Pages

Friday, February 22, 2013

சென்னை / மதறாஸ் -1859 வருடம் ::: பீப்பில்ஸ் பார்க்

1859 ம் வருடம் அன்றைய மதறாஸில்  பிரிட்டிஷ் அரசு  சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் 166 ஏக்கர் விஸ்தீரணமும், 5 மைல் நீளமும் கொண்ட பீபில்ஸ் பார்க்கை  உருவாக்கி உள்ளனர். இதில் ஜெய்பூர் தோட்டம், சர்க்கஸ், எந்திர விளையாட்டுகள், குளங்கள், மிருக காட்சி நிலையங்கள், தந்தி செயல் முறைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், நகைச்சுவை / சரித்திர / சமூக  நாடகங்கள், ஐரோப்பா சண்டை காட்சிகள், ஒளி / ஒலி / ஓவிய / கலை கண்காட்சிகள் என்று பல நிகழ்சிகளை நிகழ்த்தி உள்ளனர்.

இதில் முக்கிய ஈர்ப்பு விசை என்று பார்த்தால் சென்ட்ரல் ஸ்டேஷனில் போடப்படும் விளக்குகள் தானாம். 

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்த மக்குளே சொந்தங்களால் உருவான  இந்த பீப்பில்ஸ் பார்க் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 

காலபோக்கில் கலை இழந்து, அல்லது வேண்டும் என்றே இழக்க வைக்க பட்டுள்ளது. பிறவு வேகமாக வந்த நகரவியல் கலாச்சாரத்தால் இன்றைய ரிப்பன் பில்டிங்  லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. பின்புலத்தில் அரசியல் இருந்துள்ளது. 

இப்பொழுதிய  சென்னையையும் அப்பொழுதிய மதறாஸையும் ஒப்பீட்டு பார்த்தால், பெரிய ஏக்கமும் பெருமூச்சுமே வருகிறது. 

இந்த பார்க் அழிந்து போனதில் ரயில் துறை வளர்ச்சிக்கும் , வருடத்திற்கு எட்டு அன்னா ஒப்பந்ததிற்கும் பெரும் பங்கும் இருக்கிறது.  

இந்த பார்க்கின் மூலம் 1770 களிலேயே ஆரம்பிக்க பட்டுள்ளது. பொழுதுபோக்க வந்த மக்களின் தேவைக்காக சிற்சில வியாபாரிகளை பார்க்கினுள்ளே விட்டது தான் அதன் அழிவின் மைய புள்ளியாகவிட்டது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். 

இதன் மீதான சிறப்பு கவனங்களை 1859 ல் ஸார் சார்லஸ் ற்றெவில்யன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. 

பீப்பில்ஸ் பார்க்கின் அழிவின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அவை எல்லாம் சென்னை என்றே மாபெரும் நகரத்தின் வளர்ச்சியின் ஓர் பங்காய் இருப்பதால் சொல்ல முடியவில்லை. 

இது குறித்து சென்னை சரித்திர ஆய்வு நூல்களில் தகவல்கள் கிடைக்கிறது நுண்ணிய தேடல் இருந்தால் மட்டுமே. வருத்தங்கள் இருக்கிறது.... சென்னை 350ம் கொண்டாடங்களில் இந்த பார்க்கை பற்றிய தகவல் இன்றைய மக்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இந்த பார்க்கை அறிந்த / பற்றி கேட்ட தலைமுறைகள் இப்பொழுது இல்லை நம்மிடம். இதை பற்றி ஒருவரிடம் கேட்ட பொழுது ஈஸ்ட் இந்திய கம்பெனியின் ஆவணங்களை பாதுகாக்கும் காப்பகம் ஒன்றில் தேடினால் தகவல் கிடைக்குமென்று சொன்னார். 

உங்களுக்கு இந்த பார்க்கை பற்றிய எதாவது விஷய ஞானம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

பின் சேர்கை : -

இது குறித்து நண்பர் கல்வெட்டு  / பலூன் மாமா அவர்கள் தந்த உரலிகள்  






சுட்டியிலுள்ள மின் புத்தகங்கள் யாவும் இலவசம். கட்டணங்கள் எதுவும் இல்லை. 

Tuesday, February 19, 2013

தமிழக அரசின் ஒரு ரூபாய் - ஒரு இட்லி : ஏமாத்து வேலையா ??


கல்லூரி முடித்த பிறவு எனக்கு வேலைக்கு போக எல்லாம் இஷ்டமே இல்லாம இருந்துச்சு, எதாவது பிசினஸ் பண்ணலாம்ங்குற ஐடியா பலமா இருந்ததால ...திருச்சி டவுன் பக்கம் ஒருத்தரு மொத்த இட்லி வியாபாரம் பண்ணுறதை கேள்வி பட்டு, அதே மாதிரி திருவெறும்பூர் பக்கமும் செய்யலாம்ன்னு அவரை பார்க்க போனேன் 2004 வாக்குல.

மொத்த இட்லி வியாபாரம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு ஓட்டலுக்கோ / நிகழ்வுக்கோ மொத்தமா இட்லி தயார் செய்து குடுப்பது. மொத்த விலை என்று இல்லாமல் சில்லறை விலை தான். 

அதாவது அப்பொழுது நான் பார்க்க போயிருந்த மனிதர் ஒரு இட்லியை ரூ.1.25 பைசாவிற்கு விற்று கொண்டிருந்தார் 2004 ல். அங்கு நானும் என் நண்பனும் சாம்பிளுக்காக இரண்டு இட்லி சாப்பிட்டு பார்த்தோம். அவ்வளவு தரம் ..அவ்வளவு சுவை. அற்புதமா இருந்தது.

