Pages

Sunday, March 27, 2022

காணொளி இதழ்கள் II VIDEO MAGAZINES



1980களில் தொலைகாட்சி செய்திகள் என்றால் அது அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு ஒளிபரப்ப பட்ட தூர்தர்ஷனின் செய்திகள் மட்டும் தான். அதிலில் எந்த செய்தியை ஒளிபரப்பலாம், எவை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, எத்தனை விரிவாக செய்தியை சொல்லலாம் என்ற கட்டுபாடு எல்லாம் இருந்தது. 

1933 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தின் படி தனியார் நிறுவன செய்தி ஒளிபரப்பு எல்லாம் இயலாத ஒன்றாக இருந்தது. 

அப்பொழுது தூர்தர்ஷனில் "The World This Week" என்னும் வாராந்திர தொடர் வந்து கொண்டு இருந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய். பின்னாட்களில் பிரணாய் ராய் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து என்.டி.டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தழுவி தான் சன் டிவி 1990களில் "இந்த வார உலகம்" என்னும் நிகழிச்சியை ஒளிபரப்பினார்கள், பிற்பாடு இது 15 நிமிட செய்திகளாக தினமும் வந்து கொண்டு இருந்த சன் செய்திகளின் ஒரு பகுதியாக மாற்றியது.

தூர்தர்ஷனது செய்தி நிகழ்ச்சிகளில் மேம்போக்கான தன்மையே பெரிதும் இருந்தது. நுனிப்புல் செய்திகள். இவற்றில் எல்லாம் ஒரு வெற்றிடம் இருப்பதை இந்திய டுடே நிறுவன குடும்பத்தை சேர்ந்த அரூன் புரி மற்றும் அவரது சகோதரி மது புரி ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் புலனாய்வு காணொளி இதழான நியூஸ்ட்ராக் (News track) கொண்டு வந்தார்கள். இந்தப்செய்திகள் எல்லாம் 90நிமிட படமாக எடுக்க பட்டு Video Cassette வடிவில் விற்க பட்டது. 

அதுவரையில் நுனிப்புல் செய்தி தகவல்களாக இருந்த பல செய்திகள் விரிவாக மக்கள் பார்வைக்கு வைக்க பட்டது. இத்தனை தொடர்ந்து தமிழிலும் கலாநிதி மாறன் பூமாலை என்னும் காணொளி செய்தி இதழ்  தொகுப்பை கொண்டு வந்தார்.

இது அப்பொழுது VHS Wave காரணமாக வசதி படைத்தோர் பலரது  வீடுகளில் VHS player  இருந்தது, அதனால் விற்பனை மற்றும் வாடகை தான் காணொளி இதழின் மூல வருவாய். அப்பொழுது பரவலாக இருந்த கள்ள காணொளி பதிப்பு (Video Piracy) மற்றும் கள்ள ஒளிபரப்பு (Cable Piracy) காரணமாக காணொளி இதழ் முயற்சி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. 

இப்பொழுது நியூஸ்ட்ராக் செய்தி தளமாக (https://english.newstrack.com) இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. 

கலாநிதி மாறன் அவர்கள் தொடங்கிய பூமாலை காணொளி இதழும் தோல்வியே அடைந்தது. அவர் சன் டிவி நிறுவனத்தை ஆரம்பிக்க அது கூட காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் இந்த காணொளி இதழ் முயற்சி பரவலான வெற்றியை அடைந்ததென்றே சொல்லலாம். வாடிக்கையாளர் பயன்படுத்த கூடிய மின்னணு பொருட்கள் பற்றி 1976ஆம் ஆண்டு தொடங்கி 1999ஆம் வரைக்கும் Video என்னும் பெயரில் இதழ்களாக வெளிவந்தது. 

தற்காலத்தில் 24 மணி நேரமும் செய்திகளும் நினைத்த நேரத்தில் தகவல்களும் கிடைக்கும் சூழலில் பலருக்கு புரிய போவது இல்லை இந்த காணொளி இதழ்களின் முக்கியத்துவத்தை. 

முக்கிய குறிப்பு - பூமாலை இதழ் வடிவை பிற்காலத்தில் சன் டிவி செய்திகளின் ஒரு அங்கமாக வந்த சிறப்பு பார்வை பகுதிக்காக பயன்படுத்தி கொள்ள பட்டது.

பிற சேர்க்கை - 1991ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வர தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய தந்தி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வர பட்டது. இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சமாக இருந்த காணொளி இதழுக்கான சந்தையும் பலியானது.

Thursday, March 17, 2022

கிளப் ஹவுஸ் இம்சைஸ்

இன்னைக்கு வீட்டுக்கு போக ரயிலுக்கு காத்துட்டு இருந்த நேரத்துல, கிளப் ஹவுஸ் ஞாபகம் வந்துச்சு. அன்-இன்ஸ்டால் பண்ணி ரொம்ப நாளாகிருச்சே, இப்பம் என்ன என்ன பேசிக்குறாங்கன்னு பார்ப்போமேன்னு இன்ஸ்டால் பண்ணி உள்ள போனேன்.

போன உடனே எதோ குரூப் உள்ள பராக்கு பாக்க ஆரம்பிச்சேன்.... ஈவெரா பத்தி ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. ஆர்வமா கேட்டுகிட்டு இருக்க சொல்ல திடீர்ன்னு ஈவெராவ ஈவிரான்னு சொல்ல ஆரம்பிச்சாரு. சரி இங்கிலீஷ் உச்சரிப்புன்னு விட்டுட்டேன்.

பேசினவர் கூடவே இன்னொரு புரட்சி பேசிட்டு இருந்தாரு. ஒரு இருபது நிமிஷம் போச்சு அப்ப அந்த புரட்சி "ஆமா.... ஈவெரான்ன யாரு.."னு கேட்டாரு.

"ஈவெரான்ன பெரியார்ன்னு தான்"

"அப்ப பெரியார்ங்குறது அவர் பெயர் இல்லையா ???"

டமால்ன்னு ஒரு சத்தம். என் மனசு ல தான். 

அப்படியே தஞ்சாவூர் வழியா கோயம்புத்தூர் வந்து பிரபல திமுக டாக்டர் பத்தி பேச ஆரம்பிச்சாங்க....யாருன்னு டக்கு தெரிஞ்சுருச்சு.

"அவரும் இந்த சாதி தான் .... அவரு மூக்க பார்த்தாலே தெரியலையா...".

ஹெட் செட்ட கழுட்டிட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சேன்.

" அந்த காலத்துல நாகர்கள்ன்னு ஒரு குரூப் இருந்துச்சு அவங்க இருந்தது நாகலாந்து ல. தமிழ் நாட்டுக்கு அவங்க வந்து செட்டில் ஆனாங்க....அதனால அவங்க இருந்த ஏரியா எல்லாம் நாகர்கோயில் , நாகப்பட்டிணமுன்னு பெயர் வந்துச்சு"னு முடிச்சாரு.

ஏங்க இந்த நாகேஸ்வரம் கோயில் விட்டுட்டீங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன்.

வேண்டாமுன்னு லாக் ஆஃப் பண்ணிட்டேன்.

Monday, March 14, 2022

பிரியாணி - ஆண்மை குறைவு

பிரியாணி சாப்பிட்டால் கருவுறுதல் தன்மை குறைவு ஏற்படக்கூடும் என சொல்லி சிலர் மருத்துவ ஆராய்ச்சிகளை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் ஆப்லும் நடந்தி கொண்டு இருக்கிறார்கள். 

உண்மையில் அப்படி நடக்குமா என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

நான் தீவிரமான சைவ உணவு பழக்கம் கொண்டவன், வெஜ் பிரியாணியை கூட சாப்பிட்டது இல்லை. 

சரியான முறையில் சமைக்க படாத உணவும், சரியாக ஜீரணம் ஆகாத உணவும் ஆண்மை குறைவை ஏற்படுத்த கூடும் என மருத்துவ ரீதியாக சொல்ல படுகிறது. 

இதனை பற்றி திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார், அதாவது

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின்." என்ற குறளில் உண்ட உணவின் செரித்த தன்மை கண்டுகொண்டு பிறவற்றை உண்ணுதல் வேண்டும் என சொல்கிறார்.

இன்னொற்றில் வள்ளுவர் பின்வருமாறு சொல்கிறார்

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்." - இதில் அளவு தெரியாமல் அதிகம் உண்டால் நோய் வருகை நிச்சயம் என சொல்கிறார். இதில் 2000ஆம் ஆண்டிற்கு பிறகான பொருளாதார மாற்றம், மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றை வைத்து ஒருவனை அதிகம் சாப்பிட வைக்கிறது இந்த வியாபார உலகம். 

இன்று பல உணவகங்கள் வந்துவிட நிலையில், வெளியே போகாமல் இருந்த இடத்திலேயே சாப்பாட்டை வாங்கி வர வைத்து சாப்பிட முடியும் என்ற நிலையில், பசிக்காக உணவை வாங்குவானா அல்லது ருசிக்காக வாங்குவானா ???

