Pages

Thursday, March 7, 2013

சன் டிவி - 1990களின் சீரியல்கள்


  இன்று மெகா சீரியல்களோடு மொக்கை போட்டுட்டு இருக்குற சன் டிவி ஒரு காலத்துல என்ன மாதிரியான அருமையான வார சீரியல் எல்லாம் போட்டிருந்தாங்கன்னு நினைச்சாலே ஏக்கமா இருக்கு. திரும்பவும் அந்த மாதிரியான நல்ல ரசனையான சீரியல் எல்லாம் வராதான்னு எதிர்பார்க்க வைக்குறது இப்போ பார்த்து கிட்டு இருக்குற சீரியல்கள்.

அருமையான கதைகள்...வாய்ப்புகளே இல்லை. சில சீரியல் டைரக்டருக்காக, சிலது கதாசிரியருக்காக பார்த்தெல்லாம் ஞாபகம் வருது. 

இப்ப பார்த்துகிட்டு இருக்குற சில சீரியல் :-  


இதுல ஜன்னல் தொடர் ல முதல்ல வந்த கதைய தான் தான் இப்ப தேடிகிட்டு இருக்கேன். அப்பா அம்மா அன்பு கிடைக்காத  IIT ல படிக்குற பணகார  பையனை பத்தியது கதை. ரொம்ப இளமையா இருக்கும். 

வழக்கமா யூ டியூப் ல எதாவது பாட்டு தான் கேட்டுகிட்டு இருப்பேன் ...கொஞ்சம் சலிப்பா தான் இருக்கும்..கொஞ்ச நேரத்துல எதுவும் ஒழுங்கா பார்க்காம தேடிட்டு , வீடியோ விட்டு வீடியோ தாவிட்டு இருப்பேன். இந்த சீரியல் பார்க்க ஆரம்பிச்ச பிறவு கொஞ்சம் இல்லை நிறையவே மனசு ரிலாக்ஸ் ஆகுது.

இந்த சன் டிவி ல வந்த வார தொடர்கள் தவிர்த்து மெகா சீரியல்ன்னு எனக்கு பிடிச்சதுன்ன அது சித்தியும் அலைகளும் தான். அதிலும் சித்தி ல வர ஈஸ்வர பாண்டியன், அலைகள்ல வர ரங்கா ..இவங்க இரண்டு போரையும் என்னால மறக்கவே முடியாது. ரங்காவா வேணு அரவிந்த் நடிப்பை ரொம்பவே ரசிச்சேன். 

சன் டிவிக்கு முன்னாடியே பொதிகை (DD தமிழ்) ல மெகா சீரியல் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுல வந்த எத்தனை மனிதர்கள், விழுந்துகள், ஒரு பெண்ணின் கதை சீரியல் எல்லாம் மறக்கவே முடியாது. இது எல்லாம் டிவிடியா வந்திருக்கான்னு தெரியல. அப்புடி வந்திருந்த கட்டாயம் வாங்கணும்ன்னு வைச்சு இருக்கேன். 

சேனல் ஆரம்பிச்ச புதுசுல படபடமா போட்டு இடத்த நிரப்புன சன் டிவி ..எப்ப சீரியல் வந்துச்சுன்னு தெரியல. கொஞ்சம் யோசிச்சு பார்த்த நான் முதன் முதலில் சீரியல்ன்னு பார்க்க ரேவதி நடிச்ச ரேவதி சீரியல் தான். அதுல அம்மணி அவங்களோட வீட்டுக்காரோட சுரேஷ் மேனன் கூட நடிச்சாங்க. கொஞ்சம் திகில் கொஞ்சம் காமெடி கொஞ்சம் சஸ்பென்ஸ்ன்னு கலவையா சீரியல் அது வந்தது 1994 ல. சன் டிவியோட ஆரம்ப கட்டம். 

இதுக்கு பிறவு கே.பாலசந்தர் ஸார் டிவி பக்கம் வந்து வித்தயாச கதையால ஒரு சுனாமியையே உண்டு பண்ணினாரு. அதுல ரொம்ப முக்கியமானது கை அளவு மனசு சீரியல் தான். சேனல் விட்டு சேனல்ன்னு நாலஞ்சு ரவுண்ட் ஓடுச்சு. கேபி ஸார் சீரியல்ல என்ன ஒரு பிளஸ் பாயிண்ட்ன்ன டைட்டில் பாடு அப்படியே மனசை கொள்ளை அடிக்குற மாதிரி இருக்கும் ...."கை அளவு கை அளவு மனசு, அது கடல் அளவு கடல் அளவு பெருசு"..... செம பாட்டு. மனசை அப்படியே ஏதோ செய்யும். கேபி ஸாரோட மத்த சீரியல் பாட்டு ஞாபகம் இல்ல. ஆனா ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு மாதிரி வித்தயாசமா இருக்கும். புதுசா இருக்கும். 

கேபி ஸார் சீரியலை தவிர்த்து எனக்கு பிடிச்ச மாதிரி டைட்டில் பாட்டு வந்துச்சுன்ன அது நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியல் ல தான். "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்.... வாழ்க்கை என்ற தோட்டத்தில் பூக்களும் முட்களும் இருக்கும் ...பூவா முள்ளா உங்கள் சாய்ஸ் ..."ன்னு ஆரம்பிச்சு பாட்டு முழுக்க தத்துவ ரீதியா சொல்ல  பட்டிருக்கும். இன்னைக்கு வரைக்கும் நான் தேடிகிட்டே இருக்கும் பாட்டு. ஜன்னல், மர்ம தேசம் போன்ற சீரியல் மாதிரியே இந்த தொடர்லையும் இரண்டு மூணு கதை வந்ததா ஞாபகம். சரியா நினைவு இல்லை. ஆனா முத கதை மாதிரி வேறத்துல சுவாரசியம் இல்லைங்குறது உண்மை தான். 

