Pages

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, August 1, 2010

டிவிட்டரும் நானும் - ஒரு கோங்க தனமான பார்வை



என்னங்க எப்புடி இருக்கீங்க ??? சதோஷமா இருக்கீங்களா ???? நான் நலமுங்க.

வழக்கம் போல நான் என்னோட அண்ணனை பார்த்துட்டு தான் டிவிட்டர் ல அக்கௌன்ட் ஸ்டார்ட் பண்ணினேனுங்க. அப்பரும் இந்த பதிவுக்குள்ளர போறதுக்கு முன்னாடி என்னோட ட்விட்டர் ஐடி இது தானுங்க
http://twitter.com/mayvee . எதுக்கு சொல்லுறேன்ன எல்லமொரு எச்சரிக்கைக்கு தான். பிறகு அங்க வந்து என்னோட டிவிட்களை படிச்சிட்டு கடுப்ப்ஸ் அப் இந்தியாவாக கூடாதுல அதுக்கு தான். இங்குன்ன இருக்குறது போல அங்கன்னையும் ஒன்னும் உருபடிய எழுதுறது இல்லைங்க. அது சரி நானெல்லாம் எக்ஸாம் பேப்பர் லையே ஒன்னும் பெரிய எழுதினதில்லை :).....


JACK DORSEY _EVAN WILLIAMS _BIZ STONE ...... இந்த மூணு பைய புள்ளைங்க தான் இந்த கும்மி தளத்தை கண்டுபிடிச்சு இருக்காங்க. இதுல என்ன விஷயம்ன்ன ஓசில கிடைக்குதேன்னு டிவிட்டர் கணக்கை ஆரம்பிச்சிருக்கும் பல இலக்கியவாதிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. ஏன் இந்த பதிவை எழுதுற வரைக்கும் எனக்கு கூட தெரியாதுங்க ; எல்லாம் நம்ம விக்கி பகவன் அருள் தானுங்க. நான் ஓசிக்கு பினாயில் கிடைக்குதுன்னாலே சும்மாவே ஒரு இரண்டு மூணு கிளாஸ் எக்ஸ்ட்ராவாக வாங்கி குடிப்பேன் ...ஹி ஹி ஹி ..... ஓசி ல ஒரு செர்விஸ்... சும்மா விடுவேனே. நானும் ஒரு சுப முகுர்த்த நாளுல ஒரு அக்கௌன்ட்யை ஒபீன் பண்ணிட்டோம். சரி எவ்வளவோ பொட்டிக்கடை, டீக்கடைன்னு அக்கௌன்ட் இருக்கு அதோட இதுவும் இருந்துட்டு போகட்டும் ங்கிற நல்ல எண்ணம் தான், வேற என்ன ???

டிவிட்டர் : பதிவுலகம் போலில்லாமல் ஒரு நேரடி விவாத மேடைன்னு தான் நினைச்சு வந்தேனுங்க டிவிட்டர் குள்ள. ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படியெல்லாம் இல்லைங்க. சிற்பல இலக்கியவாதிகள் சாரு, ஜெயமோகன் போன்றவர்களின் டவுசரை கிழிக்குறதில்லையே குறியா இருக்காங்க. அப்படி கிழிச்சு என்னத்தை தான் பார்க்க ஆசை படுறாங்கன்னு தெரியல சாமி. ஒரு வேலை அவங்க அவ்வளவு கவர்ச்சியா இருப்பங்களோ ??? ஜெயமோகனை நேரில் பார்த்ததில்லை ; சாருவையும் எஸ்ரவையும் நேருல பார்த்து இருக்கேன். ஆனாலும் அவங்க கிட்டயும் அவ்வளவு ஒன்னும் டவுசரை கிழிச்சு பார்க்குற அளவுக்கு ஒன்னுமில்லையே ????

இல்லாட்டி எனக்கொரு ஐடியா தோணுது .. கொஞ்சம் மொக்கை தான் என்னை மாதிரியே - அவங்க டவுசர் மாத்துற போதோ இல்லன்னா குளிக்கும் போதோ ...அந்த இலக்கியத்தின் ரகசியத்தை தெரிந்துக் கொள்ளலாம். ஹி ஹி ஹி ஹி. ஆத்துக்கும் தைரியம் இல்லாட்டி அவங்க வீட்டுல இருந்து பழசு பட்டி எதாச்சு வாங்கிட்டு வந்து தனிய ரூம்ல உட்கார்ந்துகிட்டு கிழி கிழின்னு கிழிக்கலாம்.

இன்னொரு ஆசாமி இருக்காரு ...ஸ்க்ரீன் ஷாட் எடுத்த : இலக்கண சொற்சிதிரமாகிட்டு இருக்காரு.

உங்களுக்கு எப்பவாச்சு அதித்ய சேனல் பார்த்து ரொம்ப போர் அடிச்சுதுன்ன ...இங்கன்ன வந்து இலக்கிய காமெடியை கொஞ்சம் ரசிக்கலாம்.

நான் பொதுவா சில டிவிட்டர்களின் டிவிட்டுகாக காத்திருப்பேன் ..அதையும் முக்கியமா அதிஷா, யுவகிருஷ்ணா, வினவு தோழர்கள் (அதாங்க ஐய்யர், ஐயங்கார் ஆளுங்க தப்பு செய்தால் பாப்பான் நாய்ன்னு சொல்லிட்டு, மத்த ஜாதி காரங்க செய்ஞ்ச மேட்டுக்குடி சொல்லுவாங்களே அவங்களே தான் ஹி ஹி ஹி ஹி..... நட்டார் நாய்.... தேவர் நாய் ... ன்னெல்லாம் திட்ட மாட்டாங்க போலிருக்கு) இன்னும் சிலபல டிவிடர்களின் டிவிட்களை ரசித்து படிப்பேனுங்க. அதுல கொஞ்சம் இங்கிலீஷ் ல எழுதுற டிவிடர்களும் அடக்கம்.



இந்த இங்கிலீஷ் ல எழுதுற டிவிட்டர்கள் எழுதுவது எனக்கு அப்பப்ப புரியாதுங்க (ஆமா தமிழ் ல எழுதின மட்டும் உனக்கு புரியமான்னெல்லாம் கேட்க கூடாதுங்க...நான் பாவம்).

சரி இவ்வளவும் சொல்லிட்ட ...நீ அதுல என்ன செய்றன்னு நீங்க கேட்குறது எனக்கும் நல்லாவே கேட்குதுங்க .....

பெருசா ஒன்னும் இல்லைங்க SAME MOKKAI THERE ALSO .... ஆனா இந்த சினிமா நடிகர் நடிகைங்க இருக்கங்களே (நம்ம ஊரு ஆளுங்க யாருமில்லைங்க ...எல்லாம் ஹிந்தி கார பைய புள்ளைங்க தான்) ...... பெரும்பாலும் ஆங்கில டிவிடர்களை போல போன் ல இருந்து டிவிட்டுவாங்க..... எதை எதை டிவிட்டுவதுன்னு ஒரு வகை தொகை இல்லாம .......முடியாதுங்க ....கக்கா போன கூட "am in toilet . feeling hot in anal . tight motion . see " ன்னு சொல்லிட்டு கக்காவை எல்லாம் போட்டோ பிடிச்சு போடுற அளவுக்கு WELL CONNECTED ஆ இருப்பாங்க . ஹி ஹி ஹி ஹி ......

சரி சரி ..ஓவர் குஷில ஓவர் மொக்கையாகிருச்சு போல .... இன்னும் ஒன்னு இரண்டு விஷயத்த சொல்லி கடையை கிளோஸ் பண்ணிக்குறேன்.