விற்பனை போட்டியில் யார் ருசி அதிகம் தந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள் தேவை இல்லாத ருசி காரணிகளை சேர்க்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று Cloud Kitchen / Institutional Kitchen என்றவை எல்லாம் வழக்கத்தில் வந்த பிறவு அடுப்பில் சமைத்து நேரடியாக சாப்பிட தரும் உணவகங்கள் மிகவும் குறைவு - சைவத்திலும் சரி அசைவத்திலும் சரி. 

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பிரியாணி சாப்பிட்டு தான் கருவுறுதல் பிரச்சனை வர வேண்டும் என்று இல்லை அது சாம்பார் சாதத்திலும் தயிர் சாதத்திலும் வரவும் வாய்ப்பு இருக்கு.

இதனை சார்ந்து வாசிக்க வேண்டும் என்றால் Michael Gershon எழுதிய "The Second Brain". நேரம் இல்லாவிட்டால் உங்களுக்கு வரும் WhatsApp Forwardகளை படித்துவிட்டு அந்த உலகத்திலேயே வாழ்ந்து விடவும்.

மேலும் தெரிந்துகொள்ள 

"The Gut-Fertility Link & Methods To Improve — Dr. Ryan Bailey, PT, DPT, WCS" https://www.expectingpelvichealth.com/blog-posts/what-is-the-gut-fertility-link

Saturday, March 12, 2022

மாறன் - திரை விமர்சனம்


மாறன் 

பயில்வான் ரங்கநாதனின் வாழ்க்கையை வரலாற்றை மொக்கையாக படம் எடுத்திருந்தாலும், அது மாறன் படத்தை விட நன்றாக இருந்திருக்கும்.

கோலியுட் - கோடம்பாக்கம் - தமிழ் திரையுலகிற்கு மொக்கை படங்களை தள்ளி விட நிறைய குப்பை தொட்டிகள் கிடைத்திருக்கிறது. போல சந்தோஷம். 

மேலாக எடுத்தால் ரசம், நடுவாகில் எடுத்தால் சாம்பார், அடியோடு எடுத்தால் குழம்பு என சமையல் தெரியாதோரின் சமையலை கிண்டல் செய்வார்கள். 

அது போல என்னது என தெரியாமல் எதோ ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை திரையரங்கில் வரவில்லை.

ஒடீடீயில் வந்ததினால் நன்றாக இருக்கும் காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை ஓட்டி விடலாம். அப்படி பார்த்தால் ஆரம்பத்தில் வரும் படத்தின் பெயரையும் முடிவில் வரும் சுபம் அல்லது வணக்கம் (மயக்க நிலையில் இருந்ததால் சரியாக தெரியவில்லை)  மட்டும் தான் பார்க்கலாம். நியாயபடி அதற்கு மட்டும் தான் விமர்சனம் எழுத வேண்டி இருக்கும்.

ஒன்றை மணி நேரம் தேர் திருவிழா போல் நகர்ந்து விட்டு அய்யோ நாம் ஓட்டி கொண்டு இருப்பது தேர் இல்லை திருச்சி - சென்னை ரூட் பஸ் என ஞாபகம் வந்திருக்க வேண்டும் இயக்குனருக்கு.

குறிப்பு (இயக்குனருக்கு) - 

முப்பது / இருபது வருடங்களுக்கு முன்பு ஜீனியர் விகடனின் வந்த கழுகார் இரவு ரவுண்ட் அப், துப்பறியும் செய்தி கட்டுரைகளை ஆகியவைகளை படித்தாலே நல்ல பத்திரிக்கை உலகம் சார்ந்த சிறப்பான த்ரில்லர் படத்தை எடுத்திருக்கலாம்.

Sunday, March 6, 2022

பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்


எல்லோரும் எழுதிவிட்ட காரணத்தினால் நானும் எழுதுவிட வேண்டுமென தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படித்த எல்லோரும் அவர்கள் மனதில்  ஒவ்வொரு மாதிரி கதைக்கும் கதைமாந்தர்களுக்கும் உருவம் கொடுத்து வைத்திருப்பார்கள். 

இப்பொழுது அப்படி உருவம் கொடுத்த அத்தனை ஆட்களும் ஒரே உருவமாக திரைப்படமென நுகர்வ ஆரம்பிக்க வரும் பொழுது பிரச்சனை வர தான் செய்யும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இதுவரையில் தமிழில் இதுவரையில் சரித்திர நாவலை தழுவி எடுக்கப்பட்ட எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

உதாரணமாக - பார்த்திபன் கனவு நாவலை தழுவி அதே பெயரில் படமாக எடுத்தார்கள். நாவலில் பார்த்திபனுக்கு உதவி செய்யும் சிவனடியார் யார் என்று தெரிய வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தில் சிவண்டியாராக எஸ்.வி.ரங்காராவ் வரும் பொழுதே தெரிந்து விடும் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்று. 

இந்த லட்சணத்தில் தான் இது வரையில் சரித்திர படங்களை எடுத்திருக்கிறார்கள். 

இப்பொழுது மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்போம்.

- - - -

வீரமே வாகை சூடும் படத்தை பார்த்தேன். 

வங்கி துறை, தொழில்நுட்ப துறை என எதை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் தோன்றியதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவலை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார்கள். நாவலில் இப்படி தான் கொலைகாரன் தான் யார் என்று தெரிந்துவிட கூடாது என்று நாயகன் ( விவேக் என நினைக்கிறேன்) தேடி போகும் ஆட்களை எல்லாம் முன்பே போய் கொன்று விடுவான்.

அந்த நாவலை அப்படியே ஒழுங்காய் எடுத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கும்.

- - - -

Sunday, January 2, 2022

1990கள் II பிலிப்ஸ் டூ இன் ஒன் II மலரும் நினைவுகள்


1990களின் மத்தியில் அப்பா Philips Two in One Tape recorder வாங்கி கொடுத்தார். அத்தோடு இருந்த இரண்டு ஒலிபெருக்கி உடன் ஏற்கனவே வீட்டில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளை இணைத்து அண்ணன் அவரது மாடி அறையில் அதிக சத்தத்துடன் ஒலி சேவை செய்து கொண்டு இருப்பார். 

அவர் பொறியியல் படிப்புக்காக கல்லூரி விடுதியில் தங்க ஆரம்பித்த உடன் பிலிப்ஸ் என் வசமானது.

அது வரையில் மேற்கத்திய இசை மற்றும் ஹிந்தி சினிமா பாடல்களை மட்டும் கத்தி கொண்டு இருந்த பிலிப்ஸ் என் வசமான பின்பு தேனிசை தென்றல் தேவாவின் கானா பாடல்களை கதற ஆரம்பித்தான். 

அண்ணனாவது மாடி அறையில் தான் பிலிப்ஸை வைத்திருந்தார் ஆனால் நானோ வீட்டின் வரவேற்பு அறையை அடுத்து இருந்த என் அறையில் பிலிப்ஸை கதற விட்டு கொண்டு இருந்தேன்.

அதுவும் ஞாயிறு என்றால் ஒரே பாடலை Rewind பண்ணி திரும்ப திரும்ப போட்டு (அப்போதைய Loop) கேட்டு கொண்டு இருப்பேன். 

அப்பா தொழிற்சாலையில் அதிக சத்தங்களுக்கிடையே வேலை செய்பவர் என்பதால் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என சொல்வார். ஆனால் அந்த வயசுக்கே இருந்த வேகத்தில் இதென்று இல்லை அப்பாவின் எந்த பேச்சையும் கேட்டதில்லை. (ஆனால் இப்பொழுது எல்லாம் அவரது பேச்சை கேட்டு இருந்திருக்கலாம் என தோன்றும்)

அப்பா இரண்டு காதுகளையும் கைகளால் மூடி கொண்டு அமர்ந்திருப்பார். அவருக்கு கோபம் வரும் வரைக்கும் பிலிப்ஸை கதற விடுவேன்.

சில சமயம் நானே வெறுத்து போய் பிலிப்ஸை கதற விடாமல் இருந்தால் அப்பா "என்னணா டீ கடைய இன்னும் திறக்கலையா ....உடம்பு சரியில்லையா.." என கேட்பார். 

நான் கல்லூரி சேர்ந்த பொழுது ஒலிப்பேழை மற்றும் ஒளிப்பேழை எல்லாம் (Audio & Video Cassette) எல்லாம் முதியோர் ஊக்கத்தொகை (Pension) வாங்க ஆரம்பித்திருந்தனர்.

CD, MP3 என பரிணாம வளர்ச்சி கண்டு இருந்தது.

கடைசியாய் பத்ரி மற்றும் லகான் திரைப்பட கேசட் வாங்கி இருக்கிறேன் போல. மற்றது எல்லாம் அண்ணனது சேகரிப்பு.

# மலரும் நினைவுகள்

நெட்ஃபிக்ஸ் II பாக்யராஜ் II கோபி சுதாகர் II டாப் டென் சுரேஷ் குமார்

Absolute Master Class Marketing 

நெட்ஃபிக்ஸ் தமிழக பார்வையாளர்கள் சந்தையை கைபற்ற வேண்டுமென முடிவு செய்துவிட பிறவு அவர்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு யுத்தியும் ஆச்சரிய பட வைக்கிறது. 

