Pages

Showing posts with label பீலிங்க்ஸ் ஒப் இந்தியா. Show all posts
Showing posts with label பீலிங்க்ஸ் ஒப் இந்தியா. Show all posts

Wednesday, February 27, 2013

சிறு போராட்ட குழுக்கள்


சுகந்திர போராட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களை தவிர்த்து நிறைய பேர் சிறு சிறு குழுக்களாய் சுகந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு உள்ளார்கள். ஆனால் சோகம் என்றால் பிரிட்டிஷ் அரசும் அன்றைய காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் இந்த சிறு குழுக்களை கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்றே அடையாள படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களுக்கு சுகந்திர போராட்டத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அத்தனை பங்கு இந்த சிறு குழு வீரர்களுக்கும் இருக்கிறது. 

கல்கி அவர்கள் தனது கிளாச்சிக் நாவலான "அலை ஓசை"யில் இவர்களை பற்றியும், இவர்களது செயல் பாடுகளை பற்றியும் விரிவாகவே எழுதிருப்பார். அதன் மூலம் தான் எனக்கும் இவர்களை பற்றி தெரிய வந்தது. 

இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த குழுக்களாகவும், மதம்  சார்ந்த குழுக்களாகவும் தான் இருந்தார்கள். அதுவும் மதம் சார்ந்த குழுக்கள் தான் அதிகம் பரவலாக இருந்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் அன்றைய மக்களிடையே நிலவி வந்த மதம் / ஜாதி சார்பு தன்மையே. 

காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவும் அப்படிப்பட்ட மதம் சார்ந்த போராட்ட குழுவை சேர்ந்தவன் தான். 

குறிப்புகளின் படி பார்த்தால், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்த மாதிரியான போராட்ட குழுக்கள் அதிகம் இருந்தன. அல்லது தென் இந்திய போராட்ட குழுக்களை பற்றி நான் அதிகம் படிக்கவில்லை என்று வைத்து கொள்ளலாம். 

இவர்கள் பலர் காந்திய வழியை ஆதரித்தும் எதிர்த்தும் கொள்கைகளை கொண்டவர்களாக இருந்து உள்ளனர். அனுஷிலன் சமிதி, ஜுகாந்தர், பெங்கால் தோழர்கள், மோகன் பேகன் ஓட்டபந்தைய  குழு ஆகிய குழுக்களை பற்றி குறிப்புகள் கிடைக்கிறது. சில பல குழுக்களை இந்தியாவிற்கு வெளிய இருந்தும் ஆதரவு இத்தகைய போராட்ட குழுக்களுக்கு தந்து உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிதி உதவி, அடைக்கல உதவி என்ற அளவிலேயே இருந்து உள்ளனர். களப்பணியும் சிறுது உண்டு இவர்களுக்கு. 

இன்றைய காலத்தில் இந்த குழுக்களை பற்றிய  சினிமா பதிவுகள் என்று பார்த்தால் கொஞ்சம் குறைவு தான், காரணம் அரசியல், இன்னொன்று இந்த குழுக்களை பற்றி விஷய ஞானம் இல்லாதமை. புனைவு / அபுனைவு புத்தக பதிவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.

நேற்று நான் படித்த முக்கிய குறிப்புகளின் முக்கியமானதாக கருதுவது சிட்டகாங் ராணுவ தாக்குதல் தான், ஏனென்றால் லாகன் புகழ் அஷுடோஷ் கோவரிகர் தயாரித்து இயக்கிய   க்ஹெளின் ஹம் ஜி ஜான் சே  (Khelein Hum Jee Jaan Sey ) தான். இது ஏதோ புத்தகத்தை தழுவி எடுத்து உள்ளனர். 

சோகம் என்னவென்றால் இந்த சிறு குழுக்களை கலவர காரர்கள் /  தீவிரவாதி என்றே அடையாள படுத்தி வந்துள்ளதால், சுகந்திர இந்தியாவில் தியாகி பென்ஷன் பலருக்கு கிடைக்கவில்லை. அதை அவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேற விஷயம். 

இவர்களது காலம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்த வரைக்கும் அது 1900 க்கு பிறவு தான். 

வன்முறை பாதையில் சென்றவர்களுக்கு ஆயுதம் வழங்கி பல வெளிநாட்டவர்களுக்கும் உதவி செய்து உள்ளதாக தெரிகிறது.சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு இம்சை தருவதையே கொள்கையாக வைத்து கொண்டவர்களும் உண்டு. உதாரணம் லக்நொவ்வில் நடந்த காகோரி ரயில் தாக்குதல். மாபெரும் கூட்டு முயற்சி. 

நட்புகளே, உங்களுக்கு இந்த சிறு போராட்ட குழுக்களை பற்றி விவரம் எதாவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.  

குறிப்பு - 


இதை படித்து விட்டு நண்பர் கண்ணா.கே அவர்கள்  கூறியது - 

எனக்கு இந்த கவிதைதான் ஞாபகத்துக்கு வருது


'மகாபாரதம் 

இதிகாசமானது.

பகவத்கீதை

வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்

அனைவரும் கடவுளானார்கள்.

எல்லாம் சரி,

கூட்டம் கூட்டமாக

வெட்டிக்கொண்டும்

குத்திக்கொண்டும்

செத்துப்போன

சிப்பாய்கள்

என்ன ஆனார்கள்?' ''

= = = 


பின் சேர்க்கை :- 

விவரங்களை காலையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்த பின்...யோசனைகள் இது குறித்தானது பலம் பெற்றது. எப்படி போராடி இருந்தாலும் எல்லோரது நோக்கமுமொன்றானதாக தானிருந்திருக்கிறது. ஐயம் இல்லை. அனால் ஒரு விழா என்று வந்துவிட்டால் ஏதோ சிலரை அல்லது ஒரு வகுப்பினரை மட்டுமே நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரும் இயக்கத்தோடு கூட்டு சேரவில்லை இவர்கள்.... அதனால் குறிப்புகளில் கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்று பெயர் பெற்று விட்டனர். 