இதையெல்லாம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்றால், புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை இன்று திறந்து வைக்கிறார். அதில் ஒரு இட்லி ஒரு ரூபாயாம். :))))

2004 லையே நல்ல தரமான சுவையான அடர்த்தியான இட்லியை  அந்த மனிதரால் ரூ.1.25 பைசாவுக்கு விற்க முடிந்தது. விலைவாசி அதிகமுள்ள 2013 ல் தமிழக அரசால் எப்படி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு தர முடிகிறது என்று தான் தெரியவில்லை. 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

பாலியல் வன்முறை - ஆண்மை நீக்கம்



பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய பட வேண்டும் என்று பரவலாக கருத்து சொல்லுறாங்க. சந்தோசம். ஆனா அந்த மாதிரி பாலியல் வன்முறை செய்றவன் கல்யாணமானவனா இருந்தா, அவனோட ஆண்மைல அவனோட மனைவிக்கும்  பங்கு / உரிமை இருக்குல. 

அப்படி பாலியல் வன்முறைல ஈடுபட்ட கல்யாணமான ஒருத்தனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனது மனைவி இடம் அனுமதி கேட்பார்களா ??? கணவன் செய்த குற்றத்துக்காக மனைவிக்கு அவன் மூலம் கிடைக்கும் உடலுறவு இன்பங்கள் மறுக்க பட வேண்டுமா ??? அவள் என்ன பாவம் செய்தாள் ???

முக்கியமா நான் கேள்வி பட்ட வரைக்கும் ஆண்மை நீக்கம் என்பது குடும்ப கட்டுப்பாடு மாதிரி இல்லை. 

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் இந்த ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தால் பல சமூக சீர்கேடுகள் கிளை போல் வருமே, அதற்கு எல்லாம் அரசு பொறுப்பு ஏற்குமா ???

ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தை சரி / தவறு என்று எல்லாம் நான் பேசவில்லை... அப்படி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கரந்துகிட்டு எங்கையோ நடந்த குற்றத்தை பற்றியும், அதனால் பாதிக்க பட்ட மனிதர்களை பற்றியும் பேசுறது நியாயம் இல்லை. 

பாலியல் குற்றதுல ஈடுபட்டவன் கல்யாணம் ஆகாதவனா இருந்த ஒன்னும் பிரச்சனை இல்லை, கல்யாணம் ஆனவன் என்றால் .... இந்த தீர்ப்பினால் பாதிக்க பட போகும் அவனது மனைவியை பற்றியும் யோசிக்க வேண்டும்ன்னு தோணுது. அதுக்குன்னு கல்யாணம் ஆனவங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய கூடாதுன்னும் சொல்ல முடியல. 

ஒரு வேளை பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தான் தீர்ப்பு என்று முடிவானால், அது எல்லா பக்க நியாயங்களையும் யோசித்து எடுக்க பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.  

Saturday, February 16, 2013

போலீஸ் மாமாவும் இன்சூரன்ஸும்


இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைக்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்குறப்ப, ரோடு ல வைச்சு போலீஸ்காரங்க மடக்குனாங்க. கான்ஸ்டபிள் ரோட்டு நடுவுல நின்னு கவட்டைய விரிச்சு ..அங்குட்டும் இங்குட்டும் போயி வித்தை காட்டிகிட்டு இருந்ததால, லேசா தடுமாறினேன். அதனால பைக்க நிறுத்தின்ன பிறவு அவர் வந்து 

"ஏன் டிரிங்க்ஸ் பண்ணி இருக்கியா" ன்னுன்னாரு 

உடனே நம்ம மூஞ்சிய பார்த்த விஜய மல்லய்யாவுக்கு தூரத்து சொந்தம்ன்னு நினைச்சுட்டாரோன்னு சந்தேகம் எனக்கு தோணுறதுகுள்ள .....

"பைக்க ஓரமா நிறுத்திட்டு ...எஸ்ஐ கிட்ட போய் லைசென்ஸ் காட்டு"

சரின்னு அவர்கிட்ட போனப்ப வழக்கமான கேள்விகளை கேட்ட பிறவும் என்னைய விடுற மாதிரி தெரியல.

"எங்க வேலை பார்க்குற"ன்னு கேட்டாரு 

கொம்பனி பெயர சொல்லிட்டு, டார்கெட் பத்திய கவலைல "ஸார் நம்ம கிட்டக்க ஒரு அருமையான பாலிசி இருக்கு ..மாசமாசம் மூவாயிர ரூவா தான் சார் ...."...சத்தியமா எதார்த்தமா தான் பதார்த்தம் சுட்டேன். 

ரொம்ப அனுபவ பட்டு இருப்பார் போல, பீதில பேதி வந்த மாதிரி "சரி சரி...வீடு இங்கதானே சொன்ன..போ  போ"ன்னு விரட்டாத குறையா அனுப்பி வைச்சுட்டாரு. 

அந்த நேரத்துல பாஸ் போன் கால் பண்ணினாரு, கோத்து விடலாமான்னு யோசனை வந்துச்சு.... திங்கள் காலை ஆபீஸ் போகணும்ங்குற மரண பயத்துல அந்த ஐடியாவை விட்டுட்டேன்.     

ம்ம்ம் இன்சூரன்ஸ் விக்குறதுல கூட நன்மை இருக்க தான் செய்யுது :))))

Thursday, February 7, 2013

மட்டராசு - மதிராசு - மதராசபட்டினம் (கூகிள் பிளஸ் பதிவும் பின்னூட்டங்களும்)


கூகிள் பிளஸ் பதிவு



ஒரு நூறு வருடங்கள் முன்பு சென்னை மதராஸாக இருந்த காலத்தில், பேச்சு வழக்கில் அதற்க்கு இருந்த பெயர்களை கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. 

1. மட்டராஸு / மட்டராசு 
2. மதிராசு 


தற்பொழுது படித்து கொண்டிருக்கும் புத்தகத்தில் படித்த வரைக்கும் கண்ணில் பட்டவை. இது குறித்து என் அண்ணனிடம் சொன்ன பொழுது அவன் மதராசபட்டினம் ("ச" இல்லை "ஸ" என்று தான் இருந்ததாம் பழைய "ன" இருந்த காலத்தில்) என்பதை மதிராஸபாளையம் என்று கூட சொல்லுவார்கள் என்று சொன்னான். அந்த பெயர் தமார்ல சென்னப்ப நாயக்கர்  பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சொன்னான். 

