Pages

Showing posts with label நக்கல். Show all posts
Showing posts with label நக்கல். Show all posts

Thursday, March 28, 2013

கலவை - டுடோரியல் / புணர்வு / பரதேசி / மாரடைப்பு


ஆண்,  பெண் என்று யாராக இருந்தாலும் உடைகளோடு இருக்கும் பொழுது தான் கவர்ச்சியா இருப்பார்கள். நிர்வாணம் என்பது சுவாரசியமற்ற உண்மை போல . 

புணர்வு சாஸ்திரபடி பார்த்தோமானால்..... முதல் புணர்வில் தான் அவயங்கள் காண இருவருக்கும் ஆர்வம் இருக்கும் ....புணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய புள்ளியாகவும் அது இருக்கும்....புணர்வு என்பது புணர்வுகள் என்று மாறிய பின் நிர்வாணம் என்பது அறிந்த ரகசியமாகி விடும். அறிந்த ரகசியங்கள் சுவாரசியம் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு புணர்வின் பொழுதும் ஒரு வித நெருக்கத்தை உணர நிர்வாணம் உதவும் 

= = = = = 
டுடோரியல் வாழ்க்கை மாதிரி இனிமே வரவே வராது. அப்படி ரகளை பண்ணி வாழ்ந்த காலம் அது. பிட்டு  படம், குஜால்ஸ் சிடி, சைட் அடிக்குறது, எந்த பொண்ணுக்கு / நடிகைக்கு வாழ்க்கை தருவது போன்ற முக்கிய வேலை செஞ்சுட்டு  பொழுது போகலைன்ன அப்பப்ப படிப்போம்.

என்னால் மறக்கவே முடியாத பருவம் அது. அதுல கூட படிச்ச நண்பன், பத்து வருஷம் கழிச்சு எப்படியோ என் நம்பரை கண்டுபிடிச்சு போன் பண்ணினான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.

பேசி முடிச்ச பிறவு கண் மூடினப்ப, அப்ப பண்ணின ரகளை எல்லாம் மனசுல வந்து போச்சு. அந்த மாதிரி சந்தோஷமா பிறவு இருந்ததே இல்லை. இப்ப நினைச்ச ரொம்ப ஏக்கமா இருக்கு.

அதுவும் அவன் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஆளு. என் கூடவே சைக்கிள்ல சுத்திகிட்டு, மூணு ரூவா இருந்தாலே கட்டணம் வாங்காத இடத்துல சைக்கிளை நிறுத்திட்டு, தியேட்டருக்கு நடந்து போய் மூன்றாம் வகுப்புல உட்கார்ந்து பிட்டு  படம் பார்த்துட்டு சந்தோஷமா வருவோம்.

அவனும் நானும் அந்த மூணு ரூவாய தேத்துறதுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்ன்னு நினைச்ச, இப்ப சிரிப்பு தான் வருது. ஆபீஸ் டென்ஷன் எல்லாம் பறந்து போயிருச்சு அவன் கிட்டக்க பேசின பிறவு.

அவன் - என் ஏதுமற்ற பருவத்தில் நட்பின் எல்லாவுமாய் இருந்தவன். அறிவு, அனுபவம் தான் நாம் எப்பொழுதும் ஏங்குகிற குழந்தை தன்மைக்கு எதிரி போல. அவனோடு இயல்பாய் பேசுவதற்கு நடந்த 13 வருடங்களாய் என் மனதை சுற்றி அனுபவமும் கொள்முதல் செய்து கொண்ட அறிவும்  போட்டு இருந்த திரைகளை கலைத்தேன்.... மகிழ்வின் தூய்மையை உணர்ந்தேன்.

சட்டை பையில் மூணு ரூபாய் இருந்த பொழுது கிடைத்த சந்தோசம், இப்பொழுது சில ஆயிரங்கள் இருக்கின்ற பொழுது கிடைப்பதில்லையே ???