எல்லாவற்றிலும் இருக்கும் புகழ் சார்பு மயக்கம் இதிலும் மக்களிடத்தில் பரவி உள்ளதாகவே இருக்கிறது. 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு காகோரி ரயில் தாக்குதலை பற்றி இன்னும் விவரமாக படிக்கலாமென்று தேடல்பொறி உதவி கொண்டு தேடினால், அச்சம்பவத்தை காகோரி ரயில் கொள்ளை என்று பலர் குறிப்பீட்டு எழுதி உள்ளார்கள். கஷ்டமாக இருந்தது. என்ன ஏதென்று கூட படிக்கவில்லை. அப்பக்கத்தை மூடிவிட்டேன். ஆதரங்களே தன்மை யற்று இருக்கிறது ...இவ்விஷயத்தில். 

அதுசரி இந்திய நாட்டின் கல்வி நூல்கள் எல்லாம் அரசியல் சார்பு கொண்டதாக தானே இருக்கிறது, அப்படி இருக்கும் பொழுது சிறு போராட்ட குழுக்களின் நியாய பக்கங்கள் எவ்வாறு எழுத படும் ?? 

நான் பார்க்கும் / கேட்கும் விவாதங்கள் யாவும் பிரபல தன்மை கொண்டவர்களின் சுற்றியே உள்ளது. இந்த சிறு போராட்ட குழுக்கள் பற்றிய விவரங்கள் தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தவைகளை படித்துவிட்டு, முழுமையாக பகிர்கிறேன். 

Saturday, February 16, 2013

போலீஸ் மாமாவும் இன்சூரன்ஸும்


இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைக்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்குறப்ப, ரோடு ல வைச்சு போலீஸ்காரங்க மடக்குனாங்க. கான்ஸ்டபிள் ரோட்டு நடுவுல நின்னு கவட்டைய விரிச்சு ..அங்குட்டும் இங்குட்டும் போயி வித்தை காட்டிகிட்டு இருந்ததால, லேசா தடுமாறினேன். அதனால பைக்க நிறுத்தின்ன பிறவு அவர் வந்து 

"ஏன் டிரிங்க்ஸ் பண்ணி இருக்கியா" ன்னுன்னாரு 

உடனே நம்ம மூஞ்சிய பார்த்த விஜய மல்லய்யாவுக்கு தூரத்து சொந்தம்ன்னு நினைச்சுட்டாரோன்னு சந்தேகம் எனக்கு தோணுறதுகுள்ள .....

"பைக்க ஓரமா நிறுத்திட்டு ...எஸ்ஐ கிட்ட போய் லைசென்ஸ் காட்டு"

சரின்னு அவர்கிட்ட போனப்ப வழக்கமான கேள்விகளை கேட்ட பிறவும் என்னைய விடுற மாதிரி தெரியல.

"எங்க வேலை பார்க்குற"ன்னு கேட்டாரு 

கொம்பனி பெயர சொல்லிட்டு, டார்கெட் பத்திய கவலைல "ஸார் நம்ம கிட்டக்க ஒரு அருமையான பாலிசி இருக்கு ..மாசமாசம் மூவாயிர ரூவா தான் சார் ...."...சத்தியமா எதார்த்தமா தான் பதார்த்தம் சுட்டேன். 

ரொம்ப அனுபவ பட்டு இருப்பார் போல, பீதில பேதி வந்த மாதிரி "சரி சரி...வீடு இங்கதானே சொன்ன..போ  போ"ன்னு விரட்டாத குறையா அனுப்பி வைச்சுட்டாரு. 

அந்த நேரத்துல பாஸ் போன் கால் பண்ணினாரு, கோத்து விடலாமான்னு யோசனை வந்துச்சு.... திங்கள் காலை ஆபீஸ் போகணும்ங்குற மரண பயத்துல அந்த ஐடியாவை விட்டுட்டேன்.     

ம்ம்ம் இன்சூரன்ஸ் விக்குறதுல கூட நன்மை இருக்க தான் செய்யுது :))))

Monday, November 5, 2012

**விலாசம் இல்லாத மன்னிப்பு**

மேகங்களின் உராய்தலை போல் 
வசவுகளை அவள் மேல் எய்த பின் 
விலாசம் இல்லாத மன்னிப்பு மடலில்
வசவுகளின் மிகுதமையை ஈடு செய்யுமோ
தெரியாமல் என் மன்னிப்புகளை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டேன் 
மனதிற்குள் விலாசங்கள் இல்லாத அந்த மடல் அவளுக்கு கிடைக்கும் 
அல்லது கிடைத்துவிட்டது போல் ஒரு சித்திரத்தை மனதிற்குள் வரைந்து கொண்டுவிட்டேன். 

Thursday, December 15, 2011

**கலவை** - }} மம்பட்டியான் {{ கூகிள் பஸ் {{{


கூகிள் கம்பெனிகாரங்க இதோ அதோன்னு இழுத்தடிச்சு, பூச்சாண்டி எல்லாம் காட்டி இன்னைக்கு காலைல முடிட்டாங்க. ஏதோ ரொம்ப நெருங்கி பழகின தோஸ்த் என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சு. ஒரு வருஷம் போனதே தெரியல. சண்டை, பிடிவாதம்ன்னு பக்கவாதம் வராத குறையா போனாலும், அதுல இருந்த ஒரு ப்ளஸ் பாயிண்ட் :::: அது எல்லோரையும் ரொம்ப அக்டிவ்வா வைச்சு இருந்துச்சு. நிமிஷத்துல லைக்கிங், காரி துப்புறதுன்னு சுவாரசியமா போச்சு. 

அரசியல் டிபேட் நடுக்குற இடத்துல எல்லாம் சும்மா ஒரு லைக்கிங்கை போட்டுட்டு வேடிக்கை பார்பேன். பதிவுலகம் போலில்லாமல் எல்லோரையும் ஒரே இடத்துல படிக்க முடிஞ்சுது. பல நட்புகள் உருவாக காரணமாகவும் இருந்தது. முக்கியமா பதிவு எழுதுற டைம்ல  சில பல புஸ்தகம் படிச்சேன். 

கூகிள் பஸ்ஸை என் வாழ்க்கைல மறக்கவே முடியாது :::: சென்னைல இப்ப இருக்குற வீட்டை கட்ட ஆரம்பிச்ச போது, நான் பஸ் விட ஆரம்பிச்சேன், இப்ப கட்டி முடிச்ச எங்களோட வீட்டுல இருக்குற என்னோட ரூம்ல உட்கார்ந்துகிட்டு இந்த பதிவை டைப்பிக்கிறேன். வயசான காலத்துல நினைச்சு நினைச்சு சிரிக்க நிறைய விஷயம் கிடைச்சுது  இந்த கூகிள் பஸ் மூலம். அந்த அனுபவங்களை  மனசுல சேமிச்சு வைச்சு கிட்டேன். 

