Pages

Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Saturday, May 29, 2010

மணமகள் தேவை - கார்த்திகை பாண்டியனுக்கு

மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம். அந்த அளவுக்கு உள்ளுள்ள நிறைய விஷயத்தை வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சீன் போடுவாரு. ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு. அந்த அளவுக்கு இவரு ஒரு இலக்கிய பீஸ். (என்னை மாதிரி காமெடி பீஸ் கூட ,.... நல்ல படிங்க காம பீஸ்ன்னு எழுதல)

அடடடா.... பதிவு எழுத வந்த மேட்டரையையே மறந்துட்டேன் பாருங்க. நேத்து இவரோட பிறந்த நாளை இவரு கொண்டாடி இருக்காரு. அது சரி இவரோட பொறந்த நாளை இவரு கொண்டாடாம பக்கத்துக்கு வீட்டுகாரன் ஆ வந்து கொண்டாடுவான். எத்தனை குஜிளிக்கள், எத்தனை இலக்கிய பீஸ்கள் ......... அந்த கொண்டாடத்தில் கலந்து கிட்டாங்கன்னு தெரியாது, ஏன்ன அந்த அளவுக்கு மதுரையில நம்ம உளவு துறை இல்லை என்பது தான் உண்மை. ஹி ஹி ஹி

நேத்து இவருக்கு நான் போன் பண்ணும் போது தான் இந்த விஷயத்த சொன்னாரு. அப்பவே ஒரு பதிவு போட்டு இருப்பேன். ஆனா என்ன ஒன்னு பாருங்க சம்பளம் வாங்குறேன் ன்ற ஒரே காரணத்துக்காக என்னை வேலை பார்க்க சொல்லிட்டாரு முதலாளி. நானெல்லாம் ஆபீஸ் வர்றதே ஒரு பெரிய புண்ணியம்ன்னு அவருக்கு தெரியல. ஓகே அவரை ப்ரீயா விட்டுருவோம்.

இவருக்கும் என்னனாவோ சொல்லி பார்த்துட்டாரு அவங்க வீட்டுல அவரோட கல்யாண பேச்சை யாரும் எடுக்க காணல. சரி ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை தப்பிச்சுதுன்னு பார்த்த, காபா ரொம்ப பழகிய ஆளா போயிட்டாரு. மனசை கல் ஆக்கிகிட்டு ...... இந்த பதிவோட டைட்டில்யை எழுதினேன் ...... மணமகள் தேவை.

பொண்ணுக்கு எது தெரிஞ்சு இருக்கோ இல்லையோ கட்டாயம் மொக்கை தனமா இலக்கியம் பேச தெரிஞ்சு இருக்க வேண்டும். பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. அதுல அவங்க பாஸ் ஆனா தான் கல்யாணம். இல்லாட்டி வெறும் friends .....


முக்கியமாக பொண்ணு கார்த்திகை பண்டியானோட கல்யாணமான பின்னாடி எஸ்ரா ஓட அடியாளாக மாறணும். யாமம், நெடுங்குருதி .... இன்னும் என்னன்னா இருக்கோ அதெல்லாம் தினசரி வாழ்க்கை ல பொண்ணு படிக்கணும்.

டிஸ்கி - இன்னும் நிறைய எழுதிருப்பேன், ஆனால் "i am பாவம்" என்று அவரே சொன்னதினால் இதோடு விட்டுவிட்டேன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் ரொம்ப நல்லவருங்க) . பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவர் தனது துறை சார்ந்த மேற்படிப்பில் முயற்சித்து வருவதினால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.


"எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், அதை விட சந்தோசம் தரும் விஷயம் வேறு எதுவுமில்லை. இயசு சொன்னது போல (அல்லது சொன்னார் என்று நம்ப படுகிற) உன்னை போல் பிறரையும் நேசி" ( இதை எதுக்கு சொல்லுறேன் என்றால் வர வர என்னோட பதிவில் கருத்தே இல்லைன்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அதுக்கு தான். மேலும் இந்த மாதிரி கருத்து சொன்ன ஒரு மொக்கை பதிவு கூட இலக்கிய பதிவு ஆகி விடும் என்று பதிவுலக பெருசுகள் பலர் சொன்னாங்க )



Saturday, February 13, 2010

காதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்

  • PROPOSE பண்ண போற பொண்ணு எந்த மாதிரி டைப்ன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்ப தான் யாரும் பார்க்காதவாறு செருப்படி வாங்க முடியும். (கருணை அடிப்படையில் மறைவிடத்தில் வழகும் படி கேட்க வாய்ப்பு கிடைக்கும்)
  • பொண்ணுங்க கிட்ட எடுத்த உடனே காதலை சொல்லிவிட கூடாது. அவளுடைய தங்கச்சி அழகா இருந்தா டக்குன்னு அவகிட்ட காதலை சொல்ல சான்ஸ் கிடைக்கும். (சில சமயம் பொண்ணுங்களை விட அவங்க அம்மா அழகாய் இருப்பாங்க. அதுக்குன்னு தவறான வழியில் போக கூடாது. அந்த பொண்ணுங்களோட அப்பாவின் அதிர்ஷ்டம் எண்ணி பெரு முச்சு விட்டுக்க வேண்டியது தான் )....
  • ஒரு வேளை நீங்கள் என்னை மாதிரி பயங்கர மொக்கை பார்ட்டியாக இருந்தால், காதலை நேரில் சொல்ல வேண்டாம்.
    அவங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் பொழுது ...."உங்க கிட்ட தனியா பேசணும்" ங்கிற மாதிரி எல்லாம் ஆரமிக்க கூடாது. அப்படி ஆரமிச்ச பார்ட்டி முதலிலையே உஷார் ஆகிடுவாங்க.
  • feb 14 அன்னைக்கு நிறைய பொண்ணுங்க வெளியே வருவாங்க. so காலேஜ் க்கு அப்ளிகேஷன் போடுற மாதிரி ட்ரை பண்ணுங்க.
    முதலில் காதலை சொல்லும் முன், எதையும் தாங்கும் உடம்பு இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய செலவு வந்தாலும் அதை சந்திக்கும் பர்ஸ் வேண்டும்.
  • அப்படி உங்களுக்கு சூப்பர் பிகர் யாரையும் தெரியாது என்றால் ....நாளைக்கு வெளியவே போகாதிங்க( நீங்க எல்லாம் என் ஜாதி)(நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன பயன்)
  • இருப்பதிலையே பிரச்சனை இல்லாதது எதுவென்றால் ..."ஒரு தலைக் காதல்" தான். இந்த வகை காதலில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். வைரமுத்துவே சொல்லிருக்கார் ...."கற்பனை மட்டும் இல்லையென்றால் நிஜங்கள் நம்மை தின்று விடும்" என்று.

Wednesday, February 10, 2010

தமிழ்ப்பட விமர்சனம் : அசலான விமர்சனம்

பத்து லட்சம் ஹிட்ஸ்களை தர போகும் பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (அப்படி யாராச்சு இருக்கிங்களா ...இருந்தா சொல்லுங்கப்பா) நன்றி நன்றி ........

சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்னு சொல்லிருக்காரு..அதனால் இனிமேல் படம் வெளிவரும் பொழுது அது கக்கா போக தெரிந்தவர்களுக்கா ...இல்லை முச்சா போக தெரிந்தவர்களுக்கா என்று அவர்கள் சொல்லி விட்டால் நல்ல இருக்கும் ..... அதன்ப்படி நாங்களும் படம் பார்ப்போம் ,விமர்சனம் எழுதுவோம் ல


டிஸ்கி : தமிழில் எழுதும் போது தமிழ் படத்திற்கு தானே பெரும்வாரியாக விமர்சனம் எழுத முடியும். அதுவும் அசலாக இருந்தால் தானே எல்லோரும் படிபங்க.......

