ஹாய் மக்கள்ஸ் எப்புடிருக்கீங்க .... நல்ல இருக்கீங்க தானே. நமக்கு என்ன எப்பவும் போல ராஜா மாதிரி இருக்கேன். எவ்வளவு நாளைக்கு தான் வார்த்தைகளால் ஹாய் சொல்லிக்கிட்டு இருப்பதுன்னு : இந்த பதிவுல முதன் முறையாக, வேறு யாரும் சொல்லாத முறையில் ஹாய் சொல்லிருக்கேன். வேற யாரும் கையை காட்டி ஹாய் சொன்னதில்லை. .... எப்புடி நாங்களும் இலக்கியவாதி ஆகிட்டோம் லநம்ம வைரமுத்து சார் அரசியலுக்கு வர போவதா கேள்விபட்டேன். கட்டாயம் அவரு திமுக பக்கம் தான் போவாருன்னு நினைக்கிறேன், ஏன்ன்ன அந்த அளவுக்கு சமீப காலமா கலைஞர் ஐயாவுக்கு சொம்பு அடிச்சு இருக்கார்ல. எனக்கென்னவோ இவரை விட அந்த சின்ன வயசு கவிஞர் தான் நல்ல சொம்பு அடிச்சு இருக்குறத தோணுது. பைய புள்ள செம உஷார் போலிருக்கு.
இதை விட காமெடி ....நம்ம கலைஞர் ஐயா சொல்லுறது தான் ..."தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடுங்கள்". இவர் லெட்டர் எழுதுற வேகத்துக்கு இவரை தூக்கி வேற எங்கயாச்சு தான் போடணும். அப்படியே தூக்கி போட்டாலும், போட்டவன் கொலை கேஸ் ல மாட்டிபான், அதனால யாரும் அப்படி செய்ய மாட்டாங்க ங்குற தைரியத்துல சொல்லிக்கிட்டு இருக்காரு. ஐயா மக்கள்ஸ் ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டாங்க. அதனால எதை பேசுரதுனாலும் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க. பதவிக்காக திமுக மக்கள்ஸ் யே அப்படி செய்தாலும் செய்வாங்க. be carefull ....நான் உங்களை சொன்னேன். (இதை எதிர்த்து பின்னோட்டம் போடுறவங்களுக்கு பெண் சிங்கம் பட திருட்டு சிடி அனுப்பி வைக்க படும்)
இன்னொரு விஷயம் நம்ம மக்கள்ஸ் க்கு எப்பவுமே பாதிப்பு வந்த தான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க .... யாருக்கும் precautionary activities பத்தி யோசிக்குறதே இல்ல. இன்றைய நாளுல இந்த சம்பவம் மாதிரியே பல இடங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு இயற்க்கை விழிப்புணர்வு அறிக்கை சொல்லுது.
(ஆப்பு ங்குறது மக்களுக்கு யாரும் தேடி வந்து வைக்குறது இல்ல ...அவன் அவன் அவனே தேடி போய் அது மேல உட்கார்ந்துக்குறான்)
அப்படியே நான் அதை பத்தி எழுதினாலும் .... கொஞ்சம் பின்னோட்டம் , நிறைய ஹிட்ஸ் , கொஞ்சம் VOTE தான் கிடைக்கும், பிறகு அதை பத்தி இந்த சமுதாயம் மறந்துரும். அதனால என்ன உபயோகம்ன்னு நிறைய யோசிச்சு இருக்கேன். பிறகு அதை எல்லாம் எழுதுவதற்கும் நமக்கு டைம் இல்லைங்க ......
உடனே அவரு ...."நீங்க எழுதுங்க அப்ப தான் நல்ல இருக்கும்" அப்படின்னு சொல்லுறாரு. (இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்புது ??)
= = = = =
பிராத்தனை கூட்டத்துக்கு வரேன்னு சொன்ன ஆளு வரல ங்கிறதுக்காக ஒரு ஆடு என்னை கூட்டிகிட்டு அங்க போய் உட்கார வைச்சுருச்சு. சரின்னு நான் பொறுமையா கேட்கிட்டு இருந்தேன். ஒரு சமயத்துல அந்த மத போதகர் ஒரு பொய் சொன்னாரு .... உடனே நான் உண்மைய சொல்லலாம்ன்னு ஆரம்பித்த போது ...உடனே அந்த ஆடு இரண்டு வெங்காய ரவா தோசை வாங்கி தரேன் பேசாம இருக்குன்னு சொல்லிருச்சு ...நானும் ஒன்னும் பேசல. நமக்கு கொள்கையை விட ரவா தோசை தானே முக்கியம்......
= = = = =