என் சந்தேகம் என்னவென்றால் பாளையம் என்ற பெயர் பாளைய முறை இருந்ததால் வந்திருக்கலாம் அல்லவா ??? பாளையம் என்றால் யார் இந்த பகுதியை ஆண்டு இருப்பார்கள் ?? அந்த பாளையத்தை ஆண்டவர்கள் தான் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த ஏகப்பட்ட ஏரிகளை  அமைதவர்களா ??? 

கொஞ்சமான எனது தேடலில் சரித்திர குறிப்புகளில் மதகரி நாயகர் மற்றும் சென்னப்ப நாயகர் என்ற பெயர்கள் சென்னை சரித்திரத்துக்கு நெருக்கமாய் வருகிறது. இத்தனை ஏரிகள் இருந்ததால் ஒரு வேளை தற்பொழுதுள்ள சென்னை மாநகருக்கு வளமான சரித்திரம் இருக்குமோ ??


விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

= = = 
கூகிள் பிளஸில் இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் :- 

திரு. ராஜா சங்கர் - 

1.மதராசபட்டினம் என ஒரு நூல் இருக்கிறது எழுதியவர் நரசய்யா. அதிலே ஒருவேளை நீங்கள் தேடுவது இருக்கலாம்.

+Raja sankar என்னிடம்  இருக்கிறது ...ஆனால் விலாவரி தன்மை சந்தேகம் தான் 

2.இதெல்லாம் தனித்தனி கிராமமா இருந்தது. சேத்து நரகம் ஆக்கினா இப்படித்தான் இருக்கும்

என் ஊர் புரம் என முடியும். பக்கத்துல நாலு பாளையம், இரண்டு ஊர், இரண்டு துறை. ஆறோ ஏரியோ பக்கத்துல இல்லாததால அதெல்லாம் இல்லை.

பாளையம் கொஞ்சம் சின்ன கிராமம். ஊர் கொஞ்சம் பெரிசு. புரம் அதுக்கும் கொஞ்சம் பெரிசு. பேட்டையா பேட் ஆ அப்படீன்னு ஒரு சந்தேகம் உண்டு. சைதாபேட் சேத்துபேட் அப்படீன்னுதான் உண்டு என நினைக்கறேன். அப்புறம் அது பேட்டை ஆயிருக்கலாம்.

வாக்கம் அப்படின்னா பக்கத்துல குளமோ, ஏரியோ இருக்கனும். பாக்கம் மீனவர் குடியிருப்பா இருந்திருக்கனும்.

இப்படி யோசிங்க. ஈரோடு இல் கோயமுத்தூர் வரைக்கும் 100 கிலோமீட்டருக்கு ஒரே நகரமா இருந்தா??? கூடுவாஞ்சேரியில் இருந்து எண்ணூர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு.

மதுரையை பெரிய கிராமம் என சொல்லுவாங்க. இது அது மாதிரி இருந்து நரகமா மாறினது.


மேவி .. 3. முழு சரித்திரம் கொஞ்சம் கஷ்டங்க. திருவொற்றியூர் அந்த காலத்துல பெரும் இடமா இருந்திருக்கு. ஆதிசங்கர், சுந்தரர், தியாகராஜர் என பலரும் வந்த இடம், பாண்டிய மன்னர் கட்டிய கோயில் படம் பக்கநாதர் கோயில்.  இன்னைக்கு அவுட்டர் சென்னை.

இன்னைக்கு கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்திலே சமண கோயிலும் பவுத்த விகாரையும் இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள். ஏன்னா கடற்கரைக்கு பக்கத்துல சமண கோயில் இருந்ததா பாட்டு இருக்கு. மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலே கடற்கரை பக்கம் இருந்து அப்புறம் உள்ளே கொண்டுவந்து வைச்சு ஊரை உருவாக்கினாங்க எனவும் ஒரு கருத்து உண்டு.

இப்போ இருக்கும் கோட்டையை கட்டும் முன் பலதையும் இடிச்சிருக்காங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

என்ன பிரச்சினை அப்படீன்னா நம்மோட வரலாறு மூவாயிரம் நாலாயிரம் வருட வரலாறு. அதுவும் தொடர்ச்சியா. எதை எங்க இருந்து கண்டுபிடிச்சு எப்படி எழுத???

4.ராசேந்திரன் காலத்திய சோழர்களின் கடற்படை இங்கதான் இருந்ததாவும் சொல்றாங்க. பிச்சாவரம், கோவளம் பகுதிகள் அப்போதைய வன்னிய குறுநில அரசர்களின் கையில் இருந்ததாகவும் அவர்கள் சோழர்களுக்கு உதவி செஞ்சு கோழகோன் பட்டம் பெற்றதாகவும் சொல்றாங்க.


நமக்கு தெரிஞ்ச வரலாறு நாயக்க பாளையக்காரர்கள் ஆண்டது தான். இன்னும் சொல்லிட்டே போகலாம் ஆனால் முழுசுமா எழுத பலர் பல்லாண்டுகள் உழைப்பு போடனும்.


"+Raja sankar அதே தான் நண்பா .....

என்னொன்று திருச்சிக்கு பிறவு சென்னை தான் என் வாழ்வில் முக்கிய பங்கு. அதான் முயல்கிறேன் தெரிந்து கொள்ள. 

பிறவு முக்கியமாக பல்லவ சாம்ராஜ்யம் தமிழகத்தில் அமைய சென்னை முக்கிய காரணி என்று, களப்பிரர் மூலம் சென்னை என்று கேள்வி பட்டிருக்கிறேன். 

எழுத்தில் எதுவும் இல்லை, வாய் வழி தகவல்களை ஓன்று திரட்டி முழுமையான சென்னையின் சரித்திர உருவத்தை காண ஆசை படுகிறேன்"

5.நண்பரே, உங்கள் ஆசை எனக்கு புரிகிறது. நாம் தான் முயற்சி எடுக்கவேண்டும், ரீச் பவுண்டேன் கேள்விப்பட்டிருப்பீர்கள் சென்னையில் வரலாற்று இடங்களை ஆராய பதிய பல முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இணையலாம்.