இப்ப கூகிள் ப்ளஸ்ல அதே மொக்கைய ஆரம்பிச்சு இருக்கேன் :::: உருப்படியா அதுல போஸ்ட்டிக்க கொஞ்ச நாளாகும். 

எழுதாத இந்த ஒரு வருஷத்துல பல பேரு இலக்கியத பொரட்டி பொரட்டி எடுக்குற நோக்கத்துல பல திரட்டிய ஆரம்பிச்சு இருக்காங்க. இப்ப நான் அதுலை எல்லாதுலையிலும் போய் என்னோட பிளாக்கை சேர்க்கணும். 

பிரபல பதிவர்கள் பலர் பஸ்ஸிட்டு கொண்டிருந்த காலத்துல நிறைய பேரு பதிவெழுத ஆரம்பிச்சு இருக்காங்க ; அவங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கணும்.  

டிஸ்கி - பதிவுலகத்துல என்ன ஒரு குறைன்ன, யாரையும் டக் பண்ணிவிட்டுட்டு கும்மி அடிக்க முடியாது. 
= = = = = 
நம்ம பயபுள்ள சேடன் எழுதின புரட்சி இருபது/இருபது {அதாங்க REVOLUTION 2020 } வந்த அன்னைக்கே வாங்கி படிச்சுட்டேன். அவரோட மத்த நாவல்ல வர மாதிரி எல்லாம் கிளைமாக்ஸ் ல ஒரு தேவ தூதர் பேசுறதில்ல :::: ஆன்னா நாயகனும் நாயகியும் ஒட்டிண்டு இஷிண்டு  உடற்பயற்சி எல்லாம் பண்ணுறாங்க. அதுலயும் அந்த கோபால் மிஸ்ரா ( முரளிதரனோட துஸ்ரா எல்லாம் இல்லைங்க ) ஒரே பாட்டுல  தொழிலதிபர் ஆனா பிறவு கதைல பெருசா ஒரு டிவிஸ்ட் அன் டர்ன் எல்லாம் இல்லை ; ஆனாலும் சுவாரசியமா போகுது. 

= = = = = 
காலம் பத்திரிக்கைல ( இந்த மாசத்து இஷ்யூ :::: அசோகமித்திரன் ஸ்பெஷல்) அ.முத்துலிங்கம் "சோப்பும் வாசனையும்" ங்குற சிறுகதைய பத்தி எழுதிருக்காரு. படிச்சதுல இருந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டுடா இருக்கேன். அதுவும் தான் கொலை செய்ய பட போகிறோம்ன்னு தெரிஞ்சே மௌனமா புருஷன் பின்னாடி பொண்ணை பத்தி படிக்கும் போதே ஒரு மாதிரியா இருக்கு. இத்தனைக்கும் அது அந்த சிறுகதைய பத்தின ஒரு சிறுகுறிப்பு தான். படிக்க வேண்டிய சிறுகதை லிஸ்ட்ல அதையும் வச்சு இருக்கேன். 

சிறுகதைன்ன உடனே ஞாபகம் வருது ஆதவனின் "சினிமா முடிந்தபோது" ங்குற சிறுகதைய பத்தி ரொம்ப நாளா விலாவாரியா எழுதணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். முடிஞ்சா அடுத்த பதிவுல எழுதுடிறேன். 

டிஸ்கி - என்னோட இரண்டு சிறுகதையும் ரொம்ப டிராப்ட்ல இருக்கு ; கூடிய சீக்கிரம் பப்ளிஷ் பண்ணி இலக்கியத்தை கொலையா கொல்லுவோம். 

= = = = = 
எனக்கு பலப் பிக்ஷன் படங்களில் ரொம்ப பிடித்தது மம்பட்டியான் தான். அதுலயும் "காட்டு வழி போற பெண்ணே கவலை படாத...." ங்குற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு மாதிரியான ஹால்லோ வாய்ஸ்ல இருக்கும் அந்த பாட்டு. அதுவே அதுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்டா இருக்கும். அந்த காலதுலையே படத்தை ரொம்ப த்ரில்லிங்கா கொண்டு போயிருப்பாங்க ::::: இப்ப எப்படின்னு வந்திருக்கோன்னு தெரியல. அதுவும் பழைய மசால் வடைய தின்ன மாதிரி தியாகராஜன் ஸார் அதுல மூஞ்சிய உர்ன்னே ஒரு மாதிரி வச்சு இருப்பாரு. பிரசாந்த் எப்படி பண்ணிருக்கோ தெரியல. அவரோட "கண்ணெதிரே தோன்றினாள்" படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ::::: ஸோ இந்த படம் வெற்றி பெறணும்ன்னு கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க கிட்ட சொல்லி, வேண்டிக்க சொல்லுறேன்.

= = = = = 
 மல்லிகா ஷெராவத் நடிச்ச மர்டர் படத்தை, அவரோட அழகுக்காகவே இரண்டு மூணு வாட்டி பார்த்திருக்கிறேன் :::: ஆனா ஒஸ்தி படத்துல வர கலாசால பாட்டை பார்க்கும் போது, அவருக்கு ரொம்ப வயசு ஆனா மாதிரி தெரியுது, இல்லாட்டி காஸ்டியூம் சரியா பொருந்தமா போயிருக்கலாம். அதுவும் எல்.ஆர். ஈஸ்வரி குரல் அவருக்கு  பொருந்தமா போய், அதுவே கவர்ச்சியை குறைச்சுருச்சுன்னு நினைக்கிறேன். 
= = = = =
தமிழுணர்வை பத்தி பேசுறதுன்னாலே "ஏழாம் அறிவு" யை தமிழர்கள் கொண்டாடணும்ன்னு சொல்லுறாங்க. ரைட்டு ஓகே. அதே மாதிரி மக்களின் நன்மைய, நாட்டு பாதுகாப்பை பத்தி பேசுற, மக்களுணர்வை பேசுற "வேலாயுதத்தை" இந்த நாடே கொண்டாடணும்ல .... ஏன் அத பத்தி யாரும் பேசல ?

