரக்டர் இன்றளவும் மிக பிரபலம். பல இங்கிலீஷ் படங்களில் இந்த காலதேவன் உடைகளில் யாரையாச்சு பார்க்கலாம். பிறகு முக்கியமாக வசங்களுக்க்காகவே ஒருமுறை பார்க்கலாம்.

எனக்கு இந்த படத்தில் எல்லாம் புரிந்தது ஒன்றை தவிர ...ஏன் இந்த படத்தை கடைசி காட்சியில் DANCE OF DEATH யை காட்டி முடித்திருக்கிறார்கள்ன்னு. இந்த படத்திற்க்கான திரைப்பார்வை எழுதுமுன் இந்த DANCE OF DEATH ன்ன என்னனு படிச்சு பார்த்தேன். சுத்தமா புரியல ..... ஏறக்குறைய நம்ம திருநீறு அர்த்தத்தை தான் அதுவும் சொல்லுதுன்னு நினைக்கிறேன்.
வழக்கமாய் சில படங்களை நான் சிடி/டிவிடி COLLECTIONS வைச்சுக்க வேண்டிய படங்களுன்னு தைரியமா சொல்லுவேன். ஒன்னு அது பொழுதுபோக்கு படமா இருக்கும், இல்லாட்டி கிளாச்சிக் வகைராவா இருக்கும் .... எனக்கு இந்த மாதிரியான ரொம்பவே RAW வான சப்ஜெக்ட் படங்கள்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி தான். சோ ....நீங்களே இந்த படத்தை பார்த்து முடிவு பண்ணிகொங்க. ஒரு வேளை இந்த படம் உங்களுக்கு நல்ல viewing experience யை தரலாம்.
டிஸ்கி - படம் ஸ்வீடன் நாட்டு மொழி இருந்ததால் படத்தை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் எனக்கு புரிந்தவரைக்கும் சொல்லிருக்கிறேன். வசனங்களை சப் டைட்டில் உதவி உடன் என்னால் முடிந்த வரைக்கும் மொழிபெயர்த்து இருக்கிறேன்.

Monday, July 12, 2010

கலவை - இலக்கிய ஸ்பெஷல்


எனக்கு இன்னும் மதராசபட்டினம் HANGOVER போகல போல் இருக்கு. இன்னைக்கு மவுண்ட் ரோடுல ஒரு CALL முடிச்சிட்டு பஸ் ஏறி சென்ட்ரல் போனேன். அந்த ஏரியா முழுக்க பரிதி ஏமி எங்க எங்க போய் இருப்பாங்கன்னு யோசிச்சிட்டே சுத்திகிட்டு இருந்தேன்...அந்த ஏரி, சென்ட்ரல் ஸ்டேஷன் முகப்பு, கிளோக் ரூம்..... பொன்னியின் செல்வனுக்கு அப்பரும் என்னை இப்படி யோசிக்க வைச்சது இந்த படம் தான். MOST HAPPENING MOVIE OF RECENT TIMES ..... வாய்ப்புக்களே இல்லை.....பரிதி ஏமி காதலை வியக்க துடங்கி விட்டேன்...ஏமி ஐ லவ் யூ. கட்டாயம் இந்த படத்தை இன்னொரு வாட்டி பார்க்க போறேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.(பாவி பய பரிதி ஏமிக்கு ஒரு LIP KISS கூட தரமா விட்டுட்டானே)

= = = = =

என் கூட வேலை பார்க்குற ஆடு ஒன்னு John Grisham எழுதின நாவலை படி படின்னு இம்சை பண்ணிகிட்டே இருக்கு. அவர் அப்படி என்ன தான் எழுதி கிளிச்சி இருக்கார்ன்னு பார்க்க ஆசைய இருக்கு. ஏற்கனவே அரிப்பு எடுத்து DAN BROWN எழுதின THE LOST SYMBOL படிச்சதே இன்னும் ஜீரணம் ஆகல ..இதற்குள்ள இது வேறயையான்னு வெறுப்பா இருக்கு.

அதே மாதிரி என்னோட அண்ணனும் TO KILL A MOCKINGBIRD யை படிக்க சொல்லிகிட்டே இருக்காரு. நானும் அதோ படிக்கிறேன் இதோ படிக்கிறேன்ன்னு டாபசிகிட்டே இருக்கேன். அது வேற புல்லு புடுங்குற Pulitzer Prize வாங்கி இருக்காம். 1960 ல. ..... பார்போம்.