பிறவு மெட்டிஒலி புகழ் திருமுருகன், மெட்டிஒலி புகழ் எல்லாம் இல்லாதப்ப சித்தி சீரியல் முடிஞ்சா உடனே பெண் கடத்தலை மையமா வைச்சு ஒரு சின்ன தொடரை இயக்கினாரு. கதை சரியா ஞாபகம் இல்லை.. முக்கிய கதாபாத்திரத்துல நடிகை மதூ நடிச்சாங்க. 

அப்ப இருந்தது சன் டிவி மட்டும் தான் இருந்தது, அல்லது அதை தான் மக்கள் அதிகமா பார்த்தாங்க போட்டியே இல்லை, அதனாலேயே நல்ல தரமான சீரியலை தர முடிஞ்சது அவங்களால. இந்த கால கட்டமும் என்னுடைய பதின்ம வயதும் ஒன்றாக வந்து போனதால், எல்லாம் எனக்கு மறக்க முடியாதவையாவே இருக்கிறது. 

சன் டிவில வந்த முக்கியமான சீரியல்ன்னு பார்த்த கேபி ஸார் சீரியலை தவிர்த்து பார்த்த அது மர்ம தேசம் தான். அதை பத்தி எழுதி இருந்தாலும், அதை பத்தி இன்னும் கொஞ்சம் எழுத போறேன்ங்குறதால, அதை பத்தி பெருசா எழுதால. ஆனா மர்ம தேச தொடர்கள்ல ரகசியமும் விடாது கருப்பும் பெஞ்ச் மார்க்டு தொடர்கள். 

இந்த சன் டிவிக்களோட சீரியல் தாக்கம் ஏது வரைக்கும் போச்சுன்ன, சினிமாவுக்கு போட்டியா பார்க்குற அளவுக்கு போச்சு. அந்த அளவுக்கு. சினிமாக்களை விட இதுல கதையும் நேர்த்தியும் அருமையா இருந்ததே இதுக்கு காரணம். இப்ப இரண்டுத்துலையும் மொக்கையா போயிட்டு இருக்குங்குறது வேற விஷயம். 

இதே காலத்துல மத்த சேனலையும் சீரியல் போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னாலும் கதை / ஒ (ளி/லி) அமைப்புல நேர்த்திய கொண்டு வர முடியல. நல்ல தரமான சீரியல்களுக்கு தர அளவுக்கு காசு அவன கிட்ட இல்லைங்குறது முக்கிய விஷயம். வேற என்ன எழுதுறதுன்னு தெரிய. கொஞ்சம் யோசிச்சு பார்த்த பிறவு எழுதுறேன். 

ஆனா இப்ப எல்லாம் இந்த சீரியல்கள் எல்லாம் தின மன கவலைகளை அழிச்சுட்டு சந்தோஷமான நினைவுகளை, NOSTALGIA வகையற மகிழ் குளிர்ச்சியானவையை மனசுக்குள் வைக்கிறது.  

Monday, March 4, 2013

**மர்ம தேசம் {Marma Desam} - எதுவும் நடக்கும்**


1990 களின் இறுதியில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் கல்ட் பேஷனை உருவாக்கியதில் மர்ம தேசம் தொடர் ரொம்ப முக்கியவதுவம் பெற்றது. ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த தொடருக்காக காத்திருக்கிறது பார்த்ததெல்லாம் பசுமை நினைவுகள். 

கொஞ்ச காலத்திற்கும் முன்பு ராஜ்ஸ்ரீ தமிழ் யூ டியூப் சேனலில்  விடாது கருப்பு தொடரை பல பகுதிகளாக பார்த்த பிறகு மர்ம தேசத்தின் முதல் தொடரான ரகசியம் தொடரை பார்க்க எழுந்த ஆவலில் அதனுடைய டிவிடியை வாங்கி பார்த்துவிட்டேன் 2011 ல். 

அந்த தொடர் சன் டிவியில் வரும் பொழுதெல்லாம், யாரந்த நம்பூதிரி, மர்ம லாரி மற்றும் அதன் ஓட்டுனர் யார் , நவபாஷாண லிங்கத்தின் கைமாறு பயணம் எப்படி போகும் என்றெல்லாம் வாரம் முழுக்க அடுத்த தொடர் வருகிற வரைக்கும் நட்புகளோடு விவாதித்தபடி இருப்பேன். முதல் தொடரில் பல கேள்விகளோடு அதன் இயக்குனர் நாக ரசிக்க வைத்தது போல .... மர்ம தேசத்தின் இரண்டாம் தொடரான விடாது கருப்பிலும்  கருப்பண்ண சாமி, அவர் செய்யும் கொலைகள் என்று மைய புள்ளியை சுற்றி பல புள்ளிகளை வைத்து அழகிய கோலம் போல் தொடரை கொண்டு சென்றிருப்பார் நாகா. 