= = = = = 

சரிங்க .... தூக்கம் வருது. கமெண்ட்டைய போட்டுட்டு, அப்படியா வோட்டையும் குத்தி ருங்க. அப்பாலிக்க பார்போம்.  

KEEP SMILING

ENJOY LIVING

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - சூப்பர் திரைக்கதை

திரையில் கதநாயகன் என்ன உணர்கிறானோ அதையே ரசிகர்களையும் உணர வைக்க முடியுமா ?? முடியும் என்று காட்டி இருக்கிறார் சுசீந்திரன். இவருடைய முதல் படத்தை நான் ஒரு மொக்கை தியேட்டரில் (தாம்பரம் நேஷனல்) பார்த்தால், அந்த படம் என்னை ஒன்னும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனா இந்த படத்தை நான் தாம்பரம் வித்யாவில் பார்த்தால் : நன்றாக ரசிக்க முடிந்தது ( வேறெங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை).

LONG LONG AGO : SO LONG AGO : NOBODY KNOWS HOW LONG AGO ..... நான் ஒரு வங்கியில் ஒரு பரீட்சை எழுதிருந்தேன் அப்பருமா நானே அத பத்தி மறந்து போயிட்டேன்... நேத்து திடிர்ன்னு போன் பண்ணி offer letter வந்து வாங்கிட்டு போங்கன்னு சொன்னாங்க. வாங்கின்ன பிறகு பார்த்த .....ஏய் தண்டனக்கான் டனுக்குனக்கான். இப்ப வாங்கிட்டு இருக்குற சம்பளத்தை விட ஒரு 125 % அதிகமான சம்பளம், பதவியும் அதுக்கு எத்த மாதிரி. அது கூட எனக்கு பெரிய விஷயமா படல. சென்னை சிட்டி ல அந்த கணக்கு பரீட்சையை (NOTE THIS POINT ) எழுதினவங்க ல நான் தான் முதல் மார்க் காம். அப்படியே ஷாக் ஆகிட்டேன். அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியல. அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி இத சொன்ன "டேய் உண்மைய சொல்லுற ..நீயா கணக்கு ல அவ்வளவு மார்க் எடுத்த?" ன்னு கேட்குறாங்க. அண்ணன் கிட்ட சொன்ன OFFER LETTER யை ஸ்கேன் பண்ணி அனுப்புன்னு சொல்லுறான். சரின்னு அவங்க கிட்ட OFFER LETTER ஸ்கேன் அனுப்பின பிறகு. சந்தோஷத்தை கொண்டாடலாம்ன்னு ஸ்வீட் சாக்லேட் சாப்பிடலாம்ன்னு பார்த்த : அம்மா திட்டுவங்களோன்னு பயந்துகிட்டு சினிமாவுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணி பார்த்த ; எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை .... சரி நேர தாம்பரம் வித்யாவுக்கு நடைய போட்டேன். சினிமாவும் பார்த்தேன்.
= = = = =
முதல ஒன்னு சொல்லிய ஆகணும், படம் ஆரம்பிச்சதும் தெரியல : முடிஞ்சதும் தெரியல, அவ்வளவு FAST ஆ போகுது படம். எனக்கு எந்த இடத்திலையும் சோர்வு வரல. கார்த்திய தவிர வேற யாராச்சு இந்த படத்தை இவ்வளவு சிறப்பா பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல. அந்த கல்யாண மண்டபத்தில் ல அந்த குறும்பு சிரிப்பு ல இருந்து, கடைசி சீன் ல அந்த ரௌத்திரம் வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கார்.

கார்த்தி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நாலு பேர், யப்பா செம நடிப்புடா சாமி. எங்க இருந்து அவங்களை டைரக்டர் பிடிச்சாரோ தெரியல. அதுவும் பிணத்தின் தலையை வெட்டும் பொழுது அவங்க முகத்துல காட்டுற REACTION எல்லாம் செம. ஆனா டைரக்டர் அவங்களை கொண்டு நம்பள இன்னும் மிரட்டி இருக்கலாம்.
= = = = =
நான் எந்த படத்துக்கு போனாலும் முக்கியமா நான் பார்க்கிறது கவர்ச்சியான கதாநாயகியை தான். ஏன்ன படம் எவ்வளவு மொக்கைய இருந்தாலும் குடுத்த காசுக்கு திரையில் கதாநாயகியின் கவர்ச்சியை பார்த்துட்டு வரலாம் ங்கிற SIMPLE LOGIC தான். அந்த விஷயத்துல இந்த படம் மிக பெரிய ஏமாற்றம் தான். கடுகு அளவுக்கு கூட கவர்ச்சி இல்லை. சரி காஜல் அகர்வாலாச்சு தமிழ் சினிமா மார்க்கெட்யை பிடிக்க எதாச்சு முயற்சி பண்ணுவாங்கன்னு பார்த்த ...ம்ம்ம் பிழைக்க தெரியாத பிள்ளையா ல அது இருக்கு. இது பத்தாதுன்னு இரண்டு மூணு சீன் ல அவங்க முகத்துல டொங்கு விழுந்த மாதிரி தெரியுது.
= = = = =
அடடடா இன்னும் இரண்டு பேரை சொல்லிங்குகாட்டி என்னை இந்த இலக்கிய சமுதாயம் என்னை மன்னிக்காது.

நம்ம யுவன் தான் மியூசிக். பாட்டெல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனா வழக்கமா இந்த THRILLER படங்கள் ....பேய் படங்கள் ன்னாலே ஒரு மியூசிக் வைச்சு இருப்பாங்க ல , அதை ஏன் யுவன் சார் முதல் சீன் ல பயன்படுத்தி இருக்கார்ன்னு தெரியல. பாட்டுன்னு பார்த்த எனக்கு இந்த கார்த்தி-காஜல் அடிக்கடி செல்போன் ல பேசிக்குற பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. மத்த பாட்டு எல்லாம் என்னை அவ்வளவாக கவரல.