= = = = =
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த RUSKIN BOND பைய புள்ள மேல ஒரு தனி attachment தான், ஏன்னு தெரியல. ஸ்கூல்ல அவரோட கதைகளை படிச்சது கூட ஒரு காரணமா இருக்கலாம். இவரு குழந்தைகளுக்குன்னு எழுதபடுற கதைகளுல SPECIALIST யாம். இவரோட BOOKS எது முதல படிக்கலாம்ன்னு தெரியல. யாருக்காச்சு தெரிஞ்ச சொல்லுங்க ப்ளீஸ். இன்னைக்கு இவரோட Unforgettable People ங்குற புஸ்தகத்தை பார்த்தேன். கொஞ்சம் புரட்டி பார்த்ததுல. மனுஷன் நல்லாவே எழுதிருக்காரு. WIKI ல இவரை பத்தி இதை எழுதி முடிச்சதும் படிக்கணும்.

= = = = =

இந்த WEEKEND ல நம்ம ராம்கோபால் வர்மா ஓட SARKAR படத்தை YOUTUBE ல DOWNLOAD பண்ணி பார்த்தேன்..... முடிவு மட்டும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. மத்த நேரம் எல்லாம் தூங்கி தூங்கி தான் பார்த்தேன்....

ஆனா அன்னைக்கே இன்னொரு இந்திய இங்கிலீஷ் குறும்படத்தை பார்த்தேன்...கதை அருமையா இருந்துச்சு..ஆனா MAKING தான் செம சொதப்பல். ...

= = = = =

ரொம்ப நாள் முன்னாடி வாங்கி போட்ட சுஜாதாவோட கொலையுதிர் காலத்தை போன சனிகிழமை தான் படிக்க முடிஞ்சது. சும்மா சொல்ல கூடாது மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இத சின்ன வ்வயசுல பொதிகைல சீரியல்ஆ பார்த்து இருக்கேன்...அதை பார்த்துட்டு கதை மொக்கையா தான் இருக்கும்ன்னு முடிவு பண்ணி படிக்காம இருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு படிச்சு முடிச்ச அப்பரும் தான் தெரிஞ்சுது.
அதே மாதிரி தல எழுதின கரையெல்லாம் செண்பக பூ வாங்கி வைச்சு இருக்கேன் ...அதை படிக்க தான் நல்ல நேரம் பார்த்துகிட்டு இருக்கேன்....

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா சுஜாதாவோட மர்ம கதைகள்ன்னு புக் வாங்கினாரு..படிக்க கேட்டேன் ; ஆனா எனக்கு தர்ம துபாய்க்கு எடுத்துகிட்டு போயிட்டாரு. அதனால் கொஞ்சம் கோவமா இருந்தேன்....இந்த வாரத்துல அதை அனுபுறேன்ன்னு சொல்லி என்னை COOL பண்ணிட்டாரு.

இந்த மாசம் புதுமைபித்தனோட மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பையும் சாகி எழுதின சிறுகதை தொகுப்பையும் எப்படிபட்டாச்சு வாங்கி படிச்சுருனும்ன்னு முடிவு கட்டி இருக்கேன்..பார்க்கலாம். அதற்க்கு முன்னாடி D. H. Lawrence ஓட ஒரு நாவலையாச்சு படிச்சு முடிக்கணும்.

= = = = =


கொஞ்ச நாள் முன்னாடி அத்தை பையனை பார்க்க போன போது ...அவன் ROMAN HOLIDAYS ன்னு ஒரு படத்தை போட்டு காட்டினான். கதைன்னு பெருசா இல்லை.... ஆனா எடுத்து இருக்குற விதம் அருமையா இருக்கு. அதுவும் அந்த கடைசி சீன்ல வர CAMERA ANGLE .....ஒரு அழகிய கவிதை மாதிரி இருக்கும்.

= = = = = =

இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்குங்க ஆனா எழுத தான் முடியல. இலக்கிய ஸ்பெஷல்ன்னு லேபல் வேற போட்டுட்டேன்ல அதான், அதை எல்லாம் எழுதலாமான்னு சந்தேகமா இருக்கு. நீங்க என்னன்னா புஸ்தகம் படிக்கிறீங்கன்னு பின்னோடதுல சொல்லுங்க. நான் நாடகம்ன்னு பார்த்த நம்ம மெரீனா எழுதின மாப்பிளை முறுக்கு தான் படிச்சேன்.

அதே மாதிரி நம்ம பால சந்தர் எழுதின ஒரு நாடகத்தையும் படிச்சேன். சிரிப்பு நாடகம். விகடன் பிரசுரம் தான். ரைட்டு/....

= = = = =

செம்மொழி மாநாட்டை நான் டிவில கொஞ்சம் பார்த்தேனுங்க. அதுவும் பட்டிமன்றம். அதிலையும் நல்ல சொம்பு அடிச்சாங்க. அதுவும் எஸ்வி சேகர் - செம சிரிப்பு போலீஸ் மாதிரி பேசினாரு. அதுக்கு அப்பரும் நான் அதை நான் பார்க்கவே இல்லை.


= = = = =


இந்த குறும்படத்தை பத்தி நான் ஒன்னும் சொல்லல ..நீங்க உங்க கருத்தை சொல்லுங்க

Related Posts with Thumbnails