தென்னிந்திய வரலாற்று மையத்தின் ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் அவர்கள் சென்னை பற்றி பல தகவல்கள் அறிந்தவர். இப்படி பலர் உண்டு ஆனால் ஒருமுகப்படுத்திய ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்பது தான் சோகம்.

திரு. வாசு பாலாஜி : -

இந்த மாதிரி சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனா இப்ப மாதிரியே அப்பவும் கலந்தாங்கட்டியா இருந்திருக்கும் போல இருக்கு.

கொச,கொலகாரன்,நம்மாழ்வார்,வண்ணார்,சௌகார்,கண்ணம்மா,புது,தண்டையார், சைதா (பேட்டைகள்)
மயிலாப்பூர்,பெரம்பூர்(ஊர்),கொரட்டூர்
புரச,வில்லி,வளசர,மேட (வாக்கங்கள்)
அயன்,ராய புரங்கள்
கீழ்ப்பாக்கம், நெசப்பாக்கம்,அரும்பாக்கம்
மேட்டுப் பாளையம், பெரிய பாளையம்,


எதுனா ஒரு அமைப்பா இதுக்கடுத்து அதுன்னு இருக்கான்னு பார்த்தா இல்லை. ராயபுரம் தாண்டுனா தண்டையார் பேட்டை. பெரம்பூருக்கு உள்ளாற ஒரு மேட்டுப் பாளையம், தாண்டி பெரிய பாளையம். அயன்புரம் தாண்டுனா வில்லிவாக்கம்.அதுக்கடுத்து ஒரு ஊர்னு தல சுத்துது:))

Sunday, January 13, 2013

இலக்கியபீடம்


ரொம்ப டென்ஷனாகி போன வாரத்தில் ஒரு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு தாம்பரம் சண்முகம் தெருவுல சுத்திகிட்டு இருந்தேன். அப்ப இருந்த அரசு நூலகத்துக்குள்ள போய் கலீல் ஜிப்ரானோட மிட்டாய் கதைகள் படிச்சு முடிச்ச நேரம் கரண்ட் அம்ருதாஞ்சன் விளம்பரத்துல வர மாதிரி போயே போச்சு. அந்த நேரம் சுஜாதா நாவல் ல வர மாதிரி விதி எங்கனையோ பக்கத்துல குத்துகால் போட்டு உட்கார்ந்து சிரிச்சு இருக்கும். இல்லாட்டி அந்த விபத்து  நடந்திருக்குமா ???? 

கரண்ட் இல்லையேன்னு வெளிச்சம் இருந்த பத்திரிக்கைகள் பிரிவுக்கு வந்தப்ப ஒரு பத்திரிக்கை அனாதையா இருந்துச்சு .... சரின்னு அதுக்கு ஆதரவு தருவோமேன்னு பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன். இலக்கியபீடம் ...அது எனக்கு பலிபீடமாகிருச்சு. 

எடுத்த உடனே கண்ணுல பட்டது சென்னிமலை தண்டபாணி எழுதின  "உனக்கான சில கஜல்கள்" கவிதை. கஜல்ன்ன உடனே எனக்கு அடிபட்ட மாதிரி திறந்த வாய மூடாம பாடுறது தான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு கஜோல் தான் இல்லாம போயிச்சு அட்லீஸ்ட் கஜலாச்சு இருக்கட்டுமேன்னு படிச்சேன். எடுத்த உடனே "காயா ...பழமா ... தெரியவில்லை .... இது /(ஒன்னு கீழ் ஒன்னு)/ காதல் தானா புரியவில்லை ...." ஆரம்பிச்சாரு. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னுட்டு வேற பக்கம் திருப்பினேன். 

வாழ்க்கைல எத்தனை வாட்டி திருப்பம் வந்தாலும் அது திரும்பி திரும்பி திருப்பி திருப்பி வந்துகிட்டும் போயிகிட்டும் தான் இருக்கும். (நான் எழுதுறதுல கருத்து எதுவும் இல்லைன்னு நிறைய புகார் வருது ..ஸோ மீ தி கருத்து டெல்லிங்)  

சண்டேசுவரர் (சன்டே ல சுவர் பக்கம் நின்னுகிட்டு இருந்த சாமி போல) ன்னு மு.நளினி & இரா.கலைக்கோவன் ன்னுனவங்க பழைமையான சிற்ப்பங்கள் பத்தி எழுதிருந்தாங்க போல ...பல கொட்டாவிகளுக்கு நடுவுல படிக்க முடியல சரியா. 

வேறொரு பக்கத்துல "மறக்க முடியுமா ?"ன்னு ஒரு கட்டுரை ...ஏதோ  ஞாபக மறதி அதிகமான என்னை அவமதிக்குற மாதிரி இருந்தால அதைய லூஸ்ல விட்டுட்டேன். சரின்னு ஏகபட்ட மன போராட்டங்களோடு ( அப்புடி என்ன மன போராட்டம்ன்னு யூ பிப்பிள் ஆஸ்கிங்கா... வெளில போன பிறவு என்ன சாப்பிடுறதுன்னு தான்.. பானி பூரி தான் என்னோட சாய்ஸா இருந்துச்சு ...ஆனா தாகி பூரி சாப்பிடணும்ன்னு ஒரு சின்ன சபலம்)  வேற பக்கத்தை திருப்பினேன். 

அந்த பக்கத்துல "கலைமாமணி விக்கிரமனின் இரட்டை வரலாற்றுப் புதினங்கள் - ஓர் இன்னுரை"ன்னுட்டு     பேராசிரியர் இரா.சோதிவாணன் எழுதி இருந்தாரு. எடுத்த உடனே ஜிலேபி சுத்த ஆரம்பிச்சாரு. பானி பூரி ஞாபகம் வந்து போச்சு. அதைய படிச்சுட்டு வேற பக்கத்துக்கு போனேன்.   

இந்த பத்திரிக்கையோட மெயின் அட்ராக்ஷன் அது தான்னு புரிஞ்சது. லா.ச.ரா. துணைவியாரின் நினைவுக்குறிப்பு. படிக்க வேண்டியது. இதே மாதிரி இன்னொரு அட்ராக்ஷன்னு எனக்கு பட்டது ஜனகன் எழுதின / எழுதிகிட்டு இருக்குற குறும்படங்களும் டெலி பிலிம்களும்". எனக்கு பிடிச்சு இருந்துச்சு. 

