Pages

Saturday, February 12, 2011

பயணம் (2011) = Mivtsa Yonatan (1977)


கொஞ்ச மாதங்களுக்கு முன், என் அண்ணனோடு டிவிடியில் Mivtsa Yonatan என்ற HEBREW மொழி படத்தை பார்த்தேன். அந்த படத்தோட கதையும் ஏறக்குறைய இந்த பயணம் படத்தோட கதை மாதிரியே தானிருக்கும். Mivtsa Yonatan படம் 1976 யில் உகண்டா நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்டது. பயணம் படம் ஒரு வேளை கந்தகாரில் நடந்த விமான கடத்தலை வைத்து எடுக்க பட்டதோ ??? தெரியவில்லை.

விதவிதமான மனிதர்களை அறிமுக படுத்துவதில் இருந்து படம் ஆரம்பம் ஆகிறது. ஏன் என்ற கேள்வி குறியை நம்மிடம் விட்டுவிடுகிறார்கள். எல்லோரும் விமானத்தில் ஏறுகிறார்கள். விமானம் கிளம்புகிறது. பிறகு ஒருவன் டாய்லட் க்கு போகிறான். கண்ணாடியை கழுட்டி உள்ளே இருந்து துப்பாக்கி எடுக்கிறான். பிறகு வெளிய வந்த உடன், அவனோடு வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து கொள்கிறார்கள். விமானத்தை கடத்துகிறார்கள். விமான கோளாறு காரணமாய், திருப்பதியில் தரை ஏறக்குகிறார்கள். பிறகு என்னவானது என்பது தான் கதை.

டைட்டில் பாட்டை தவிர்த்து வேறெந்த பாடலுமில்லை.

நீண்ட நாள் கழித்து குடும்பத்தோ பார்க்க ஒரு படம் வந்திருக்கிறது.

அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற உணர்ச்சிகரமான படங்களை எடுத்த ராதா மோகன் முற்றிலும் வேறொரு தளத்திலான கதையை சொல்லிருக்கிறார். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சந்தோசம். அதே சமயம் இது போன்ற படங்களையெடுக்கும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா டைரக்டர் சார்???

பிறகு தற்கால அரசியல் அமைப்பை நல்லா கிண்டல் அடித்து இருக்கலாம். அதற்க்கான காட்சிகளில் டைரக்டர் சார் கோட்டை விட்டுட்டார். எனினும் புதிய முயற்சிக்காக டைரக்டர் ஸாருக்கு வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.

வசங்களெல்லாம் செம மொக்கை தனமாயிருக்கு. ஒரு வேளை நான் ரொம்ப எதிர்பார்த்து விட்டேனோ ?? அதே போல் பல இடங்களில் அழுத்தமில்லை.

முக்கியமாக டைரக்டர் சார் CASTING JUSTIFICATION சரியாக பண்ணவில்லை. குறிப்பாக "மேனேஜர்" சீனா .... எஸ்வி சேகரின் வண்ணகோலங்கள் நாடகத்தில் செமைய பட்டையை கிளப்பிருப்பர். பாவம் அவர்.

ஒரு சில காட்சிகளில் ஒரு பாதரி பேசுவது போல் வருகிறது...... எனக்கென்னமோ டைரக்டர் சொந்த செலவில் சூனியம் வைசுகிட்டார் என்றே தோன்றுகிறது. எதெல்லாம் இந்திய அரசின் படி இறையாண்மை ஆகும் என்று எனக்கு தெரியாததால், அதை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

பல இடங்களில் சினிமா தனம் தெரிகிறது.சட்டட்டேன்று காட்சிகள் மாறினாலும், கதை வேகமாக போனாலும் : VERY SLOW ...

பின்னணி இசையை என்னால் உணர முடியவில்லை.

பிறகு பெருசாய் சொல்வதற்கு ஒண்ணுமில்லை. ஒரு தடவை பார்க்கலாம். தமிழில் வித்தயாசமான முயற்சி.

டிஸ்கி : யாருப்பா அந்த AIR HOSTRESS .... படம் முழுக்க குஜால்ஸ்சா வராங்க ???

Sunday, February 6, 2011

கலவை - யுத்தம் செய்

ஹாய் மக்கள்ஸ் !!! எப்புடி இருக்கீங்க ??? நலமா ?? சதோஷமா இருக்கீங்களா ??? கொஞ்ச நாளா சொந்த செலவுல கம்ப்யூட்டருக்கு சூனியம் வைச்சதால பதிவெழுத முடியல ... இப்ப அந்த சூனியத்த எடுத்தாச்சு. இணையம் பக்கம் வராத நாளிலெல்லாம் நிறைய புஸ்தகம் படிச்சேன் கொஞ்சம் சினிமா பார்த்தேன், பழைய நண்பர்களுடன் போனில் அரட்டை அடித்தேன். அப்படி ஒவ்வொருத்தருக்க போன் பண்ணி பேசிகிட்டு இருக்கும் போது தான் பள்ளி கால நண்பன் அபிராம் ஞாபகம் வந்துச்சு. பள்ளி எனக்கு சிறப்பாய் ஏதும் சொல்லித் தராவிட்டாலும், ஒரு சில சிறந்த நண்பர்களை தந்து இருக்கிறது. அபியும் அவர்களிலொருவன். அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது

"டேய் மாமா நீ தரே சமீன் பர் பார்த்து இருக்கீயா ???"