காலேஜ் படிக்கும் போது தான் எந்த பிகரையும் கரெக்ட் பண்ண முடியல ...சரி டிவிடர்ல எதாச்சு நடிகைகிட்ட முயற்சி பண்ணலாம்ன்னு நினைச்ச போது தான் DEEPKA PADUKONE யை FOLLOW பண்ண ஆரம்பிச்சேன். சரி அவங்க கர்நாடகான்னு தெரிஞ்ச உடனே எங்க அம்மா கிட்ட இருந்து (ஆமாங்க என்னோட அம்மா மைசூர்காரங்க) ஒன்னு இரண்டு கன்னட வார்த்தை பேச கத்துகிட்டு ...டிவிட்டர் ல தீபிகா வை கரெக்ட் பண்ணலாம் வந்த ....... பேச கத்துகிட்ட கன்னட வார்த்தைகளை எப்புடி டைப் பண்ணறதுன்னு தெரியல ...



= = = = =

ஜோக்ஸ் அபார்ட் ...இந்த சேவையை மக்களுக்கு அவங்க இலவசமா தருவதற்கு நிறைய சூது காரணங்கள் இருக்கு. என்னன்னா நீங்க டிவிட்டர் பக்கத்தை ஓபன் பண்ணினா எனக்கு தெரிஞ்சு எந்த விளம்பரமும் வராதுங்க. MARKET RESEARCH ன்னு ஒன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா ???? ஒரு நாளுல இன்னன்ன விஷயம் தான் ரொம்ப நிறைய தடவை விவாதிக்க பட்டிருக்குன்னு கம்பெனி காரங்க ஒரு ரிப்போர்ட் எழுதுவாங்க. அதை தெரிந்து கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.

மிக சமீபத்துல அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது கருத்து கணிப்புகளை டிவிட்டர் விவாதங்களை வைச்சு முடிவு பண்ணி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேனுங்க.

இதைப்பற்றி வேறு விஷயம் எதாச்சு உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்துல சொல்லுங்க.

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்



நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

Tuesday, April 20, 2010

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை


அழுக்கை மறைக்கத்தான்


சேலை என்றெண்ணியிருந்தேன்.


நீ கட்டியிருக்கும் சேலையை


காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த


ஒரு மழைநாளில்


இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை


ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு


அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்


வயறு முழுசா சாப்பிட முடியவில்லை


என ஆதங்கப்படுகிறாய்.


கடுகு அளவிற்கு கூட


என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.


பழைய சேலைகளெல்லாம்


நீ வாங்கி கொள்வாய் என்று


அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்


சோறுயையே மோராகி தருவேன்


என்ன செய்ய..


வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்


சுடிதாரிலும் இருப்பாள்



என்கிறார்கள்..


நீ குளியலறையில் தானே


இருக்கிறாய்?

Saturday, April 17, 2010

கோழி அப்டேட்ஸ் - Twitter ஸ்பெஷல்


சுவை காரணமாக கோழி வெட்ட படுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்

___________________________________________________________________


கோழியின் சுவை அறியாத கடவுள் இருந்தால் அவன் காதலிக்காதவன்

___________________________________________________________________

தோழியின் நினைவாக வலது இடது என்று வாஸ்து பார்க்காமல் கோழியின் காலை கடித்து கொண்டிருக்கிறேன்

___________________________________________________________________

அவன் அவனுக்கான கோழியை சுவைக்கும் பொழுது நான் சைவம் ஆனேன்

___________________________________________________________________

நான் ஏன் அல்லக்கை ஆனேன் யோசிக்கிறேன் கோழி கறியை சுவைத்தப்படி

___________________________________________________________________

நாற்றம் அடித்தாலும் கடந்து செல்கிறேன் கோழி கறி கடையை , உன் நினைவு வருவதால்

___________________________________________________________________

kfc கோழியில் கூட சிறகுகளை தேடுகிறேன் உன் நினைவாக

___________________________________________________________________

நானொரு சோஷலிஸ்ட். KFC ல சாப்பிடலாமா ??

___________________________________________________________________

Thursday, April 15, 2010

கோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்





கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நண்பர் கேட்டார் “பூவோட வறாங்களே. அது தான் கோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ கோழியோட வர மாட்டா சகா. ஏன்னா அவளே ஒரு கோழி தான்”

______________________________________________________

கரிக்கட்டை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் கோழி தான்டா. நீ வெட்டினால் சிக்கன் ஆவேன்”.


____________________________________________________


தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட சிக்கன் பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் கோழி வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.

______________________________________________________


அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “மையால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்

______________________________________________________

காலியாய் இருந்த சமயலறையில் இருவரும் கோழி சமைத்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம் சமைக்கணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் நான் கோழி உரிப்பதில் கைதேர்ந்தவன் என்று .

______________________________________________________


Tuesday, February 16, 2010

கலவை

எனக்கு வரும் கோடான கோடி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை விட, என் எழுத்துக்களை நம்பி என் பிளாகை படிக்காத வாசகர்களுக்காக அடுத்த மொக்கை பதிவுக்கான வேலையை பார்ப்பது தானே என்னை மாதிரி உள்ள ஒரு பிரபலமாகாத பதிவாளரின் கடமை. அதனால் தான் என்னால் எந்த பதிவிற்கும் பின்னோட்டம் போட முடிவதில்லை. எல்லோரும் என்னை புரிந்து கொள்ளுங்கள். (நீ பின்னோட்டம் போட்ட என்ன போடாட்டி என்னன்னு நீங்க சொலுறது எனக்கு கேட்குது.) அப்படியே நான் பின்னோட்டம் போட்டாலும் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாகி விடாதுன்னு என்ன நிச்சயம்????

= = = = =

1 .50 ரூபாய்க்கு தலைக்கு போட்டுக் குளிக்கிற ஷாம்பூ கடைக்குக் கடை விக்குது, ஆனா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் மட்டும் தான் கிடைக்குது. இப்ப நம்ம நாட்டில பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கம்மியான விலைக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை, ஆனால் தேவையே இல்லாத பொருட்கள் தான் பரவலா கிடைக்குது.

ஒரு விவசாயிக்கு விவசாயத்திற்கான லோன் கிடைப்பதை விட டிவி, பைக் போன்றவற்றை வாங்க லோன் சீக்கிரமாக(வேகமாகவும்) கிடைக்கிறது.

= = = = =

காதலர் தினத்தில் ஜோடியாக திரிந்தால், அவங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்காம்.(இது அடுத்த வருஷமும் தொடருமாம்.) நல்லது. அப்படியே என்னை மாதிரி பிகர் கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிகரை பிடிச்சு குடுத்து, பிறகு கல்யாணம் செய்து வைத்தால் நல்ல இருக்குமே.(கல்யாண பிரோகர் வேலைன்னு முடிவான பிறகு அவர்கள் இதையும் செய்யலாமே)

= = = = =

மர்ம தேசம் எழுதின இந்திர சௌந்தராஜனின் அடுத்த சீரியல் வர போகுது,"யாமிருக்க பயமேன்". டைரக்டர் யாருன்னு தெரியல. பழனி தான் கதைக்களம். போகர் ஒரு வேளை இரண்டு நவபாஷாணச் சிலைகள் செய்து இருந்தால், அந்த இரண்டாவது சிலை எங்கு இருக்கும், அவர் ஏன் ஒன்பது விஷங்களை வைத்து சிலை செய்தாருன்னு கதை போகுதாம். FEB 22 ல இருந்து ஸ்டார்ட் ஆகுது விஜய் டிவி ல, மாலை 7 :30 மணிக்கு (பின் நவீனம்.....).