இத்தோட வெப்பன் சப்ளையர் யாருன்னு பார்த்த விக்கிரமன் / ராஜேந்திரகுமார்ன்னு போட்டிருந்துச்சு. 

இதற்குள் கரண்ட் வந்துறவே "திருமுருகாற்றுப்படை" இருக்கான்னு உள்ளர தேடி போயிட்டேன். 

Saturday, November 17, 2012

**கலவை - 17/11/2012**


இன்னைக்கு பெருசா சீரியஸா எதுவும் படிக்க விருப்பம் இல்லாம ஒரு மாதிரி சோம்பலோட இருந்தப்ப, எப்பவோ வாங்கிருந்த பாக்கியம் ராமசாமி எழுதின "அப்புசாமி படம் எடுக்கிறார்" புஸ்தகம் கண்ணுல பட்டுச்சு, படிக்க ஆரம்பிச்சேன். அப்புசாமி - சீதாபாட்டிய வைச்சு நிறைய கதை எழுதிருக்காரு பாக்கியம் ராமசாமி. வழக்கமா எல்லாத்திலையும் அப்புசாமி தாத்தா எதாவது கோக்கு மாக்கா பண்ணி சீதாப்பாட்டி கிட்டக்க மாட்டிப்பாரு. பிறவு  அதுல இருந்து அவரு தப்பிக்குறதுன்னு தான் பெரும்பாலும் கதை போகும். அதிலையும் பாட்டி இல்லாத நேரத்துல தாத்தா கூட ரசகுண்டுவும், பீமாராவும் சேர்த்து கோஷ்டியா களம் இறங்கிட்ட கதைல காமெடி பிளாக் தான்.

பெரும்பாலும் 6  வயசுல இருந்து 10 வயசு வரைக்கும் உள்ளவங்க தான் படிப்பாங்க, இல்லை இதுல இருந்து தான் படிக்க ஆரம்பிப்பாங்க, ஆனா நான் தமிழ் ல படிக்க ஆரம்பிச்சதே என்னோட 26 வயசுல ராஜேஷ்குமார் குமார் நாவல் ல இருந்து தான் இருந்து தான்...பிறவு அடுத்த கட்டமா அப்புசாமி சீதாபாட்டி கதைகள் தான். பிறவு எஸ்ராவோட துணையெழுத்து / கதாவிலாசம் படிச்ச அப்புடியே வாசிக்குறது எல்லாம் மாறிபோச்சு. 

எனக்கு எப்பவாச்சு அதிகபடியான மன அழுத்தம் / சோர்வு வந்துச்சுன்ன நான் இந்த கதைகளை தான் படிப்பேன். இவை என்னை ரொம்ப யோசிக்க வைக்காம ... மன அழுத்தத்தால் காணாமல் போய்விடுகிற என்னோட சிறுபிள்ளை தனத்தை எப்போதும் அப்புசாமி தாத்தா காப்பாத்தி கிட்டே இருக்காரு.


= = = = 


இந்த மாத கணையாழியில் "தலைமை ஆசிரியர்" என்ற கதையொன்றை  எஸ்.ஏ.ஜோதி அவர்கள் எழுதிருக்கிறார். அதை கதை என்று சொல்வதா இல்லை அனுபவ பகிர்வு என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் அதை கதை என்ற பிரிவில் கணையாழி ஆசிரிய குழுவினரால் பகுக்கபட்டுள்ளதால்  அவ்வாறே எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் அதை படித்து முடித்த பின் ஒரு மசாலா படம் பார்த்த உணர்வே வருகிறது. இயல்புக்கு மீறிய கதை போக்கு..... 

திசை இலக்கில்லா  போக்கு பறவைக்கு வேண்டுமானால் நல்ல இருக்கும்.... ஆனால் அத்தகைய போக்கு சிறுகதைக்கு சரிபட்டு வருமா என்று தெரியவில்லை. 


= = = = 

மகாபாரதத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பருவம்ன்னு (அதாவது பகுதி) பார்த்த...அது எனக்கு விராட பருவம் தான். அஞ்ஞத வாசத்துல இருக்குற பஞ்ச பாண்டவர்கள்... பாஞ்சாலி கிட்ட ஒரு பண்ணுற இம்சை...போர்ன்னு ஆரம்பம் ல இருந்து முடிவு வரைக்குமே ஒரு epic மாதிரி இருக்கும். மத்த பருவத்தை எல்லாம் விட்டுட்டு இதைய மட்டும் படிச்சாலே செமைய இருக்கும். அதுவும் பாடை பிணத்தோட பாஞ்சாலிய கட்டி வைச்சு கொண்டு போற போது சமையல்காரனா வேஷம் போட்டிருக்குற பீமன் அங்க வந்து போடுற சண்டை என்னோட all time favorite   

= = = =


பெஸ்புக் / டிவிட்டர் / கூகிள் பிளஸ் ஆகியவற்றியில் மக்கள் வெளியீடும் புகைப்படங்கள் எல்லாம் அந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடுமாம். அதை அவர்கள் வேறொரு நாட்டில் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொள்வார்களாம், இதை  account open பண்ணுற போது வர terms and conditions ல போட்டிருப்பாங்க. அதை படிக்காம மக்கள் பெரும்பாலும் டிக் அடித்து விடுவார்கள். கவனமா இருங்க. 

அதிலும் professional photographers ஆக ஆசைபடுற யாரும் சமூக தளங்களில் தங்களது புகைப்பட படைப்புகளை வெளியீட வேண்டாம். 

இந்த மாச READERS DIGEST ல இத பத்தி சின்னதா போட்டிருந்தாங்க. பிறவு சிலபல பத்திரிக்கை / நண்பர்கள் கிட்ட கேட்டும் படித்தும் கொஞ்சோண்டு தெரிஞ்சுகிட்டேன். யாருக்காச்சு தெரிஞ்ச விவரமா சொல்லுங்க. 