"உனக்கு தெரியாதா.. நான் சுத்த சைவம் .... பிறவு ஜமீன் எல்லாம் இப்ப இல்லடா..."

"டேய் மொக்கை போடாம சொல்லு ...."

"பார்க்கலடா ..."

"கண்டிப்பா பாருடா .... நம்ம ஸ்கூல் லைப் மாதிரியே இருக்கும் ...ரொம்ப பீல் பண்ணுவ"

சரின்னு அடுத்த நாள் ஆபீஸ் விட்டு வரும் பொழுது அந்த படத்தோட சிடி வாங்கி வந்து, படத்தை பார்த்தேன். அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்துச்சு. பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பாடங்கள் புரியாது. அப்படி புரியாத பொழுதுகளிலெல்லாம் கனவு காண்பேன். ராஜா அரண்மனை, போர் காட்சிகள், SHERLOCK HOLMES ... இப்படி நிறைய. இது நான் PG படிக்கும் வரை தொடர்ந்தது. இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி கனவுகள் வரவதில்லை. ஆனால் எதையோ இழந்து விட்டது மாதிரியொரு உணர்வு எப்பொழுதும் இருக்கிறது.

= = =
யுத்தம் செய் - நேத்து தான் படத்தை பார்த்தேனுங்க. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.

அஞ்சாதே படம் பார்த்த பிறகு, எனக்கு அப்படி ஒரு கோவம் வந்துச்சு. அந்த படத்தோட வில்லன் மட்டும் என் கைல மாட்டி இருந்தான்னா, அப்படியே அம்மி கல்லை எடுத்து அவன் மண்டைய சுக்கு நூற உடைச்சு இருப்பேன். எனக்கு ஏதோ அப்பேற்பட்ட வில்லனுக்கு ஒரு தோட்ட குண்டு சரியான தண்டனையா தெரியல. அதனால படத்தோட டைரக்டர் மேலையும் கோவம் வந்துச்சு. செம கோவம். அந்த கோவம் எல்லாம் இந்த படத்தை பார்த்ததும் போச்சு : இருந்த இடம் தெரியாமல்.

நீண்ட காட்சிகள், ஒளி /ஒலி மொழிகள் போன்ற மிஷ்கினின் முத்திரைகளுடன் புதிதாய் ஓன்று - குறைந்த வசங்கள்.

எல்லா படங்களில் இருப்பது போலவே இந்த படத்திலும் சேரன் வருகிறார். காட்சி அமைப்புகளும், கேமரா கோணங்களும், கதை களமும் அவரது நடிப்பை சிறந்த முறையில் வெளிகாட்டி உள்ளது.

யாரிந்த கே ??? "மொழிகளின் அர்த்த வலிமை, அது பேசாத பொழுது தான் தெரியும்" என்று ஒரு வெளிநாட்டு பழமொழி உண்டு. அது போலவே படம் முழுவதும் வந்தும் வராமலும் பின்னணி இசையின் வலிமையை உணர்த்துகிறார் கே. அதிலும் கிளைமாக்ஸ்க்கு பிறகு CREDITS போடும் பொழுது வரும் இசை .... தயவு செய்து யாரும் மிஸ் பண்ணாதீங்க. (நான் பார்த்தது சத்யமில் .. அதனால் முழுமையாக போட்டார்கள். பிற தியேட்டர்களில் போடுவார்களா என்று தெரியவில்லை.)

மிஷ்கின் - மீண்டுமொரு முறை ....... !!!!!!!!

ஆரம்பத்திலும் கடைசியிலும் மிஷ்கினின் பெயர் வரவதில்லை. நூறு வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்பவர்கள் மத்தியில் "இந்த படத்தை இயக்கியது யார் ?" என்ற சர்ச்சை கட்டாயம் வரும். சங்ககால ஓவியங்களின் ஓவியர்களின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை.

டிவிட்டரில் ஒருவர் நந்தலாலா போல் ஒரு படத்தில் இருந்து காபி அடிக்காமல், இந்த தடவை பல படங்களில் காபி அடித்துள்ளார் மிஷ்கின்ன்னு சொன்னார். நான் உலக திரைப்படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. யுத்தம் செய் படத்தை நன்றாய் ரசித்தேன். வியந்தேன்.

முக்கிய குறிப்பு - இந்த படத்தின் மைய கரு, ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் வந்த "அலிபாபா"வில் சொல்லிவிட்டார்கள். எனக்கு ஒன்னு இரண்டு இடத்தில மட்டும் எனக்கு சினிமா தனம் இருப்பதாய் தோன்றியது.