நடிகர் தேர்வு, இடங்களின் தேர்வு , கேமரா கோணம் என்று பல புதுமைகளை தமிழ் சின்ன திரைக்கு அறிமுக படுத்தியது இந்த தொடர். சன் டிவியின் மிகுதியான வளர்ச்சிக்கு இந்த தொடர் பெரிதும் உதவின என்றால் அது மிகையல்ல. 

வாரவாரம் ஒரு திருப்பத்தை அல்லது ஒரு மர்மத்தை அறிமுகம் செய்துவிட்டு, மக்களை ஆர்வ அலைகழிப்பில் வைத்திருந்ததில் புகழ் பெற்றது இந்த தொடர். 

எனது ஏக்கங்களை ஊக்க படுத்தும் விதமாக ராஜ்ஸ்ரீ ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறது யூ டியூப்பில். மர்ம தேசத்தின் கடைசி தொடரான எதுவும் நடக்கும் தொடரை வலையேற்றி கொண்டிருக்கிறது. வலையேற்றம் முழுமை பெற்று விட்டதாதென்று தெரியவில்லை. பார்க்க தொடங்கி விட்டேன் இன்று காலை.

எதுவும் நடக்கும் சிறப்புகள் பல. மலைவாழ் பூர்வ குடியான்  தானுமாலயக்குடி மக்களின் நம்பிக்கைகள், கற்பக விருட்சம் மரம், அது சார்ந்த தேடல்கள், வானத்து மனிதர்கள் ...காட்டின் பிரம்மாண்டம்   என்று சுவாரசியங்கள் பல இந்த தொடரில். நன்றிகள் பல ராஜ்ஸ்ரீ நிறுவனத்திற்கு. 

என்னயொரு குறை, இதன் முந்தைய தொடர்களான சொர்ண ரேகை, இயந்திர பறவை தொடர்களை பார்த்த பிறவு தான் எதுவும் நடக்கும் தொடரை பார்க்க வேண்டும் என்றிருந்தேன். ஏமாற்றங்களிருந்தாலும், நிறைவுகள் கொஞ்சத்தின் பல. 

என்ன ஓன்று அலுவலக நேரம் போக, பயணித்த நேர கொலைகளை தவிர்த்து கிடைக்கும் மீதி நேரங்களில் முழுமையாக பார்த்துவிடுவது என்று சங்கல்ப்பம்  செய்துள்ளேன். எதுவும் நடக்கும்...நட்புகளே எதுவும் நடக்கும்.    

Sunday, March 3, 2013

**கலவை - சுஜாதா : ஜென் கவிதை : கில்மா / பிட் படங்கள்**

இந்தியாவில் அகப்பெல்லா வகை இசையை வேறு யாரும் முயற்சித்து பார்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து ரகுமான் தான் முதன் முதலில் அதை பயன் படுத்தி என்றென்றுக்குமான இனிய இசையை வழங்கி இருக்கிறார் தமிழில். பெருமை நமக்கு. 


அகப்பெல்லா வகை இசை என்பது எந்த வித வாத்தியங்களின் உதவியும் இல்லாமல் வெறும் மனித குரலிலேயே இசை கோர்வையை அமைப்பது. இது அந்த காலத்தில் பிரெஞ்சு / இங்கிலாந்து போன்ற நாடுகளில் செல்வங்கள் இல்லாத தேவாலயங்கள் / வீதியோர நாடகங்கள் என்று பயன் படுத்தினார்கள். முக்கியமாக இந்த அகப்பெல்லா வகையை கையாள ஆழ்ந்த இசை ஞானம் வேண்டும். ரகுமான் கையாண்ட / இசையமைத்த அந்த அகப்பெல்லா பாடலை கேட்க இங்கே கிளிக்கவும். 

= = =


சமீபத்தில் நானெடுத்த புகைப்படங்களில் எனக்கு பிடித்ததொன்று.

= = =
இப்பொழுதெல்லாம் மன அமைதி விரும்பும் நேரங்களில் எல்லாம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் எட்டாவது நடைமேடையில் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். அப்படி படிக்க காரணம் அங்கிருந்து பார்க்கையில் பார்வைக்கு விரியும் கொளவாய் ஏரி தான். சுற்றியும் மலைகள் , அதிலிருந்து வரும் சிலு சிலு குளிர் காற்று. மெய் மறப்பது என்றால் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 


கட்டுமரத்தில் மீன் பிடிக்கும் தனியொரு மீனவர், கொக்கு, அடிக்கும் காற்றில் பறக்க முடியாமல் தட்டுதடுமாறி பறக்கும் காகங்கள்... ஏரியில் உற்பத்தி ஆகும் சிறு சிறு அலைகள் ...... மெய் மறந்து எங்கெங்கோ பறந்து கொண்டு இருப்பீர்கள் . அதுவும் மனத்துக்கு பிடித்த புத்தகத்தோடு அமர்கையில் ...சுகமோ சுகம்.  