கொஞ்ச நாளாய் எல்லா பதிவுகளிலும் எதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க. சரின்னு புயலாய் புறப்பட்டு விமர்சனம் எழுதியே தீர்வதுன்னு ஒரு முடிவோட எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நான் இது வரைக்கும் எந்த புதுப் படத்துக்கும் விமர்சனம் எழுதினது இல்லை ....... அப்படியே எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதுன்னு தெரியல.

சரி ஏதோ ஒப்புக்கு கதை சவாரி அடிக்குது, கேமரா லென்ஸ் ல ஓட்டை, டைரக்டர் சரியாய் குளிக்கல...... ஹீரோவுக்கு ஜெட்டி சைஸ் சரி இல்லைன்னு நானும் நூற்றுக்கு பத்தாய் எழுதிட்டு போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் என்னை என்ன சொல்லும்(நமக்கு சரித்திரம், பொருளாதாரம், ஆங்கிலம்........ எல்லா கருமமும் முக்கியம் இல்லையா)......

நம்ம எப்புடி விமர்சனம் எழுதின என்ன .....நூறு வருடம் கழித்து வர போகும் என்னைப் போல் உள்ள மட்டையர்களுக்கு தெரியவா போகுது ?????

நேத்து சாயங்காலம் பிற பதிவாளர்கள் எப்புடி விமர்சனம் எழுதறாங்கன்னு பார்க்கலாம்ன்னு உட்க்கார்ந்த.....முடியல, என்னை தவிர எல்லா பையபுள்ளைகளும் படத்தை விமர்சனம்ங்கிற பெயர்ல விம் சோப்பு போட்டு தோச்சு எடுக்கிறாங்க. நான் அப்படியா ஷாக் ஆகிட்டேன்.

படம் பார்க்க உட்க்காரும் பொழுதே அடியில் கொல்லி கட்டை வைசுக்குவங்க போல் இருக்கு. அவங்க பதிவுகளெல்லாம் படிக்கும் பொழுது தியேட்டர் விட்டு வெளிய வழியே (கவிதை கவிதை .....என்ன கருமம்மோ) வந்துடனே டி குடிக்குரங்களோ (இலக்கியவியாதிகள் மன்னிக்கவும்......சரியான spelling தெரியல) இல்லையோ இன்டர்நெட் செனட்டர்க்கு போய் விமர்சனம் எழுத START பண்ணி விடுறாங்க .......

தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????

இன்னொரு விஷயம் ....எனக்கு விமர்சனம் எழுத தெரிந்தால் நான் எழுத மாட்டேனா ???? பிறகு படம் பார்க்காமல் விமர்சனம் எழுத எனக்கு தெரியாதே ......(அந்த மாதிரி பின்னோட்டம் வேண்டுமானால் போடா தெரியும்).....

அதுவும் மொக்கை படத்துக்கு மொக்கையா விமர்சனம் எழுதின பிறகு திரட்டில சேர்க்க படும் படு இருக்கே ........இதுல வேற விமர்சனத்துல இடைச்சொற்கள் இல்லைன்னு இலக்கியவாதிகள் complaint பண்ணுறாங்க....அவங்களெல்லாம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் AGATHA CHRISTIE ஓட தமிழ் மொழிபெயர்ப்பு நாவலை படிக்க வைக்க வேண்டும்.....(அவங்க கிட்ட தான் எப்புடி ஒரு சிறந்த நாவலை மொழிபெயர்த்து மொக்கை ஆக்குவது என்பதை கற்று கொள்ள வேண்டும் .....இதிலையும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பல புது புது தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் ......அதற்க்கெல்லாம் பாரதி சொன்னது போல் மனதில் உறுதி வேண்டும்....வார்த்தைகளில் தெளிவு வேண்டும்)....