ஒளிப்பதிவு மதி ...... செம சேட்டைய காட்டி இருக்காரு. எப்புடி தான் சில சீன்களை எடுத்தாரோன்னு தெரியல, அம்புட்டு அழகு.
= = = = =
சண்டை காட்சிகள் இந்த படத்துக்கு மிக பெரிய பலம்ன்னு சொல்லலாம். கிளைமாக்ஸ் ல அவ்வளவு இயற்கையான சண்டை காட்சி இல்லாட்டி இந்த படத்தை நான் இந்த அளவுக்கு ரசிச்சு இருக்க முடியுமான்னு தெரியல. எனக்கே கார்த்தி சண்டை போடும் போது , நான் போய் வில்லன்கள் முகத்துல இரண்டு குத்து குத்தலாமான்னு யோசிக்கிற அளவுக்கு இருக்கு. STUNT MASTER யாராக இருந்தாலும் அவருக்கு தனி சபாஷ் (அவருடைய பெயர் யாருக்காச்சு தெரிந்த பின்னூட்டத்துல சொல்லுங்க)
= = = = =
டைரக்டர் : இவரை பத்தி என்ன சொல்லுறதுன்னே தெரியல. வழக்கமான எல்லோரும் யோசிக்க கதை தான், ஆனா இவரு கொஞ்சம் வித்த்யாசமா யோசிச்சு இருக்காரு. வழக்கமா பலி வாங்குற கதை ன்னாலே .... ஆரம்பம் முதல அதைய சொல்லி சொல்லியே கொல்லுவாங்க. ஆனா இதுல அப்படி இல்லை. வருங்காலத்தில் இவருடைய படங்கள் வந்தால் நம்பி போகலாம்ன்னு இந்த படத்தை பார்த்த பிறகு தோணுது.
= = = = =
இந்த படத்தோட ஒரிஜினல் சிடி வரும் வரைக்கும் காத்து இருக்க வேண்டாம். தியேட்டரில் பார்த்தால் தான் இந்த மாதிரியான படங்களை ரசிக்க முடியும்.

= = = = =
டிஸ்கி - படம் முடிஞ்சு வெளிய வந்து பார்த்த .... மழை ல பைக் ல மாட்டி இருந்த ஹெல்மெட் FULL ஆ ஈரம் ஆகிருச்சு. சரின்னு ஹெல்மெட் மாட்டமா பைக் ஓட்டிகிட்டு போனேன். கொஞ்ச தூரம் போன பொழுது, ஒரு போலீஸ் மாமா கிட்ட திட்டு வாங்கின பிறகு, வேற வழிய இல்லமா ....அவ்வளவு ஈரமான (உள் பக்கம்) ஹெல்மெட்யை மாட்டிகிட்டு பெருங்களத்தூர் பக்கம் கிளம்பினேன். உலக சினிமாவை பார்க்கும் பொழுது கூட இந்த அனுபவம் ஏற்படல. கட்டாயம் எனக்கு இந்த படம் ஒரு வித்த்யசமான அனுபவத்தை தந்தது. வாழ்க்கை ல மறக்கவே முடியாது.

Wednesday, August 18, 2010

கலவை - சரக்கு ஸ்பெஷல் (ஊறுகாய் இல்லை)


நம்ம கலைஞர் ஐயாயோட கருணை மனசை நினைச்சாலே அப்படியே முடி எல்லாம் நேட்டுகிட்டு நிக்குது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வாம். கொஞ்ச நாள் முன்னாடி பெருங்களத்தூர் முத ரயில் கேட் கிட்ட ஒரு சொந்தகாரருகாக காத்துகிட்டு இருந்தேன்.அந்த பக்கம் இருந்த டாஸ்மாக் கடைய அப்ப தான் திறந்தாங்க. எங்க இருந்து தான் மக்கள் வருவாங்களோ தெரியல. மசால் வடையை மோப்பம் பிடிச்ச எலி மாதிரி ஒரு கூட்டம் ஓடி வந்தாங்க. சரி நானும் ஏதோ சாக்கடை சுத்தம் செய்றவங்க போல இருக்கு, அதான் காலையில சரக்கு அடிக்குரங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லாம் அந்த கடையோட ROYAL CUSTOMERS ன்னு பக்கத்து கடையில ஒரு ஆளுக்கு மிச்சர் பாக்கெட் இரண்டு ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் பொழுது தான் தெரிஞ்சுது. இது இப்படி இருக்க ...

ஒரு வாட்டி பக்கத்து வீடுகாரங்களுக்காக புது பெருங்களத்தூர் ரேஷன் கடைக்கு போனேன். அங்க நான் சக்கரைக்கான விலைக்காக மொத்தமா ஒரு நூறு ரூபாய் தந்தேன். கொஞ்சம் நேரம் பில் அமௌன்ட்யை எல்லாம் எழுதின பிறகு, அந்த ஆபீசர் "சார் எதாச்சு வாங்கிகோங்க..சோப்பு தரட்டுமா"ன்னு சொல்லிகிட்டே இரண்டு துணி துவைக்குற சோப் எடுத்து வைச்சு, அதையும் பில்ல சேர்க்க போனாரு. பிறகு கொஞ்சம் அதட்டி, தாஜா பண்ணி கேட்டதில், ஒவ்வொரு மாசத்துக்கும் இவ்வளவு மளிகை பொருள்களை வித்தாக வேண்டுமாம். டார்கெட்.

அதனால பொதுவாய் ரேஷன் கடைல இருக்கிறவங்க என்ன பண்ணுறாங்கன்ன , வர மக்கள்கிட்ட இந்த சோப், சின்ன கடுகு பாக்கெட் இன்னும் பிற சமஜரங்களை எல்லாம் தள்ளி விடுறாங்க. பெரும்பாலும் பெண்கள் தான் இந்த நேரத்துல வருவதல.... ரேஷன் கடைகாரங்களுக்கு வேலை ரொம்ப சுலபமா போய்விடுகிறது. அவங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லாட்டியும், வாங்கிட்டு போறாங்க ரேஷன் கடை ல இருக்கிறவங்க இம்சை தாங்க முடியாம. அப்படி போறவங்க ஒன்னும் பெரிய அளவுல வசதி படைச்சவங்க இல்லை. ஒவ்வொரு பத்து ரூபாயும் அவங்களுக்கு முக்கியம். அவங்க கிட்ட போய், கொள்முதல் செய்ஞ்ச குளிக்கிற சோப், துவைக்கிற சோப் யைஎல்லாம் ஏன் தள்ளி விடுறாங்கன்னு தெரியல.

சரி முதல் மேட்டருக்கே வருவோம் ..... வேற எந்த அரசாங்க துறைக்காவது இந்த மாதிரி குறுகிய காலத்தில் சம்பள உயர்வு கிடைச்சு இருக்கான்னு எனக்கு தெரியல. கேட்ட விற்பனை கிர்பனைன்னு ஏதேதோ சொல்லுவாங்க.