என்னை போல் உங்களுக்கு செம ரவுசு விடும் நண்பர்களிருந்தால், அவர்களை உங்களுடன் இந்த சினிமாவிற்கு அழைத்து போகாதீங்க. ரசிக்க வேண்டிய படமிது. நான் தனியாக தான் போனேன்.

= = =
"நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அந்த மாற்றமாகவே நீ இருக்கு" - காந்திஜி

முஹம்மது யூனுஸ் - பங்களாதேஷில் ஏழைகளுக்கான வங்கி ஆரம்பித்து, அதற்காக பல விருதுகளை பெற்றவர். இவர் ஆரமித்த கிராமீன் வங்கி ஏழைகளுக்கான அடமானம் இல்லாத சிறு கடன்களை அவரது தொழில் வளர்சிக்காக தருகிறது.

இவர் ஆரம்பித்த பல திட்டங்கள், பல உலக பொருளாதார மேதைகளை கவர்ந்துள்ளது.இவர் ஆரம்பித்த MICRO - CREDIT திட்டம் இன்று உலக நாடுகளில் பலவற்றில் நடை முறையில் உள்ளது.

பொருளாதார மற்றும் சமுதாய வளர்சிக்காக படுபட்டதிற்காக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.

எனக்கு இவரை பற்றி இவ்வளவு தான் தெரியும், அதனால் இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள, இவருடைய சுயசரிதையான "BANKER TO THE POOR " என்ற புஸ்தகத்தை நேற்று வாங்கினேன்.

பொருளாதார மாற்றங்களில் விருப்பம் உள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.

(எதை எதையோ மொழிபெயருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த புஸ்தகத்தை மொழிபெயர்த்தால் நல்லாயிருக்கும்)

= = =
கொஞ்ச நாள் முன்னாடி என்னுடைய இளநிலை கல்லூரி கால நண்பனை பார்த்தேன். பாவம் அவனும் என்னை போல், வேறு வகையான பண முதலீடு திட்டங்களுக்கான மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறான். IN MARKETING WE ARE MENTALLY RAPED EVERYDAY . டி கடையில் உட்கார்ந்து டி சாப்பிட்டபடிய சிரித்து பேசி கொண்டிருந்தோம் . நான் நானாக இருக்கும் நேரங்கள் அவை. மீண்டும் கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போலொரு உணர்வு.

கொஞ்ச நேரம் கழித்து சோர்வாய் இருக்கிறதென்று, தலையை என் தோள் மீது சாய்த்து கொண்டான்.

கொஞ்சம் நேரம் கழித்து என் தலை முடியை தடவி பார்த்து, "டேய் மச்சி, சின்ன பையன் மாதிரி முடிய வைச்சுக்காத... கொஞ்சம் நிறைய வளர்த்துக்கோ ..."

பிறகு ஏதேதோ பேசி கொண்டிருந்தோம்.

கொஞ்சம் நேரம் கழித்து அன்றைய டார்கெட் இருவருக்கும் ஞாபகம் வர, அவசர அவசரமாய் அவரவர் வேலையை பார்த்து கிளம்பினோம்.

= = =
புத்தக திருவிழாவிற்கு நானும் போனேன். எனக்கும் என் அண்ணனுக்கும் சேர்த்து பல புத்தகங்கள் வாங்கினேன். பல பதிவர்களை சந்தித்தேன். அந்த சந்திப்புகளை பற்றியும் திருவிழாவை பற்றியும் புத்தகங்களை பற்றியும் பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். அதனால் நான் ......

அன்று ஆபீஸ் விட்டு புத்தக திருவிழாவிற்கு சனிகிழமை மதியம் மூன்று மணிக்கே கிளம்பி விட்டேன். நுங்கம்பாக்கம் ரயில் ஸ்டேஷனில் இருந்து இருவருக்கு போன் செய்தேன். ஒருவர் பிரபல டிவிட்டர் ikarthik _ (இவரை வானவில் வீதி கார்த்திக் என்று கூட சொல்வார்கள்), மற்றொருவர் என்னுடைய இலக்கிய அண்ணன் அத்திரி.

கார்த்திக் ஏற்கனவே திருவிழாவுக்கு போய் கொண்டிருந்தார். அதனால் அவரை ப்ரீயாக விட்டுவிட்டு அத்திரி அண்ணனை FOCUS செய்தேன். அனால் அவரோ "வருவேன் ஆனா வரமாட்டேன் " என்று வடிவேலு காமெடி கணக்காய் சொன்னார்.

நானும் திருவிழாவுக்கு போய் ஏழரை மணி ஆகிருச்சு, பனி ஜாஸ்தியாய் இருந்ததால் எனக்கும் ஏழரை. பிரதமர் வருகைக்கு கூட அவ்வளவு UPDATE வந்து இருக்காது. எனக்கு அத்திரி அண்ணனின் வருகையையொட்டி அவ்வளவு கிடைத்தது.