விருப்பங்களை பறித்து கொண்டு, கட்டாயங்களின் இஷ்டங்களை தந்து... பறி குடுத்தவை பற்றி எப்பொழுது ஏங்க வைப்பதில் என்ன தான் காண்கிறதோ இந்த வாழ்க்கை. :((((

= = = = =
பரதேசி படம் உலக சினிமான்னு சில பல இலக்கியவாதிங்க சொல்லி பொது மக்களை ஏமாத்த பார்க்குறாங்க. நல்ல வேளை நான் படத்தை முன்னமே பார்த்துட்டேன் இல்லாங்காட்டி இந்த இலக்கியவாதிங்க உலக சினிமான்னு சொல்லுறத நம்பில படத்தை பார்த்து ஏமாந்து இருப்பேன் ... தப்பிச்சேன்டா சாமி.

ஏதோ உலக சினிமான்ன என்னனே எனக்கு தெரியாத மாதிரில இந்த இலக்கியவாதிங்க பேசுறாங்க. எங்களுக்கு தெரியாத உலக சினிமான்ன பல உதட்டு உம்மா சீனு,  இரண்டு மூணு குஜால்ஸ் சீனு .... பிறவு கதாநாயகி முண்டமா வர சீனு இருந்த தானே அது உலக சினிமா ?? (முக்கிய குறிப்பு கதாநாயகன் முண்டமா வந்த அது உலக சினிமாவான்னு தெரியல)

இது எல்லாம் ஒன்னும் இல்லாத பரதேசி படத்தை எப்புடி உலக சினிமான்னு ஏத்துக்குறது ??

நியாயமாரே... சீக்கிரம் சொல்லுங்க ,இல்லடி ராசா வண்டிய 

= = = = =
கொஞ்ச நாள் முன்பு மோனி கோயம்புத்தூர் (Mony Coimbatore)  தனது வதன புத்தக பக்கத்தில் "சாவை பற்றி கூட கவலை இல்லை, ஆனால் இனி வாழ போகிற நாட்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது"  என்று எழுதியது தான் இன்று முழுவதும் என் மனதில் ரிங்காரமிட்டபடியே இருந்தது.

அந்த வரிகளை பற்றி யோசிக்க, யோசிக்க தான் அவை எத்தனை பெரும் கருத்தை உடையது என்று தோன்றியது. மனிதன் தான் உருவாக்கிய வாழ்நிலையில் தானே தொலைந்து / தொலைத்து அழிந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.

வாழ்க்கையில் பணத்தை நோக்கமாய் கொண்ட தேடல், ஒரு சமயத்திற்கு பிறவு பயத்தை நோக்கியதாக மாறுவது எத்தனை நிதர்சனம். வரிகள் மீண்டும் மீண்டும் என் இதயத்தில் ஒலிக்க ... எதொன்றுக்கான தேடல் புரிந்தது போல் இருந்தது. 

= = = = =
வத்திகுச்சி கதை களம் புதிதாய் இருந்தாலும், மோசமான திரைக்கதையினால் நொண்டி அடிக்கிறது. தேவை இல்லாத பல கதாபாத்திரங்கள். அழுத்தம் இன்னும் அதிகமாக தந்திருந்தால் நன்றாய் வந்திருக்க வேண்டிய பல காட்சிகள் ...என்னோ தானோ என்று கடந்து போகிறது.

ஸ்பெஷல் 26 - 1980களில் நடந்த பல வழிப்பறி கொல்லை நிகழ்வுகளை பலவற்றை கேள்விப்பட்டதினால் ஆர்வம் வந்து பார்த்தேன். படம் சூப்பர். பார்க்கவில்லையென்றால் பார்த்துவிடுங்கள். அதுவும் கடைசி அரை மணி நேர காட்சிகளை கண்டிப்பா தவற விடாதீர். 

= = = = =
மாரடைப்பை தவிர்க்க .. - எழுதியவர் - ஜெயச்சந்திரன்  {அவரது வலைப்பூவில் இது போல் நிறைய தகவல்கள் கொண்ட பதிவுகள் படிக்க கிடைக்கிறது}

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்



நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

Tuesday, April 20, 2010

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை


அழுக்கை மறைக்கத்தான்


சேலை என்றெண்ணியிருந்தேன்.


நீ கட்டியிருக்கும் சேலையை


காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த


ஒரு மழைநாளில்


இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை


ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு


அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்


வயறு முழுசா சாப்பிட முடியவில்லை


என ஆதங்கப்படுகிறாய்.


கடுகு அளவிற்கு கூட


என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.