= = = = =

YOU CAN WIN புத்தகத்தை எழுதின shiva khera வின் அடுத்த புக் வந்து இருக்கு (கட்டாயம் அது இலக்கியமாக இருக்காது....அப்படி இருந்தால் தான் யாராச்சு அதை பற்றி எழுதிருப்பங்களே). YOU CAN SELL . பெயர் ராசியோ என்னவோ இந்த புக்க்கும் போன வாட்டி வைச்ச மாதிரியே இந்த வாட்டியும் பெயர் வைச்சு இருக்காரு. அதே போல் வெற்றி பெறுமான்னு பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நான் இந்த புத்தகத்தை இன்னும் படிக்கல. ஆனால் இது எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஓன்று.

அதே மாதிரி KABUL DISCO ன்னு ஒரு புக் வந்து இருக்கு. காபுல் நகரத்தை பற்றி கதை எழுத ஒரு எழுத்தாளன் ஆப்கானிஸ்தானுக்கு போறான் , அவனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்கள் , கார்ட்டூன் படக் கதையாக வந்துள்ளது. சிறியவர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டியே புக் இது. அந்த நாட்டின் கலாச்சாரத்தை பற்றி சிறியவர்கள் தெரிந்துக் கொள்ள கொஞ்சமாச்சு உதவி செய்யும்.

= = = = =

சில ஓலைச்சுவடிகள், தஞ்சாவூர் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களின் சில பிரதிகள் வைத்து கொண்டால், இந்த நாள் மட்டும் அல்ல நீங்கள் எந்த நாளும் ஹேமாவை போல் புரியாத தமிழ் வார்த்தைகளை போட்டு கவிதை எழுதலாம்.

அதே போல் நீங்க எழுதும் பதிவிகளில் பட்டை, ஏலக்காய் போன்றவற்றை கலந்தால் நீங்களும் இவரை போல் தமிழ்மண விருதை வாங்கலாம்.

= = = = =

Wednesday, February 10, 2010

தமிழ்ப்பட விமர்சனம் : அசலான விமர்சனம்

பத்து லட்சம் ஹிட்ஸ்களை தர போகும் பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (அப்படி யாராச்சு இருக்கிங்களா ...இருந்தா சொல்லுங்கப்பா) நன்றி நன்றி ........

சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்னு சொல்லிருக்காரு..அதனால் இனிமேல் படம் வெளிவரும் பொழுது அது கக்கா போக தெரிந்தவர்களுக்கா ...இல்லை முச்சா போக தெரிந்தவர்களுக்கா என்று அவர்கள் சொல்லி விட்டால் நல்ல இருக்கும் ..... அதன்ப்படி நாங்களும் படம் பார்ப்போம் ,விமர்சனம் எழுதுவோம் ல


டிஸ்கி : தமிழில் எழுதும் போது தமிழ் படத்திற்கு தானே பெரும்வாரியாக விமர்சனம் எழுத முடியும். அதுவும் அசலாக இருந்தால் தானே எல்லோரும் படிபங்க.......

கொஞ்ச நாளாய் எல்லா பதிவுகளிலும் எதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க. சரின்னு புயலாய் புறப்பட்டு விமர்சனம் எழுதியே தீர்வதுன்னு ஒரு முடிவோட எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நான் இது வரைக்கும் எந்த புதுப் படத்துக்கும் விமர்சனம் எழுதினது இல்லை ....... அப்படியே எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதுன்னு தெரியல.

சரி ஏதோ ஒப்புக்கு கதை சவாரி அடிக்குது, கேமரா லென்ஸ் ல ஓட்டை, டைரக்டர் சரியாய் குளிக்கல...... ஹீரோவுக்கு ஜெட்டி சைஸ் சரி இல்லைன்னு நானும் நூற்றுக்கு பத்தாய் எழுதிட்டு போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் என்னை என்ன சொல்லும்(நமக்கு சரித்திரம், பொருளாதாரம், ஆங்கிலம்........ எல்லா கருமமும் முக்கியம் இல்லையா)......

நம்ம எப்புடி விமர்சனம் எழுதின என்ன .....நூறு வருடம் கழித்து வர போகும் என்னைப் போல் உள்ள மட்டையர்களுக்கு தெரியவா போகுது ?????

நேத்து சாயங்காலம் பிற பதிவாளர்கள் எப்புடி விமர்சனம் எழுதறாங்கன்னு பார்க்கலாம்ன்னு உட்க்கார்ந்த.....முடியல, என்னை தவிர எல்லா பையபுள்ளைகளும் படத்தை விமர்சனம்ங்கிற பெயர்ல விம் சோப்பு போட்டு தோச்சு எடுக்கிறாங்க. நான் அப்படியா ஷாக் ஆகிட்டேன்.

படம் பார்க்க உட்க்காரும் பொழுதே அடியில் கொல்லி கட்டை வைசுக்குவங்க போல் இருக்கு. அவங்க பதிவுகளெல்லாம் படிக்கும் பொழுது தியேட்டர் விட்டு வெளிய வழியே (கவிதை கவிதை .....என்ன கருமம்மோ) வந்துடனே டி குடிக்குரங்களோ (இலக்கியவியாதிகள் மன்னிக்கவும்......சரியான spelling தெரியல) இல்லையோ இன்டர்நெட் செனட்டர்க்கு போய் விமர்சனம் எழுத START பண்ணி விடுறாங்க .......

தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????

இன்னொரு விஷயம் ....எனக்கு விமர்சனம் எழுத தெரிந்தால் நான் எழுத மாட்டேனா ???? பிறகு படம் பார்க்காமல் விமர்சனம் எழுத எனக்கு தெரியாதே ......(அந்த மாதிரி பின்னோட்டம் வேண்டுமானால் போடா தெரியும்).....

அதுவும் மொக்கை படத்துக்கு மொக்கையா விமர்சனம் எழுதின பிறகு திரட்டில சேர்க்க படும் படு இருக்கே ........இதுல வேற விமர்சனத்துல இடைச்சொற்கள் இல்லைன்னு இலக்கியவாதிகள் complaint பண்ணுறாங்க....அவங்களெல்லாம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் AGATHA CHRISTIE ஓட தமிழ் மொழிபெயர்ப்பு நாவலை படிக்க வைக்க வேண்டும்.....(அவங்க கிட்ட தான் எப்புடி ஒரு சிறந்த நாவலை மொழிபெயர்த்து மொக்கை ஆக்குவது என்பதை கற்று கொள்ள வேண்டும் .....இதிலையும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பல புது புது தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் ......அதற்க்கெல்லாம் பாரதி சொன்னது போல் மனதில் உறுதி வேண்டும்....வார்த்தைகளில் தெளிவு வேண்டும்)....

இன்னொரு முக்காத விஷயம் என்னன்னா விமர்சனம் எழுத ஆரமிக்க இருக்கிற வரைக்கும் அந்த மொக்கை படங்களின் கதையை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம். இதை விட பெரிய தண்டனை வேறு எதுவுமில்லை......

ஆனால் இந்த பட விமர்சனங்களால் ஒரு நன்மையையும் உண்டு ........ பிறர் காசை செலவு செய்து படம் விட்டு ....விமர்சனம் எழுதவங்க. அதை படிச்சுட்டு நம்ம காசை மிச்சம் பிடிச்சுக்கலாம்.

அப்படா நானும் விமர்சனம் எழுதிட்டேன் .......

Saturday, December 12, 2009

ஆதவன் ஆகாதவன்

அவள் வருவாளா .... அவள் வருவாளா ....

பாடி கொண்டே சூரியா வருகிறார். அப்ப அங்க வந்த வடிவேலு ....

"என்னது இது..... ஏதோ சொரண்டி கிட்டே வருது ... ஐயோ பாவம். யார் பெத்த பிள்ளையோ ....."