அன்று 
மதியம் இங்கு போய்விட்ட பிறவு தான் கையில் எந்த புத்தகத்தையும் கொண்டு போகாதது ஞாபகத்துக்கு வந்தது, அப்பொழுது முதலாம் நடைமேடையில் எழுமலை அண்ணன் தனது எழுமலை புக் ஸ்டாலை மூடி கொண்டிருந்தார், என்னை பார்த்த உடனே .... சிறிது உரையாடலுக்கு பின், பூட்டி விட்ட கடையினை திறந்து , என்ன புத்தகம் வேண்டுமோ எடுக்க சொன்னார். அவருடைய மதிய சாப்பாட்டுக்கான நேரத்தை நான் சாப்பிட்டு விடாமல் ஆசான் சுஜாதா எழுதிய "கற்றதும் பெற்றதும்" பாகம் இரண்டை வாங்கிவிட்டு. மெய் மறக்கும் இடத்தில அமர்ந்து ஆசான் எழுதிய "யவனிகாவை மறக்க முடியவில்லை" கட்டுரையை படித்து கொண்டிருக்கையில் சிலு சிலு குளிர் காற்று, பலமான மதிய சாப்பாடு... நித்ரா தேவியின் வசம் என்னை நினைவை இழந்தேன். 

= = =
திருச்சியின் தலை சிறந்த பேச்சாளர் திரு.நீலகண்டன் பொதிகை பட்டிமன்றத்தில் பேசினதை பார்த்து ஆச்சரிய பட்டு போனேன். திருச்சியில் அவரது பேச்சை கேட்க ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு பிரபலம். பெரும்பாலும் கோவில்களில் தான் அவரை பேச்ச அழைப்பார்கள், அதனாலேயே புறநானூறு, கலிங்கத்துபரணி ....etc etc தான் அவர் மேடைகளில் பேசி கேட்டிருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சரித்திரம், பழங்கால தமிழர்களின் வாழ்வியல் என்று நன்றாக பேசுவார். 



பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒரு ஆராய்ச்சி பட்டம் தான் வாங்கிருந்தார். இப்பொழுது எவ்வளவோ தெரியவில்லை. நல்ல மனிதர். எனக்கு தமிழ் மீது ஆர்வம் வர அவருமொரு காரணம். 


SRC கல்லூரியில் இருந்து வந்து சமயபுரம் பஸ் ஏறும் பெண்களை சைட் அடிக்க நட்புகளோடு சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் காத்து கொண்டு இருந்த பொழுது "தம்பிகளா என்ன பண்ணுறீங்க" என்று குரல் கேட்டு பிறவு திரும்பி முதன் முதலில் அவரை பார்த்து பத்து வருடங்களாகிவிட்டது. இப்பொழுது என்னை அவருக்கு ஞாபகமிருக்குமாமென்று தெரியவில்லை.  


= = =
நதியின் அகண்ட பிரவேச போலவும், கடலோடு கலந்த பின் நதி நீர், மழை நீர் நிலை போலவும் காதலின் உச்ச அழகையும், அதனுடைய பிரிவின் சோகத்தையும்  கவிதைகளாய் வடித்து இருக்கிறார் நர்சிம் "உன்னை அழைத்துப்போக வந்தேன்" கவிதை தொகுப்பில். நான் வாசித்த முதல் காதல் கவிதை தொகுப்பு... ஒண்ணுமில்லாத வெறுமை மனகாரனாகிய என் மனதில் ஆயிரம் ஆயிரமாய் காதல் எறும்புகளை கொட்டி குறுகுறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது இக்கவிதை தொகுப்பு. நர்சிம் கையாண்டு இருக்கிற வார்த்தை ஜாலம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உதாரணத்திற்கு ...



"எனக்குப் பிடித்த 

எல்லாப் பாடல்களையும் 
உன் ஐ-பாடில் 
வைத்திருக்கிறாய் 

என்னை உனக்குப் பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே 
வைத்திருக்கிறாய்"


= = =
பிரமிள் அவர்களுக்கு கர்வம் கொஞ்சம் அதிகம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், அது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது வம்சி வெளியீட்டில் அவரது சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள "வரலாற்றுச் சலனங்கள்" யின் முதல் கட்டுரையான "ரசிகனும் சமூக மனப்பான்மையும்"  படிக்கும் போது.

= = =
இந்தியாவில் அணைத்து வணிக உணவகங்களிலும் இப்பொழுது பரவி வரும் frozen food கலாச்சாரம் வருகிறது.சிறு நகரங்களில் பள்ளி குழந்தைகளை குறி வைத்து frozen samosa , frozened veg roll போன்றவையை விற்கிறார்கள் ... இவை எல்லாம் சாப்பிட நல்ல மொறு மொறு என்று இருந்தாலும் சுவையோ தரமோ இருக்காது. இந்த அதிகபடியான மொறு மொறுவே குழந்தைகளை ஈர்க்கும். 



கொஞ்ச நாள் முன்பு  சமோசாவில் இருக்கும் stuffing  யை  சரியாக பத படுத்தாமல் இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் வந்தது frozened சமோசாவை இரண்டாவது தடவை செங்கல்பட்டில் சாப்பிட்ட பொழுது. அதனுள் இருந்த வெங்காயம் பச்சையாவே இருந்தது


= = =
எப்பொழுதெல்லாம் ஓர் படைப்பை தளமாய் கொண்டு மத சார்ப்பு பிரச்சனைகள் வருகிறதோ எனக்கு கொபயாஷி இஸ்ஸா எழுதிய ஜென் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்பு புள்ளி தெரியவில்லை ....



"கடவுள் காக்க வேண்டும் நம்மை

ஒரு மின்மினியின் நெருப்பு 
அதிகரித்தாலும் போதும்,
கடவுள் தான்
ஆம், கடவுள்தான் 
நம்மைக் காப்பாற்ற வேண்டும் !"