பழைய சேலைகளெல்லாம்


நீ வாங்கி கொள்வாய் என்று


அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்


சோறுயையே மோராகி தருவேன்


என்ன செய்ய..


வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்


சுடிதாரிலும் இருப்பாள்



என்கிறார்கள்..


நீ குளியலறையில் தானே


இருக்கிறாய்?

Saturday, February 13, 2010

காதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்

  • PROPOSE பண்ண போற பொண்ணு எந்த மாதிரி டைப்ன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்ப தான் யாரும் பார்க்காதவாறு செருப்படி வாங்க முடியும். (கருணை அடிப்படையில் மறைவிடத்தில் வழகும் படி கேட்க வாய்ப்பு கிடைக்கும்)
  • பொண்ணுங்க கிட்ட எடுத்த உடனே காதலை சொல்லிவிட கூடாது. அவளுடைய தங்கச்சி அழகா இருந்தா டக்குன்னு அவகிட்ட காதலை சொல்ல சான்ஸ் கிடைக்கும். (சில சமயம் பொண்ணுங்களை விட அவங்க அம்மா அழகாய் இருப்பாங்க. அதுக்குன்னு தவறான வழியில் போக கூடாது. அந்த பொண்ணுங்களோட அப்பாவின் அதிர்ஷ்டம் எண்ணி பெரு முச்சு விட்டுக்க வேண்டியது தான் )....
  • ஒரு வேளை நீங்கள் என்னை மாதிரி பயங்கர மொக்கை பார்ட்டியாக இருந்தால், காதலை நேரில் சொல்ல வேண்டாம்.
    அவங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் பொழுது ...."உங்க கிட்ட தனியா பேசணும்" ங்கிற மாதிரி எல்லாம் ஆரமிக்க கூடாது. அப்படி ஆரமிச்ச பார்ட்டி முதலிலையே உஷார் ஆகிடுவாங்க.
  • feb 14 அன்னைக்கு நிறைய பொண்ணுங்க வெளியே வருவாங்க. so காலேஜ் க்கு அப்ளிகேஷன் போடுற மாதிரி ட்ரை பண்ணுங்க.
    முதலில் காதலை சொல்லும் முன், எதையும் தாங்கும் உடம்பு இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய செலவு வந்தாலும் அதை சந்திக்கும் பர்ஸ் வேண்டும்.
  • அப்படி உங்களுக்கு சூப்பர் பிகர் யாரையும் தெரியாது என்றால் ....நாளைக்கு வெளியவே போகாதிங்க( நீங்க எல்லாம் என் ஜாதி)(நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன பயன்)
  • இருப்பதிலையே பிரச்சனை இல்லாதது எதுவென்றால் ..."ஒரு தலைக் காதல்" தான். இந்த வகை காதலில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். வைரமுத்துவே சொல்லிருக்கார் ...."கற்பனை மட்டும் இல்லையென்றால் நிஜங்கள் நம்மை தின்று விடும்" என்று.

Wednesday, February 10, 2010

தமிழ்ப்பட விமர்சனம் : அசலான விமர்சனம்

பத்து லட்சம் ஹிட்ஸ்களை தர போகும் பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (அப்படி யாராச்சு இருக்கிங்களா ...இருந்தா சொல்லுங்கப்பா) நன்றி நன்றி ........

சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்னு சொல்லிருக்காரு..அதனால் இனிமேல் படம் வெளிவரும் பொழுது அது கக்கா போக தெரிந்தவர்களுக்கா ...இல்லை முச்சா போக தெரிந்தவர்களுக்கா என்று அவர்கள் சொல்லி விட்டால் நல்ல இருக்கும் ..... அதன்ப்படி நாங்களும் படம் பார்ப்போம் ,விமர்சனம் எழுதுவோம் ல


டிஸ்கி : தமிழில் எழுதும் போது தமிழ் படத்திற்கு தானே பெரும்வாரியாக விமர்சனம் எழுத முடியும். அதுவும் அசலாக இருந்தால் தானே எல்லோரும் படிபங்க.......

கொஞ்ச நாளாய் எல்லா பதிவுகளிலும் எதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க. சரின்னு புயலாய் புறப்பட்டு விமர்சனம் எழுதியே தீர்வதுன்னு ஒரு முடிவோட எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நான் இது வரைக்கும் எந்த புதுப் படத்துக்கும் விமர்சனம் எழுதினது இல்லை ....... அப்படியே எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதுன்னு தெரியல.