இதை பார்த்த சூர்யா "நீங்க பேசினது... என் ஷிப் ல இருக்கு......"

"ஆமா பேசினவன் இங்க இருக்கேன்.. பேசினது மட்டும் ஷிப் ல இருந்து என்ன ஆக போது...."

"நீங்க பேசினதை ரெகார்ட் பண்ணி சிப் ல ஸ்டோர் பண்ணி வைச்சு இருக்கிறேன்....."

"என்னது ஸ்டோர் ஆஅ..... அப்படின்னா எனக்கு கொஞ்சம் உப்பு ,புளி, மிளகாய் எல்லாம் கொஞ்சம் கம்மியான ரேட் க்கு போட்டு தாப்பா"

"அது இல்லை .... நீங்க பேசினதை சிப்ல பதிவு பண்ணி வைச்சு இருக்கிறேன்...."

"ஐயோ போப்பா. பொழைக்க தெரியாத பயல இருக்கியே.... அதை ஏனப்பா ரெகார்ட் பண்ணனும்... என் கிட்ட சொன்ன எங்க வேணும்னாலும் வந்து பேசிட்டு போறேன்"

===================================

"வண்டி ல bomb வைச்சு இருக்கேன்"

"ஆமாப்பா.. நானும் இந்த உருளகிழங்க சாப்பிட்டதில் இருந்து வயறு ஒரு மாதிரியா தான் இருக்கு..."

==================================

கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டிவி ல "சூர்யா...ஆதவன் ல வாழ்ந்து இருக்கார்" ன்னு கே.எஸ். ரவிக்குமார் சொன்னாரு. அதானே பார்த்தேன்...நடிக்க சொல்லி இருந்த நாள் இருந்திற்கும். சூர்யா வாழ்ந்ததால் தான் படம் மொக்கையா போயிருச்சு போல.......

==================================

அதே மாதிரி .... நயன் தாராவை பற்றி சொல்லும் பொழுது அவர் "nayan tara has done an extra ordinary performance " ன்னு சொன்னார். எந்த இடத்தில என்று சொன்னால் நல்ல இருக்கும். படத்தில் நானும் ஒரு காட்சி விடமால் தேடி பார்த்தேன். நயன் தாரா எங்கேயும் நடித்து காட்டவில்லை..... பாடல் காட்சிகளில் கொஞ்சம் காட்டி இருக்கிறார்.

=======================================

படத்தில் ஹீரோ வடிவேலு தான்னு சொன்னாங்க. நயன் தாராவை ஒரு பாட்டில் அவருடன் ஆட(ட்டி) வைச்சு இருந்த, நல்ல இருந்திற்கும்.

==============================================

தில்லாவும் பல்லும்

"டேய்... யாரு டா இங்க தில்லா......."

அங்கே தில்லை நடந்து கொண்டு வருகிறார். பல்லுயை தண்டி போகிறார். பிறகு தாம் வந்தது பல்லை பார்க்க தான் என்று தெளிந்த பின் அவர் பக்கம் வருகிறார்.

"நான் தான். வாங்க மலேஷியா போய் பேசலாம்...."

"ஏனடா?"

"அங்க தானே TWIN TOWER இருக்கு...."

"அங்க எல்லாம் நான் வர முடியாது....."

"????"

"ஏன்னா... வாழ்க்கை ஒரு சக்கரம்டா.... சென்னைக்கு வந்தவன் திருச்சிக்கு போவான், திருச்சி போனவன் சென்னை வருவான்"

"டேய் அதுக்கும் மலேஷியாவுக்கும் என்னடா சமந்தம்...."

"நீ கூலிங் கிளாஸ் போட்டு இருக்கல...."

"முடியல"

"அதான் எனக்கு தெரியுமே ...... அசலுக்கு காசு கூட பைசல் ஆகாதுன்னு"

"ஹலோ...சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்க ......"

"அதை பார்க்க, அது என்ன பொண்ண...."

"சரி, பொருளாதரத்தையாவது திருப்பி பாருங்க ....."

"அப்படி திரும்பி பார்த்த யாரும் உன் படத்திற்கு வர மாட்டாங்க..."

"உன் படத்திற்கு திரும்பி பார்க்காமலே யாரும் வர மாட்டாங்க ..."

இதனால் கோவப்பட்டு தில்லா நடக்க ஆரமிக்கிறார் ......

பஞ்ச் டயலாக் பேச ஆள் இல்லாமல் ... தனியே பேசிக்கொண்டு போறார். தில்லா கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் பைத்தியக்கார ஆஸ்பீடல் உள்ளே போய் விடுகிறார்.

டிஸ்கி - எதுக்கு இந்த பதிவை எழுதினேன் என்று எனக்கே தெரியல

Saturday, November 28, 2009

யோகி - பட விமர்சனம்


"இந்த வெள்ளிகிழமை வந்த புது படங்களை பார்த்ததில் இருந்து இப்படி தான் உடம்புல இருக்கிற அத்தனை ஓட்டை ல இருந்தும் இப்படி தான் புகைய வருது..... இதுக்கு பேசாம மேவி எழுதின கவிதையை படிச்சிட்டு உயிரை விட்டு இருக்கலாம்..... எனக்கு வேணும் வேணும்..... தெருண் கோகி , சைரன் இவங்களை பார்த்த பிறகும் நான் போயிருக்க கூடாது... என்ன செய்ய விதி வலியது....."


"நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து பார்த்தேன்..... பட கதையை ஜீரணம் பண்ண முடியல..... இலக்கிய இனிமா தான் வேலைக்கு ஆகும் போல் இருக்கு... இவங்க உலக தரத்துக்கு போறதுக்குள் நம்ம நிலை தகர டப்பா ஆகிரும். ஐயா சாமிகளா ...... பர்மா பஜார் ல நிறைய சாமான் கிடைக்குது. ஏன் சிடி மட்டும் வாங்குறிங்க???"

டிஸ்கி - மேல் படங்களில் உள்ளவர்களும் யோகிகள் தான். மேலும் யோகி படத்திற்கும் இதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. நான் இன்னும் அதை பார்க்கவில்லை. அப்படி இருந்தும் விமர்சனம் வேண்டுவோர் கேபிள்ஜி பதிவிற்கு செல்லவும்.


Thursday, November 26, 2009

கொட்டாவி விட்டு கொண்டே வாழ்த்தலாம் வாங்க


நிஜப்பெயர்: மேவி

புனைப்பெயர்: மொக்க ராசா (வழங்கியவர் - "இலக்கிய பிரியாணி" தாபா)


வயது:
எதிரில் வரும் பெண்ணை பொருது

தொழில்: கொட்டாவி விடுவது

உபதொழில்: இலக்கியம் பேசுவது (பல தடவை காயபட்ட பொழுதிலும்)
நண்பர்கள்: டி, காப்பி வாங்கி தருபவர்கள்

எதிரிகள்: சாப்பிட்டதற்கு காசு கேட்பவர்கள்
பிடித்தது: குமுதம் நடுப்பக்கம்


பிடிக்காதது: குங்குமம் கடைசி பக்கம்
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு நியூஸ் பேப்பர் படிப்பது

நீண்டகால சாதனை: உருபடாமல் இருபது
நீண்டநாள் ஆசை: அனுஜன்யாவை தனது கவிதையை படிக்க வைக்க வீண்டும் என்பது .