= = =
நேற்று மாலை கடற்கரை ரயில் நிலைய கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு, வெளியே வந்து அதற்க்கு தர வேண்டிய இரண்டு ரூபாய்க்கு  ஒரு ரூபாயாகவும் இரண்டு ஐம்பது பைசாகளுமாய் தந்த பொழுது, கல்லா உட்கார்ந்து இருந்த பெண்மணி "அம்பது காசு எல்லாம் செல்லாதுங்க...வேற குடுங்க" என்று சொன்னார். 



எவ்வளவு பேசி பார்த்தும் இந்தியாவில் இந்திய அரசாங்கம் வெளியீட்டுள்ள ஐம்பது காசு செல்லாது என்று வாதம் செய்தார். வேறு வழி இல்லாமல் அக்கம்பக்கம் போய் ஒரு ரூபாய் காசாக வாங்கி அவரிடம் தந்தேன், நூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று அவர் சொன்ன பொழுது. 


பிறவு என் பொது அறிவு மங்கி விட்டதோ என்று பயம் வந்து நான் முன்பு வேலை பார்த்த வங்கியில் ஒருவருக்கு போன் செய்து கேட்ட பொழுது "அதெல்லாம் வாங்கிப்போம்ப்பா ..." என்று சொன்னார்.   


= = =
தில்லானா மோகனாம்பாள் படத்தில் கர்நாடக இசையில் மயங்கிய துரைமார் தங்களது இசையை நீங்கள் வாசிக்க முடியுமா என்று சிக்கல் சண்முக சுந்தரம் இடம் கேட்பார்கள். 



பிறகு மேற்கத்திய இசையை தனது கோஷ்டியோடு வாசிப்பார். அந்த இசை கோர்வையை உருவாக்கியது மதுரை மணி ஐய்யர் என்பவர் என்பது எனது சிறு தேடலில் கிடைத்த தகவல். உண்மையா என்று தெரியவில்லை. 


அந்த இசை கோர்வையை பயன்படுத்தி கொண்ட கே.வி.மகாதேவன் அவர்கள் மதுரை மணி அவர்களுக்கு எந்த கிரெடிட்டும் தரவில்லையாம். 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.  


= = =
மாயங்களை செய்துவிட்டு தனது அரி வண்ணத்து புன்னகை உடன் மறைந்து போய் விடுகிறான் என் இசை தெய்வம். சொர்க்க காடுகளில் பாய்ந்து ஓடிபோகும் நதியில் குளித்து, அதன் குளுமையை உணர்ந்த தேசாந்திரி போல் ஆகிவிடுகிறேன் அவரது ஒவ்வொரு இசை கோர்வையை கேட்கும் பொழுதும், கேட்டு முடிந்த பொழுதுகளிலும். இளையராஜா இளையராஜா தான்.கோபுர வாசலிலே பட ஆரம்ப இசை ... அற்புதங்களின் ஜீவநதி 

பல வருடம் கழித்து இன்று அகத்தியன் இயக்கிய "காதல் கவிதை" படத்தை பார்த்தேன். படம் ரொம்ப பிடித்து போக காரணம் இளையராஜா ஸார் தான். பொதுவாய் ராஜா ஸார் இசையமைத்த பாடல்களுக்காக இல்லாமல் பின்னணி இசைக்காக பார்த்தேன். மிரட்டி பட்டைய கிளப்பி இருக்கார் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக உணர்தேன் பின்னணி இசை கோர்வையை கேட்ட பொழுது. 

= = =
"Barack Obama, The White House, and 9 others have Tweets for you"



என்னகொசம் இவங்களை யாரு  டிவிட் போட சொன்னது ...ஒழுங்காவே வேலை பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே . ஒபாமாவுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கு. நான் டிவிட்டர் ல அக்டிவ்வா இல்லைன்னு தெரிஞ்சுகிட்டே ஒபாமா டிவிட்டர் ல எனக்காக டிவிட் போடுறாரு. இதுக்கு ஜிமெயில் காரனும் கூட்டு போல 


= = =
என்னவென்று தெரியவில்லை, எண்டமூரிவீரேந்திரநாத் எழுத்துக்கள் என்னுள் மாயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. சுய மதிப்பீடு விசாரணை ... துள்ளல் எழுத்துநடை, படிக்க ஆரம்பித்தால் முடிவு வரைக்கும் கொண்டு செல்லும் விறுவிறுப்பு. 



சொன்ன போனால் அவரது எழுத்துக்கள் யாவும் கிளாஸ் + மாஸ் என்றே தோன்றுகிறது. 


அவருடைய  த்ரில்லர் என்ற நாவலை தற்பொழுது வாசித்து கொண்டிருக்கிறேன். அசத்தலோ அசத்தல் படித்த வரைக்கும். இந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார். 


அவர்கள் எண்டமூரியின் நாவல்களில் முப்பதை மொழிபெயர்த்து வெளியீட்டு இருக்கிறார்கள்... கேட்டதில் முப்பதும்  ரூ.1500 ல் இருந்து ரூ.2000 க்குள் தள்ளுபடி உடன் வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். 

இந்த அல்லையன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கிறது. கொஞ்சம் தள்ளி அடையார் ஆனந்த பவனும் இருக்கிறது. 

செவுக்குண வில்லாத பொழுது  சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டடத்தை கட்டி இருக்கிறார்கள் அல்லையன்ஸ் நிறுவனத்தார். 100 வருட பழமையான பதிப்பகம் இது.  