சரி ஏதோ ஒப்புக்கு கதை சவாரி அடிக்குது, கேமரா லென்ஸ் ல ஓட்டை, டைரக்டர் சரியாய் குளிக்கல...... ஹீரோவுக்கு ஜெட்டி சைஸ் சரி இல்லைன்னு நானும் நூற்றுக்கு பத்தாய் எழுதிட்டு போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் என்னை என்ன சொல்லும்(நமக்கு சரித்திரம், பொருளாதாரம், ஆங்கிலம்........ எல்லா கருமமும் முக்கியம் இல்லையா)......

நம்ம எப்புடி விமர்சனம் எழுதின என்ன .....நூறு வருடம் கழித்து வர போகும் என்னைப் போல் உள்ள மட்டையர்களுக்கு தெரியவா போகுது ?????

நேத்து சாயங்காலம் பிற பதிவாளர்கள் எப்புடி விமர்சனம் எழுதறாங்கன்னு பார்க்கலாம்ன்னு உட்க்கார்ந்த.....முடியல, என்னை தவிர எல்லா பையபுள்ளைகளும் படத்தை விமர்சனம்ங்கிற பெயர்ல விம் சோப்பு போட்டு தோச்சு எடுக்கிறாங்க. நான் அப்படியா ஷாக் ஆகிட்டேன்.

படம் பார்க்க உட்க்காரும் பொழுதே அடியில் கொல்லி கட்டை வைசுக்குவங்க போல் இருக்கு. அவங்க பதிவுகளெல்லாம் படிக்கும் பொழுது தியேட்டர் விட்டு வெளிய வழியே (கவிதை கவிதை .....என்ன கருமம்மோ) வந்துடனே டி குடிக்குரங்களோ (இலக்கியவியாதிகள் மன்னிக்கவும்......சரியான spelling தெரியல) இல்லையோ இன்டர்நெட் செனட்டர்க்கு போய் விமர்சனம் எழுத START பண்ணி விடுறாங்க .......

தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????

இன்னொரு விஷயம் ....எனக்கு விமர்சனம் எழுத தெரிந்தால் நான் எழுத மாட்டேனா ???? பிறகு படம் பார்க்காமல் விமர்சனம் எழுத எனக்கு தெரியாதே ......(அந்த மாதிரி பின்னோட்டம் வேண்டுமானால் போடா தெரியும்).....

அதுவும் மொக்கை படத்துக்கு மொக்கையா விமர்சனம் எழுதின பிறகு திரட்டில சேர்க்க படும் படு இருக்கே ........இதுல வேற விமர்சனத்துல இடைச்சொற்கள் இல்லைன்னு இலக்கியவாதிகள் complaint பண்ணுறாங்க....அவங்களெல்லாம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் AGATHA CHRISTIE ஓட தமிழ் மொழிபெயர்ப்பு நாவலை படிக்க வைக்க வேண்டும்.....(அவங்க கிட்ட தான் எப்புடி ஒரு சிறந்த நாவலை மொழிபெயர்த்து மொக்கை ஆக்குவது என்பதை கற்று கொள்ள வேண்டும் .....இதிலையும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பல புது புது தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் ......அதற்க்கெல்லாம் பாரதி சொன்னது போல் மனதில் உறுதி வேண்டும்....வார்த்தைகளில் தெளிவு வேண்டும்)....

இன்னொரு முக்காத விஷயம் என்னன்னா விமர்சனம் எழுத ஆரமிக்க இருக்கிற வரைக்கும் அந்த மொக்கை படங்களின் கதையை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம். இதை விட பெரிய தண்டனை வேறு எதுவுமில்லை......

ஆனால் இந்த பட விமர்சனங்களால் ஒரு நன்மையையும் உண்டு ........ பிறர் காசை செலவு செய்து படம் விட்டு ....விமர்சனம் எழுதவங்க. அதை படிச்சுட்டு நம்ம காசை மிச்சம் பிடிச்சுக்கலாம்.

அப்படா நானும் விமர்சனம் எழுதிட்டேன் .......