சமீபத்திய ஆசை: கார்க்கியை கவிதை எழுத வைக்க வேண்டும் என்பது

இப்படிக்கு

பிறந்த நாள் பதிவுகளுக்கு காபி பேஸ்ட் பின்னோட்டம் போடுவோர் சங்கம்

Thursday, November 19, 2009

காதல் முத்தி போயிருச்சு


அன்று தீபாவளி. வெடிச் சத்தம் கேட்டு எழுந்த பொழுது தான் ஞாபகம் வந்தது. என்ன தான் ஊருக்கு இரண்டு நாள் முன்னரே வந்து இருந்தாலும் அவளை பற்றி வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்தால் தீபாவளி கொண்டாடங்கள் பற்றிய சிந்தனை பெரிய அளவில் மனசுல இல்லை என்பது உண்மை.

சென்னையிலிருந்து கிளம்பும் போதே மனதிற்குள் முடிவு எடுத்து விட்டு தான் ரயில் ஏறினேன். என்ன தான் A / C பெட்டில் பயணம் செய்த பொழுதிலும் ; என்னால் அந்தே இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மனதிற்குள்ளே ஓர் விவாத மேடையில் பலமான விவாதம் நடந்து கொண்டே இருந்தது. அந்த மேடையில் "யாரிடம் இந்த விஷயத்தை சொல்வது-அம்மா அல்லது அப்பா" , "சொன்ன பின் எந்த மாதிரியான விளைவு ஏற்படும்" போன்ற தலைப்புகளில் எனக்கு நானே கருது சொல்லியும் எதிர் கருது சொல்லியும் அந்த இரவை ஓட்டினேன். நிஜத்தில் அம்மா எதிர்ப்பு சொன்னால் என்ன செய்வது என்று நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.... அதே சமயம் அவளையும் என் மனதிலிருந்து வெளியேற்றவும் முடியாது. உயிரில் கலந்து விட்டாள் அவள்.

அவள் அழகான இம்சை. அவளை முதலில் பார்த்து வருடங்கள் பல ஆகிய பொழுதிலும் அவள் முகம் நேற்று பார்த்தது போல் பசுமையாய் மனதில் ராஜா ரவி வெர்மா ஓவியமாய் பதிந்து உள்ளது. இரவுகளில் அவள் வருவாள் தினம்தோறும். நித்தமும் அவள் தான் மனதில். அவள் நினைவ்வுகளை தான் சுவாசித்தேன்.

வீட்டிற்குள் நுழைந்த பொழுது அம்மா கேட்டாங்க "என்னாச்சுடா??? இப்படி இருக்கா".

அப்பொழுதே சொல்லிருக்கலாம் ஆனால் உடல் சோர்வு காரணமாய் அம்மாவை எதிர் கொள்ள இயலவில்லை. பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அம்மா அப்பா, இரண்டு பேரும் வேலையாய் இருந்ததினால் தனியாக பேச முடியவில்லை. அந்த நேரங்களில் என்னுள் இருந்த அந்த அவஸ்தையை மிகவும் ரசித்தேன்.

அடுத்த வெடி சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தேன். அம்மா பூஜை வேலையில் இருந்தார்கள். அப்பா நண்பர்களுக்கு செல்போன் முலமாக வாழ்த்துக்களை சொல்லி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் எனது செல்போனில் அழைப்பு வர, அதை எடுத்து பேசும் நிலையில் நான் இல்லாதால், அதன் இயக்கத்தை நிறுத்தினேன்.

காலை பூஜை முடிந்த நேரம். பேசலாம் என்று அம்மா அருகே சென்றேன். சமையல் வேளை. அதனால் சமயலறையில் இருந்தார்கள்.

"அம்மா"

" என்டா"

"கொஞ்சம் பேசணும்"

"இப்ப தான் நேரம் கிடைச்சுதா"

"போ. அப்பா கிட்ட போய் சொல்லு"

நான் மொக்கை போட தான் வந்து இருப்பேன் என்று நினைத்து விட்டார்கள். என் மொக்கையை தவிர்க்க அம்மா கையாளும் உத்தி இது. அம்மாவுக்கு தெரியும் எனக்கு அப்பா கிட்ட கொஞ்ச பயம் உண்டு என்று. சரின்னு அப்பா கிட்ட சென்ற பொழுது வாசலில் பக்கத்து வீட்டு மகாலிங்க மாமாவிடம் பேசி கொண்டு இருந்தார்.

வந்து டிவி முன் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது தான் கவனித்தேன். அம்மா என் அருகே நின்ன்று கொண்டு இருப்பதை. பேசலாம் என்று நினைத்த பொழுது ..... அம்மாவுக்கு பிடித்த நடிகையின் பேட்டி டிவியில் ஒளிபரப்பானது. நேரம் காலம் தெரியாமல் ........ வந்த கோவத்தில் மாறன் சகோதரர்களை மனதிற்குள் சபித்தேன்.

=
காலை சிற்றுண்டி முடிந்த நேரம். அப்பா வெளியே போய் இருந்தார். அம்மாவும் நானும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தோம். அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் கேள்வி கேட்க அப்பா இல்லை என்பதினால் வந்தது. அம்மாவிற்கு என் மேல் தனிபட்ட பிரியம் உண்டு. மொத்த குடும்பத்தில் நான் அதிகம் படித்தவன் என்பதினாலும், நல்ல குணமுடையவன் என்பதினாலும்.

வசதியான குடும்பம்...... அவளை மணம் முடித்து வைக்க சிரமம் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பம் முதலே இருந்தது.

காலை முதலே எனக்கு செல்போன் அழைப்பு ஏதும் வராததாலும், அப்பாஸும் யுவனும் இன்னும் வீடிற்கு வரவில்லையே என்று கேட்க ; பேச்சு ஆரம்பமானது.

சிறிது நேரம் போன பின்

"அம்மா"

என்னா என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாங்க.

எனக்குள் ஆயிரம் பிரளயம்.

"நா ....நா ... நான் ஒரு பெண்ணை கா...."

"ம்ம்ம் சொல்லு"

இது தான் அம்மாவிடம் எனக்கு பிடித்தது. மிகுதியான உக்கம் தருவார்கள்.

"நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்" என்று மனபாடம் செய்தது போல் சொல்லி விட்டேன்.

எனக்கு ஆச்சிரியம். அம்மா சிரித்த படி " யார அது??"

சற்றும் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தைரியம் வந்து ....

"அசின் ம்மா"

"????"

"நடிகை அசின் ம்மா" என்று அழுத்தி சொன்னேன்.

ரொம்ப முத்தி போயிருச்சு என்பது போல் அம்மா என்னை பார்த்தாங்க.