நானும் பொறுமை இழந்து, ஓடினேன் ஓடினேன் புத்தக திருவிழாவின் எல்லா பக்கமும் ஓடினேன் : இலக்கியவாதிகளின் இலக்கிய கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், பதிவாளர்களின் கூட்டத்தில் இருந்து தப்பி ஓடினேன், எல்லா கடைகளுக்கும் போனேன், புத்தகம் வாங்கினேன், வாங்கினால் காசு தர வேண்டுமென்று சொன்னார்கள், இயலாமை நிறைந்த பொருளாதார அடிமையாய் வெளிவந்தேன். வாலி வாளி நிறைய வார்த்தைகளை கொண்டு வந்து, அத்தனை கவிதையாக்கி கொண்டிருந்தார், அதை ஒரு ஆடு தலை தலை ஆட்டி ரசித்து கொண்டிருந்தது .

மணி எட்டரை. அண்ணன் போன் பண்ணினார்.

"டேய் தம்பி எங்க இருக்க ?"

"அண்ணன் டைம் யாச்சு ..கிளம்பிட்டேன் "

"அப்படியா ... வெளிய வாடா "

கூட்டத்தில் நத்தையாய் நகர்ந்து சென்று வாசலில் அத்திரி அண்ணனை பார்த்தேன் ...

என்னை பார்த்தார் ..பிறகு நான் வைத்திருந்த புத்தக மூட்டையை பார்த்ததும் "டேய் தம்பி எவ்வளவுக்கு புஸ்தகம் வாங்கின்ன ?"

சொன்னேன்.

"அடப்பாவி அடப்பாவி " என்றார்.

நான் சோர்ந்து போய் இருப்பதை பார்த்து, புஸ்தக மூட்டையை சுமந்து கொண்டு வந்தார். அவருடைய அன்பில் நெகிழ்ந்தேன் .

வழியில் டி கடையில் வைத்து "இலக்கிய சுமைதாங்கி" என்ற பட்டதை தந்தேன். ஹி ஹி ஹி ஹி

பிறகு ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்தபடிய கிண்டி வரை ரயிலில் வந்தோம். அங்கே அவர் இறங்கி கொண்டார். நினைவுகளுடன் நன் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி கொண்டேன்.

டிஸ்கி - அன்று இரவே கிழக்கு வெளியீடான "பேய்" யை படித்தேன். செம மொக்கை. மதனின் "மனிதனும் மர்மங்களும்" போலிருக்கும் என்று ஆசைப்பட்டு வாங்கினேன்.

= = =

அவ்வளவு தான். இரண்டு தளங்களிலும் நான் எழுதும் தொடர்கதையை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

KEEP SMILING

ENJOY LIVING

Sunday, November 14, 2010

கலவை - காமசூத்ராவுல முதல் வரி

நேத்து ஆபீஸ் போயிட்டு இருக்கும் போது கந்தசாமி படத்துல இருந்து "என் பெயர் மீனாகுமாரி" ங்குற பாட்டை கேட்டுகிட்டே போனேன். அதுல ஒரு வரி வரும் பாருங்க "காமசூத்ராவுல நான் முத வரி"ன்னு, என்னன்னு தெரியல நேத்து முழுக்க அதே வரியே பாடிக்கிட்டு இருந்தேன். ஆபீஸ் விட்ட உடனே லேண்ட்மார்க் க்கு போனேன். ஒரு வேளை அந்த வரிக்கு குஜால்ஸ் மீனிங் இருந்துட்ட என்னபண்ணுறதுங்குற சமுதாய அக்கறை தான்.

சரின்னு அங்கணன போய் காமசூத்ரா புஸ்தகத்தை எடுத்து, முதல் வரி என்னன்னு பார்த்தேன், பெரிய ஏமாற்றம். "தர்மமே அனைத்துக்கும் மூலம்"ன்னு இருந்துச்சு. நான் இந்த புஸ்தகத்தை கைல வைச்சு இருக்கிறதை பார்த்த ஒரு ஆன்டி, ஏதோ நான் அவங்களை பண்ணிருவேனுன்கிற மாதிரி அந்த பக்கம் போய்ட்டாங்க.

எதுக்கு அந்த பாடலாசிரியார் அந்த மாதிரி எழுதினாருன்னு தெரியல. ஒரு வேளை ரைமிங் ஆ வருதுன்னு எழுதிட்டரோ. சும்மனாச்சு ஒரு எழுதிட்டரோ. எனக்கு தெரிஞ்சு தேடல் இல்லாத படைப்பாளனின் படைப்புகள் காலத்தை வென்றதில்லை. (உதாரணம் - ஆரூர் ராமநாதன் எழுதிய வீர பாண்டியனின் மனைவி......(மொக்கைன்ன மொக்கை அப்படி ஒரு மொக்கை))

எனக்கு தெரிஞ்சு ஊடகங்களில் காமசூத்ரத்தை ஏதோ மூன்றாம் தர "சூப்பர் குத்து" புஸ்தகம் அளவுக்கு ட்ரீட் பண்ணியிருக்காங்க.