= = =
சென்னையிலேயே ரொம்ப பழமையான பகுதிகளில் ஓன்று சைதாபேட்டை, சுருக்கமாக சைதை. கிடைத்த குறிப்புகளின் படி 1730 ல் சைய்து கான் என்பவர் இந்த நில பகுதியின் சொந்தகாரர். அவரது பெயரில் இருந்து தான் சைதை தனது பெயரை பெற்றது. 



அடையாறு நதி பக்கத்தில் இருப்பதால், விவசாயம் நடந்திருக்கலாம் என்று நான் அறிந்த புவியியல் நிபுணர்கள் சொன்னார்கள். மதராஸ் டவுன் என்று அழைக்க பட்ட பகுதிக்கு ஒரே தரைவழி நுழைவாயிலாக பல காலம் இருந்து வந்துள்ளது. 


அந்த காலத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் மண்ணியல் / இயற்பியல் / தாவரவியல் / நில உருவாக்கவியல் / நிலத்தோற்ற வாழ்சூழலியல் ஆராய்ச்சிகளை தோட்டங்கள் வைத்து   மேற்கொண்டு பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்புகள் சரியாக இல்லை. அனால் பெரும் தோட்டங்கள் இருந்தற்கான குறிப்புகள் இருக்கிறது. 

திநகரில் ஒரு காலத்தில் இருந்த காடு / ஏரி சைதை வரை நீண்டு இருந்துள்ளது. 

படகு வழி போக்குவரத்து / வர்த்தகம் நடந்துள்ளதாக சைதை வாழ் பெரியவர்கள் சொல்கிறார்கள், இதற்கும் குறிப்புகள் இல்லை. 

தோட்டங்கள் வைத்த அந்த ஆங்கிலேயர்களது குறிப்புகளை தேடி கொண்டிருக்கிறேன். 


= = =
கற்றதும் பெற்றதுமில் சுஜாதா அவர்கள் பகிர்ந்தது - 



"முன்னாள் இந்நாள் முதல்வர்கள் 

சட்டசபையில் 
எதிரெதிரே மட்டுமல்ல 
அருகிலும்தான்"  - எழுதியவர் எம்.சேவியர்பால், கோயம்பத்தூர். 

ஹைக்கூ வடிவ கவிதைகளை எட்கூ என்று வாத்தியார் சொல்கிறார். அதாவது சமகால நிகழ்வுகளை விமர்சிக்கும் ஹைக்கூ கவிதைகள் தான் எட்கூ. சென்னையை பற்றிய  குறிப்புகளை தேடுகையில் கிடைத்தது. 

ஓர் சென்னை பற்றிய குறிப்பு - 

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு, சென்னையில் மிக முக்கிய பேருந்து நிறுத்தங்களிலேயே  ஒரு பேருந்து நடந்துனர் இருப்பாராம். பேருந்து  வருவதற்குள் அவரிடம் பயணசீட்டு வாங்கி கொள்ளலாமாம். இந்த விஷயம் வண்ணநிலவனின் "பின்நகர்ந்த காலம்" ல் படித்தேன். இந்த புத்தகம் இராமச்சந்திரன் என்ற சாதாரணன் வண்ணநிலவன் ஆன கதையை கட்டுரை வடிவில் சொல்கிறது.  


= = =
NESTLE DRY FRUITS ன்னு புது சாக்லேட் வகையறவை விட்டிருக்காங்க. செம மொக்கையா இருக்கு. சுவையே இல்லை. அவங்க ஏற்கனவே விட்டு MILK வகையறவுல கொஞ்சம் பட்டி தட்டி விட்டு இருக்காங்க போல. விலை ரொம்ப ஜாஸ்தி ரூ.25 



ஆனா, PARLE HIDE & SEEK CAFFE MACHO ன்னு புது வரைட்டி வந்திருக்கு. சுவைன்ன அப்படி ஒரு சுவை. BRITANNIA  CHOCO NUT சீரீஸூக்கு செம போட்டி. நெய் கொஞ்சம் நிறைய சேர்த்து இருக்காங்க போல. 


இதைய டைப் பண்ணிட்டு இருக்கும் பொழுது ஏனோ ஜேன் ரீக்ஹோல்ட் எழுதின ஒரு ஜென் கவிதை ஞாபகத்துக்கு வருது. அப்படி ஞாபகத்துக்கு வர காரணம் அதை நேத்து தான் படிச்சேன். அந்த கவிதை ....

"சம்மணமிட்டுத்
தியானத்திலிருக்கிறான் ஒரு 
சாகபட்சிணி. கோழிக்கறி 
வறுபடுகிறது."  


= = =
தமிழகத்தில் பல குஜால்ஸ் படங்கள் எடுத்து இருந்தாலும், அவைகளில் சொருவ படும் பிட் என்பது 1940 - 1970 வரை வெளிநாட்டில் எடுத்த உடலறவு காட்சிகளாக தான் இருக்கும். 



இதை தவிர்த்து,  முழுமையான உடலறவு காட்சிகளை மட்டும் கொண்ட படங்களை தயாரிப்பதிலும் தென் இந்தியாவில் கொஞ்சம் மந்தநிலையே இருந்தது. 