உதாரணம் : நீங்க நெட் ல உங்களோட மனைவி போட்டோவை போடுறீங்க, அது அவங்க ஒரு கீழான விளம்பரத்துக்கு பயன்படுத்தின ....என்னவாகும் 


= = = =

சுந்தர ராமசாமி பற்றி சுஜாதா


சுந்தர ராமசாமி வெள்ளிக்கிழமை மதியம் அமெரிக்காவில் இறந்துபோன செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய படைப்புகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது, டில்லியில் இருந்தபோது.

‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த அவரது சிறுகதைகள் மற்றும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் மூலமாக, புதுமைப்பித்தன், ஜானகிராமனிலிருந்து வேறுபட்ட, அவர்கள் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய எழுத்தை அடையாளம் காண முடிந்தது. ‘பசுவய்யா’ என்ற பெயரில், ‘எழுத்து’ பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் அவருடையவை என்று தெரிந்ததும், அவரது திறமையின் வீச்சு பரிச்சயமாகி வியப்பளித்தது.

‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பில், ஒரு கோயிலில் ஒரு ட்யூப் லைட்டில் அதைக் கொடுத்தவர் பெயர் எழுதியிருப்பதைத் தொடர்ந்து, யார் யாருடைய உபயம் என்று எழுதிய கவிதை நினைவிருக்கிறது. புதுக்கவிதை பற்றி ‘இந்தியா டுடே’யில் நான் எழுதிய விரிவான கட்டுரையின் முடிவில், இக்காலத்து நல்ல கவிதைக்கு உதாரணமாக அவர் கவிதையைத்தான் குறிப்பிடுவது பொருத்தமாக இருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘காகங்கள்’ தொகுப்பில் பிரசாதம், சீதை மார்க் சீயக்காத்தூள் போன்ற பல சிறுகதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பற்றி கணையாழியில் விரிவான விமர்சனம் எழுதியது நினைவிருக்கிறது.

பெங்களூர் அருகே நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகம் இலக்கியம் சம்பந்தமில்லாமல், பொதுவாக ‘சாப்டாச்சா?’ போன்ற பேச்சுகள்தான். சு.ரா. ஏறக்குறைய மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு பாராட்டியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆ.மாதவன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் போன்ற பெயர்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. மலையாளத்தில் இவரது மூன்று நாவல்களும் (ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள்&பெண்கள்&ஆண்கள்) மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தகழியின் ‘தோட்டியின் மகன்’ ‘செம்மீன்’ போன்ற நாவல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அண்மையில், அவர் காலச்சுவடு பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளும், கேள்வி பதில்களும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டின.

‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கிருஷ்ணமூர்த்தி (ஆர்ட் டைரக்டர்) திரைக்கதையாக்கி மீடியா ட்ரீம்ஸில் கொடுத்தபோது, அதை திரைப்படமாக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கம்பெனியின் சில ஷரத்துகளில் உடன்பாடில்லாததால் கைவிடப்பட்டது. சு.ரா. எனக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்னமும் இருக்கிறது.

சு.ரா&வுக்கு கனடாவின் ‘இயல்’ விருது கிடைத்தது. இந்தியாவில் ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கவில்லை. இழப்பு அகாடமியினுடையதே!

சுந்தர ராமசாமி (30.05.1931 - 15.10.2005)க்கு ஓர் உண்மையான ரசிகனின் பாராட்டும், வணக்கங்களும்!

நன்றி ஆனந்தவிகடன்.


= = = = 


பீட்சா படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்ன்னு இருந்தேன்..மொக்கை தியேட்டரா இருந்தாலும் பரவலன்னு தாம்பரம் MR லையே படத்தை பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்காரு கார்த்திக் சுப்பராஜ். சில சீன்ஸ் ல டெம்போவை இன்னும் ஏத்தி இருக்கலாமோன்னு தோணுது. 

 படம் முடிஞ்சு வெளில வந்தா வித்யால skyfall  ன்னு போஸ்டர் சொல்லுச்சு. அப்புடியே யூ டர்ன் அடிச்சு அங்க போயி டிக்கெட் வாங்கிட்டேன். மதிய சாப்பாடு சாப்பிடலாமான்னு யோசிச்சா டைம் வேற இல்லை. சரி ஒரு நாள் தானேன்னு சாப்பிடாம படத்தை பார்க்க போயிட்டேன். இயல்புக்கு ரொம்ப நெருக்கமா இருந்தால ரொம்ப பிடிச்சுது. 

ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன். 

சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.  

= = = =

பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இருக்கிற செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சகத்தின் பப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு சென்றிருந்தேன்... அங்கே இந்திய அரசாங்க வெளியீடுகளான பல புத்தகங்களை வைத்திருந்தனர். அவை பெரும்பாலும் துறை சார்ந்தவர்கள் எழுதியதாக இருந்தது. அவற்றின் மத்தியில் சுஜாதா அவர்கள் எழுதின கம்ப்யூட்டர் கற்போம் என்ற புத்தகமும் இருந்தது. அதை பார்த்துடன் நானடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. நான் பெரிதும் நேசிக்கிற, விரும்பி படிக்கிற எழுத்தாளரின் எழுத்துக்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

பிறவு திட்டம் என்ற பெயரில் மாத இதழொன்றை (மாத இதழா வருட இதழா என்று தெரியவில்லை)  மத்திய அரசு வெளியீட்டு வருகிறது. அதில் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிறது. ஆர்வமுள்ளோர் பயனடையலாம். 

= = = = 

**தெளிவுரை**




கணினி முன் நான் கவிதை எழுத 

அமர்ந்த பொழுது ; குளிர்ந்த காற்றாய் 
அருகே நீ. நேற்றிரவெழுதிய பொருளுரைக்கு 
தெளிவுரையின் அவசியத்தை உணர்ந்து ...எழுந்தேன். 