Wednesday, September 16, 2009

A to Z அ முதல் ஃ



1. A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்




2 . B – Best friend? : அப்பாஸ், யுவா ; 25 வருட நட்பு




3. C – Cake or Pie? : Lisa Loeb தானே .... ரொம்ப பிடிக்கும்




4. D – Drink of choice? apple or water melon




5. E – Essential item you use every day? கட்டாயமாய் என் அறிவு இல்லை




6. F – Favorite color? blue



7. G – Gummy Bears Or Worm? :?????!!!!!




8. H – Hometown? திருச்சி ....... ஒரு காலத்தில் சோழர் தலைநகரம்


9. I – Indulgence? தெரியல

10. J – January or February? இரண்டாவது



11. K – Kids & their names? அண்ணன் பொண்ணு ரிதி



12. L – Life is incomplete without? பிறப்பு , இறப்பு


13. M – Marriage date? - பார்போம்

14. N – Number of siblings? ஓன்று



15. O – Oranges or Apples? ஓசியில் கிடைத்தால் எது வேண்டுமானாலும் ஓகே


16. P – Phobias/Fears? தெரியாதுங்க


17. Q – Quote for today? . positive affect increases ones own perceptions of expectancy

18. R – Reason to smile? தேவை இல்லை


19. S – Season? - எந்த காலமாய் இருந்தாலும் அனுபவிக்க மனசு வேண்டும்


20. T – Tag 4 People?-
எஸ்ரா
ஜெயமோகன்
சாருநிவேதிதா
மனுஷ்ய புத்திரன்


21. U – Unknown fact about me? ; எனக்கு கவிதை எழுத தெரியாதுங்க (இன்னும் நிறைய இருக்கு)


22. V – Vegetable you don't like? அப்படி ஒன்றும் சிறப்பாய் இல்லை....... எதை போட்டாலும் சாப்பிட்டு விடுவேன்


23. W – Worst habit? (சில நேரங்களில் உண்மை கசக்கும்)


24. X – X-rays you've had? ஞாபகம் இல்லை


25. Y – Your favorite food? பிசி பாள பாத்


26. Z – Zodiac sign? மீனம்
********************************************************************************


1. அன்புக்குரியவர்கள் : எல்லோருமேதான்


2. ஆசைக்குரியவர் : அம்மா, அப்பா


3. இலவசமாய் கிடைப்பது : வாழ்க்கை


4. ஈதலில் சிறந்தது : நம்மால் முடிகிற எல்லாமே


5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்


6. ஊமை கண்ட கனவு : அது எனக்கு எப்படி தெரியும் ( நான் ஊமை இல்லையே)


7. எப்போதும் உடனிருப்பது : தைரியம்

8. ஏன் இந்த பதிவு : சமுதாய நலனுக்காக


9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கட்டாயம் ஐஸ்வர்யா இல்லை

10.ஒரு ரகசியம் : ஒன்றுக்கு பிறகு இரண்டு வருகிறது

11.ஓசையில் பிடித்தது : உன்னால் முடியும்

12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்.

13.(அ)ஃறிணையில் பிடித்தது: புக்ஸ்


(என்னை யாரும் கூப்பிடவில்லை ..... அதனால் சுயம்புவாய் எழுதுகிறேன் இந்த பதிவை)

Tuesday, August 18, 2009

பயோடேட்டா – டம்பி மேவீ

பெயர் : டம்பி மேவீ

Original பெயர் : மேவி

வயது : இறக்க இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில் : வேலை பார்ப்பது

நண்பர்கள் : எல்லா முட்டாள்களும்

எதிரிகள் : எல்லா அறிவாளிகளும்

பிடித்த வேலை : தூங்குவது

பிடிக்காத வேலை : புத்தகம் படிப்பது

பிடித்த உணவு :தோசை

பிடிக்காத உணவு : அப்படி ஓன்று இருக்கிறதா ??

விரும்புவது : சந்தோஷமாய் இருப்பது

விரும்பாதது : சோகமாய் இருப்பது

புரிந்தது : வாழ்க்கையை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை

புரியாதது : முழுமையான முட்டாள் ஆகும் வழிகளை

சமீபத்திய எரிச்சல் : ஒபாமா

நீண்டகால எரிச்சல் : திருபாய் அம்பானி

சமீபத்திய சாதனை : ஒரே முச்சில் முன்று மசால் தோசை சாப்பிட்டது

நீண்டகால சாதனை : ஞாபக மறதி

Friday, July 24, 2009

வால்பையன்யின் முதல் பதிவு மற்றும் அதன் பின்னோட்டங்கள்


அறிமுகம்


இந்த இடுகையை பார்வையிட்டோர்
என் பெயர் அருண், வசிப்பது ஈரோடில்,தொழில் கமாடிடி மார்க்கெட் அனல்ய்செர்இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன்.புதிது என்பதால் ரேக்கிங் செய்யாமல் வலை எழுதுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவும்

கிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம் 9:33 PM
பகுதிவாரியாக:

7 வாங்கிகட்டி கொண்டது:
தருமி said...
ஓ! கலாய்க்கிற கேசா நீங்கள். துணைக்கு இங்கே நிறையபேர் இருக்கிறார்கள்.வாருங்கள்.
November 21, 2007 11:28 PM


மங்களூர் சிவா said...
வாங்க அருண், கலக்குங்க!!கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?
December 8, 2007 9:13 AM


வால்பையன் said...
நன்றி //கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?//கடைசியாக உங்கள் பதிவில் ஷேர் மார்க்கெட் பற்றி எழுதிருந்திர்கள் அல்லவா!அது போல தான் கமாடிட்டியும், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட்டில் ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கலாம், இங்கே விலை பொருள்களை வாங்கலாம்,எனக்கு அது பற்றிய ஒரு வலையும் உண்டு,பார்க்க வால்பையன்
January 10, 2008 2:50 PM


மங்களூர் சிவா said...
அண்ணாத்தே கமாடிடி பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆனா முழுசா தெரியாம இறங்க பயமா இருக்கு அதுதான். ஈக்விடி புரியற மாதிரி இது புரிய மாட்டிக்கிது.நம்மளோடது இன்னொரு வலை பூ உண்டு Think Big
January 10, 2008 3:22 PM


scssundar said...
வருக வருகவே.....பங்குமார்கேட் இருவர் உள்ளனர்.தங்கள் வருகை நல்வரவு ஆகுக..கலாய்ப்பது மட்டுமில்லாமல் கமாடிட்டி மார்க்கெட் பற்றி நல்ல ஒரு அறிமுகத்தை எற்படுத்தி கொடுக்க வேண்டுகிறேன்.நன்றி
January 11, 2008 7:00 PM


cheena (சீனா) said...
9 திங்கள் ஆயிற்று - அட்டகாசமாக இருக்கிறது. மனைதனின் இரு பக்கங்கள் இரு வலைப்பூவாக இருக்கின்றன. அறிவிற்கு விருந்து - மனம் மகிழவும் விருந்து.நல்வாழ்த்துகள்.முதல் பதிவில் முதல் மறுமொழி நல்ல உள்ளத்திடமிருந்து வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது
August 15, 2008 7:41 PM


வால்பையன் said...
நன்றி சீனா அண்ணா,தேடி பிடித்து என்னுடைய முதல் பதிவில் உங்களின் வாழ்த்தை தெரிவித்திருக்கிறீர்கள்
August 22, 2008 10:22 PM

Saturday, July 18, 2009

நூறாவது பதிவும் பதிவாளர்கள் சந்திப்பும் - தொகுப்பு

மயிலாப்பூர் யில் நான் சென்ற வாகனம் பழுது ஆகிவிட்டது; ஆதனால் கடற்க்கரைக்கு செல்ல அதிக நேரம் ஆகிவிட்டது. இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் ; என்வென்றால் எனக்கு இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாது.
காந்தி சிலை பின்னாடி போய் பார்த்தேன் பிளாக்கர் மீட் நடக்கிற மாதிரியே எனக்குதெரியல. நானும் நவகிரகத்தை சுத்தற மாதிரி காந்தியை சுத்தி வந்தேன். அந்தபக்கமும் இந்த பக்கமாய் சுற்றி பதிவாளர்களை தேடுகிறேன் என்ற பெயரில்அங்கே இருந்த பெண் பிள்ளைகளை பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் போன பின் உடல் வலிக்க ஆரமித்து விட்டது. அந்த நேரத்தில் பிரபு தான் என் நினைவுகளில் நிறைந்து இருந்தான். அவன் இந்த சமயத்தில் இங்குஇருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

மாமா
"நீ இல்லாமல் எது நிம்மதி"

அந்த நேரத்தில் சோகமாய் உணர்ந்தேன். சரின்னு வானவில் வீதி கார்த்திக் கிட்டமெசேஜ் பண்ணி கார்கி நம்பர் வாங்கினேன். அந்த numberkku நான் டயல் செய்த போது.

ஆவலுடன் காத்து இருந்தேன் கார்கி குரல் கேட்க. எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை எனக்கு நானே பேசி பார்த்து கொண்டேன். ஏனென்றால் "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" ல.