= = = = =

எந்திரன் பட பாட்டெல்லாம் வந்துருச்சு. சென்னைல எந்த ரேடியோ ஸ்டேஷன் பக்கம் திருப்பினாலும் இந்த எந்திரன் பாட்டு இம்சை தாங்க முடியல. இது பத்தாதுன்னு இந்த RJ க்கள் அதுக்கு சொம்பு அடிக்குறது சத்யமா தாங்க முடியல. இன்னொரு விஷயம் எந்திரன் பட பாட்டு எல்லாம் எனக்கு இன்னும் புரியல / பிடிக்கல. ஒரு வேளை படத்தோடு சேர்த்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ. அதுவும் பட ட்ரைலர் ல ஒரு இடத்துல ஐஸ் "i am yours " ன்னு சொல்லு போது..அப்படியே அம்முது. கட்டாயம் முத நாள் முத ஷோ பார்க்கணும்.

= = = = =


புது வேலைல சேர்ந்தாச்சு. என்ன ஒன்னு முதல் முதலா வேலை செய்ஞ்ச ஆபீஸ்யை தாண்டி தான் போக வேண்டிருக்கு. பழைய ஆபீஸ்யை பார்க்கும் பொழுதெல்லாம் யாரோ மனசுக்குள்ள "அது ஒரு அழகிய கனகாலம்"ன்னு பாடுறாங்க. வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு அப்பெல்லாம். ம்ம்ம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த AUGUST 15 ல இருந்து நானும் ஒரு பொருளாதார அடிமையகுவதுன்னு முடிவெடுத்து இருக்கேன். நமக்குன்னு இல்லாட்டியும் வாழ்க்கைல சிலபல பேரை சந்தோஷ படுத்த வேண்டி இருக்கு ல ....so only this முடிவு.

= = = = =

நேத்து மதியம்... திநகர் பஸ் ஸ்டாண்ட் முன்னமே நின்னுகிட்டு இருந்தேன். ஒரே பசி. சரின்னு சாப்பிடலாம்ன்னு போன, அந்த சமயம்ன்னு பார்த்து கைல 39 ரூபாய் தான் இருந்துச்சு.(நான் எப்பவுமே நூறு ரூபாய்க்கு மேல கைல காசு வைச்சுக்க மாட்டேன்) ATM ல எடுக்கலாம்ன்னு பார்த்த, அதுக்கு அக்கௌன்ட் ல காசு இருக்கனுமாம் (என்ன கொடுமை சார் இது) ... சரி எப்படியாச்சு சமாளிச்சுரலாம்ன்னு பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க இருக்குற முருகன் இட்லி கடைக்கு போனேன் ....ஒரு இட்லி 6 ரூபாய் அங்க. நாலு இட்லி சாப்பிட்டுட்டு மிச்ச காசை பஸ்க்கு வைச்சுபோம்ன்னு நினைச்சேன். அப்படி உள்ள போரருதுக்கு முன்னாடி பக்கத்துல இருந்த வசந்த் விகார் ல சாப்பாடு 32 ரூபாய்ன்னு போட்டு இருந்துச்சு. இருந்த பசிக்கு சாப்பாடே சாப்பிடலாம்ன்னு உள்ள போயிட்டேன். மூணு மணி ஆகிருச்சு அப்ப, அதனால சிறப்பாக ஒன்னும் இல்லை. முக்கியமா ரசம் மிளகாய் ரசம் போலிருக்கு. செம காரம்.

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி மன்மோகன் சிங் சார் .... நக்சல் நாட்டு பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருக்காங்க, அதனால விமான படைக்கு அவர்களை சுட உத்தரவு தந்து இருக்காரு.

ம்ம்ம் ... சிலபல நாள் முன்னாடி சென்னை பல்கலைக்கழகம் 150 வது வுஷம் முன்னிட்டு விழா எடுதாங்க ....அப்ப நம்ம டெல்லி ஆடுகள் வருவதற்காக ஏர்போர்ட் பக்கம் இருக்கிற ரோடு யை இரண்டு மணி நேரத்துக்கு BLOCK பண்ணிருந்தாங்க. நிறைய பேர் மாட்டிகிட்டு முளிச்சாங்க. அந்த கூடத்துல இரண்டு ஆம்புலன்ஸ் அடக்கம். இது எல்லாம் நாட்டு பாதுகாப்புக்கு ரொம்ப நல்லது போலிருக்கு, ம்ம்ம்

= = = = =

அம்மாவுக்கு நான் வெயில்ல சுத்தி ரொம்ப கருப்பா இருக்குறது கஷ்டமா இருக்கு போல .... நிறைய BEAUTY டிப்ஸ் தந்து இருக்காங்க. அது வேற இல்லன்னு கடலை மாவு, அந்த மாவு இந்த மாவு ...சீக்காய் தந்து இருக்காங்க. ம்ம்ம் என்னை ரித்திக் ரோஷன்க்கு தம்பி மாதிரி ஆக்குவது தான் அவங்க டார்கெட் போலிருக்கு.

= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியன் அண்ணா எழுதின "
தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா? " யை FRIENDSக்கு ஈமெயில் ல அனுப்பி வைச்சேன். உடனே ஒரு ஆடு போன் பண்ணி "மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற..நீ எந்த காலத்துல........" ...இப்படியே பல போன் கால்கள் ..பல பல்புகள் ..சந்தோஷமா போனது.

= = = = =

சரிங்க ...பதிவு ரொம்ப பெருசாகிருச்சு போல இருக்கு. பிறகொரு சமயம் பார்போம்.

KEEP SMILING

ENJOY LIVING

Thursday, July 22, 2010

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்


நான் SALES ல இருக்குறதல நம்ம மானா சூனா (என்னோட மேனஜர் ) மேல அடிக்கடி கோவம் வரும். அப்ப எல்லாம் நினைச்சுப்பேன் இந்த ஆளுல எப்புடிவது குத்தோ குத்துன்னு குத்தனும்ன்னு. நேத்து பரிசல் எழுதின பதிவை படிச்சபோதே இந்த மாதிரி எழுதணும்ன்னு தோனுச்சு, ஆனா வழக்கம் போல டைம் தான் இல்லை. ....