சந்தைப்படுத்தலில் கற்க ஆர்வமாக உள்ள எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இதற்கு முன்பு சிலபல முயற்சிகள் நெட்ஃபிக்ஸ் எடுத்திருந்தாலும் சமீபத்திய காலத்தில் தமிழர்களை குறி வைத்து நகர்த்தும் விஷயங்கள்  நெட்ஃபிக்ஸை தமிழ் மக்கள் மனதில் உட்கார வைத்து விடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

ஆரம்பத்தில் மொத்த இந்தியாவிற்கும் ஒரே மாதிரியான விளம்பரங்கள் வெளியிட்ட பொழுது வடக்கு தெற்கு சண்டைகள் பின்னூட்ட பகுதியில் அதிகம் வந்ததால் Netflix South என தனி ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்தார்கள். 

அதன் பிறகு தெற்கில் எந்த மாநில மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என ஆராய்ந்து அந்த மொழியில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்.

மொத்த இந்திய மக்களின் வருவாயை கணக்கிட்டு சந்தா தொகையை குறைத்தார்கள். 

அதன் பின் ஆட்டம் ஆரம்பம்.

Sex Education தொடருக்கு விளம்பர படுத்தும் விதமாக பாக்யராஜ் அவர்களை பேச வைத்து ஒரு காணொளி வெளியிட்டார்கள். அதில் வேறு யார் பேசி இருந்தாலும் எடுபட்டு இருக்காது. ( https://youtu.be/I1kA5YSYuEU )

கொஞ்ச நாட்களுக்கு முன்பு Squid Game தொடருக்காக பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆகியோரை வைத்து காணொளி கொண்டு வந்தார்கள். அதில் பிரபல Youtube காணொளி பதிவர்களை நடிக்க வைத்து இருந்தார்கள். வழக்கம் போல எல்லையில்லா அளவில் அதகளம். ( https://youtu.be/C3RVZdoN9to )

இப்பொழுது 1980கள் மற்றும் 1990களின் சிறுவர்களை அதிகம் ஈர்த்த சன் டிவி டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷ் குமார் அவர்களை வைத்து நெட்ஃபிக்ஸின் 2021ஆம் ஆண்டின் சிறந்தவைகள் என ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார்கள். ( https://youtu.be/4wrHALUeIrE )

இவற்றின் முக்கிய அம்சம் என பார்த்தால் நெட்ஃபிக்ஸ் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்களை பற்றி தெரியாதவர்களுக்கு கூட இந்த காணொளிகளின் மூலம் தெரிய படுத்திவிட்டார்கள்.

மன சோர்வின் பொழுது எல்லோரும் ஒரு நல்ல பழைய படத்தை பார்ப்போம் என பாக்யராஜ் அவரது படத்தை பார்த்திருப்போம். 

கோபி சுதாகர் ஆகியோரின் புது காணொளி வந்திருக்கிறது என அறிவிப்பு வந்தாலே உடனே சென்று பார்க்கும் கூட்டம் ஒன்றுள்ளது. சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம் என களம் இறங்கும் கோஷ்டி அவர்கள்.

முன் சொன்ன இரண்டு முயற்சிகளுக்கு மகுடமாய் அமைந்திருக்கிறது சுரேஷ் குமார் அவர்களை வைத்து வந்திருக்கும் இந்த காணொளி. டாப் டென் சுரேஷ் குமார் அவர்களை பார்த்ததும் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சியில் இது வரையில் பார்க்காத தொடர்களை புதியவர்களுக்கு அறிமுக படுத்தி பார்க்க வைத்து விடுவார்கள்.

சந்தைப்படுத்தலின் அடிப்படை புரிதல்களான ஈர்த்து விடுதல் (பாக்யராஜ் காணொளி), கவனம் பெறுதல் (கோபி சுதாகர் காணொளி), விற்று விடுதல் ( டாப் டென் சுரேஷ் குமார் காணொளி) ஆகியவற்றை வைத்து தமிழர்களுக்கிடைய தங்களது தொடர்களை அறிமுக படுத்திவிட்டார்கள். 

ஆனால் இதில் எதுவும் செய்யாத நிறுவனங்களுக்கு நெட்ஃபிக்ஸ் கடுமையான போட்டி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Monday, December 20, 2021

டி.டீ.எச். II சுஜாதா


2000களின் பிற்பகுதியில் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்றதாக இருக்கும் என அவசர அவசரமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். 

பெயர்ந்த பிறகு சந்தித்த முதல் பிரச்சனை கேபிள் டிவி தான். நானும் அண்ணனும் விசாரித்து ஒரு இருட்டான வீட்டொன்றில் போய் பேசி இணைப்பிற்கான பணம் கட்டிவிட்டு வந்தோம். (இப்பொழுது அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடித்தனம் இருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த அண்ணாச்சி கடை சூப்பர் மார்கெட்டாக மாறிவிட்டது)

மாதாமாதம் வீட்டிற்கே வந்து பணம் வாங்கி கொண்டு போவார்கள். ஒரு சமயம் வீடு பூட்டி இருக்கிறது என பணம் வசூலிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டார்கள். 

இதே திருச்சியாக இருந்தால் அடுத்த மாசத்தோடு சேர்த்து கொடுங்க, அப்பறமா வாங்கிக்குறேன் என பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் சென்னை வந்த கொஞ்ச காலத்திலேயே இப்படியான அனுபவம். 

அப்பொழுது சன் டி.டீ.எஃச். அறிமுகமாகி விளம்பரங்கள் வந்து கொண்டு இருந்தன. 

அப்பா கேபிள் டிவிக்கு இது மேல் என சொன்னதால் கேபிள் டிவிக்கு பிரியாவிடை தந்துவிட்டோம். 

அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் அதனை Recharge செய்ய முகவரிடம் இருந்து recharge card வாங்க வேண்டும் என்பது போல் அமைப்பு இருந்தது. ஒரு சமயம் முகவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டால் திங்கட்கிழமை வரைக்கும் காத்திருக்க வேண்டும். வாரயிறுதிகளில் பெருங்களத்தூர் மிகவும் அமைதியாக தான் இருக்கும். ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் கட்டிடங்கள் இருந்த காலம் அது. 

சித்ரா டாக்கீஸில் நான்கு இடைவேளைகளுடன் திரையில் கோடுகள் புள்ளிகள் கோலங்கள் தாங்கிய பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படம் பார்க்க கூட்டமாய் நின்று கொண்டு இருப்பார்கள். இப்பொழுதும் அங்கு கூட்டமாக இருக்கிறது ஆனால் படம் காண அல்ல. மதுபானத்திற்காக.

நஷ்டம் காரணமாக டாக்கீஸ் சிமெண்ட் கிடங்காக இருந்து பின்னர் சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அங்கு வந்தது. அந்த டாஸ்மாக் கடை சென்னையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சிகளில் முக்கியமான ஒன்று. திருச்சியிலும் சாராயக்கடை இருக்கும், ஆனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்காது. எல்லாம் வணிக பகுதியில் தான் இருக்கும். 

இந்த பிரச்சனை காரணமாக டாடா ஸ்கை டி.டீ.எஃச். வாங்கினோம். முக்கிய காரணம் டாடா ஸ்கை முன் கட்டண அட்டைகளை விற்ற முகவர் எல்லா நாட்களிலும் கடை திறந்து வைத்திருப்பார். அப்பறம் இணையத்தில் கட்டணம் செலுத்த ஆரம்பித்தோம்.

அதே போல் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்பிற்கு BSNL இணைப்பு தான் சென்னை வந்த உடன் வாங்கினோம். ஆனால் என்ன பிரச்சனை என்றால் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து சின்ன பிரச்சனை என்றாலும் குரோம்பேட்டையிலுள்ள அவர்களது அலுவலகத்திற்கு தான் போக வேண்டும். அப்பா தான் போய் விட்டு வருவார். 

வளர்ந்து வந்து கொண்டு இருந்த பகுதி என்பதால் ( வாடகை வீட்டில் இருந்து  சொந்த வீடு கட்டி வந்த பிறகு பல வருஷங்களுக்கு இது Extension areaவாக தான் இருந்தது) அடிக்கடி கனரக வாகன வருகையால் கம்பி அறுந்து போகும். 

அதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும்.

அப்பொழுது ஏர்டெல் நிறுவனம் இணைய சேவை மற்றும் தொலைபேசி அழைப்பு, புகாருக்கு உடனடி தீர்வு என சொன்னதால் BSNL சேவையை ரத்து செய்து விட்டு ஏர்டேல் (இணையம் மற்றும் தொலைபேசி) இணைப்பை  வாங்கினோம் .