எதோ ஓர் புரியாத ஹிந்தி பாடல் ஓன்று எனது செவியை சவுல்ஆகிக்கொண்டு இருந்தது. பார்வையை சுழல விட்டேன்.
காதலர்கள்.
இளம் ஜோடி.
அவன் மடியில் அவள்.
இடது தோள்பட்டை இருந்த அவன் கையை சற்றே இறக்கினான்.
மனம் பொறுக்கவில்லை.
கண்கள் நேர் கோட்டில் வந்தது.

சிறுது நேரம் கழித்து.
ஹிந்தி பாடல் நின்றது.
தேவதை குரல் ஓன்று கேட்டேன்.
கார்கி ஒரு பெண்பாலா....????
அதை கூட யோசிக்கவில்லை என் அறிவு.
"ஹலோ"
உடனே என் மனம் உடல் வலி எல்லாம் மறந்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் .........

" ஹாய். I am mayvee. ........"
உடனே உள்ளே இருக்கும் சாத்தான் சொன்னது....." டேய் ஏன்டா இந்த கொலை வெறி "
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் முழக்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வான்நிலை
பெண்ணே நீ வைசுயிருக்கிறது புளியோதரை"

என்ன திடிர்ன்னு மனசுக்குள்ள இருக்கிற மன்மதன் சாப்பட்டு ராமனா மாறுகிறானே என்று கண்ணை தெறந்து பார்த்தேன் ; பக்கத்தில மாயாண்டி குடும்பத்தார் மாதிரி ஒரு குடும்பம் கட்டம் கட்டி புளியோதரை காலி பண்ணிட்டு இருந்தாங்க. அதானே பார்த்தேன்.

இப்போ தேவதை
"ஆப் கௌன் ஹாய் ???"

அவளின் குரலை கேட்ட உடன் எனக்கு திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களை விட அவளது குரல் சிறந்ததாக தோன்றியது. குரல்ன்ன குரல், அப்படி ஒரு குரலுங்க. 45% லத மங்கேஷ்கர், 25% ஆஷா ப்ஹொஸ்லெ, மீதி 30% ஜானகி என ஒரு அருமையான கலவையான குரல். அப்படியே உருகி போயிட்டேன்.

"ஒன்ற இரண்டாய்
உயிர் தின்ன பார்க்குதே
உணர்வுகள்......"

திடிர்ன்னு ஒரு பொண்ணு ஹிந்தி ல பேசவும் எனக்கு என்ன பேசுவதுன்னே தெரியல. சரின்னு நாம தான் "Hum Aapke Hain Kaun" படத்தை பல தடவை DVD யில் பார்த்து இருக்கோமே அதை வைச்சு சமாளிக்கலாம் என்று பார்த்தால் ஒரு ஹிந்தி வார்த்தை கூட தோன்றவில்லை அந்த சமயத்தில்.

ஹிந்தி எதிர்ப்பு பண்ணின எல்லா ஆளுகளையும் நல்ல திட்டினேன் மனதார. என்ன தான் ஹிந்தி படித்திருந்தாலும் பத்தாவது பிறகு அந்த மொழியை நான் அவ்வளவா பயன்படுத்த வில்லை.

திடிர்ன்னு ஒரு குயில் என் காதுல குவுச்சு. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். என்னன்னு பார்த்த நாம தேவதை.
"ஹரே..... போல்லுன"

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஆனால் ஹிந்தி மொழி எவ்வளவு அழகான மொழி என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். ஆனா எனக்கு Aradhana பட ஹீரோ ராஜேஷ் கண்ணா மாதிரி "மேனே சப்னோகி ராணி" ன்னு பாட்டு பாட தோனுச்சு.

ஐயோ.... என்ன செய்ய.
இவள் ஹிந்தி பேசுற. பிறகு எப்படி தமிழ்யில் பதிவு எழுதுகிறாள்ன்னு ஒரே குழப்பம். சரி எது எப்படி இருந்தாலும் ; இவளை ஓகே பண்ணி விடவேண்டும் என்று முடிவு கட்டினேன். அப்பன்னு பார்த்து வழக்கம் போல் networrk பிஸி ஆகி கால் கட் ஆகிருச்சு.

"தென்பாண்டி சீமையில
மான் போல் வந்த உன்னை
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ ......"

மனசுக்குள்ள நாம் ராஜா சார் BGM ஏதும் இல்லாமல் சோலோவாக sympathy create பண்ணிட்டு இருந்தார். இப்போ வனம் முழுமையாக இருட்டின் அணைப்பில் வந்துருச்சு.

சுத்தி நிறைய மக்கள் இருந்தாலும் மனசில் வெறுமையாக உணர்ந்தேன். சற்று தள்ளி ஒரு சின்ன பொண்ணு ஐஸ்கிரீம் வாங்கிட்டு இருந்ததை பார்த்தேன். நீல நிற டிரஸ்யில் அழகாக இருந்தாள். ஒரு குச்சி ஐஸ்யை சாப்பிட்டு, அவள் கை எங்கும் ஐஸ் உருகி வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு மீண்டும் அந்த குழந்தை பருவத்துக்கே போய்விட ஆசை வந்தது.

"முத்தான முத்து அல்லவோ
முடிந்து வைத்த முத்து அல்லவோ"

என்ன செய்ய "The Curious Case of Benjamin Button" கதை போல் சாத்தியம் இல்லாத நிலை. என் பார்வையை சுழல விட்டேன்.
ஐஸ் கிரீம் கடை, பஜ்ஜி கடை, yellow கலர் சுடிதார்........

yellow கலர் சுடிதார்யில் இருந்த பெண்யின் முகம் எனக்கு தெரிந்த முகமாய்இருந்தது. சற்று உற்று நோக்கினேன்.
அப்போ பின்னாடி ஒரு குரல் கேட்டுச்சு,
" டேய் பச்ச சட்டை. உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டா......"


என் சட்டையை பார்த்தேன். அது பச்சை நிறத்தில் இருந்தது.
எனக்கு ஒரே பயமாக போகிவிட்டது. என்னடா இது சென்னை வந்து இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு பிரச்னை. ரொம்ப weiredயாக உணர்ந்தேன் .

பின்னாடி ஒரு குரல் ; பல குரல் ஆனது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவைகள் என் அருகே வந்து கொண்டு இருந்தது. ஒன்றும் தோன்றவில்லை அதனால் அப்படியே அங்கேயே நின்றேன்.

நின்றேன்...
மஞ்சள் நிற சுடிதாரை தேடினேன். அங்கும் இங்கும் கண்கள் அவளின் பின்பத்தை முத்தமிட அலையாய் தேடின.
கண்களுக்கு சுகம் கிடைக்கவில்லை.
நின்றேன்.....
நோடிகள்.... வினாடிகள்.....


அடி ஏதும் விழ வில்லையே என்று திரும்பி பார்த்தேன். அச்சம் கொண்ட திரையாய் கண்கள் பார்த்து. இரண்டு கும்பல் கலைந்து கொண்டு இருந்தது. ஆக்ஸிஜன் எடுத்து கொண்ட நுரையிரல் நிம்மதியாய் ஆக்ஸிஜன் இல்லாத காற்றை வெளியிட்டது.

விட்ட இடத்தை பார்த்தான். சுடிதாரில் மஞ்சள் இல்லை நீல நிறம் குடி கொண்டு இருந்தது. அந்த மஞ்சள் சுடிதாரை எங்கே பார்த்து உள்ளோம் என்று யோசித்தவரே அங்க இருந்த ஒரு பஜ்ஜி கடையை பக்கத்தில் ஒரு plate பஜ்ஜி உடன் அமர்ந்தேன்.
கை கழுவிட்டு. சற்று நகர்தேன்.எதிரே அவள்.