அதென்ன சூப்பர் குத்துன்னு YOU PEOPLE ASKING ஆ ????

போன வாரத்துல ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் இருக்கிற பிளட்பாம் ல போய்கிட்டு இருக்கும் ஒரு ஆடு அங்க இருக்குற கடை ல போய் நின்னு ஒரு மாதிரி சிரிச்சு, இந்த பெயரை சொல்லி கேட்டுச்சு. அவருக்கு ஒரு 35 வயசு இருக்கலாம். இன்னுமும் இந்த மாதிரியான புஸ்தகத்தை படிக்குறாரேங்குறதை நினைக்கும் போது
கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. ஒரு வேளை குடும்ப சுமையால் கல்யாணம் ஆகாமல் இருக்கலாம் .....

= = = = =

இந்த வெள்ளிகிழமை TARAPORE TOWERS பக்கம் போயிட்டு, ஹிக்கின்போதம்ஸ் க்கு வந்துட்டு இருக்கும் போது, அங்க இருக்குற மசூதி முன்னாடி நின்னுகிட்டு இருந்த டிராபிக் போலீஸ் மாமா, மாமுல் தராம திருட்டு தனமா எஸ்கேப் ஆக பார்த்த ஆட்டோகாரரை "தே.... மவனே .... திருட்டு பு....." ன்னு திட்டி காலரை பிடிச்சாரு. போலீஸ் ட்ரைனிங் ல இதையெல்லாம் கண்டுபிடிக்க கூட சொல்லிதராங்க போலிருக்கு. ஒருவனோட பிறப்பை விமர்சிக்க யார் அந்த போலீஸ் மாமாவுக்கு ரைட்ஸ் தந்தாங்கன்னு தெரியல. ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும், அந்த ஆட்டோகாரர் ஒரு தே ..மவன் என்பதையும், அவனுக்கு இருப்பது திருட்டு பு என்பதையும் கண்டுபிடித்த போலீஸ் மாமாவின் விஞ்ஞான அறிவும், பின்நவீன இலக்கிய பார்வையும் என்னை மெய்சிலிர்க்க வைச்சுருச்சு.

எனக்கு வந்த கோவத்திற்கு நேர போலீஸ் மாமாகிட்ட போய் "எப்புடி சார் அவருக்கு திருட்டு பு..... ன்னு கண்டுபிடிச்சீங்க...கழுட்டி ....." ன்னெல்லாம் கேட்க தோனுச்சு. ஆனா முடியல. பொருளாதார அடிமை வேஷம் அப்ப போட்டு இருந்தேன் .

= = = = =

பொதுவா ஆங்கில மோகம் அதிகம் இருக்கிற சமுதாயத்துல சின்ன பசங்களுக்கு அப்பெல்லாம் TREASURE ISLAND, JOURNEY TO CENTER OF THE EARTH ங்குற இரண்டு நாவலை தான் அதிகம் படிக்க குடுப்பாங்க. இது இரண்டும் செம கிளாச்சிக் வகைரவை சேர்ந்தது. இதுல JOURNEY TO CENTER OF THE EARTH - JULES VERNE எழுதினது. பொதுவா இவர் எழுதினன நாவல்களில் எல்லாம் ஏதொரு பயணம் சமந்தபட்டதாகவே இருக்கும். பசங்களுக்கு ஆங்கில நாவல்களை அறிமுகபடுத்த விரும்புறவங்க, அவங்களுக்கு இவரோட நாவலை தாரளமா தரலாம்.

= = = = =

இதுவரைக்கும் எது நடக்க கூடாதுன்னு நினைசேன்னோ அது நடந்துருச்சு. சாரு சாரோட ஒரு புஸ்தகத்தை வாங்கிட்டேன், என்னவாக போகுதுன்னு தெரியல. எப்பவுமே ஒரு புஸ்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் முன்னாடி அந்த எழுத்தாளரை பத்தின்ன எந்த பிம்பமும் மனசுல இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால் நேசமுடன்
படிக்கலாம்ன்னு இருக்கேன். படிக்காமலும் இருப்பேன்.

= = = = =

சமீபத்துல ஒரு ஆடு சொல்லுச்சுன்னு சாண்டில்யன் எழுதின ராஜபேரிகை படிச்சேன். அதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு,கதை
ஸ்ரீ ரெங்கத்தை சுத்தி வருதுன்னு அந்த ஆடு சொன்னதால் தான். செம மொக்கை. ஒரு கட்டத்துக்கு மேல சாண்டில்யன் குழம்பி போயிட்டாருன்னே நினைக்கிறேன். கதை வெள்ள காரன் பக்கமும் கொண்டுபோகமா, தமிழ் நாட்டுக்காரன் பக்கமும் கொண்டுபோகமா ....
ஒரு கட்டத்திற்கு மேல யாரு கதையின் நாயகர்கள் ..எது கதையின் களம்ன்னு படிக்கும் நமக்கே குழப்பம் வந்துரும் .