வைத்திருந்த வரைக்கும் பிரச்சனை என எதுவும் இருந்தது இல்லை. ஏர்டெலுக்கு முன்  சோதனை அடிப்படையில் ACT இணைய சேவை பயன்படுத்தினோம். ஜியோவில் தொலைபேசி இணைப்பு, இணைய சேவை, டி.டீ.எஃச். ஒன்றில் மூன்று சேவைகள் கூடுதலாக இலவச ஓடிடி தளங்களின் சந்தா என விலையும் குறைவாக இருந்ததினால் மாறிவிட்டோம். 

ஏதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாற்றங்களை காண 14 வருடங்களானது. 

இதனை பற்றி எல்லாம் சுஜாதா 1998லேயே எழுதி இருக்கிறார்.

ஏனெனில் அவர் வாத்தியார்.

Friday, December 17, 2021

கலவை - 17/12/2021

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எல்லோரும் சமம் என நம்ப படுகிறது.

ஒருவன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் விமான நிலைய மலசல கூடத்தில் சீறுநீர் அல்லது மலம் கழிக்க கட்டணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை.

ஆனால் ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ மலசல கூடத்தில் கட்டணம் வசூலிக்க படுகிறது. 

விமான நிலையத்தில் கழிவறை பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்றால் மற்ற போக்குவரத்து நிலையங்களிலும் இலவசமாக தானே இருக்க வேண்டும். 

அப்படி கட்டணம் வசூலிக்கப்படும் போக்குவரத்து நிலைய கழிவறைகளில் எத்தனை முறை , எந்தெந்த நேரங்களில் அவை சுத்தம் செய்ய படுகிறது என்ற விவரம் கிடைப்பதில்லை. 

கட்டணம் பணமாக தான் வசூலிக்க படுகிறது. அரசு முன்னெடுத்து செல்லும் திட்டமான UPI வழிக்க கட்டணம் செலுத்த வசதி இல்லை.  

கையில் சில்லறை காசு இல்லாதவர்கள் கழிவறை ஒப்பந்ததாரர்களின் வசவு சொற்கள் கேட்க வேண்டி இருக்கு. 

அதுவும் பேருந்து நிலைய கழிவறைகளில் மாற்று திறனாளி ஒருவர் போய் வர வேண்டுமென்றால் தர்ம சங்கடங்களை அனுபவிக்க வேண்டி வரும். 

போருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பெரும்பாலும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே இருக்கும். 

இது இப்படி என்றால்

சில இடங்களில் அரசு அமைத்திருக்கும் இலவச கழிவறைகளில் சிலர் மலம் கழித்துவிட்டு அது ஏதோ பிறர் பார்த்து பரவச பட வேண்டிய ஒன்று என நினைத்து நீர் ஊற்றி கழுவாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

(ஆம் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது)

# # # #

சிவாஜி கணேசன் நடித்த அருணோதயம் படத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன். 

அருமையான படம். 

இதனை மட்டும் கொரிய பட இயக்குநர்கள் பார்த்தால், கொஞ்சம் நகாசு வேலை செய்து அருமையான ஒரு Crime Thriller படம் எடுத்திருப்பார்கள்.

# # # # 

போன வாரம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க திறப்பு எல்லாம் நடந்திருக்கிறது ஆனால் அதனை பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்திருக்கிறேன்.

ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் மார்கழி மாதம் வந்தாலே எல்லோருக்கும் ஸ்ரீரங்க சொர்க்க வாசல் சுற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். பகல் பத்து தரிசனம் இரா பத்து தரிசனம் என திருவிழா போல் இருக்கும் ஸ்ரீரங்கம். 

கல்லூரி காலத்தில் இதில் தன்னார்வலராக பணியாற்றி இருக்கிறேன் என்பதால் வைகுண்ட ஏகாதசி என்றாலே மலரும் நினைவுகள் தான்.

ம்ம்ம்.

# # # #

சிலுக்கு ஸ்மிதா என்றால் யாரென தெரியாத தலைமுறை ஒன்று உருவாகி வளர்ந்திருக்கிறது.

அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

தட் என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் மொமண்ட்

# # # #

ஆங்காங்கே பலர் சிலரை உனக்கு இங்க இடமில்ல பாகிஸ்தானுக்கு போ என கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இது எங்கிருந்து பழக்கமாகி இருக்கும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தேன்.

இதனை அவர்களுக்கு கற்று கொடுத்ததே விகடன் மற்றும் ஜெயகாந்தன் தான் என நினைக்கிறேன்.

1960கள் வரைக்குமே அவர்கள் படிக்கும் பத்திரிக்கையாக இருந்த விகடனில் ஜெயகாந்தன் "பாரீஸுக்கு போ" என்ற தொடரை எழுதினார். அதனை படித்து வளர்ந்தவர்கள் தான் இன்று "அந்த சிலரை" பாகிஸ்தானுக்கு போ, அரேபியாவுக்கு போ என சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் மொத்த வழக்கையும் ஜெயகாந்தன் & விகடன் மேல் எழுதிடணும்.

# # # # 

Saturday, November 13, 2021

Special Ops 1.5: The Himmat Story


Special Ops முதல் சீசன் பார்த்த எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் ஹிம்மத் சிங் தான்.

உலகளவில் இந்திய ரா படையினரால் மேற்கொள்ள படும் பல்வேறு நிகழ்வுகளில் மூளையாக இந்தியாவில் உட்கார்ந்து செயல்ப்பட்டு கொண்டு இருப்பார்.

பார்க்கும் எல்லோரையும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருக்கும் அந்த கதாபாத்திரம். 

அதில் அவரது இளம் பருவத்தை பற்றி அதிகம் காட்டிருக்க மாட்டார்கள்.

Special Ops 1.5 - நான்கு எபிசோட்களை கொண்ட சீசன்.

இதில் ஹிம்மத் சிங்கின் இளம் பருவத்தை பற்றி பேசுகிறது. 

அதுவும் கதை சொல்வது அவராக இல்லாமல் மூன்றாம் நபரது பார்வை மூலமாக திரைகதை அமைத்திருப்பது காட்சிகளை பரபரப்புடன் நகர்த்துகின்றன. 

முக்கியமாக ஹிம்மத் சிங் வாழ்க்கையை பற்றி யாருமே எதிர் பார்க்காத ஒரு ரகசியத்தை இந்த சீசனில் சொல்லி இருக்கிறார்கள். 

சீசன் எத்தனை சுவாரசியமானது என்று கேட்டால்..... முதல் அத்தியாயத்தை பார்ப்போம் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிப்போம் என தான் ஆரம்பித்தேன், ஆனால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஹிம்மத் சிங் பற்றி ஒருவர் கதை சொல்லும் போக்கில் போவதால் நாமும் கதை கேட்கும் சிறுவர்களாக மாறிவிடுகிறோம். மொத்தமாக பார்த்து முடித்து விட்டேன். 

முக்கியமாக பாராட்ட பட வேண்டியது திரைகதை மற்றும் படத்தொகுப்பும். 

முதல் சீசனை நீரஜ் பாண்டே சிவம் நாயர் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இந்த கிடைக்கிறது.

பாண்டே தனித்து இயக்கி இருக்கிறார். 

நாளை ஞாயிறு தவற விடாமல் பாருங்கள். உங்களுக்காக பிரச்சனைகளெல்லாம் திங்கட்கிழமையில் காத்து கொண்டு இருக்கின்றன. 

ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மளையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் வசன உதவி கிடைக்கிறது. இலவசமாக பார்க்க உதவிய முகேஷ் அம்பானி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி.

Sunday, November 7, 2021

இளைய பிராட்டி குந்தவை II ஒவியர் பத்மவாசன் II பொன்னியின் செல்வன்

பெரும்பாலும் பொன்னியின் செல்வனை தொடராக வாசித்தவர்கள் பெரும்பாலும் பத்மவாசன் ஓவியங்களுடன் தான் வாசித்திருப்பார்கள். (மின் பதிப்பு, மொத்த நாவல் எல்லாம் இப்பொழுது தான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது)

முதலில் மணியம், பின் பத்மவாசன் தற்பொழுது சமீபத்தில் வேதா என்பவரது ஓவியங்களோடு பொன்னியின் செல்வன் தொடராக கல்கி வாரயிதழில் வந்தது. 

நான் என் பெரியம்மா சேகரித்து வைத்திருந்தவையில் இருந்து பத்மவாசன் ஒவியங்களோடு இந்நாவலை படித்தேன். அவர் மணியம் ஓவியங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் தொகுப்பும் ஒன்று வைத்திருக்கிறார் (தற்பொழுது என்னிடமிருக்கிறது). 

மூவர் ஒவியங்களோடும் வாசித்திருக்கிறேன் அதில் எனக்கு பத்மவாசன் ஓவியங்கள் தான் மிகவும் பிடித்த ஒன்று.

கோயில்களை கடவுள் சிறைகள் வரைவதில் சில்பியின் ஒவியங்களை மற்றும் பத்மவாசனின் ஒவியங்களோடு ஒப்பீட்டு பார்த்து ரசித்து லயித்தே இருக்கிறேன். 