அவள் இடுப்பில் கை வைத்த படி ஒருவன் நின்று கொண்டு இருந்தான். என் நண்பன் முகமத்தை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. முகம் என் நண்பனுடையது இல்லை.
" இவனோடு தான் என் வாழ்க்கை. இவன் இல்லாமல் நான் இல்லை." சில வருடகள் முன்பு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

வேறு பக்கம் போய் அமர்தேன்.
எனது கைப்பேசி சத்தம் போட்டது.
எடுத்து டிஸ்ப்ளேவில் நம்பர் பார்த்தேன். அந்த ஹிந்தி பொண்ணு கிட்ட இருந்து மெசேஜ் வந்து இருந்தது.

தகவலை அறிய பட்டனை அழுத்தினேன்......
அழுத்திய பின் மெசேஜ்யை பார்த்தேன் " who is this" என்று அவள் கேட்டு இருந்தாள். அதற்க்கான பதிலை அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து "sorry. i dont know anyone by this name".
சில நிமிடம் பூமி சுழல்வது நின்று போனது.

இடது கை மற்றும் வலது கைகளில் என் இரண்டு மொபைல் போன் வைத்து பார்த்தேன். தவறான நம்பர்க்கு டயல் செய்து இருந்தேன். மீண்டும் ஒரு முறை என் அம்மாவுக்கு ஒரு அழகான மருமகளை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

சரியான numberக்கு இப்பொழுது முயற்சித்தேன் ....
டயல் டோன் வந்தது .....
வந்து கொண்டு இருந்தது.
சற்று நேரம் கழித்து டயல் டோன் தனது உயிரை விட்டது.
யாரை பார்க்க கூடாது என்று நினைத்து இந்த பக்கம் வந்து அமர்தேனோ அவள் அவனோடு என்னை கடந்து போனாள்.

அவளை எவ்வளவு உயிருக்கு உயிராக என் நண்பன் காதலித்தான் என்று எனக்கு தெரியும். அவர்கள் பார்த்த பிறகு தான் எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஆனால் இப்பொழுது நான் காதலித்து இருந்தால் என் காதலி கூட இப்படி தான் அந்நியனோடு சுற்றி கொண்டு இருப்பாளோ என்ற எண்ணம் ஒரு மின்னல் மாதிரி என் மனசில் வந்து போனது.

ச்சே ச்சே .....
அப்படி எல்லாம் இருக்காது.
இதில் வேற எதோ ஒரு விஷயம் இருக்கு என்று தோன்றியது.
அப்ப பார்த்து காற்று சற்று பலமாக விசியது.
அந்த மாலை பொழுதில் அந்த குளிர்ந்த காற்று விசிய போது ; எனக்கு நான் வாழ்ந்த அழகான நாட்கள் நினைவுக்கு வந்தது.
சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன்.

அவள்
அவன்
அவர்கள் காதலை எனக்கு உணர்த்தியே சமயம்
அவர்களின் காதலினால் வந்த பிரச்சனைகள் எல்லாம் எதிர் கொண்ட சமயம்....
எல்லாம் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு போன் செய்தேன்.
பேசினான்.
பேசினேன்.
அழுதான்.
அழுகையாய் வந்தது.
போன் பேசி முடித்த பின்பு .......


" உறவுகள் தொடர்கதை ..
உணர்வுகள் சிறுகதை ...
ஒரு கதை இன்று முடியலாம்...
முடிவிலே ஒரு கதை தொடங்கலாம்....."

மனம் வெறுமை என்னும் ஆடை அணிந்து கொண்டது.
இருப்பிடத்தில் இருந்து கிளம்பிய போது இருந்த சந்தோஷம் அப்ப இல்லை. சரி வந்து விட்டோம் பதிவாளர்களை பார்த்துவிட்டு போகலாமே என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய இந்தியாவில் பாவமாய் நிற்கும் காந்தி சிலை நோக்கி நடக்க துவகினேன். அங்கே சென்ற பின் கார்கிக்கு போன் செய்தேன்.
"ஹலோ நான் மேவி பேசுறேன்"
"ஹாய். சொல்லுங்க. "
"நீங்க எங்கே இருக்கீங்க ; நான் காந்தி சிலை கிட்ட இருக்கேன்"
"நாங்க இப்போ பீச் நோக்கி வந்துட்டோம்"
"அப்படியா. இப்ப என்ன செய்யருது"
"சரி. நீங்க அங்கேயே வெயிட் பன்னுரிங்கள. நாங்க வந்துறோம்"
"சரி. நான் வெயிட் பண்ணுறேன்"
"சரி"
போன் பாக்கெட் உள்ளே வைத்தேன்.
கார்கிக்கு வெயிட் பண்ண ஆரமித்தேன்.......

Friday, July 17, 2009

நான்



நாங்க எல்லாம் சின்ன வயசிலையே மகாவீரின் நிர்வண கொள்கையை கடைபிடித்தவர்கள். என்னை பார்த்து தான் புத்தரே அப்படி நின்றார். ரொம்ப கம்மியான பட்ஜெட் ல எடுக்க பட்ட படம் இது ; செம கவர்ச்சியா இருக்கு. அளவந்தான் கமல்ஹாசன் க்கு எல்லாம் நாங்க முன்னோடி........



நாங்க எல்லாம் சின்ன வயசிலையே பெரிய ரவுடி ல !!!!!!
சிங்கமே என்னை கண்டால் சிதறி ஓடும் !!!!!!




நாங்களும் சிகப்பா தானே இருக்கோம் ???
ஒரு பெண்ணும் பர்ர்க்க மாட்டேன்ங்குது
(சசிகுமார் மாதிரி படிக்கவும்)


Thursday, July 16, 2009

மேவியின் சுயபுராணம்

குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.
****************************************
மெகா சீரியல்கள் இல்லாத வெள்ளிக்கிழமை இரவு அது..

சென்னை கடற்கரையோரம் இருந்த நாகமணி மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது மொக்கை தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் சந்தோசத்தை மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து யுங்கங்கள் பல அருள் புரிந்து தனது பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். காசியில் இருக்கும் கடவுள் அவர்.உலக பிரசித்தி பெற்ற அன்னபூரணி தேவியை மணந்தவர். அவரின் பெயரை அந்த குழந்தைக்கு சூட்டுவதில் அவருக்கு அப்படி ஒரு எரிச்சல். ஆனால் பள்ளி சான்றிதழில் மேவி, மாயாவி கொட்டாவி என்று ஆகி போனது வேறு விஷயம்.
மேவிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். சற்று கருப்பான நோஞ்சான் அவன். சுருள் முடி. திருட்டு கண்கள். மொக்கை போடா குழந்தையின் வாய் என்றாரே வைரமுத்து, அப்படியில்லை அவன்.
பிறந்த குழந்தையின் இடை பார்க்கப்பட்டது (கவர்ச்சி பகுதி). சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. எல்லாம் சரி, ஆனால் குழந்தை முழிக்கவில்லை, துங்கி கொண்டு இருந்தது. உடனே நர்ஸ் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே "___ __" பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த நர்ஸ்யை தீக்குச்சி என்று சொல்வாரக்ள்.வலது கையும் , இடது கையும் அவருக்கு இரு கைகள். அவர் சொல்லி எல்லாமே மொக்கை என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.
18 அரியர் என்று காட்டிய அவரது டிகிரி சான்றிதள் மறைக்க பட்டது . அறைக்குள் நர்ஸ் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. நர்ஸ் குழந்தையை என்ற கோட்டானை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.


அய்யோ ...... மொக்கை வந்துருச்சு
Related Posts with Thumbnails