Thursday, February 4, 2010

ஆனந்த விகடனும் தமிழ்ப்படமும்

வழக்கம் போல் இந்த வாரமும் ஆனந்த விகடன் வாங்க கூடாது என்றே இருந்தேன். ஆனால் cover story யை பார்த்த உடனே வாங்க வேண்டியதாக போயிருச்சு. அப்படி என்ன கவர் ஸ்டோரி??? சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா........(தலைப்பு சரியாய் ஞாபகமில்லை) எழுதியவர் கதிர்வேலன் (இதுவும் சரியாய் ஞாபகமில்லை).

சரி நம்ம கவர் ஸ்டோரிக்குள் போகும் முன் ...... விகடன்ல லூசு பையன் ங்கிற ஒருத்தர் ஓர் நையாண்டி பகுதியை எழுதிட்டு இருக்காரு. அதில் அவர்கள் கிண்டல் பண்ணாத அரசியல்வாதிகள், சினிமா ஆளுங்களே இல்லை என்று சொல்லலாம்.

அரசியல்வாதிகளின் மீதும், சினிமாக்காரங்க மீதும் அவர்கள் வைப்பது கொள்கை ரீதியான விமர்சனமோ, கிண்டலோ இல்லை. பெரும்பாலும் அவை அனைத்தும் தனிநபர் தகுதல்களாகவே இருக்கும். அத்தனை கிண்டல் தொனிக்கும் கார்ட்டூன் படங்கள். அதுவும் விஜயை அவர்கள் கிண்டலடிக்கும் விதம்....அப்பப்ப. (விகடன் வீட்டிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்க படுகிறது).

இப்படி கார்டூன் போடும் அவர்கள் எந்த உரிமையில் இந்த மாதிரியான கவர் ஸ்டோரிக்களை போட்டார்கள் என்று எனக்கு சத்யமா தெரியல. ஒரு வேளை அதெல்லாம் தான் பத்திரிகை தர்மம்மோ .......

ஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்திற்கு போய், நன்றாக சிரித்துவிட்டு வந்தேன். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த படத்தில் யாரையும் அவர்கள் புண்படுத்தவில்லை .

முக்கியமாக ஒரு விஷயம் ......இந்த மாதிரியான கவர் ஸ்டோரி நான் விகடனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் தமிழ்ப்படத்தை பற்றியும், அத்தனை இயக்கிய அமுதனை பற்றியும் எதாவது பாராட்டி எழுதிருப்பர்கள் என்று நினைத்தேன்.

கடைசியாக அவர்கள் விஜய் ரசிகர்களை வேற சப்போர்ட் க்கு வருகிற மாதிரி எழுதிருக்காங்க ...... எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. பிறகு என்னோடு இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் பல நடிகர்களுக்கு தீவிர விசிறிகளே.

இந்த கூத்தில் தயாநிதி அழகிரியும் விஜய்யும் ஏதோ சண்டை போட்டு கொள்வது போல் ...அட்டை படம். ......

முக்கியமாக .....ஒரு விஷயம் கிண்டலடிக்கப்பட கூடாது என்றால் ....... கிண்டலடிக்க கூடிய விஷயங்கள் ஏதும் அதில் இருக்க கூடாது.

இதில் வேறுச் சில டைரக்டர்கள் கோவப்பட்டு இருக்காங்க ....... கதை மேல் நம்பிக்கை இல்லாமல் மசாலா ஐட்டங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தானே அவர்கள் ........

ஒரு பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி ...என்றால் பல்வேறு விஷயங்களை முன் வைத்து, அதனை கொண்டு ஆராய்ந்து, அதன் முலம் ஆசிரியர் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். ஆனால் பலரின் கருத்தை ஒரு தொகுப்பாக போடுவதெல்லாம் கவர் ஸ்டோரி ஆகிவிடாது.

விகடனிடம் இருந்து நான் இந்த மாதிரியான கவர் ஸ்டோரியை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

Saturday, December 12, 2009

ஆதவன் ஆகாதவன்

அவள் வருவாளா .... அவள் வருவாளா ....

பாடி கொண்டே சூரியா வருகிறார். அப்ப அங்க வந்த வடிவேலு ....

"என்னது இது..... ஏதோ சொரண்டி கிட்டே வருது ... ஐயோ பாவம். யார் பெத்த பிள்ளையோ ....."