அதிலும் இளைய பிராட்டி குந்தவை தனது மன கிடங்கை வல்லவரையன் வந்தியத் தேவனிடன் பகிரும் இரு சிறைகள் அத்தியாயத்தில் பத்மவாசன் அற்செல்வன்   வரைந்திருப்பார். சிறை கம்பிகள் வழியாக குந்தவை தனது கையை வந்தியத்தேவனிடம் தருவார். வாசிக்கையில் மயிர்கூச்சம் ஏற்பட்டது. படித்து 17 வருடங்களாக போகிறது இன்னும் பசுமையாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் கதையை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு போகும் பத்மவாசன் ஓவியங்கள். 

கம்பீரம், அழகு, அறிவு ஆகிய குணங்களை கொண்ட குந்தவையை அப்படியே தனது ஒவியங்களின் கொண்டு வந்திருப்பார். நந்தினிக்கும் அவ்வாறே. 

அப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு குந்தவையாக த்ரிஷா நடிக்க போகிறார் என கேள்வி பட்டதிலிருந்து பயமாக இருக்கிறது. பலரது கற்பனையில் உயிருடன் இருக்கும் படைப்பை என்ன என்ன செய்து வைக்க போகிறார்களோ ?

பொன்னியின் செல்வன் II நந்தினி II ஊமை ராணி மந்தாகினி

ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி / மாதரசி மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்.

நந்தினி தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் தனது எண்ணப்படி யோசிக்க வைப்பார், ஒரு வித உளவியல் ரீதியான விளையாட்டு விளையாடுபவர். எப்பொழுதும் ஒரு மர்ம புன்னகையில் இருப்பார். அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு திறன் அதிகமாக தேவை படாது, ஆனால் திறன் இல்லாமலும் அதில் நடிக்க முடியாது.

ஆனால் ஊமை ராணி தனது வாழ் நாள் முழுக்க காடுகளில் தனிமை வாழ்க்கையை வாழ்ந்தவர், பேச முடியாவிட்டாலும் கை அசைவு குறிப்புகளால் கோடிக்கரை பூங்குழலி இடம் மட்டும் பேசுவார். இதில் நடிக்க அதிக நடிப்பு திறன் வேண்டும். ஊமை ராணி ஒரு சிறந்த போராளி, உடல் வலிமை மிக்கவர்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் அப்படியான சவாலான வேடங்களில் நடித்திருக்கிறாரா என தெரியவில்லை.

பொன்னியின் செல்வனை முழுமையாக வாசித்தவர்கள் எல்லோருக்கும் தெரியும் கல்கி தான் முழு கதையையும் சொல்வார். அவரது வார்த்தைகள் மூலமாகவே எல்லா கதாபாத்திரங்களுக்கும் வாசித்தவர்கள் அவர்களது மனதில் கற்பனை உருவம் ஒன்றினை தந்து அவற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

படத்திற்காக நாவலின் திரைவடிவத்தை எழுதி இருப்பவர்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமாரவேல் ஆகியோர்.

இதில் இளங்கோ குமாரவேல் மட்டும் பொன்னியின் செல்வனின் நாடக வடிவத்தை எழுதிய அனுபவமுண்டு. 

ஜெயமோகன் மற்றும் மணிரத்னம் பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. 

இந்த மூவரும் இணைந்து பொன்னியின் செல்வனை ஐ.ஆர்.20 பையன் என எடுத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

Thursday, November 4, 2021

அண்ணாத்த - மகாநடிகன்

2004ல் சத்யராஜ் நடிச்சு மகாநடிகன்னு ஒரு படம் வந்துச்சு. ஞாயித்து கிழமை அதுவுமா ஊர் சுத்த நண்பர்கள் யாரும் இல்ல, அதனால இந்த படத்துக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு.

வெள்ளிகிழம தான் படம் வந்துச்சு, காலேஜ் இரண்டு நாள் லீவ்ங்குறதால படத்த பத்தி யார் கிட்டையும் எதுவும் கேக்க முடியல.

சத்யராஜ் நடிச்சு நடிகன் படம் செம காமெடியா இருக்கும், அதே மாதிரி மகாநடிகன்ன காமெடி இன்னும் இரட்டிப்பா இருக்குமுன்னு கிளம்பிட்டேன்.

காலைலேயே சோனா மீனா போயிட்டு முத ஆளா டிக்கெட் வாங்கிட்டு போயிட்டேன். டிக்கெட் வாங்க ஜாஸ்தியா ஆள் இல்லாதப்பவே உஷார் ஆகிருக்கணும். கூட்டம் நிறைய இருக்குமுன்னு நம்பி 30ரூபா கொடுத்து பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சதும் பாக்குறேன்... பர்ஸ்ட் கிளாஸ் எண்ணி 20 பேர் தான்.

நான் உட்கார்ந்து இருந்த வரிசை ல நான் மட்டும் தான் இருந்தேன்.  

படம் கதற கதற வைச்சு செஞ்சுருச்சு. முழு படம் முடிஞ்ச பிறவு தான் கதவ திறந்து விடுவான். வேற வழியில்லாம முழு படத்தையும் பார்த்துட்டு வந்தேன்.

மதியம் வீட்டு வந்தும் படம் பார்த்த தலைவலி போகல. 

வழக்கமா காலேஜ் ல ஒரு கூட்டமா தான் படத்துக்கு போவோம். இந்த படத்துக்கு நான் மட்டும் போய் மாட்டிகிட்டேன். 

சரி ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமுன்னு எல்லா நண்பர்களும் போன் பண்ணி மகாநடிகன்னு ஒரு படம் போனேன் செம காமெடி சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துருச்சுன்ன பார்த்துக்கோன்னு பிட் போட்டு விட்டேன். 

எதிர் பார்த்த மாதிரியே எல்லோரும் கூட்டம் போட்டு ஈவினிங் ஷோக்கு போயிட்டாங்க.

அடுத்த நாள் கிளாஸுக்கு போனப்ப ரவுண்ட் கட்டிட்டாங்க.... ஏண்டா படம் நல்ல இல்லன்ன சொல்லிற வேண்டியது தானே எதுக்கு கோர்த்து விட்டன்னு பஞ்சாயத்து.

அதுக்கு அப்பறம் ஒரு படத்த நான் நல்ல இருக்குன்னு சொன்னாலே இரண்டு வாட்டி யோசிச்சுட்டு தான் கிளம்புவாங்க.

சரி இப்ப என்ன அதுக்கு...?

அண்ணாத்த படம் வந்திருக்கு.... சும்மா நெகடிவ் கமெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்காத, போய் பாரு செம படமுன்னு உங்க கூட்டாளிங்க உங்களை உசுப்பேத்தி விடுவாங்க .

நம்பி வீக்யெண்ட்க்கு டிக்கெட்ட போட்டுறாதீங்க.

Thursday, October 14, 2021

வினோதய சித்தம் (2021) = முதல் தேதி (1955)

வினோதய சித்தம் : 

*

1955ல் சிவாஜி கணேசன் நடித்து முதல் தேதி என்று ஒரு படம் வந்தது. அப்படத்தில் நாயகன் தான் வேலை செய்யும் வங்கி திவால் ஆகிவிட்டதால் வேறு வேலை கிடைக்காத பயத்தில் காப்பீடு பணம் வருமே என தற்கொலை செய்து கொள்கிறான். எமன் தற்கொலை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என அதனை ஏற்காமல் நாயகனை ஆவி ரூபமாக பூமி அனுப்புகிறார். ஆவி ரூபமாக தனது குடும்பம் படும் கஷ்டங்கள் அடமானங்கள் எல்லாவற்றையும் பார்த்து மனம் திருந்துகிறார். எமனும் மன்னித்து நாயகனுக்கு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தருகிறார்.  சுபம்.

இந்த சாதா மசாலா தோசையை மைசூர் மசாலா ஸ்பெஷல் தோசையாக மாற்றி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

*

காலங்காலமாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு பேராசை .... இன்னொரு தடவை வாய்ப்பு கிடைத்தால் நான் செய்த தவறுகளை எல்லாம் திருத்தி கொண்டு எல்லோருக்கும் பிடித்தமான பிரதியாக வாழ்வேன். ஆனால் உண்மையில் அப்படிபட்ட வாய்ப்புகள் யாருக்கும் கிடைப்பதில்லை.

இரண்டாம் வாய்ப்பு கிடைத்தாலும் அது  தவறுகள் செய்திருக்கிறான் என்கிற கவனத்துடனே வழங்க படுகிறது. 

ஆனால் நான் திருந்தி கொள்கிறேன் என்று ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு வழங்கபட்ட வாய்ப்பை சர்வ நாசம் பண்ணிவிட்டான் என்று அர்த்தம். 

உலகம் என்பது எல்லோரிடமும் இருந்து தொடங்குகிறது. இதனை புரிந்து கொண்டாலே பாதி 
பிரச்சனைகள் குறைந்து விடும். ஆனால் இதனை ஏற்க முடியாமல் தடுப்பது நாம் நம் மனதிற்குள் வளர்த்து வைத்திருக்கும் ஆசை & பிடிவாதம். இவை இரண்டும் ஒருவனை ஆட்டி படைக்கும் மாபெரும் சக்தி. 