இன்னொரு முக்காத விஷயம் என்னன்னா விமர்சனம் எழுத ஆரமிக்க இருக்கிற வரைக்கும் அந்த மொக்கை படங்களின் கதையை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம். இதை விட பெரிய தண்டனை வேறு எதுவுமில்லை......

ஆனால் இந்த பட விமர்சனங்களால் ஒரு நன்மையையும் உண்டு ........ பிறர் காசை செலவு செய்து படம் விட்டு ....விமர்சனம் எழுதவங்க. அதை படிச்சுட்டு நம்ம காசை மிச்சம் பிடிச்சுக்கலாம்.

அப்படா நானும் விமர்சனம் எழுதிட்டேன் .......

Thursday, February 4, 2010

ஆனந்த விகடனும் தமிழ்ப்படமும்

வழக்கம் போல் இந்த வாரமும் ஆனந்த விகடன் வாங்க கூடாது என்றே இருந்தேன். ஆனால் cover story யை பார்த்த உடனே வாங்க வேண்டியதாக போயிருச்சு. அப்படி என்ன கவர் ஸ்டோரி??? சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா........(தலைப்பு சரியாய் ஞாபகமில்லை) எழுதியவர் கதிர்வேலன் (இதுவும் சரியாய் ஞாபகமில்லை).

சரி நம்ம கவர் ஸ்டோரிக்குள் போகும் முன் ...... விகடன்ல லூசு பையன் ங்கிற ஒருத்தர் ஓர் நையாண்டி பகுதியை எழுதிட்டு இருக்காரு. அதில் அவர்கள் கிண்டல் பண்ணாத அரசியல்வாதிகள், சினிமா ஆளுங்களே இல்லை என்று சொல்லலாம்.

அரசியல்வாதிகளின் மீதும், சினிமாக்காரங்க மீதும் அவர்கள் வைப்பது கொள்கை ரீதியான விமர்சனமோ, கிண்டலோ இல்லை. பெரும்பாலும் அவை அனைத்தும் தனிநபர் தகுதல்களாகவே இருக்கும். அத்தனை கிண்டல் தொனிக்கும் கார்ட்டூன் படங்கள். அதுவும் விஜயை அவர்கள் கிண்டலடிக்கும் விதம்....அப்பப்ப. (விகடன் வீட்டிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்க படுகிறது).

இப்படி கார்டூன் போடும் அவர்கள் எந்த உரிமையில் இந்த மாதிரியான கவர் ஸ்டோரிக்களை போட்டார்கள் என்று எனக்கு சத்யமா தெரியல. ஒரு வேளை அதெல்லாம் தான் பத்திரிகை தர்மம்மோ .......

ஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்திற்கு போய், நன்றாக சிரித்துவிட்டு வந்தேன். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த படத்தில் யாரையும் அவர்கள் புண்படுத்தவில்லை .

முக்கியமாக ஒரு விஷயம் ......இந்த மாதிரியான கவர் ஸ்டோரி நான் விகடனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் தமிழ்ப்படத்தை பற்றியும், அத்தனை இயக்கிய அமுதனை பற்றியும் எதாவது பாராட்டி எழுதிருப்பர்கள் என்று நினைத்தேன்.

கடைசியாக அவர்கள் விஜய் ரசிகர்களை வேற சப்போர்ட் க்கு வருகிற மாதிரி எழுதிருக்காங்க ...... எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. பிறகு என்னோடு இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் பல நடிகர்களுக்கு தீவிர விசிறிகளே.

இந்த கூத்தில் தயாநிதி அழகிரியும் விஜய்யும் ஏதோ சண்டை போட்டு கொள்வது போல் ...அட்டை படம். ......

முக்கியமாக .....ஒரு விஷயம் கிண்டலடிக்கப்பட கூடாது என்றால் ....... கிண்டலடிக்க கூடிய விஷயங்கள் ஏதும் அதில் இருக்க கூடாது.