இந்த நாவல் வேற ஏதோ ஒரு அவார்ட் வாங்கி இருக்காம். ம்ம்ம் ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியனுக்கு போன் பண்ணிருந்தேன், அப்ப அவரு நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆனதற்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, ட்ரீட் கேட்டாரு. உடனே நான் "ட்ரீட்க்கு பதிலா ஒரு கவிதை சொல்லட்டுமா"ன்னு கேட்டேன் . அதுக்கு டென்ஷனாகி அவரு "ஆணிய புடுங்க வேண்டாம்"ன்னு சொல்லிட்டாரு.

= = = = =

METROPOLIS ன்னு படம். மௌன படங்களில் வந்து கொண்டு இருந்த காலத்திலையே வந்த மிக பிரமாண்டமான படம். இந்த படத்துக்கு நான் விமர்சனம் எழுதலாம்ன்னு இருக்கேன். (அந்த கொடுமையை எல்லாம் நீங்க தாங்கி தானாகணும்.) யாரும் MISS பண்ணாதீங்க. இந்த படம் இப்ப YOUTUBE ல முழு படமாகவும், பார்ட் பார்டாகவும் கிடைக்குது. MAD SCIENTIST வகைராவில் இது தான் படம்ன்னு சொல்லுறாங்க. நான் கொஞ்சம் தான் பார்த்திருக்கேன். மீதியை அடுத்த வாரம் தான் பார்க்க முடியும்.

= = = = =

சரி மக்கள்ஸ் , இன்னும் இரண்டு விஷயம் பாக்கி இருக்கு. அதையெல்லாம் அடுத்த கலவை ல முடிஞ்சா சொல்லுறேன்.

BYE

KEEP SMILING

ENJOY LIVING

Sunday, November 7, 2010

தினசரி வாழ்க்கைக்கு (DAILY LIFE ) இரண்டு வயசு


இதனால் எல்லோருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா நான் பதிவு எழுத வந்து இரண்டு வருஷம் ஆகபோகுதுங்கோ .... போகுதுங்கோ:). ரொம்ப ஆச்சரியமா இருக்கு : பதிவு எழுதுவதினால் நான் நிறைய நல்ல விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன். அதைவிட நிறைய நண்பர்கள் எனக்கு கிடைச்சு இருக்காங்க.

நான் எக்ஸாம் ல எழுதினதையெல்லாம் அதை திருத்துற வாத்தியாரே படிச்சு இருப்பாரா ங்கிறது சந்தேகம் தான். ஆனா நான் என்ன எழுதினாலும்(மொக்கை போட்டாலும்) ஏதோ பழகின தோஷத்திற்காச்சு படிச்சுட்டு "டேய் டம்பி, இவ்வளவு டம்மியா எழுதாதே..உருபடிய எதாச்சு எழுதுன்னு" சொல்லுறதுக்காச்சு கொஞ்சம் பேர் இருக்காங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருக்கு.

அமெரிக்காவுல இருந்தும், சுவிஸ் ல இருந்தும், லோக்கல் மதுரைல இருந்தும் என்னோட பதிவுகளை படிச்சிட்டு சிலபேர் நேசமா போன் பண்ணி பேசும் பொழுதெல்லாம் எவரெஸ்ட் அளவுக்கு சந்தோஷமா இருக்கும் : அதே சமயம் ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன்ன இவங்களாவது அடுத்த பதிவுல மொக்கை போடமா உருபடிய எழுதணும் ங்குற பயம் தான். அதனால தான் கதாபாத்திரம் சிறுகதையை எழுதிட்டு வேறொன்னும் எழுதல. (இரண்டு சிறுகதை ரெடி ஆகிருச்சு (SCIFI ஒன்னு, மாயஜாலம் ஒன்னு). STORY PLOT பலபடுதுற வேலை நடந்துகிட்டிருக்கு

(தொலைந்த சொர்க்கம், மேவி...ஐ லவ் யூ ன்னு நான் எழுத ஆரம்பிச்சு, பிறகு தொடர முடியாமல் போன இரண்டு தொடர்கதை வேற பாதில அப்படியே இருக்கு)

)

நான் பதிவெழுத வந்த ஆரம்பத்துல நிறைய பேருக்கு பின்னோட்டம் போடணும்ன்னு சொன்னாங்க, இன்னொருத்தர் அவங்களுக்கு பின்னோட்டம் போட்ட தான் அவங்க நமக்கு பின்னோட்டம் போடுவங்கணும் சொன்னாரு. நானும் ஆரம்பத்துல சிலபலருக்கு பின்னோட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன், ஆனா பாருங்க அப்பரும் வேலை பளு காரணமா இப்பெல்லாம் யாருக்குமே பின்னோட்டம் போட முடியறது இல்லை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் ஏதோ கொஞ்சமாய் எழுத முடியுது. அதனால யாரும் என்னை தப்பாக நினைச்சிக்க வேண்டாம்ன்னு கேட்டுக்குறேன்.