அப்படி சிலரை புரிந்துகொண்டு விட்டோம் என நாம் நம்புவது எப்பொழுதென்றால் அவர்கள் நாம் கொண்டு இருக்கும் பிடிவாத நோய்க்கு அவர்கள் சாமரம் வீசும் பொழுது தான்.

மேற்சொன்ன சித்தார்ந்த விளக்கங்கள் இப்படம் பார்ப்பதினால் வருமா என கேட்டால், அப்படி எதுவும் வராது. இப்படத்தை பார்க்காமல் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து யோசித்தாலே போதுமானது.

படத்தில் காலன் நேரில் வருவதால் பரசுராமன் வாழ்க்கை ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? இல்லை. நடக்கின்றவற்றை பரசுராமன் ஏற்று கொள்ளாமல் இருப்பதே முக்கிய காரணம். மேலும் காலன் பரசுராமனுக்கு எதையும் புரிய வைக்கவில்லை, எல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறார். 

அதனால் நேரம் இருந்தால் படத்தை பாருங்கள். ஆனால் இப்படத்தை வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என ஜிலேபி சுற்றுகிறவர்களை நம்பி பார்க்க வேண்டாம்.

அப்பா, அம்மா, உடன்பிறப்பு, பொண்டாட்டி என குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லி நீங்கள் திருந்தவில்லை என்றால், சத்தியமாக இந்த படம் பார்த்து திருந்த போவது இல்லை.

Tuesday, October 5, 2021

இராஜராஜ சோழன் II பொன்னியின் செல்வன் II மதுராந்தகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அல்லது சோழர்களுக்கும் எனக்குமே ஒரு மறைமுகமான பந்தமொன்று இருக்கிறது. 

சுந்தர சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த உத்தம சோழர் என்று அழைக்க பட்ட  மதுராந்தகன் தனது ஆட்சி காலத்தில் செகற்பட்டு மாவட்டத்தில் (பழைய செகற்பட்டு மாவட்டம் - அதில் காஞ்சிபுரம் ஒரு பகுதியாக இருந்தது)     விவசாயம் செழிக்க மாபெரும் ஏரி ஒன்றினை உருவாக்கினார். பின்னர் அவரது பெயரிலேயே அந்த ஊரும் ஏரியும் அழைக்கபட்டு வருகிறது. இப்பொழுது செங்கற்பட்டு மாவட்டத்திலேயே இருக்கும் பெரிய ஏரி மதுராந்தக ஏரி. 

அப்பொழுது ஏரி உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்த சோழர்களுக்கு கருங்குழியில் இருந்து உணவிற்கான அரிசி போய் இருக்கலாம். 

கருங்குழி சோழர்காலத்தில் பெரும் ஊராக இருந்து வந்துள்ளதாம். இதனை மா.கேசவன் எழுதிய "வரலாறுமிக்க கருங்குழி நூலில் காணலாம்.

கருங்குழியில் இரண்டு போர்கள் நடந்திருக்கிறது. குறிப்பு இல்லாத மாலிக் கபூர் தலைமையில் நடந்த மொகலாய படையெடுப்பு மற்றும் வந்தவாசி போரில் கருங்குழி கோட்டையை ஹைதர் அலியும் ஆங்கிலேயர்கள் மாறி மாறி கைபற்றி இருக்கிறார்கள். இதனை பற்றிய விரிவான தகவல்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவண ஏட்டில் இருக்கிறது. 

சரி இதில் நான் எப்படி வருகிறேன்...?

என் அப்பா பிறந்து வளர்ந்த ஊர் தான் கருங்குழி. என் தாத்தா அங்கு தான் அலுவலக வேலை, விவசாயம் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். ஒரு வேளை இராஜராஜ சோழருக்கு எங்க குடும்பத்து முன்னோர்கள் சோறு கூட போட்டு இருக்கலாம். 

மதுராந்தகம் வட்டம் கருங்குழி கிராமம் தான் என் பூர்வீகம்.

இப்பொழுது தலைப்புக்கு இந்த விசைபலகை நடனம் பொருந்தி வருகிறதா ???

Monday, October 4, 2021

Couch Potato

Couch Potato - இன்றைய கார்ப்பரேட் உலகில் தவிர்க்க முடியாத ஒன்று கம்ப்யூட்டர் முன்னாடி எந்தவித நடமாட்டமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பது. 

சரி அது வேலை ஒன்று பண்ண முடியாது, என பலர் சொல்லி கொண்டு அதுக்கு தானே காலை அரை மணி நேரம் இராஜராஜ சோழன் கணக்காய் வீராவேசமாக நடக்கிறோம் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். 

அந்த அரை மணி நேரம் மட்டும் இல்லாமல் அலுவலகத்தில்  ஒவ்வொரு அரை மணி நேரமும் கொஞ்ச நிமிடங்கள் நடக்க வேண்டும். 

நீடித்த தொலைபேசி அழைப்புகளை நடத்தவாறு பேசுவது நலம்.

முக்கியமாக எந்நேரமும் போனில் வெப் சீரிஸ் பார்த்து கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது இல்லை.  முக்கியமாக இதயத்திற்கு. 

மனிதர்களுடன் பழகுவது அவசியம் தான், உரையாடலும் மனத்திற்கு நல்லது தான், ஆனால் அந்த பழகுவது என்பதினை நிஜ உலகில் இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் மேற்கொள்கிறார்கள். 

உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகில் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அடுக்கேற்றம் முறையில் தான் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

இது உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்ள சார்ந்த மன அழுத்தம் போன்றவற்றை கொண்டு வரும். 

அதே போல் உட்கார்ந்தே இருப்பதை விட நிற்பது உடலுக்கு நன்மை தரும் விஷயம்.

சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான் வேலை என்பதற்காக உட்கார்ந்தே இருப்பது நல்லது இல்லை.

எடுக்க வேண்டிய நகல் பிரதியை நீங்களே போய் நகல் பிரதியெடுப்பு இயந்திரத்தில் எடுக்கலாம். 

அலுவலகத்தில் இன்னொருவரை கைபேசியில் அழைத்து பேசுவதை விட நேரில் சென்று பேசலாம்.

இந்த முறை தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு இல்லை என்று இல்லை இது ஒரு ஆரம்பம் தான்.  

குறிப்பு - கடந்த நான்கு வருடங்களாக சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலும் குறைத்து கொண்டு விட்டேன். யூ டியூப் மட்டும் தான் தொடர்கிறது. அதனையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தொலைகாட்சி தொடர்களை பார்ப்பதை விட்டு 20 வருடங்கள் ஆக போகிறது. வெப் சீரிஸ் வெளி வந்து விட்டது என்பதற்காக பார்த்தே தீர்வது என இருப்பது இல்லை, பொறுமையாக இரண்டு வருடம் எடுத்து கொண்டு கூட பார்ப்பேன்.

Saturday, October 2, 2021

பொன்னியின் செல்வன் II எம்.ஜி.ஆர். II மணிரத்தினம்

பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர போகிறது, எல்லோரும் கொண்டாடிய நாவலை எப்படி திரையில் வர போகிறதென்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அதே சமயத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் முடிவுரையில் கல்கி அவர்கள் சட்டென தொடரை முடித்து பின்னாளில் இக்கதையை மேற்கொண்டு எழுத வருகிறவர்களுக்கு பல்வேறு குறிப்புகளை தந்திருப்பார்.

நாவல் மணிமேகலையின் மரணத்தோடு நிறுத்தபட்டு இருக்கும். 

குறிப்பு -  29 அக்டோபர் 1950ல் தொடங்கி 16 மே மாதம் 1954ல் நாவல் தொடர் முடிந்திருக்கிறது. நாவல் முடிந்த ஏழாவது மாதத்தில் 5டிசம்பர் 1954 கல்கி அவர்கள் மரணம் அடைந்தார். 

பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய சம்பவமாக இருப்பது வீரபாண்டியனின் கொலை தான். வீரபாண்டியன் தப்பித்திருந்தால்  சரித்திரம் வேறு மாதிரி மாறி இருக்கும். 

மதுரையின் மீதான சோழர்களின் படையெடுப்பை வேறொரு கோணத்தில் பேசுவது தான் அரு.ராமநாதன் எழுதிய வீரபாண்டியனின் மனைவி.  

வரலாற்றின் படி வீரபாண்டியனின் மகனான சுந்தரபாண்டியன் தான் சோழர்கள் கைப்பற்றிய மதுரையை மீட்டார்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். பல முயற்சி எடுத்தார், ஒரு தரம் படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் வரையில் போய் நின்று இருக்கிறது.

முயற்சி தோல்வியடைந்தாலும் அவருக்கு இந்த பாண்டிய - சோழ வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்த படியால், பொன்னியின் செல்வன் பேசிய வரலாற்றில் அடுத்த கட்டமான  பாண்டியர் மதுரையை மீட்டத்தை அடிப்படையாக கொண்டு அகிலனால் எழுத பட்ட கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் படத்தை எடுத்தார்.