இதில் வேறுச் சில டைரக்டர்கள் கோவப்பட்டு இருக்காங்க ....... கதை மேல் நம்பிக்கை இல்லாமல் மசாலா ஐட்டங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தானே அவர்கள் ........

ஒரு பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி ...என்றால் பல்வேறு விஷயங்களை முன் வைத்து, அதனை கொண்டு ஆராய்ந்து, அதன் முலம் ஆசிரியர் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். ஆனால் பலரின் கருத்தை ஒரு தொகுப்பாக போடுவதெல்லாம் கவர் ஸ்டோரி ஆகிவிடாது.

விகடனிடம் இருந்து நான் இந்த மாதிரியான கவர் ஸ்டோரியை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

Saturday, December 12, 2009

ஆதவன் ஆகாதவன்

அவள் வருவாளா .... அவள் வருவாளா ....

பாடி கொண்டே சூரியா வருகிறார். அப்ப அங்க வந்த வடிவேலு ....

"என்னது இது..... ஏதோ சொரண்டி கிட்டே வருது ... ஐயோ பாவம். யார் பெத்த பிள்ளையோ ....."

இதை பார்த்த சூர்யா "நீங்க பேசினது... என் ஷிப் ல இருக்கு......"

"ஆமா பேசினவன் இங்க இருக்கேன்.. பேசினது மட்டும் ஷிப் ல இருந்து என்ன ஆக போது...."

"நீங்க பேசினதை ரெகார்ட் பண்ணி சிப் ல ஸ்டோர் பண்ணி வைச்சு இருக்கிறேன்....."

"என்னது ஸ்டோர் ஆஅ..... அப்படின்னா எனக்கு கொஞ்சம் உப்பு ,புளி, மிளகாய் எல்லாம் கொஞ்சம் கம்மியான ரேட் க்கு போட்டு தாப்பா"

"அது இல்லை .... நீங்க பேசினதை சிப்ல பதிவு பண்ணி வைச்சு இருக்கிறேன்...."

"ஐயோ போப்பா. பொழைக்க தெரியாத பயல இருக்கியே.... அதை ஏனப்பா ரெகார்ட் பண்ணனும்... என் கிட்ட சொன்ன எங்க வேணும்னாலும் வந்து பேசிட்டு போறேன்"

===================================

"வண்டி ல bomb வைச்சு இருக்கேன்"

"ஆமாப்பா.. நானும் இந்த உருளகிழங்க சாப்பிட்டதில் இருந்து வயறு ஒரு மாதிரியா தான் இருக்கு..."

==================================

கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டிவி ல "சூர்யா...ஆதவன் ல வாழ்ந்து இருக்கார்" ன்னு கே.எஸ். ரவிக்குமார் சொன்னாரு. அதானே பார்த்தேன்...நடிக்க சொல்லி இருந்த நாள் இருந்திற்கும். சூர்யா வாழ்ந்ததால் தான் படம் மொக்கையா போயிருச்சு போல.......

==================================

அதே மாதிரி .... நயன் தாராவை பற்றி சொல்லும் பொழுது அவர் "nayan tara has done an extra ordinary performance " ன்னு சொன்னார். எந்த இடத்தில என்று சொன்னால் நல்ல இருக்கும். படத்தில் நானும் ஒரு காட்சி விடமால் தேடி பார்த்தேன். நயன் தாரா எங்கேயும் நடித்து காட்டவில்லை..... பாடல் காட்சிகளில் கொஞ்சம் காட்டி இருக்கிறார்.

=======================================

படத்தில் ஹீரோ வடிவேலு தான்னு சொன்னாங்க. நயன் தாராவை ஒரு பாட்டில் அவருடன் ஆட(ட்டி) வைச்சு இருந்த, நல்ல இருந்திற்கும்.

==============================================

தில்லாவும் பல்லும்

"டேய்... யாரு டா இங்க தில்லா......."