இந்த சமயத்துல எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான தகவலை சொல்ல போறேனுங்கோ ( ஒபாமா இந்திய வந்திருப்பதையொட்டி இந்த தகவல் வெளியிடு) ..... அதுயேன்னா இனிமேல தினசரி வாழ்க்கை ல கொஞ்சம் இலக்கியத்தரமா எழுத போறேன், மொக்கை போடுறதெல்லாம் மேவியின் பகிர்வுகள் ல வைச்சுக்கலாம்ன்னு இருக்கேன். நான் இலக்கிய தரமா எழுதுறது மூன்றாம் உலக போர் வர காரணமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . BECAUSE SINCE CHILDHOOD WRITING WAS ALWAYS BEING MY PASSION...

இதுக்கு மேல சொல்லுறதுக்கும் ஒண்ணுமில்லை, இதோட முடிச்சுக்குறேன். இந்த பதிவை படிக்கிறவங்க முடிஞ்ச உங்களோட கருத்தை பின்னூட்டமாக சொல்லிட்டு போங்க.

= = = = =

டிவிட்டர் ல கூட நான் இருக்கிறேனுங்கோ. அதுல என்னைய பிடிக்க இங்க கிளிக் செய்ஞ்சு, என்னை பின் தொடருங்கோ ...

Sunday, October 24, 2010

கதாபாத்திரம் - {சிறுகதை }


"சார் அடுத்த வார இஷ்யூ ரெடி ஆகிருச்சு .... நீங்க எப்ப கதைய    அனுப்பி வைக்க போறீங்க ?"

இரவு மணி பத்து. அனுப்பி இருப்பேன், ஆனால் கதையை எப்படி முடிப்பது என்று தான் குழம்பி இருந்தேன். சரி, முன்னர் எடுத்த முடிவின் படியே ...." வயற்றில் கத்தி குத்து வாங்கியவன் , பூமியில் சரிந்தான். ரௌடிகள் அவனது காதலியை கதற கதற மறைவுக்கு இழுத்து செல்வதை மௌனமாய் பார்த்துக் கொண்டே இறந்தான்."

மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. கதையை மெயிலில் அனுப்பிவிட்டு ஜன்னல் பக்கம் வந்து நின்றேன். மழை. யுவா, அப்பாஸ் இன்னும் வரவில்லை : WORKAHOLICS .... ஒன்னும் செய்ய முடியாது.

இரவு, மழை மற்றும் நான் தனிமையில். தனியாக இருக்கும் எனக்கு துணையாக மழையும் இரவும் வந்து தனிமையில் இருந்தன.

காதலுடன் காம்மும் வருவது போல, என் தனிமையுடன் பயமும் கலந்திருந்தது.

டொக் டொக் .....

அறை கதவை யாரோ...... அப்பாஸ் அல்லது யுவாவாக தானிருக்க வேண்டும் என்று நினைத்த படிய கதவை திறந்தேன்.

அங்கே ....அவன், அறைக்கு வெளியே. வெள்ளை சட்டை. வெள்ளை பேண்ட். மழையில் நனைந்து இருந்தான். சட்டையில் நிறைய சேறு.

வயற்றில் சொருகியபடி ஒரு கத்தி. !!!!!! ரத்த அடையாளங்கள். பேண்ட்டில் சட்டையில்.

நிமிஷ பயங்கள் வந்து போனது. எதாவது நண்பர்களின் விளையாட்டாக இருக்குமோ என்ற எண்ணம் வந்த பொழுது கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் அதைவிட பயமே அதிகம் தந்தான் அவன் எனக்கு.

இதயம் இரண்டுக்கு ஒன்றாகவும், ஒன்றுக்கு இரண்டு முறையாகவும் இயங்கியது. ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி இதயத்தை புண் ஆக்கியது.

சிரித்தான். நாராசமாய் இருந்தது. உள்ளே வந்து விடுவனோ என்ற பயத்தில் அறை கதவை மறைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.


அனுமதில்லாமல் உள்ள வந்தான். பயத்தில் அவனை நோக்கியபடி நான் பின்னோக்கி வந்தேன். அவன் சுவாசிக்கவில்லை.

கவனித்தேன் வயற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அறையில் குளுமை அதிகமானது. என் இடது புருவம் தொடர்ச்சியாய் துடித்தது. தூரத்தில் நாய் பசியின் காரணமாக சத்தமிட்டது.

அதர்ச்சியில் இருந்து வெளிய வந்த பொழுது அவன் சோபாவில் அமர்ந்து இருந்தான், நான் எதிர் சோபாவில்.