Wednesday, November 7, 2012

**இறந்தவனின் சட்டை**

இறந்து போனவனின் அலமாரியை 
அவனது நினைவுகளிலொரு அங்கமாய் 
பார்த்துக் கொண்டிருக்கையில் 
என்ன செய்வது என்ற குழப்பத்தில்   
நான்,
தானம் ஏழைகளுக்கு 
தானத்தை தவிர்த்து வேறெதுவும் வழியில்லை 
அவனது நினைவுகளின் ஒரு அங்கத்தை 
யாரும் அணிந்து விரும்பவில்லை 
அவன் மேல் அவர்களது பிடித்தமையை 
சந்தேகித்து கொண்டிருக்கையில் 
அலமாரியின் ஓரத்தில் அனாதையாக 
இருந்த டிசைனர் சட்டையின் மீது 
எனக்கு ஆசை வந்தது. 

Monday, November 5, 2012

**விலாசம் இல்லாத மன்னிப்பு**

மேகங்களின் உராய்தலை போல் 
வசவுகளை அவள் மேல் எய்த பின் 
விலாசம் இல்லாத மன்னிப்பு மடலில்
வசவுகளின் மிகுதமையை ஈடு செய்யுமோ
தெரியாமல் என் மன்னிப்புகளை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டேன் 
மனதிற்குள் விலாசங்கள் இல்லாத அந்த மடல் அவளுக்கு கிடைக்கும் 
அல்லது கிடைத்துவிட்டது போல் ஒரு சித்திரத்தை மனதிற்குள் வரைந்து கொண்டுவிட்டேன். 

Friday, October 12, 2012

**தவணை முறை**




தவணை முறை திட்டத்தில் போகிற 
வாழ்க்கையில் படி அளந்த அரிசியாய்
கோவம், சந்தோசம், இச்சை எல்லாம் ஒரே அளவில் 
சமைக்கும் தினசரி வாழ்வில் 
தினசரி ரயிலில் கடந்து போன 
பிச்சைகாரன் மீது பிறக்கும் 
அளவில்லா கருணை என்னை கொல்லுது. 

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 

Tuesday, July 31, 2012

}} கலவை {{ குருதிபூக்கள் - 1

படிக்குற காலத்துல என் கூட படிச்ச முத்துகுமாரை கிளாஸ் போக விடாம, கட் அடிக்க வைச்சு ; என்னை மாதிரியே தற்குறியாகி ஒழுங்கா படிக்க விடாமல் நான் செய்ஞ்சதால் தான் இன்று உலகம் முழுக்க அறிய படும் பெரிய தொழிலதிபராக அவன் இருக்கிறான். இல்லாட்டி ஒழுங்கா படிச்சு எதாவது ஐடி கம்பெனில வேலைக்கு சேர்ந்திருப்பான். 

அவனை மாதிரி தொழிலதிபர்களை இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துவிட்டு அமைதியாக இருக்கிறேன், ஆனா சில பயபுள்ளைங்க, முக்கியமா இந்த +கார்த்திகைப் பாண்டியன்  மாதிரியான ஆளுங்க ஏதோ மாணவர்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு, பிறவு போடுற சீன தாங்க முடியலப்பா. :))

இப்பவும் எங்கிருந்தாலும், வருடத்தில் ஒரு வாரம் என்னோடு செலவு செய்ய சென்னை வந்துவிடுவான்.... அப்பெல்லாம் அவன் கேக்குற கேள்வி "டேய்  மாப்பிள்ள .. நீங நல்லவனா இல்லை கெட்டவனா"ங்குறது தான். 

= = = 

காலேஜ் படிக்குறப்ப, ஒரு வெள்ளிகிழமை சாயங்காலம், முகத்துல அதிகமா பரு வந்து தழும்பு தழும்பா இருக்குன்னு வருத்தபட்டு என்கிட்டக்க சொன்னான், சரி பயபுள்ள ஆசபடுதேன்னு சோப் பவுடர், நல்லெண்ணெய், பெட்ரோல்ன்னு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு டவுன்ல இருக்குற பெரியம்மா வீட்டுக்கு போயிட்டேன்.... திங்ககிழமை வந்து  பார்த்த ; அவன் முஞ்சி முழுக்க கருப்பா ; ஷேவிங் பண்ணிவிட்ட கொரில்லா மாதிரியே இருந்தான்...

= = 

இப்புடி பல திருவிளையாடல்களை அவன்கிட்டக்க செய்ஞ்சு இருக்கேன்... அதை எல்லாம் குருதிபூக்கள்ன்னு டக்கோடு எழுதலாம்ன்னு இருக்கேன்.  


= =


அப்ப மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்த புதுசு. முத இரண்டு மாசம் ஏதோ தெரிஞ்சவங்க கிட்டக்க பேசி, கொஞ்சமா பிசினஸ் பண்ணி காட்டிட்டேன். ஆனா மூணாவது மாசம் ஒண்ணுமே சிக்கல...  அந்த மாசம் முழுக்க ஜீரோலையே இருந்தேன்... ஏற்கனவே இருந்த ப்ரெஷர் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. நட்புகள் / உறவுகள்ன்னு யார்கிட்ட கேட்டும் ஒன்னும் வரல. கடைசியா முத்துகுமார் கிட்ட கேட்டேன்.

அவனும் "செய்றேன்டா ...இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் ..நானே கால் பண்ணுறேன்"ன்னு மூணு நாளா சொல்லவும், நாலாவது நாள் நான் போன் பண்ணி "ஏண்டா கழுத்து அறுக்குற.... சொன்னா சொன்ன மாதிரி செய்ய மாட்டியா..நீயெல்லாம் என்ன பிரண்ட்டுடா"ன்னு இருந்த வேலை போயிடுமே என்ற கவலையும், பயமும், பிறவு ப்ரெஷராலும் கேட்டுட்டேன். 

அதுக்கு அவன் "டேய் அப்பா இறந்துட்டாருடா"ன்னு அமைதியா சொல்லிட்டு என்னோட பதிலுக்காக காத்திருந்தான். எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. கேவலமா உணர்தேன். "நீயு எல்லாம் என்ன மனுஷன்டா"ன்னு மனசாட்சி கேட்டுச்சு. ஒன்னும் பேசாம போனை வைச்சுட்டேன். அன்னைக்கு கிடைத்த திட்டுக்களும், இருந்த மனநிலைக்கும் செத்து போயிறலாம்ன்னு தோனுச்சு. எப்படியோ திட்டு வாங்கிட்டு நைட்டு ஒரு பதினோரு  மணிக்கு அறை வந்து சேர்ந்தேன். 