பிறவு பலான சிடிக்கள் விஷயத்திலும் இந்தியா பின் தங்கியே இருந்தது. அதனால் கில்மா விஷயத்துல வெளிநாட்டுகாரன் தான் டாப்பு. அவனிய பார்த்து தான் நம்ம ஆட்கள் கெட்டு போனாங்க 


பொருளாதார தேடல்களுக்கும், இந்த பிட்டுகளுக்கும் நிறையவே தொடர்பு உண்டு, வேலை தேடி வெளிநாடுகளுக்கு போனவர்கள், கொஞ்ச வருடம் கழித்து தாயகம் வரும் பொழுது அங்கு கிடைக்கும் கில்மா கேஸட்களை வாங்கி வந்தார்கள்..... அதாவது இதன் மூலம் 1970ல் இருந்து ஆரம்பித்தது. 

 சிவா புராணத்தை (சொக்கநாதர் திருவிளையாடல்) எடுத்து கொண்டால் அதில் தாய் - மகன் உறவு என்ற அளவுக்கு எல்லாம் கதை சொல்லி இருப்பர்கள். அதனால் புராணம் / இதிகாசம் கதை எல்லாம் கேட்டு கெட்டு போன சாராரி இந்தியனின் ரசிப்பு வெளிப்பாடு தான் கில்மா படங்கள்  . சினிமா மக்களை கெடுக்கவில்லை. 

Thursday, February 28, 2013

சுஜாதா - இந்திய தேசிய அறிவியல் தினம்


இன்று இந்திய தேசிய அறிவியல் தினம். இந்த நாளில் ஒரு தலைமுறைக்கே ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் மொழி போல் இருந்த அறிவியலை அண்ணாச்சி கடை வாழை பழம் போல் எளிதாக்கி தந்த என் ஆசான் சுஜாதா அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

சிறு வயது முதலே சுஜாதாவை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், அவர் மீதான ஆர்வம் என்னவோ கொலையுதிர் காலம் நாவலை தழுவி DD தமிழில் சீரியலாக வந்த பொழுது தான். ஆச்சரியங்கள் பலவற்றை தந்தது. 

2003 என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கது தேவதைகள் தொடர் விகடனில் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பொழுது, ஆயிர கிலோ கணக்கில் இன்பங்களையும், சுவாரசியத்தையும் பழசாறாக்கி குடித்தது போல் உணர்தேன். அவரை சந்தித்து அவரது கைக்கு முத்தங்களை தரலாமென்று இருந்தேன். பிறவு நான் ஸ்ரீ ரங்கதுக்கு செல்வது அதிகமாகின. எனக்கு பிடித்த இடங்களில் முதன்மை பெற்றது ஸ்ரீரெங்கம்.  

அவரது கற்றது பெற்றதும் .... படித்திருக்கிறேன் ..தொடர்ச்சியாக இல்லை. 

ஒரு நாள் தொலைக்காட்சியில் சுஜாதா இறந்து விட்டாரென்று செய்தி.... யார் யாரோ அவரது உயர்வுகளை பற்றி பேசினார்கள். தமிழ் பதிவுலகம் எனக்கு அறிமுகமாகிருந்த புதிது. தமிழ் இணைய தளங்களிலும் அவரது உயர்வுகளே வார்த்தை வடிவில் சோக சாயலுடன்.  ஏக்கம், ஏமாற்றம் ...என்ன உணர்வென்று தெரியவில்லை, ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. ஆனால் ரொம்ப சோகமெல்லாமில்லை. 

பிறவு தான் அவரது எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன் ..... இப்பொழுது எனக்கு சொல்ல தோன்றுகிறது   "சுஜாதா ..THE GREAT ..என்ன மனுஷனய்யா நீர்"

Wednesday, February 27, 2013

சிறு போராட்ட குழுக்கள்


சுகந்திர போராட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களை தவிர்த்து நிறைய பேர் சிறு சிறு குழுக்களாய் சுகந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு உள்ளார்கள். ஆனால் சோகம் என்றால் பிரிட்டிஷ் அரசும் அன்றைய காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் இந்த சிறு குழுக்களை கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்றே அடையாள படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களுக்கு சுகந்திர போராட்டத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அத்தனை பங்கு இந்த சிறு குழு வீரர்களுக்கும் இருக்கிறது. 

கல்கி அவர்கள் தனது கிளாச்சிக் நாவலான "அலை ஓசை"யில் இவர்களை பற்றியும், இவர்களது செயல் பாடுகளை பற்றியும் விரிவாகவே எழுதிருப்பார். அதன் மூலம் தான் எனக்கும் இவர்களை பற்றி தெரிய வந்தது. 

இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த குழுக்களாகவும், மதம்  சார்ந்த குழுக்களாகவும் தான் இருந்தார்கள். அதுவும் மதம் சார்ந்த குழுக்கள் தான் அதிகம் பரவலாக இருந்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் அன்றைய மக்களிடையே நிலவி வந்த மதம் / ஜாதி சார்பு தன்மையே. 

காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவும் அப்படிப்பட்ட மதம் சார்ந்த போராட்ட குழுவை சேர்ந்தவன் தான். 

குறிப்புகளின் படி பார்த்தால், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்த மாதிரியான போராட்ட குழுக்கள் அதிகம் இருந்தன. அல்லது தென் இந்திய போராட்ட குழுக்களை பற்றி நான் அதிகம் படிக்கவில்லை என்று வைத்து கொள்ளலாம். 