அங்கே தில்லை நடந்து கொண்டு வருகிறார். பல்லுயை தண்டி போகிறார். பிறகு தாம் வந்தது பல்லை பார்க்க தான் என்று தெளிந்த பின் அவர் பக்கம் வருகிறார்.

"நான் தான். வாங்க மலேஷியா போய் பேசலாம்...."

"ஏனடா?"

"அங்க தானே TWIN TOWER இருக்கு...."

"அங்க எல்லாம் நான் வர முடியாது....."

"????"

"ஏன்னா... வாழ்க்கை ஒரு சக்கரம்டா.... சென்னைக்கு வந்தவன் திருச்சிக்கு போவான், திருச்சி போனவன் சென்னை வருவான்"

"டேய் அதுக்கும் மலேஷியாவுக்கும் என்னடா சமந்தம்...."

"நீ கூலிங் கிளாஸ் போட்டு இருக்கல...."

"முடியல"

"அதான் எனக்கு தெரியுமே ...... அசலுக்கு காசு கூட பைசல் ஆகாதுன்னு"

"ஹலோ...சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்க ......"

"அதை பார்க்க, அது என்ன பொண்ண...."

"சரி, பொருளாதரத்தையாவது திருப்பி பாருங்க ....."

"அப்படி திரும்பி பார்த்த யாரும் உன் படத்திற்கு வர மாட்டாங்க..."

"உன் படத்திற்கு திரும்பி பார்க்காமலே யாரும் வர மாட்டாங்க ..."

இதனால் கோவப்பட்டு தில்லா நடக்க ஆரமிக்கிறார் ......

பஞ்ச் டயலாக் பேச ஆள் இல்லாமல் ... தனியே பேசிக்கொண்டு போறார். தில்லா கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் பைத்தியக்கார ஆஸ்பீடல் உள்ளே போய் விடுகிறார்.

டிஸ்கி - எதுக்கு இந்த பதிவை எழுதினேன் என்று எனக்கே தெரியல

Wednesday, December 9, 2009

கலவை- இது நின்று கொண்டு யோசித்தது

தமிழ் நாட்டோட முத பெருசு ரிடையர் ஆக போகுதாம். இதை ரொம்ப நாள் முன்னாடி பண்ணி இருந்தால் தமிழ் நாடே கொண்டாடி இருக்கும். இப்ப பாருங்க காஞ்சி போன (கஞ்சி என்று படித்தால் நான் பருப்பு விற்க மாட்டேன்) வழக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிருச்சு. தமிழ் மொழிக்காக கல்லக்குடில படுத்து எழுந்தார்ரு........ எவ்வாளவு வலிசுருக்கும்.
=====================================
சாரு அவரோட புத்தக வெளியிட்டு விழாவுக்கு பிறகு தண்ணி பார்ட்டி வைச்சு இருக்காராம். ஏன்னு தெரியல. அவரோட புக் வெளி வந்துருச்சு என்று கேட்டு அதிர்ச்சியில் மயக்கம் போடாதவங்களை பார்ல தீர்த்தம் வாங்கி தான் மயக்கம் போட வைக்க போறார் போல் இருக்கு.
=====================================
கொஞ்ச நாள சிலர் பெரிய இலக்கியவாதிகளுக்கு அடியாள் சேருக்கும் பனியில் இருக்காங்க. ஏதோ இவங்க பேசி தான் சாருக்கு எக்ஸ்ட்ராவா sales யாக போற மாதிரியும், இவங்களை விட்ட அவருக்கு பேச வாய் இல்லாத மாதிரியும் ல பில்டப்பு தராங்க...... முதல இவங்க பிளாகை தான் காணாம போகனும். சத்யமா நான் சிமென்ட் தரை பதிவாளரை சொல்லல.
=====================================
நானும் உரக்கடை சாரி நுரையடல் அதும் இல்லையா ???? சரி சரி ஞாபகம் வந்துருச்சு உரையாடல் கவிதை போட்டிக்கு கவிதை எழுதலாம்ன்னு இருக்கேன், அனா ஒரு மண்ணாகட்டியும் மண்டைல தோன்ன மாட்டேன்ங்குது. சரி எல்லோரையும் போல எண்டர் தட்டி எதாவது பண்ணிரலாம் ன்னு பார்த்த...... ஒன்னும் முடியல. சரின்னு ஜகா வாங்கிட்டேன்.
=====================================
வே(கோ)ட்டைக்காரன் படத்துல விஜய் ஏதும் புதுசா பண்ணலன்னு பதிவுலக விஜய்யின் PRO தன்னோட பதிவிலும், நேத்து என்கிட்டே செல்போனிலும் சொல்லிடாரு. அதனால் முத நாள் டிக்கெட் கிடைக்காதவங்க நேர போய் விஜயின் பழைய படத்தோட டிவிடி வங்கிகொங்க. டிக்கெட் விலையை விட கம்மியாக தான் இருக்கும். இந்த மாதிரி அஜித்தின் PRO சொல்லிடாருன்ன நல்ல இருக்கும். ஏன்னா நாங்க எல்லாம் நடுநிலை வியாதிகாரங்க ல .
=====================================
இந்த வார அறிமுகம் வால்பையன். இவரோட பதிவுகள் எல்லாம்(வேற வழி)நல்ல இருக்கும். பலது மொக்கையா இருக்கும். சரக்குயை வைத்து இவர் படைக்கும் இலக்கியங்கள் உலக புகழ் பெற்றவை.