சோகமென்னவென்றால் அப்படத்தின் தரமான் பிரதி தற்பொழுது காண கிடைப்பதில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி கொண்டு போய் எப்படி முடிப்பார்கள் ?

எப்படியும் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் மரணத்தோடு முடியும். அப்பொழுது தான் விறுவிறுப்பாக அடுத்த இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு களத்தை உண்டாக்க முடியும். இதே போன்ற யுத்தியை தான் பாகுபலியிலும் கையாண்டார்கள்.

பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு பாண்டியர்களின் எழுச்சியை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.

பணம், திறன் எல்லாம் இருந்தாலுமே கல்கியின் வார்த்தைகளுக்கு உயிர் தருவது கடினமான காரியம். 

பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பே ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும் பொழுது வாசிக்கும் நபரை அந்த கதையின் ஒரு அங்கமாக மாற்றிவிடும் வல்லமை கல்கியின் எழுத்துக்களுக்குண்டு. அவை தற்போதைய திரைகதை ஆசிரியர்களுக்கு இருக்கிறதா ???

தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.

Tuesday, June 22, 2021

மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE


நேற்று பிரபல யூ ட்யூப் காணொளியாளர் மதன் கௌரி  தனது செய்தி செயலி பற்றி தனது காணொளியில் அறிமுக படுத்தி இருந்தார். உரலி - https://youtu.be/CkIOuAGF3Hc 

 அவரது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருபவன் என்பதால் ஒரு ஆவலில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி பார்த்துவிட்டேன். 

செயலியின் பெயர் KOKRU.தமிழில் எழுதினால் கொக்ரு என்று இருக்கலாம்.

செயலியின் முதல் ஏமாற்றம் எனது கைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய முடியாதது. கூகிள் கணக்கையோ அல்லது ஃபேஸ்புக் கணக்கையோ வைத்து தான் பதிவு செய்ய முடிகிறது. இதனை பற்றி அந்த செயலியில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் போய் பார்த்தால் நமது தகவல்களை பற்றிய குறிப்பில் "இது உங்கள் சொத்து..." என எழுதி விட்டு நம்மை படிக்க வைப்பது போலுள்ளது. 

நமது மொழி & விருப்பம் சார்ந்து செய்திகளை நமக்கு காட்ட படுகிறது. அந்த செய்திகள் எல்லாம் தொடர்ச்சியாக செல்லாமல், ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்புவது போல் உள்ளது. 

DARK BACK GROUND - எனக்கு பிடிக்காத ஒன்று. இதனை மாற்றி கொள்ள வாய்ப்பில்லை. மற்ற செயலிகளின் தேவை பட்டால் பின்னணி நிறத்தை மாற்றி கொள்ள முடியும்.

DailyHunt என்கிற செய்தி செயலி போன்றே உள்ளது,

இந்த செயலி நான் கவர்ந்த விஷயம் புகழ்பெற்ற Reuters நிறுவனத்தின் செய்திகளை பார்க்க முடிகிறது. இந்நிறுவனம் செய்தி உலகின் தாத்தா மாதிரி. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். 

இந்த செயலியின் வருமானம் என்பது  எந்த இணையதளத்தின் (தினதந்தி, தினமலர், இந்து தமிழ் திசை .....) செய்தியை படிக்க படுகிறதோ, அந்நிறுவனங்களில் இருக்கு தரகு பணம் இந்த செயலி நிறுவனத்திற்கு கிடைக்கும். 

பயன் படுத்த ரொம்ப எளிதாக இருக்கிறது. செயலியை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக விளம்பரங்கள் வர வாய்புள்ளது.

இவர்களது நிபந்தனைகளை படிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"The right to access – You have the right to request Our Company for copies of your personal data. We may charge you a small fee for this service."

நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் எந்த பணமும் கொடுக்காமல் எடுத்து கொள்வார்களாம், ஆனால் அதனை திரும்ப கேட்டால் பணம் கட்ட வேண்டுமாம். நல்ல நியாயம். 

இது போல பலது உள்ளன. எல்லாவற்றையும் படியுங்கள். 

மற்ற செயலிகள் உள்ளது போலவே இதிலும் உள்ளது. மேலும் இந்த செயலி நமது கைபேசிக்கு என்ன செய்யும் என்பதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். கடைசி திரைச்சொட்டில் காணுக.

மேலும் இந்த செயலியை பயன் படுத்துவதின் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறதே என புரட்சி சிந்தனை வேண்டாம். ஃபேஸ்புக் மற்றும் கூகிளை பயன் கொண்டு இருந்தாலே உங்க தகவல்கள் எதுவும் பாதுகாப்பாக இல்லை என கொள்க.

குறிப்பு - என் தகவல்களை வைத்து அப்படி என்ன செய்து விடுவார்களென்று தெரியவில்லை. ஏய் கம்பெனிகாரா என் டிடெயில்ஸ் எல்லாம் கால் காசுக்கு கூட வராது. நம்பி ஏமாந்து போயிறாதே.


Sunday, June 20, 2021

கலவை - 20/06/2021

Mantra - Sounds of Silence என்கிற ஆவண படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மந்திரம் மட்டும் தான் மனதின் அமைதிக்கு அழைத்து செல்லும் என்பது போல் ஒரு வெளிநாட்டு அம்மணி பேசி கொண்டு இருக்கிறார். 

சிறு வயதிலிருந்த என் அப்பா "மந்திரம் ஆவது நீறு..." பாடுவதை கேட்டு தான் வளர்ந்திருக்கிறேன். அந்த பாடலை அவரது குரலில் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

அதே போல் என் அண்ணனின் மகள் சிறு வயதில் காயத்ரி மந்திரம் அழகாக பாடுவாள். அதுவும் எனக்கு பிடித்த ஒன்று. 

மேல் சொன்ன இரண்டிலும் பாடலை விட அந்த பாடலை பாடியவர்கள் மீது இருக்கும் அன்பே அந்த பாடலை பிடிக்க செய்தது. அடிக்கடி அவர்கள் பாடி கேட்ட பொழுது அது ஒன்றும்  அமைதியை தந்தது இல்லை. 

சமீப காலமாக The Beatles குழுவினரது Here Comes The Sun பாடல் தான் என்னை தினமும் தூக்கத்திலிருந்து எழுப்பபி மன அமைதியை தருகிறது. 

அதனை தொடர்ந்து Jay & The Americans குழுவினரது Come A Bit Closer பாடல், Carl Douglas பாடிய Kung Fu Fighting, John Denver பாடிய Take Me Home, Country Road ஆகிய பாடல்களை எல்லாம் ஒரு தரம் கேட்டுவிடுவேன். 

அப்படி ஒரு சுற்று போய் வருவதற்கு "கிரீஸ் டப்பா எப்படி உதச்ச...." என்ற நாள் பொழுது சந்திக்க மனம் தயார் ஆகிவிடும். 

கிளப் ஹவுஸை இன்று சுற்றி கொண்டு இருக்கும் பொழுது ஒரு குழுவில் அதிகாலையில் உங்களை உற்சாகமூட்டும் பாடல் எது என்று பேசி கொண்டு இருந்தார்கள். 

வழக்கம் போல் எதிர்ப்பார்த்த படி பாடல்களை சொல்லி கொண்டு இருந்தனர். 

நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் போது எப்பொழுதும் எதாவது விவாதம், பேருரை அல்லது ஒலி புத்தகம் தான் கேட்பேன். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக RedBone குழுவினர் பாடிய Come And Get Your Love பாடலை கேட்க தவறவிட மாட்டேன். 

அதனால் இது எல்லாம் எனக்கு மன அமைதியை தரும் பாடல்கள். 

எந்த ஒரு விஷயம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதுவே மன அமைதியை தரும். அவை மந்திரங்களாக இருக்க வேண்டும் என்று இல்லை.

- - -

சமீப காலமாக இந்திய சந்தையில் Sectoral Fund & Thematic Fund (துறை சார்ந்த & அடிப்படையிலான நிதி) ஆகிய பரஸ்பர நிதி (Mutual Fund) திட்டங்கள் அதிக லாபகத்தை ஈட்டி தந்திருக்கிறது. ஆனால் இதில் சங்கிலி தொடர் சந்தை அபாயமும் இருப்பதால், கவனத்துடன் முதலீடு செய்யவும். 

சில நிபுணர்கள் என்ன சொல்கிறார்களென்றால் நீங்கள் பலதரப்பட்ட நிதி திட்டத்தில் (Diversified Fund) முதலீடு செய்திருந்தால், அதன் நிதி மேலாளரே தேவையான நேரத்தில் லாபம் தரும் துறையில் முதலீடு செய்வார்களாம், இதற்கென்று தனி திட்டம் பக்கம் போக வேண்டுமாம். 

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் துறை சார்ந்த நிதி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லதென்றே தோன்றுகிறது.