இதை பார்த்த சூர்யா "நீங்க பேசினது... என் ஷிப் ல இருக்கு......"

"ஆமா பேசினவன் இங்க இருக்கேன்.. பேசினது மட்டும் ஷிப் ல இருந்து என்ன ஆக போது...."

"நீங்க பேசினதை ரெகார்ட் பண்ணி சிப் ல ஸ்டோர் பண்ணி வைச்சு இருக்கிறேன்....."

"என்னது ஸ்டோர் ஆஅ..... அப்படின்னா எனக்கு கொஞ்சம் உப்பு ,புளி, மிளகாய் எல்லாம் கொஞ்சம் கம்மியான ரேட் க்கு போட்டு தாப்பா"

"அது இல்லை .... நீங்க பேசினதை சிப்ல பதிவு பண்ணி வைச்சு இருக்கிறேன்...."

"ஐயோ போப்பா. பொழைக்க தெரியாத பயல இருக்கியே.... அதை ஏனப்பா ரெகார்ட் பண்ணனும்... என் கிட்ட சொன்ன எங்க வேணும்னாலும் வந்து பேசிட்டு போறேன்"

===================================

"வண்டி ல bomb வைச்சு இருக்கேன்"

"ஆமாப்பா.. நானும் இந்த உருளகிழங்க சாப்பிட்டதில் இருந்து வயறு ஒரு மாதிரியா தான் இருக்கு..."

==================================

கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டிவி ல "சூர்யா...ஆதவன் ல வாழ்ந்து இருக்கார்" ன்னு கே.எஸ். ரவிக்குமார் சொன்னாரு. அதானே பார்த்தேன்...நடிக்க சொல்லி இருந்த நாள் இருந்திற்கும். சூர்யா வாழ்ந்ததால் தான் படம் மொக்கையா போயிருச்சு போல.......

==================================

அதே மாதிரி .... நயன் தாராவை பற்றி சொல்லும் பொழுது அவர் "nayan tara has done an extra ordinary performance " ன்னு சொன்னார். எந்த இடத்தில என்று சொன்னால் நல்ல இருக்கும். படத்தில் நானும் ஒரு காட்சி விடமால் தேடி பார்த்தேன். நயன் தாரா எங்கேயும் நடித்து காட்டவில்லை..... பாடல் காட்சிகளில் கொஞ்சம் காட்டி இருக்கிறார்.

=======================================

படத்தில் ஹீரோ வடிவேலு தான்னு சொன்னாங்க. நயன் தாராவை ஒரு பாட்டில் அவருடன் ஆட(ட்டி) வைச்சு இருந்த, நல்ல இருந்திற்கும்.