(பிரபல பதிவாளர்கள் தான் சிறு பதிவாளர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா ???? நாங்களும் பிரபலங்களை அறிமுகம் செய்வோம். உலக சினிமாவை உள்ளூர் எச்சுசாமிகள் அறிமுகம் செய்வது போல.... டேய் நாங்களும் பின் நவீன அரிப்புகள் தான் )
=====================================

ஒரு ஏ ஜோக் .....

"நீங்க என்னவா இருக்கீங்க ??"

"நான் cable operator ய இருக்கேன்"

"எத்தனை பேருக்கு ???"

(இது புரியாவிட்டால் நீங்க ஒரு டுப்-லைட் ன்னு confirm பண்ணி கொள்ளலாம்)

=====================================

நேத்து காலையில் திருவண்ணமலைக்கு கிளம்பி கொண்டு இருந்தோம்... அப்ப எனக்கும் சொந்தக்கார பையனுக்கும் இடையே நடந்த டயலாக்

"எதுக்கு அங்க போறோம் ????"

"ஜோதியை பார்க்கடா"

"எத்தனை பிட் இருக்கும் டா "

=====================================

Sunday, December 6, 2009

பஞ்ச் டயலாக்

வேட்டைக்காரன்

அந்த வேட்டைக்காரன் போன காட்டுல மிருகம் ஏதும் உயிரோட இருக்காது ..... இந்த வேட்டைக்காரன் போன தியேட்டர்ல எவனும் உயிரோட இருக்க மாட்டங்க.......



அசல்

டேய்...... நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அசலை மீட்க வட்டி கட்டி தான் ஆகனும்..... னோது .....டேய் நான் ஆணி புடுங்கிறவன் இல்ல ...ஆணி அடிக்கிறவன்.



எந்திரன்

கண்ணா...... பன்னிங்க தான் சில்ற்றையா செலவு வைக்கும்... சிங்கம் மொத்தமாக தான் செலவு வைக்கும்



தீராத விளையாட்டு பிள்ளை

டேய்.. டேய்.. நீ உங்க ஊர்ல பிளேயர் ன்ன ,நான் எங்க ஊர்ல பிளேயர் டா. நீ போடுற BOWLING க்கு நான் தானடா BATSMAN
Related Posts with Thumbnails