பிறகு மறுநாள் ஆபீஸ் போக மனசு இல்லாம கிளம்பி போய், காலை மீட்டிங்ல மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கும் போது, எனக்கு வந்ததா சொல்லி ஒரு கொரியர் கவரை ஆபீஸ் பாய் கைல குடுத்துட்டு போனான். பிரிச்சு பார்த்தா முத்துகுமார் கையெழுத்து போட்ட  பிசினஸ் பார்ம் பிறகு டாகுமென்ட்ஸ்.... ஒரு லட்ச ரூபாய்க்கு செக். 

எனக்கு அழுகையே நிப்பாட்ட முடியல. ரெஸ்ட் ரூமுக்கு போயி அழுவ ஆரம்பிச்சேன். 


= = 


கேடிவில பார்த்திபன் கனவு படம். 

பல வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு சனிகிழமை இரவு திநகர் சரவணா பவன்ல சாப்பிட்டுட்டு கை கழுவும் போது, பக்கத்துல கை கழுவி முடிச்ச பொண்ணு என்னை லேசா உரசிட்டு போன. அவ மேல அடிச்ச வாசனை என்னை அப்புடியே கிறங்க அடிச்சுருச்சு. பிறகு வெளில வந்து கார் ல ஏறி போயிட்டா. நான் பைக்ல அந்த கார் பின்னாடியே போயிட்டு இருந்தேன் அவ வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க. 

அண்ணா நகர் டிராபிக் சிக்னல்ல அந்த காரை மிஸ் பண்ணிட்டேன். பிறவு வந்த ஞாயித்து கிழமைல அண்ணா நகர் முழுக்க சுத்தியும் அவளை கண்டுபிடிக்க முடியல. சோகமா கொஞ்ச நாள் இருந்த பிறகு. பரங்கி மலை ரயில் ஸ்டேஷன்ல வைச்சு அவளை பார்த்தேன். கல்லூரி நாட்கள்ல அவ பின்னாடியே தான் சுத்தினேன். பிறகு ஒரு நல்ல நாள்ல அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு போயிட்ட. 


= = 


பதவி உயர்வுக்கு பிறவு புது விசிடிங் கார்டு இன்னைக்கு வந்துச்சு.... சரின்னு எதாச்சு கிளையன்ட்க்கு தந்து பந்தா காட்டுவோமேன்னு காலைல இருந்து போன இடத்துல எல்லாம் கார்டு நீட்டி பார்க்குறேன், எவனுமே வாங்கல ; வெறும் மொபைல் நம்பர் மட்டும் வாங்கினாங்க. ரொம்ப சோகமா போயிருச்சு.... வீட்டுல வர வழில எப்பவும் டி கடைல டி குடிப்பேன்... இன்னைக்கு டி குடிச்சு முடிச்ச பிறவு காசு தரும் போது புது விசிடிங் கார்டையும் தந்துட்டேன். டி மாஸ்டர் என்னைய வினோதமா பார்க்குறதுக்குள்ள ஓடி வந்துட்டேன்.  


= =


சின்ன வயதில் இருந்தே அதிகபடியான தனிமை, தோல்விகள், பயங்கள் என்று இருந்து வந்ததால் புத்தகங்கள் தான் எனக்கு இருந்தே ஒரே நட்பு. தாழ்வு மனப்பான்மையால் அப்பாஸ் யுவா இருவரிடமும் இருந்து தள்ளியே  இருப்பேன். வேலை நேரத்தை தவிர்த்து யாரிடமும் அவ்வளவாக பேச பிடிக்காது. அதுவும் மார்க்கெட்டிங் துறைக்கு வந்த பிறவு மௌன விரும்பியாகவே மாறி விட்டேன். 

எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ராஜூ முருகன் ஆகியோர் விகடனில் எழுத ஆரம்பித்த பிறகு... ஒவ்வொரு வியாழனும் பத்திரிக்கை கடைக்காரனிடம் காலை வேளையில் தினமும் நேரில் போயோ அல்லது போன் மூலமாகவோ "அண்ணே விகடன் வந்துருச்சா ?" என்று நான்கைந்து கேட்பது வழக்கமாகி விட்டது. அதே போல் வாங்கிய பிறவு வட்டியும் முதலும் தொடரை தேடுகிறேன். 

அதே போல முன்பெல்லாம் புத்தகங்களை பற்றி யாரவது பேசினால் எனக்கு ரொம்ப பிடிக்கும், இல்லை என்றால் சிலருக்கு போன் பண்ணி "என்ன படிக்குறீங்க ? எதாவது புக்ஸ் பத்தி பேசுங்க"ன்னு கேட்பேன்.... இப்பெல்லாம் வட்டியும் முதலும் தொடரை பத்தி யாரவது பேசுறாங்களான்னு நோட்டம் விடுவது வழக்கமாகி விட்டது இப்பொழுதெல்லாம் ரயிலில் போகும் போது. 

Wednesday, March 14, 2012

**இன்மையின் இருப்பு** - }கவிதை{



பறவைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன 
அவைகளுடன் பறக்க முடியாமல் 
தூரத்தில் நான் 

அறையில் இருப்போடும் 
பறவைகளுக்கிடைய இன்மையோடும் 
இருக்கிறேன் நான் 

என் இன்மையோடு பறவைகள் 
பறந்து போயின 
கண்ணாடியை பார்த்தேன் 
என் இன்மை போய் விட்டதா 
என்று தெரியவில்லை 

சுழியத்தினுள் சிக்கி இருப்பவனுக்கு 
சுழியத்தின் வடிவம் தெரிவதில்லை. 

= = = = = 


தாமரை இலையில் இரு துளி நீர் 
இலையை மடக்கிய பொழுது 
இரு துளி ஒன்றோடு ஓன்று 
கலந்து 
இரண்டு என்ற நிலை காணமல் போனது

தாமரைகளை பூஜைக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள் மனிதர்கள். 
Related Posts with Thumbnails