இடது கையால் அவன் வயற்றில் குத்தி இருந்த கத்தியை மெல்ல மெல்ல ஆட்டி ஆட்டி எடுத்தான். கத்தியில் ரத்தம் சொட்டி கொண்டிருந்தது. வயற்றில் இருந்து எதுவும் வெளியேறவில்லை. மரண பயம். குளுமையிலும் வேர்த்தேன் அதிகமாக.

அப்பாஸ், யுவனை காணவில்லை. கடிகாரம் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை.

அவன் மட்டும் .....நானும்


"யா ..யா ...யாரு நீங்க ?"

சிரித்தான்.

"யார்ன்னு கேட்குறான்ல "

சிரித்தான். சிரித்தான்.... பார்வையால் சிறைபிடித்தான்.

முதல் முறையாக ஏதோ பேசினான். உதடுகள் அசைந்தது. சத்தம் எனக்கு கேட்கவில்லை. ஒரு முறை தலையை உலுக்கி கொண்ட பிறகு..

"நா அசோக் . ஆசையா ஒரு பொன்னை காதலிச்சேன்..."

நானொண்ணும் பேசவில்லை. என் உடம்பில் இருந்த வாயு மட்டும் மெல்லிய சத்தம் போட்டான்.

"........ நாங்க இரண்டு பேரும் டூர் போகும் போது, வழில சில ரௌடிங்க ..."

நடுவில் என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் கதை நான் முன்பே கேட்டது போல் ஒரு உணர்வு.

"....... அதுல ஒரு ரௌடி குத்தின கத்தி தான் இது ..."

அதிகமான வேர்வை... படபடப்பு .. எல்லாம் எனக்கு. ஒரு வேளை ஜாம்பி பேய் ஆகா இருப்பானோ......

"ஏன்டா என்னைய கொன்ன?"

கேள்வி என்னை நோக்கி தான் என்று புரிந்த பொழுது, ஒன்றுமே புரியவில்லை எனக்கு.


"நான் எப்ப உன்னைய கொலை பண்ணின ...."


"இப்ப தான் ... ஒரு அர மணி நேரத்துக்கு முன்னாடி ......" என்றபடி கம்ப்யூட்டரை கட்டினான்.

கொஞ்சம் நேரத்தில் பிரமாண்ட பயங்கள் வந்து போனது, சில பயங்கள் அப்படியே தங்கியது. கதையில் நான் கொன்ற அசோக் எப்புடி நேரில் வரமுடியும் ??

"கதை எழுதினன என்ன வேண்டுமானாலும் எழுதுவிய ??"

"ஆமா ..என் கதை நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்......"

"என்ன வேண்னுமானாலும் எழுதிவிய ....." சிரித்தான்.

பக்கத்தில் நின்று என் கையை பிடித்தான். அது ஜில்லிட்டு போயிருந்தது.

"நீ எழுது...யாரு வேண்டாம்ன்ன ....ஆனா எதுக்குடா என்னை கொன்ன ...??"

ஒன்னும் பேசவில்லை . கோவபட்டான்.

அவன் பிடித்திருந்த என் கையை நோக்கி ..... கத்தியை மேலே தூக்கி கீழே இறக்கினான். ஆபத்தை
உணர்ந்த நான் அவன் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். இருந்த சின்ன வீட்டில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. கடைசியாக போராட சக்தில்லாமல் குளியலறையில் ஒளிந்து கொள்ள அதை நோக்கி ஓடினேன். உள்ள நுழைந்து கதவை முட நினைத்த நேரத்தில் கதவை தள்ளி கொண்டு வந்து விட்டான்.

அவன் கதவை தள்ளிய வேகத்தில் நான் கீழ விழுந்து விட்டேன். அறையின் மூலைக்கு உட்கார்ந்த படியே வந்தான். மேலும் போக முடியவில்லை.

பக்கத்தில் நெருங்கி வந்தான்.

"ஏன்டா என்னைய கொன்ன ..... அவ என்னடா உனக்கு பாவம் பண்ணினா ...."

அவன் கோவத்தின் உச்சியில் இருந்தான். முகம் காட்டி தந்தது.

கத்தியை ஓங்கி என் தொடையில் குத்தினான். வலி உயிர் போனது. தாங்க முடியவில்லை. அழுவ ஆரம்பித்தேன்.

என் வயற்றை நோக்கி கத்தியை ஓங்கிய பொழுது ..... நாம் அவ்வளவு தான் என்று எண்ணிவிட்டேன்.

வெளிய பைக் சத்தம் கேட்டது. யாரோ படியில் ஏறி வருவது கேட்டது.

"மேவி ..மேவி ...."

"யாரு ..யாரு ...அது யாரு ..."

"தெரியல ...."

அவன் முகத்தில் பதட்டம் மறைந்தது: சிரித்த படிய பின்னாடி போனான்.

பிறகு அவன் "அ" , "சோ" , "க்" என்று எழுத்துக்களாய் மாறி மறைந்து போனான்.
Related Posts with Thumbnails