- - -

பல நாட்கள் கழித்து சாண்டில்யன் அவர்களெழுதிய ஜல தீபம் நாவலை வாசித்து கொண்டு இருக்கிறேன். சாண்டில்யன் நாவல்களென்றே இருக்கும் தனி உலகத்தில் உலாவுகிறேன். அதொரு தனி சுகம்.

- - -

Crypto Currency சம்பந்தமாக என்ன மாதிரியான சட்டங்கள் வரும், அதற்கான வரி விதிப்பு எப்படி இருக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அறிக்கை சொல்கிறது. 

இதனை வழக்கத்தில் இருக்கும் Demat Account கணக்கின் கீழ் கொண்டு வருவார்கள் என்றே நினைக்கிறேன். 

சந்தையில் இதில் முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை, அது தரும் லாபம் என இரண்டும் அதிகம் இருப்பதால் , பெரும் நிறுவனங்கள் இதனை விட மாட்டார்கள்.

- - -

YouTube ல் ராடன் நிறுவனத்தார் இலவசமாக ரொம்ப காலம் முன்பு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அனைத்து பாகங்கள், அதன் அத்தியாயங்கள் பதிவேற்றி இலவசமாக பார்க்க கொடுத்திருக்கிறார்கள். 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. அதுவும் பட்டாபி என்ற கதாப்பாத்திரத்திற்காக பார்த்து கொண்டு இருக்கிறேன். 

டிக்டாக் பிரபலம் சுரேஷ் பாபு அவர்கள் தனது காணொளிகளை தனது SURESH Babu 250 என்கிற சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அதில் அவர் சொல்லும் சுட்டி கதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பியுடனான அவரது உரையாடல் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

- - - 

லோகி இணைய தொடரின் அடுத்த அத்தியாயம் வந்துவிட்டது. இதில் லோகி தன்னுடைய மேம்படுத்தப்பட்ட மற்றொரு லோகியை டைம் வெரியன்ஸ் அத்தாரிட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பரபர என துரத்தி கொண்டு செல்கிறார். ஆனால் கடைசியில் உச்சகட்ட திருப்பத்தை வைத்து பார்ப்போரின் ஆவலை அதிக படுத்தி இருக்கிறார்கள். 

ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

- - -

Sunday, June 13, 2021

கலவை – 13/06/2021

தகவல் பரிமாற்றத்துக்கு பல விஞ்ஞான வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் ஒரு காலத்தில் அதற்கென இருந்த ஒன்றை பற்றி பலரும் இன்றளவில் மறந்துவிட்டனர்.

அது இன்லேண்ட் லேட்டர்.
இன்று நாம் தொலைபேசி / கைபேசி, ஈமெயில் ஆகியவற்றில் பல விஷயங்களை பரிமாறி கொண்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டரில் நலம் விசாரித்தலுக்கு ஈடாகாது. இடம் குறைவாக இருந்தாலும் சுருக்கி எழுத்தின் அளவை குறைத்து , எழுத எழுத எதோ ஒன்றை மறந்துவிட்டோமே, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோமா என பதைபதைப்புடன் எழுதிய ஒரு தலைமுறை இப்பொழுது அதனை தங்களது ஞாபக அடக்கில் எங்கு இருக்கிறது என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கல்யாணம் ஆகி வேறு ஊருக்கோ வேறு மாநிலத்திற்கோ வந்து விட்ட பெண்கள் எல்லோரும் தங்களது அம்மாவிற்கு எழுதிய கடிதங்களில் “மணி பதினொன்னு ஆகிருச்சு... அடுப்பு ல இப்ப தான் சாம்பார் வைச்சுட்டு வந்தேன், கொஞ்சம் இருமா யாரோ கூப்பிடுறாங்க ....” என எழுதிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து ...” பக்கத்து வீட்டு அக்கா தான் கூப்பிட்டாங்க கொஞ்சம் தயிர் வேணுமுன்னு கேட்டாங்க.... “ என தினசரி வாழ்வை கடிதங்களில் பதிவு செய்தவர்கள் பல. 

இன்னும் சில வீடுகளில் அந்த கடிதங்களை பாதுகாப்பாய் வைத்திருப்பார்கள், அந்த நாளைய வாழ்க்கையை அந்த கடிதம் படிக்கும் பொழுதெல்லாம் மீண்டும் வாழ்ந்து விட்டு வருவார்கள்...

 அந்த கொஞ்ச நிமிடங்களுக்கு கல்யாணமாகி புதிதாய் வேறு ஊருக்கு வந்த பெண்ணாய் மாறி இருப்பார்கள். என்றோ இறந்துவிட்ட தங்களது  அம்மாவை உயிருடன் அழைத்து வந்து பேசி கொண்டு இருப்பார்கள். 

அவர்களே இப்பொழுது பேர குழந்தைகள் பார்த்துவிட்ட பாட்டிகளாக இருந்தாலும், ஒவ்வொரு கடிதத்தை படிக்கும் பொழுது தங்களது அம்மா உடன் பேசுவதாக உணர்வார்கள்.

அந்த உணர்வை இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களால் தர முடியாது.

தபால்காரரை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்த பரவச நிமிடங்களும் மனிதர்களுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே. 

= = =

தொகுப்பு வார்த்தையாளர் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் ClubHouse என்கிற செயலிக்கு சொல்லகம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார். அவ்வாறு செய்வது ஒருவனை உபயோகிக்கும் பொருளுக்கு அவனது வசதிக்கேற்ப அவனது மொழியிலேயே பெயர் வைத்து பயன்படுத்தி கொள்வது உலக நடப்பில் இருப்பது தானே. 

இதனை அவர் தனது வடிவ பனுவல் பக்கத்தில் எழுதிய பிறகு ஏன் அதனை அத்தனை சண்டை என புரியவில்லை. 

மேலும் இதனை முன் வைத்து அவர் ஒரு வார்த்தைகளின் அச்சு பிரதி ஒன்றை எழுதிட வேண்டும். 

ஆயிரம் இருந்தாலும் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் அவர்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது.

= = =

The Family Man என்கிற இணைய தொடரின் Season 2 நேற்று காற்றுசொல் (Airtel – நன்றி இராஜ தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள்) நிறுவனத்தின் உதவியால் பார்த்தேன்.

பரபரப்பான களத்தில் கதை நகர்கிறது. கதையின் சிறப்பு செல்லம் சார் தான். 
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசிவிட்டதால், இதில் சம்பவங்களை மைய படுத்திய காட்சிகள் நகர்கிறது. 

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீகாந்த்  திவாரி எந்த பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை சொல்லி எதிர் பார்ப்பை அதிக படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சமந்தாவின் குடும்பத்தை தரைகுறைவாக பேச சிலருக்கு யார் உரிமை கொடுத்தது என்று தெரியவில்லை. சமந்தா என்று இல்லை அதில் நடித்த நடிகர்களின் குடும்பத்தை தரைகுறைவாக பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் அப்படி தரைகுறைவாக விமர்சனம் செய்வது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” நான் விமர்சனம் செய்கிற பெயரில் இன்னொரு குடும்பத்து பெண்களை அசிங்கமாக பேசி / எழுதி இருக்கிறேன் “ என சொல்லி அவரது அம்மா , மனைவியிடம் அதனை காட்டுவார்களா ? 

= = =

The Heritage Of Kashmir என்ற ஆவண படத்தை பார்த்தேன். காஷ்மீரில் இருக்கும் பழங்கால கோயில் பற்றியது அது. கோயிலின் சிறப்புகளை மட்டும் சொல்லாமல் அதனை சார்ந்த வரலாற்றையும் சேர்த்து சொன்னது தான் முக்கிய அம்சம். 

அவந்திவர்மன் ஆட்சி, 840கிலோ தங்கதால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை என பல விஷயங்களை பேசுகிறது.

= = =

மார்வெலின் லோகி இணைய தொடரின் முதல் பாகம் கடந்த ஒன்பதாம் தேதி வெளிவந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஒரு இடத்தில் லோகி டெஸெராக்ட்டை திருடி கொண்டு மறையும் இடத்தில் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது.
அப்படி மறைந்து தப்பித்து போன இடத்தில் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பிடம் சிக்கி கொள்கிறார்...

அங்கு தானோஸ் எதற்காக சண்டை போட்டாரோ அந்த இன்பினிட்டி ஜெம்ஸை Paper Weightஆக டைம் வேரியன்ஸ் அதாரிட்டில் பயன்படுத்துகிறார்கள். 
அவர்கள் லோகியிடம் சொல்லும் வேலையில் பரபரப்பு தொடங்குகிறது....

முதல் அத்தியாயம் முடிகிறது.

= = =

சமூக இணையதளங்களின் மீதான வலுவான சட்டங்கள் வர போகிறது. 
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு பற்றி கவலை படுகிறார்கள். 

கூகிளில் ஒன்றை பற்றி தேடிவிட்டு ஃபேஸ்புக்கிற்கு வந்தால் அந்த பொருளின் விளம்பரம் தான் நம்மை வரவேற்கும்.

மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க தெரியல பாரேன் இவங்களுக்கு. 

= = =

Related Posts with Thumbnails