==============================================

Wednesday, December 9, 2009

கலவை- இது நின்று கொண்டு யோசித்தது

தமிழ் நாட்டோட முத பெருசு ரிடையர் ஆக போகுதாம். இதை ரொம்ப நாள் முன்னாடி பண்ணி இருந்தால் தமிழ் நாடே கொண்டாடி இருக்கும். இப்ப பாருங்க காஞ்சி போன (கஞ்சி என்று படித்தால் நான் பருப்பு விற்க மாட்டேன்) வழக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிருச்சு. தமிழ் மொழிக்காக கல்லக்குடில படுத்து எழுந்தார்ரு........ எவ்வாளவு வலிசுருக்கும்.
=====================================
சாரு அவரோட புத்தக வெளியிட்டு விழாவுக்கு பிறகு தண்ணி பார்ட்டி வைச்சு இருக்காராம். ஏன்னு தெரியல. அவரோட புக் வெளி வந்துருச்சு என்று கேட்டு அதிர்ச்சியில் மயக்கம் போடாதவங்களை பார்ல தீர்த்தம் வாங்கி தான் மயக்கம் போட வைக்க போறார் போல் இருக்கு.
=====================================
கொஞ்ச நாள சிலர் பெரிய இலக்கியவாதிகளுக்கு அடியாள் சேருக்கும் பனியில் இருக்காங்க. ஏதோ இவங்க பேசி தான் சாருக்கு எக்ஸ்ட்ராவா sales யாக போற மாதிரியும், இவங்களை விட்ட அவருக்கு பேச வாய் இல்லாத மாதிரியும் ல பில்டப்பு தராங்க...... முதல இவங்க பிளாகை தான் காணாம போகனும். சத்யமா நான் சிமென்ட் தரை பதிவாளரை சொல்லல.
=====================================
நானும் உரக்கடை சாரி நுரையடல் அதும் இல்லையா ???? சரி சரி ஞாபகம் வந்துருச்சு உரையாடல் கவிதை போட்டிக்கு கவிதை எழுதலாம்ன்னு இருக்கேன், அனா ஒரு மண்ணாகட்டியும் மண்டைல தோன்ன மாட்டேன்ங்குது. சரி எல்லோரையும் போல எண்டர் தட்டி எதாவது பண்ணிரலாம் ன்னு பார்த்த...... ஒன்னும் முடியல. சரின்னு ஜகா வாங்கிட்டேன்.
=====================================
வே(கோ)ட்டைக்காரன் படத்துல விஜய் ஏதும் புதுசா பண்ணலன்னு பதிவுலக விஜய்யின் PRO தன்னோட பதிவிலும், நேத்து என்கிட்டே செல்போனிலும் சொல்லிடாரு. அதனால் முத நாள் டிக்கெட் கிடைக்காதவங்க நேர போய் விஜயின் பழைய படத்தோட டிவிடி வங்கிகொங்க. டிக்கெட் விலையை விட கம்மியாக தான் இருக்கும். இந்த மாதிரி அஜித்தின் PRO சொல்லிடாருன்ன நல்ல இருக்கும். ஏன்னா நாங்க எல்லாம் நடுநிலை வியாதிகாரங்க ல .
=====================================
இந்த வார அறிமுகம் வால்பையன். இவரோட பதிவுகள் எல்லாம்(வேற வழி)நல்ல இருக்கும். பலது மொக்கையா இருக்கும். சரக்குயை வைத்து இவர் படைக்கும் இலக்கியங்கள் உலக புகழ் பெற்றவை.

(பிரபல பதிவாளர்கள் தான் சிறு பதிவாளர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா ???? நாங்களும் பிரபலங்களை அறிமுகம் செய்வோம். உலக சினிமாவை உள்ளூர் எச்சுசாமிகள் அறிமுகம் செய்வது போல.... டேய் நாங்களும் பின் நவீன அரிப்புகள் தான் )
=====================================

ஒரு ஏ ஜோக் .....

"நீங்க என்னவா இருக்கீங்க ??"

"நான் cable operator ய இருக்கேன்"

"எத்தனை பேருக்கு ???"

(இது புரியாவிட்டால் நீங்க ஒரு டுப்-லைட் ன்னு confirm பண்ணி கொள்ளலாம்)

=====================================

நேத்து காலையில் திருவண்ணமலைக்கு கிளம்பி கொண்டு இருந்தோம்... அப்ப எனக்கும் சொந்தக்கார பையனுக்கும் இடையே நடந்த டயலாக்

"எதுக்கு அங்க போறோம் ????"

"ஜோதியை பார்க்கடா"

"எத்தனை பிட் இருக்கும் டா "

=====================================

Sunday, December 6, 2009

பஞ்ச் டயலாக்

வேட்டைக்காரன்

அந்த வேட்டைக்காரன் போன காட்டுல மிருகம் ஏதும் உயிரோட இருக்காது ..... இந்த வேட்டைக்காரன் போன தியேட்டர்ல எவனும் உயிரோட இருக்க மாட்டங்க.......



அசல்

டேய்...... நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அசலை மீட்க வட்டி கட்டி தான் ஆகனும்..... னோது .....டேய் நான் ஆணி புடுங்கிறவன் இல்ல ...ஆணி அடிக்கிறவன்.



எந்திரன்

கண்ணா...... பன்னிங்க தான் சில்ற்றையா செலவு வைக்கும்... சிங்கம் மொத்தமாக தான் செலவு வைக்கும்



தீராத விளையாட்டு பிள்ளை

டேய்.. டேய்.. நீ உங்க ஊர்ல பிளேயர் ன்ன ,நான் எங்க ஊர்ல பிளேயர் டா. நீ போடுற BOWLING க்கு நான் தானடா BATSMAN
Related Posts with Thumbnails