சரி சரி ..இதுக்கு மேல மொக்கை போட நான் விரும்பல. என்னொன்னு இந்த பதிவு மானா சூனா கண்ணுல படகூடாது. அப்படியே பட்டாலும் எனக்கொண்ணும் பிரச்சனையில்லை....நான் தான் டம்பி மேவீன்னு அவருக்கு தெரியவா போகுது. ஹி ஹி ஹி ஹி ஹி ..OK LETS START THE MUSIC ....


= = = = =

தினந்தோறும் காலையுல ஏழு மணிக்கே இன்றைய டார்கெட் (எங்களுக்கு DAILY TARGET ) எவ்வளவுன்னு கேட்டு SMS அனுப்பும் பொழுது. அந்த நேரத்துல நான் கக்கா கூட போயிருக்க மாட்டேன்....அப்ப அவரு முகத்த பார்த்து ...
-
ஆபீஸ் உள்ள வந்த உடனே "இன்னைக்கு மார்க்கெட் எப்புடி இருக்கும்ன்னு கேட்கும் பொழுது.. நான் ரிப்போர்ட் கூட படிச்சு இருக்க மாட்டேன் ...அப்ப ஒன்னு
-
DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது....
-
காலைல இருந்து நம்ம கூடவே சுத்திட்டு, சாயங்காலம் யான உடன், இன்னைக்கு என்னப்பாச்சுன்னு கேட்கும் பொழுது.....ஒன்னு
-
மொக்கையான ஒரு LEAD தந்துட்டு , பெரிய பணக்கார ஆளை காட்டிவிட்ட மாதிரி பந்தா பண்ணும் பொழுது ...
-
கஷ்ட பட்டு ஒரு LOGIN பண்ணிட்டு, பெருமையா அவர பார்க்கும் பொழுது, "ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க??"ன்னு கௌண்டமணி செந்தில் காமெடி கணக்கா அடுத்த LOGIN பத்தி கேட்கும் போது ....ஓங்கி ஒன்னு ....
-
சனிகிழமையான எதாச்சு பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய், சாப்பாடு வாங்கி தந்து, மொக்கை போடும் போதும், சாப்பிட்டு விட்டு வெளில வந்த உடனே அடுத்த வார டார்கெட்யை பத்தி பேசும் பொழுது.....ஒன்னு
-
ரிப்போர்ட் பண்ணும் போது, "CLIENT க்கு இஷ்டம் இல்ல போல இருக்கு மானா சூனா" (எங்க ஆபீஸ் ல யாரையும் சார் கிர்ன்னெல்லாம் கூப்பிட மாட்டோம்) ன்னு சொன்ன, நீ சரியாய் பேசிருக்க மாட்டன்னு பதில் வரும் பொழுது.....அப்படி ஒரு கோவம் வரும் பாருங்க ...அப்படியே ஆபீஸ்ன்னு கூட பார்க்காம ஓங்கி ....
-
ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல ஆபீஸ் ரூம்ன்னு ஒன்னு வருமுல, அதே மாதிரி எங்க ஆபீஸ்ல MEETING ROOM ன்னு ஒன்னு இருக்கு, அதுக்குள்ளே மானா சூனா கூப்பிடும் பொழுது .......
-
"இந்த சிஸ்டம் ல கோளாறு போல் இருக்கு" ன்னு சொல்லும் பொழுது, ஏன் எதுன்னு கூட பார்க்காம, LKG ல இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்பை விமர்சிக்கும் போது....(கட்டாயம் TOTAL DAMAGE தான்) அப்போன்னு

-
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + +
இன்னும் நிறைய இருக்குங்க, இதை விட அதெல்லாம் பயங்கரமா இருக்கும், சரி யாராச்சு படிச்சு மார்க்கெட்டிங் துறையை பார்த்து பயந்துற போறங்களேன்னு எழுதல.

= = = = =

இவ்வளவு அடிக்குறாங்க, அப்பரும் எதுக்கு வேலை பார்க்குறன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது....அடிச்ச அப்பரும மானா சூனா "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன ரொம்ப நல்லவன்" ன்னு சொல்லுவாரு..அந்த அந்த ஒரு வார்த்தைகாகவே ..ஹி ஹி ஹி ஹி......
= = = = =
இப்படி தானுங்க நம்மபளை ASM ....AVP ....VP ....DIRECTOR ன்னு மும்பை ல இருந்து எல்லாம் போன் பண்ணியோ இல்லாட்டி நேர்ல வந்தோ அடிச்சிட்டு போவாங்க.. ஒவ்வொருத்தரும் அடிச்சு முடிச்சதுக்கு பின்ன இன்னொரு ஆடு ஓட ரூம்க்கு அனுப்பி வைப்பாங்க ...ஹி ஹி ஹி ஹி .
வாழ்க்கையே ஒரு போர்க்களம் ; வாழ்ந்து தான் பார்க்கணும் ..

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்



நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

Friday, April 23, 2010

சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - திருச்சி நினைவுகள்


சத்திரம் பஸ் ஸ்டாண்ட்.......... என்னால் மறக்க முடியாத ஓரிடம். என் வாழ்வில் பல இனிமையான பக்கங்களை இங்கு தான் கடந்து வந்திருக்கிறேன். இனிமை என்று ஓன்று இருந்தால் கசப்பு என்று ஓன்று இருக்குமில்லையா ????? அதே போல் என் வாழ்வில் நான் மிகவும் வெறுமையாக உணர்ந்த சமயங்களில் இங்கு தான் சுற்றிருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் ரொம்பவும் அப்பாவியாக இருந்தேன். ஆனால் சென்னை வந்து அந்த அப்பாவி தனத்தையெல்லாம் தொலைத்துவிட்டேன். இப்பவும் அடிக்கடி ஒரு ஆசை வரும்...... இறந்த நாட்களை இறப்பு கணக்கில் சேர்த்துவிட்டு மீண்டும் புதிதாய் அப்பாவியாய் பிறந்து திருச்சியில் வாழ வேண்டும்.

என் வாழ்க்கையில் இந்த இடம் எப்பொழுதும் ஸ்பெஷல் தான். இந்த பதிவு எழுதும் போது கூட நாகநாதர் டி கடையின் மிளகு தூள் தூவிய பஜ்ஜி இன்றும் நினைவில் இனிக்கிறது.