இவர்கள் பலர் காந்திய வழியை ஆதரித்தும் எதிர்த்தும் கொள்கைகளை கொண்டவர்களாக இருந்து உள்ளனர். அனுஷிலன் சமிதி, ஜுகாந்தர், பெங்கால் தோழர்கள், மோகன் பேகன் ஓட்டபந்தைய  குழு ஆகிய குழுக்களை பற்றி குறிப்புகள் கிடைக்கிறது. சில பல குழுக்களை இந்தியாவிற்கு வெளிய இருந்தும் ஆதரவு இத்தகைய போராட்ட குழுக்களுக்கு தந்து உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிதி உதவி, அடைக்கல உதவி என்ற அளவிலேயே இருந்து உள்ளனர். களப்பணியும் சிறுது உண்டு இவர்களுக்கு. 

இன்றைய காலத்தில் இந்த குழுக்களை பற்றிய  சினிமா பதிவுகள் என்று பார்த்தால் கொஞ்சம் குறைவு தான், காரணம் அரசியல், இன்னொன்று இந்த குழுக்களை பற்றி விஷய ஞானம் இல்லாதமை. புனைவு / அபுனைவு புத்தக பதிவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.

நேற்று நான் படித்த முக்கிய குறிப்புகளின் முக்கியமானதாக கருதுவது சிட்டகாங் ராணுவ தாக்குதல் தான், ஏனென்றால் லாகன் புகழ் அஷுடோஷ் கோவரிகர் தயாரித்து இயக்கிய   க்ஹெளின் ஹம் ஜி ஜான் சே  (Khelein Hum Jee Jaan Sey ) தான். இது ஏதோ புத்தகத்தை தழுவி எடுத்து உள்ளனர். 

சோகம் என்னவென்றால் இந்த சிறு குழுக்களை கலவர காரர்கள் /  தீவிரவாதி என்றே அடையாள படுத்தி வந்துள்ளதால், சுகந்திர இந்தியாவில் தியாகி பென்ஷன் பலருக்கு கிடைக்கவில்லை. அதை அவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேற விஷயம். 

இவர்களது காலம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்த வரைக்கும் அது 1900 க்கு பிறவு தான். 

வன்முறை பாதையில் சென்றவர்களுக்கு ஆயுதம் வழங்கி பல வெளிநாட்டவர்களுக்கும் உதவி செய்து உள்ளதாக தெரிகிறது.சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு இம்சை தருவதையே கொள்கையாக வைத்து கொண்டவர்களும் உண்டு. உதாரணம் லக்நொவ்வில் நடந்த காகோரி ரயில் தாக்குதல். மாபெரும் கூட்டு முயற்சி. 

நட்புகளே, உங்களுக்கு இந்த சிறு போராட்ட குழுக்களை பற்றி விவரம் எதாவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.  

குறிப்பு - 


இதை படித்து விட்டு நண்பர் கண்ணா.கே அவர்கள்  கூறியது - 

எனக்கு இந்த கவிதைதான் ஞாபகத்துக்கு வருது


'மகாபாரதம் 

இதிகாசமானது.

பகவத்கீதை

வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்

அனைவரும் கடவுளானார்கள்.

எல்லாம் சரி,

கூட்டம் கூட்டமாக

வெட்டிக்கொண்டும்

குத்திக்கொண்டும்

செத்துப்போன

சிப்பாய்கள்

என்ன ஆனார்கள்?' ''

= = = 


பின் சேர்க்கை :- 

விவரங்களை காலையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்த பின்...யோசனைகள் இது குறித்தானது பலம் பெற்றது. எப்படி போராடி இருந்தாலும் எல்லோரது நோக்கமுமொன்றானதாக தானிருந்திருக்கிறது. ஐயம் இல்லை. அனால் ஒரு விழா என்று வந்துவிட்டால் ஏதோ சிலரை அல்லது ஒரு வகுப்பினரை மட்டுமே நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரும் இயக்கத்தோடு கூட்டு சேரவில்லை இவர்கள்.... அதனால் குறிப்புகளில் கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்று பெயர் பெற்று விட்டனர். 

எல்லாவற்றிலும் இருக்கும் புகழ் சார்பு மயக்கம் இதிலும் மக்களிடத்தில் பரவி உள்ளதாகவே இருக்கிறது. 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு காகோரி ரயில் தாக்குதலை பற்றி இன்னும் விவரமாக படிக்கலாமென்று தேடல்பொறி உதவி கொண்டு தேடினால், அச்சம்பவத்தை காகோரி ரயில் கொள்ளை என்று பலர் குறிப்பீட்டு எழுதி உள்ளார்கள். கஷ்டமாக இருந்தது. என்ன ஏதென்று கூட படிக்கவில்லை. அப்பக்கத்தை மூடிவிட்டேன். ஆதரங்களே தன்மை யற்று இருக்கிறது ...இவ்விஷயத்தில். 

அதுசரி இந்திய நாட்டின் கல்வி நூல்கள் எல்லாம் அரசியல் சார்பு கொண்டதாக தானே இருக்கிறது, அப்படி இருக்கும் பொழுது சிறு போராட்ட குழுக்களின் நியாய பக்கங்கள் எவ்வாறு எழுத படும் ?? 

நான் பார்க்கும் / கேட்கும் விவாதங்கள் யாவும் பிரபல தன்மை கொண்டவர்களின் சுற்றியே உள்ளது. இந்த சிறு போராட்ட குழுக்கள் பற்றிய விவரங்கள் தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தவைகளை படித்துவிட்டு, முழுமையாக பகிர்கிறேன். 

Related Posts with Thumbnails