ஒரு தேவதையை பார்த்து, காதல் கொண்டு, பைத்தியாமாகி சுற்றியதும் இங்கு தான். இப்பொழுதும் தில்லை நகர் பஸ் என்றால் என்னிடத்தில் ஸ்பெஷல் தான்.

அதே போல் அரசன் பேக்கரி டி, KRISHNA CORNER பெல் புரி, .......

இந்த படத்தில் இருக்கும் st joseph complex முதல் மாடியில் நின்று கொண்டு இந்திரா காந்தி காலேஜ் பெண்களை சைட் அடிப்போம். SRC மற்றும் HOLLYCROSS காலேஜ் பெண்களை பெரும்பாலும் சைட் அடிக்க மாட்டோம்.......ஏன்னு தெரியாது.

மாரிஸ் தியேடருக்கு இங்கு இருந்தே நடந்து போவோம் (hollycross பஸ் ஸ்டாப் ல இறங்க மாட்டோம்) .......

அதே போல் RAINBOW ஐஸ் கிரீம் கடை.......black forest ஐஸ் கிரீம் தான் சாப்பிடுவேன் எப்பொழுதும் போனாலும்.

ஒவ்வொரு ஏரியா ஸ்டாப்க்கும் போய், அந்த அந்த ஊர் பெண்களை சைட் அடிப்போம். பெரும்பாலும் சமயபுரம் பக்கம் போகும் பெண்களை சைட் அடிக்க மாட்டோம்.

அதே போல் சென்னை சில்க்ஸ் முதல் முறையாக திருச்சியில் திறந்த பொழுது எதிர் ஜூஸ் கடையில் நின்று வாய் பிளந்து பார்த்தும் இருக்கிறேன்.

இன்னும் பல இருக்கிறது, ஆனால் மனசு முழுக்க சந்தோசம் இருப்பதால்.... இன்னொரு சமயம் முடிந்தால் இன்னும் விலாவரியாக எழுதுகிறேன்.

Wednesday, April 7, 2010

என்னை பற்றி உங்களுக்கு தெரியாத ஏழு விஷயங்கள்

என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார். ...:)


நான் படிக்க விரும்பியது சமையல் கலையை. ஆனால் படிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.


நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.


நான் ஒரு தீவிர சோஷலிஸ்ட். ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்.


மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய மூன்று நூல்களையும் பத்து முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.


நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.

நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.

எனக்கு அழகானவர்களை கண்டால் பொறாமையாய் இருக்கும். நான் அழகில்லை என்ற எண்ணம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கிறது.

டிஸ்கி - புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்) எழுதிய பீட்டர் பதிவை படித்த பின் இந்த பதிவிற்க்கான IDEA கிடைத்தது......

முக்கிய குறிப்பு - கோழி அப்டேட்ஸ்க்கும் தோழி அப்டேட்ஸ்க்கும் இடைய என்ன நடந்தது ????? விவரம் அடுத்த பதிவில்

Sunday, February 14, 2010

காதல் கவிதைகள் -4

பெயரில்லா சூனியக்காரியின் காரணமில்லா சாபம்
காட்டு வழிச் செல்லும் ஒத்தையடி
பாதையில் உலவுவதாய் கண்டுக் கேட்டு
அய்யனார் கோவில் விபுதி உடன்
பயந்த உன்னையும் உன் விழிகளையும்
பயம்புடுத்த மரத்திலிருந்து விழுந்து
ஏற்பட்ட காயங்களை தடவி ரசித்தப்படி
கிராமம் நோக்கிச் செல்லும்
பேருந்தில் இருபத்தி மூன்றாம் இருக்கையில்
அமர்ந்து பயணிக்கிறேன்
நாளை உன்னை பருவப் பெண்ணாய் பெண் பார்க்க
திருமணத்திற்காக.....

Saturday, February 13, 2010

காதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்

  • PROPOSE பண்ண போற பொண்ணு எந்த மாதிரி டைப்ன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்ப தான் யாரும் பார்க்காதவாறு செருப்படி வாங்க முடியும். (கருணை அடிப்படையில் மறைவிடத்தில் வழகும் படி கேட்க வாய்ப்பு கிடைக்கும்)
  • பொண்ணுங்க கிட்ட எடுத்த உடனே காதலை சொல்லிவிட கூடாது. அவளுடைய தங்கச்சி அழகா இருந்தா டக்குன்னு அவகிட்ட காதலை சொல்ல சான்ஸ் கிடைக்கும். (சில சமயம் பொண்ணுங்களை விட அவங்க அம்மா அழகாய் இருப்பாங்க. அதுக்குன்னு தவறான வழியில் போக கூடாது. அந்த பொண்ணுங்களோட அப்பாவின் அதிர்ஷ்டம் எண்ணி பெரு முச்சு விட்டுக்க வேண்டியது தான் )....
  • ஒரு வேளை நீங்கள் என்னை மாதிரி பயங்கர மொக்கை பார்ட்டியாக இருந்தால், காதலை நேரில் சொல்ல வேண்டாம்.
    அவங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் பொழுது ...."உங்க கிட்ட தனியா பேசணும்" ங்கிற மாதிரி எல்லாம் ஆரமிக்க கூடாது. அப்படி ஆரமிச்ச பார்ட்டி முதலிலையே உஷார் ஆகிடுவாங்க.
  • feb 14 அன்னைக்கு நிறைய பொண்ணுங்க வெளியே வருவாங்க. so காலேஜ் க்கு அப்ளிகேஷன் போடுற மாதிரி ட்ரை பண்ணுங்க.
    முதலில் காதலை சொல்லும் முன், எதையும் தாங்கும் உடம்பு இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய செலவு வந்தாலும் அதை சந்திக்கும் பர்ஸ் வேண்டும்.
  • அப்படி உங்களுக்கு சூப்பர் பிகர் யாரையும் தெரியாது என்றால் ....நாளைக்கு வெளியவே போகாதிங்க( நீங்க எல்லாம் என் ஜாதி)(நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன பயன்)
  • இருப்பதிலையே பிரச்சனை இல்லாதது எதுவென்றால் ..."ஒரு தலைக் காதல்" தான். இந்த வகை காதலில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். வைரமுத்துவே சொல்லிருக்கார் ...."கற்பனை மட்டும் இல்லையென்றால் நிஜங்கள் நம்மை தின்று விடும்" என்று.
Related Posts with Thumbnails